cookie

Saturday, February 17, 2018

அறிமுக காட்சிகளும் ஒளவையாரும்

பேர்லண்ட் பள்ளியின் 2018 பொங்கல் விழாவிற்காக எழுதிய நாடகம்.

இந்த நாடகத்தின் காணொளி
https://www.youtube.com/watch?v=eTMnkiY82Cw

காட்சி: 1
இடம்: புலிகேசியின் அரண்மனை
கதாப்பாத்திரங்கள்: புலிகேசி மன்னர், மங்குனி அமைச்சர்

(புலிகேசி மன்னர் ஐபேடில் ஏதோ பார்த்துக் கொண்டுள்ளார், மங்குனி அமைச்சர் சோகமாக அமர்ந்திருக்கிறார்...)

புலிகேசி: அமைச்சர் மங்குனி, இதை கவனித்தீரா?

மங்குனி: எதை மன்னா... (அங்கும், இங்கும் தேடுகிறார்)

புலிகேசி: என்னுடைய facebook இல் 5000 நண்பர்கள் இருக்கிறார்கள், ஆனால்....

மங்குனி: ஆனால், என்ன மன்னா?

புலிகேசி: எந்த புகைப்படத்தை upload செய்தாலும் 100 லைக்குகளுக்கு மேல் வருவதில்லை... பொறாமை பிடித்தமனிதர்கள்.

அமைச்சரை நோக்கி

மங்குனி அமைச்சரே, என்னுடைய check-in ஐ நீர்கூட லைக் செய்யவில்லை... ம்ம்ம், இருக்கட்டும்  உம்மை appraisalலில் பார்த்துக் கொள்கிறேன்...

மங்குனி: மன்னிக்கவேண்டும் மகாபிரபு, நேற்று என் மனைவி போஸ்ட் செய்த "ரசம் சாதத்தை" லைக் செய்யவில்லை என்று இன்னும் ஒரு வாரம் ரசம் மட்டும்தான் என்று கூறிவிட்டார். அந்தக் கவலையில் உங்கள் checkin ஐ லைக் செய்யாமல் விட்டுவிட்டேன்...

புலிகேசி: என்ன ஆணவம், மனைவியின் போஸ்ட்டை லைக் செய்ய மறந்தீரா! உமக்கு இது தேவைதான்...

புலிகேசி: மங்குனி

மங்குனி: மன்னா...

புலிகேசி: இதைக் கேளும்...

(ஐபேடில் ஏதோ ஒரு புகைப்படத்தை பார்த்து வாசிக்கிறார் மன்னர்)

மக்களே, நீங்கள் இந்தப் புகைப்படத்தில் பார்ப்பது, சிங்கப்பூரோ, துபாய்யோ அல்ல... சக்கரவர்த்தி "அதியமான்"னின் நாடுதான்...

அமைச்சர் மன்னரின் அருகில் சென்று, அவரின் மடியில் அமர்ந்துகொண்டு புகைப்படத்தை பார்க்கிறார்... 

மன்னர் மெல்ல அமைச்சரை பார்த்து முறைக்க...  

மங்குனி: மன்னிக்க வேண்டும் மன்னா... (மெல்ல விலகி நிற்கிறார்)  படம் நன்றாக உள்ளது மன்னா...

நாமும் நம்முடைய பக்தாளை வைத்து போட்டோஷாப் செய்து நம் நாட்டின் புகைப்படத்தை பேஸ்புக்கில் உலவவிட்டால் என்ன?

புலிகேசி: வேண்டாம் மங்குனி, அதை செய்ய நம் நாட்டில் வேறு கும்பல் உள்ளது.          

என்னிடம் அதைவிட ஒரு அருமையான யோசனைஇருக்கிறது...

மங்குனி: கூறுங்கள் மன்னா...

புலிகேசி: நாம் அதியமான் மீது போர் தொடுப்போம்...

மங்குனி:  அதியமான் பற்றி எதுவும் தெரியாமல் வேண்டாம் இந்த விசப் பரிட்சை மகாபிரபு

புலிகேசி: முழுவதும் கேளும் மங்குனி...

மங்குனி: கூறுங்கள் மன்னா...

புலிகேசி: நாம் அதியமான் மீது போர் தொடுப்போம், நிச்சயமாக தோற்றுவிடுவோம்...

மங்குனி: அது உலகறிந்தது தானே மன்னா...

புலிகேசி: ம்ம்ம்... உண்மையாக இருந்தாலும் அதை இப்படி உறக்கவா சொல்வது...

மங்குனி: சற்று உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் மன்னா

புலிகேசி: இருக்கட்டும்... நாம் போரில் தோற்றுவிட்டால், நம் நாடு அதியமானின் நாட்டுடன் இணைந்து விடும். பின்பு அதியமானின் செலவிலேயே பெரிய பெரிய மால்கள், multiplex theaterகள், theme parkகள் கட்டிவிடுவார்...

மங்குனி: அருமை மன்னா... அருமை...

புலிகேசி: சில வருடங்களில், அதியமானின் கை கால்களில் விழுந்து தனி நாடு வாங்கிவிடலாம். பின்பு நான் மீண்டும் மன்னன்.

மங்குனி: அப்போது நான் மன்னா?

புலிகேசி: நீர் மங்குனி

மங்குனி: பலே மன்னா, பலே... இந்த மகாச்சிந்தனை தங்களுக்கு எப்படி தோன்றியது மன்னா?

புலிகேசி: forward message ல் படித்தது மங்குனி...

மங்குனி: மன்னா, ஒரு வேலை போரில் நம்மிடம் அதியமான் தோற்றுவிட்டால்...

புலிகேசி: (அதிர்ச்சியுடன்)  அப்படியெல்லாம் எதுவும் நடக்காது மங்குனி... (யோசனையுடன்) ஆமாம், இந்த கேள்வி உமக்கு எப்படி தோன்றியது...

மங்குனி: இதுவும் forward message ல் படித்ததுதான் மன்னா

புலிகேசி: அதுதானே பார்த்தேன், சரி சரி... உடனே போருக்கு SMS அனுப்புங்கள் மங்குனி. நம் வீரர்கள் தயாரா?

மங்குனி: கோழி பிரியாணியும், 1000 ரூபாயும் தருவதாக கூறி R.K நாட்டில் இருந்து சிலபேர் வந்து நம் ஐந்து படைகளையும் வாடகைக்கு கூட்டிச்சொன்றுள்ளனர் மன்னா...

புலிகேசி: சரியான வேலை செய்தீர்கள் மங்குனி, project இல்லாவிட்டால் பெஞ்சில் சும்மா உட்கார்ந்து விடுவார்கள். அவர்களை சும்மா இருக்க விடவே கூடாது. வீரர்கள் திரும்பி வந்தவுடன், அனைவரிடமும் 1000 ரூபாய்க்கு மறக்காமல் GST வாங்கிவிடுங்கள்... இல்லையென்றால் 1000 ரூபாய் செல்லாது என்று அறிவித்து விடுவேன்... ஜாக்கிரதை...

மங்குனி: எத்தனை விழுக்காடு GST வசூலிப்பது மன்னா?

புலிகேசி: கடந்த முறை எவ்வளவு வசூலித்தோம்?

மங்குனி: 100% மன்னா

புலிகேசி: அப்போது இந்த முறை 200% வசூலித்து விடு...          

மங்குனி: ஆகட்டும் மன்னா...

                                                                                                                                                

காட்சி - 2
இடம்: போர்க்களம் ல்லும் வழி    
கதாப்பாத்திரங்கள்: புலிகேசி மன்னர், மங்குனி அமைச்சர், அவ்வையார் 5.0, தளபதி மற்றும்  வீரர்கள்


தளபதி: கும்தலக்கடி கும்மாவா

வீரர்கள்: புலிகேசின்னா சும்மாவா     

தளபதி: கும்தலக்கடி கும்மாவா

வீரர்கள்: புலிகேசின்னா சும்மாவா

தளபதி: பன மரத்துல வவ்வாலா  

வீரர்கள்: புலிகேசிக்கே சவாலா

தளபதி: பன மரத்துல வவ்வாலா  

வீரர்கள்: புலிகேசிக்கே சவாலா

தளபதி: போடுங்கம்மா ஒட்டு...

புலிகேசி: நிறுத்துங்கள் மங்குனி வீரர்களா... என்ன இது மன்னர் ஆட்சியில் ஓட்டா... இதை நிறுத்து முதல் இரண்டு துதியை மட்டும் மறுபடியும் பாடு...

(அதற்குள் அங்கு அவ்வை 5.0 வந்துவிட... புலிகேசி அனைவரையும் அமைதிப் படுத்துகிறார்...)

புலிகேசி: அம்மா... தாங்கள் யார்?

தளபதி: என்ன, அம்மா திரும்ப வந்துட்டாங்களா? 

(என்று ஓடிச்சென்று அவரின் காலில் விழுகிறார், அவரைத் தொடர்ந்து வீரர்களும் காலில் விழுகின்றனர்...)

தளபதி: அம்மா நீங்க இல்லேன்னு, UPS ம், USPS ம் அட்டகாசம் செய்றாங்கம்மா...

அவ்வை 5.0: மகனே நீ தவறாக புரிந்துகொண்டாய், நான் தமிழ்க்கு அம்மாவாகிய "அவ்வை"யின் latest  version 5.0                   

மங்குனி: "செயல் தளபதி" இனி இவ்வாறு நீ அதிகப்பிரசிங்கி வேலை செய்தாய், உன்னை மன்னரிடம் கூறி  செயல்படாதா தளபதியாக அறிவித்து விடுவேன்... ஜாக்கிரதை...

தளபதி: (மன்னரை நோக்கி)  மன்னிக்க வேண்டும் மகாபிரபு, RK நாட்டில் கொடுத்த training ல் சற்று தடுமாறிவிட்டேன்.

புலிகேசி: (அவ்வையை வணங்கி விட்டு)  புதிய அவ்வையே, தங்கள் இங்கு வந்ததன் நோக்கம் என்ன?

அவ்வை 5.0: புலிகேசி, அதியமானின் நாட்டின் மீது நீ படையெத்து வருவதாக forward message படித்தேன். அதனால் உன்னையும் உன் மக்களையும் காக்கவே நான் இங்கு வந்தேன்.

மங்குனி: புரியவில்லையே தாயே, அதற்கு ஏன் தாங்கள் இங்கு வரவேண்டும்...

அவ்வை 5.0: அதியமானின் வீரம் தெரியாமல் நீங்கள் சிறுபிள்ளைகள் போல் போருக்கு  வந்துள்ளீர்கள்...

இதைக்கேட்டு அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழிக்க

அவ்வையார் 1.0 அதியமானின் வீரம் குறித்து ஏற்கனவே புறநானூற்றில் பாடல்  பாடியுள்ளார். அதை நீ அறிய மாட்டாயா?

புலிகேசி: இல்லை தாயே, என்னவென்று பாடியுள்ளார்?

(களம் புகல்... என்ற பாடலைப் பாடுகிறார் அவ்வையார்...)

தளபதி: இதன் பொருள் என்ன தாயே!

அவ்வை: போர்க்களம் புகும்முன் நன்றாக சிந்தியுங்கள் வீரர்களே. ஒரு நாளுக்கு 8 தேர் செய்யும் தச்சன். ஒரு மாதம் முழுவதும் வேலை செய்து தேரின் ஒரே ஒரு சக்கரம் மட்டும் செய்தால் அது எவ்வளவு வலிமையாகவும், நேர்த்தியாகவும் இருக்கும்?

(இதைக்கேட்டு அனைவரும் ஆமாம் என்பது போல் தலையை அசைக்கின்றனர்)

அப்படிப்பட்ட வீரன்தான் அதியமான்... களம் புகுந்த எவரும் மீளமுடியாது. அதனால் உயிர் மேல் ஆசையுள்ள அனைவரும் ஓடி விடுங்கள்...

(புலிகேசி தீவிர யோசனையில் ஆழ்ந்துவிட)

மங்குனி: மன்னர் யோசிக்க ஆரம்பித்து விட்டார், நீங்கள் மீண்டும் ஒருமுறை அந்தப்பாடலைப் பாடுங்கள் தாயே...

அவ்வை மீண்டும் பாட, உயிர்ப யத்தில் அனைவரும் ஓடுகின்றனர்...



இதில் வரும் அவ்வையாரின் பாடல் பாடியவர் எனது நண்பரின் தாயார் திருமதி. ஜெயந்தி ஜகநாதன் அவர்கள்.

1 comment:

  1. The King Casino Review | Ventureberg
    King Casino Review 1xbet login One 더킹카지노 슬롯 of the most well-known online casinos in 카지노 the 더킹카지노 주소 world, the King Casino is a place to take your 더킹카지노 회원가입 gambling seriously.

    ReplyDelete