cookie

Sunday, February 1, 2015

நதி தேடும் கடல்...


ராக்கி ஹில் தமிழ்ப் பள்ளி பொங்கல் விழாவிற்காக எழுதப்பட்ட நாடகம்...



காட்சி 1

கதாப்பாத்திரங்கள்
அப்பாசெல்வம்
அம்மாராஜி (35)
மகன்அமுதன் (12)
மகள்குமுதா  (8)

இடம்அமுதனின் வீடு (அமெரிக்கா)

நேரம்இரவு, 09:30 மணி

வீட்டின் தொலைபேசி மணிஅழைத்தது...

செல்வம்ராஜிபோன்ல யாருன்னு பாரு.

மூன்றாவது மணி ஒலித்துக் கொண்டிருக்கும்போதே சட்டென அமைதியானது தொலைபேசி...

ராஜிஇந்நேரத்துக்கு missed கால் நா உங்க வீடாத்தான் இருக்கும்..

புத்தகம் படித்துக் கொண்டிருந்த செல்வம் தொலைபேசியை எடுத்துப் பார்த்துஅழைப்பு தன்னுடைய வீட்டிலிருந்துதான் வந்துள்ளது என்பதைஉறுதிசெய்துகொண்டுதன்னுடைய  அப்பாவின் அலைபேசிக்கு அழைத்தார்.

செல்வம்சொல்லுங்கப்பாஎப்பிடி இருக்கீங்க?..... ஆமாப்பாலீவ் கன்பார்ம் ஆயிரிச்சி , இந்த தடவ கண்டிப்பா வந்துருவோம்.

செல்வம் பேசிக்கொண்டிருக்கும் போதுஅருகில்வந்து நின்றுகொண்டு செல்வம் பேசிமுடிக்கும் வரை காத்திருந்தார் ராஜி செல்வம் பேசி முடித்தவுடன்

ராஜிநான் இன்னும் பசங்க கிட்ட இத பத்தி பேசல... நீங்களாச்சுஅதுகளாச்சு..

செல்வம்குமுதாகிட்ட சொல்றதுல ஒன்னும் பிரச்சனையில்லஆனா அமுதன்கிட்டதான்…….. பாப்போம்...

புதிய பாப் இசை காதுகளில் அலறஒளியை மிஞ்சும் வேகத்தில் விரல்கள் அலைபேசியின் விசைப்பலகையை பதம்பார்க்ககண்கள் இரண்டும் அலைபேசியின்திரையில் குடிகொண்டிருக்கஅனிச்சைசெயலாகஅமுதன் தன்னறையை விட்டு அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கும் நடுவீட்டிற்க்கு வந்தான்.

அமுதனை அழைத்து அருகில் அமரவைதுக் கொண்டார் செல்வம்

செல்வம்இந்த வருஷம் வெக்கேஷனுக்கு நாமெல்லாம் இந்தியாவுக்கு தமிழ்நாட்டுக்குப்போறோம்.

அமுதன்: .........

செல்வம்என்னடாஒன்னுமே சொல்ல மாட்டேன்கிற

அமுதன்என்னோட பிரண்ட்ஸ் எல்லாரும் அமெரிக்கால இருக்குற ஃபேமஸ் அட்டராக்ஷன்ஸ்க்கு போறாங்கநாமட்டும் டமில் நாட்ல வெயில்லையும்,டஸ்ட்லையும் ஊரசுத்துனேன்னு சொல்லனுமா?

செல்வம்டிரஸ்ட் மீ அமுதாநம்ம ஊர்லையும் நல்ல இடங்கள் நெறையா இருக்குகண்டிப்பா நீ என்ஜாய் பண்ணுவ.

அமுதன்: Statue of liberty இருக்கா?

செல்வம்காலத்தால் அழியாத உலகப்புகழ் பெற்ற வள்ளுவர் சிலைசுத்தமா இருக்கு.

அமுதன்Hoover dam இருக்கா?

செல்வம்: 2000 வருசத்துக்கு முன்னால கட்டுன கல்லணை இருக்கு

அமுதாநான் சும்மா கவுன்ட்டர் ஆர்கியுமென்ட்க்காக பேசல... நம்ம ஊரோட சிறப்ப உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. அங்க போயி பார்த்தா உனக்கே புரியும்.

எனக்காக இந்த ஒரு தடவ வாப்பா….

டீல் ?

அமுதன்டீல்

காட்சி 2

புதிய அனுபவத்திற்கு புறப்படவேண்டிய நாள்

உற்றார்உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாங்கிய பரிசுப்பொருட்களை பெட்டிகளில் நிரப்பி , தாய்நாட்டிற்குச் செல்ல செல்வத்தின் குடும்பம்தயாராகிக்கொண்டிருந்தது.

பெட்டிகள் அனைத்தும் எடைபோடப்பட்டு விமானநிலையத்திற்கு எடுதுவரப்பட்டுவிட்டதுசரியான நேரத்திற்கு விமானமும் புறப்பட்டு தமிழ்நாட்டின் தலைநகரைஅடைந்தது.

அத்தையும் மாமாவும் விமான நிலையத்தில் வரவேற்க காத்திருந்தனர்.
வாசலில் காத்திருந்த அத்தையும்மாமாவும் தம்பியின் குடும்பத்தைக் கண்டவுடன்.

அத்தைமாமாவாங்கவாங்கஎல்லாரும் வாங்க. journey லாம் நல்லா இருன்ச்சா?

செல்வம்மாமா எப்பிடி இருக்கீங்கஅக்கா நீ எப்பிடி இருக்க?

அத்தைநாங்கலாம் நல்லா கீறோம்நீங்க எப்டி கீரிங்க

செல்வம்: நல்லா இருக்கோம், அப்பா எங்க, வரலையாக்கா?

அத்தை: ஊராண்ட ஒரு முக்கியமான பஞ்சாயத்து இருந்ததால வரமுடியலயாமா, நீங்க தம்பி வூட்டுக்குப் போகசொல நைனாவ கண்டுகலாம்.       

செல்வம்: சரிக்கா  

அத்தை: எங்க என் மருமவனும்மருமவளும்?

செல்வம்குமுதாஅமுதாரெண்டு பேரும் அத்தைக்கும் மாமாவுக்கும் வணக்கம் சொல்லுங்க.

அமுதன்ஹலோ ஆன்டிஹலோ அங்கிள்

குமுதாவணக்கம் அத்தைவணக்கம் மாமா

அத்தை குமுதாவை அருகில் அழைத்து வைத்துக் கொண்டார் 

அத்தைஅமுது செல்லம்

அமுதன்ஆன்டி"அமுதுஇல்லகால் மீ "அமுதன்"

அத்தைஅது கெடக்கட்டும் செல்லம்இந்த "ஆண்டியெல்லாம் வேண்டாம்நீ என்னைய "அத்தன்னுகூப்புடு.

அமுதன்OKKKWhatever….

செல்வம்அக்காசென்னைய சுத்திப்பாக்க நாளைக்கிப் போலாமாஅமுதன் ரொம்ப ஆசையா இருக்கான்.

அத்தைஇன்னிக்கி வூட்ல நல்லா ரெஸ்ட் எடுங்க, அப்பாலிகா நாளைக்கு போவலாம்உன் மாமனுக்கு இண்டுஇடுக்கு அல்லாம் கரீட்டா தெரியும்.

அமுதன்டாடிஇவங்க பேசுறது டமிலா?

அத்தைடே அமுதா, இது டமில் இல்ல, "மெட்ராஸ் பாஷ ப்பா

காட்சி 3

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம், அத்தை, மாமா  
இடம்சென்னை கடற்கரை

மெரினா கடற்கரையில் அனைவரும் நடந்துகொண்டிருக்கையில்...

அமுதன்அங்கிள்சென்னையைப் பத்தி சொல்றதுக்கு முன்னாலMadras டமில பத்தி சொல்லுங்க.

மாமா: மெட்ராஸ் தமிழ்செமயானமெர்சலான லாங்குவேஜ்இதோட Vocabulary வேற எந்த லாங்குவேஜ்லையும் கெடியாதுஇப்போ example எடுத்துக்கினா ‘ஊட்டாண்ட’, ‘கோயிலாண்ட’  வர்ற "அண்ட"க்கு மீனிங் "க்ளோஸ்பக்கத்துல.

இது ஓல்டு ஆனா கோல்டு கண்ணு..இதே மாதிரி "அப்பால", "குந்து", "ஒத்து", "மெய்யாலுமே", "கலாய்எல்லாமே ப்யூர் தமிழ் வேட்ஸ்.

அமுதன்நீங்க பேசுறதுல நெறைய இங்கிலீஷ் வோர்ட்ஸ் இருக்கே?

மாமாமெனி இயர்ஸ் இங்கிலீஷ் பீபள் இந்தாண்ட இருந்ததால அத்த அவாய்ட் பண்ணமுடியிலஆனா ஒன்னுகீதுபாஇந்த ஜாதி மதம் இனம் எதுவும்மெட்ராஸ்க்கும் கெடியாதுமெட்ராஸ் தமிழுக்கும் கெடியாது.

"இது வந்தாரை வாழவைக்கும் சென்னை"

அமுதன்ஓ awesome மாமா..  இப்போ இந்த ஊர பத்தி சொல்லுங்க.

இவர்கள் பேசிக்கொண்டே கடற்கரையில் நடந்துகொண்டிருக்க அங்கே கானா பாடல் பாடும் குழுவைக் கண்டனர்.

மாமாசென்னையைப்பத்தி நான் செல்றத விட இவங்க சொன்ன இன்னும் குஜால இருக்கும்.

அமுதன்: மாமா, நீங்களும் இவங்ககூட பாடப் போறீங்களா?

மாமா: பாட்டு மட்டுமில்ல டான்சும்...     

"சென்னையின் சிறப்பை விளக்கும் கானா பாடல்"

காட்சி 4

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்
அத்தையின் குடும்பம்

செல்வம்சரிக்கா நாங்க கிளம்புறோம்

அமுதன்அத்தைமாமா நானு சென்னைய செம்மயா என்ஜாய் பண்ணேன்.. "கானாwas cool.

குமுதாஅமுதா happy, குமுதா happy

அனைவரும் சிரிக்க, அமுதனின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அத்தை குடும்பத்திடம் விடைபெற்றுக் கொண்டுபுறப்பட்டனர் கோவைக்கு.

காட்சி 5

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
சித்தியின் குடும்பம்,
மகன்சிவா (அமுதனுக்கு தம்பி)

இடம்சித்தி வீடு

அவர்களை வரவேற்க தயாராக காத்திருந்தனர் சித்தி குடும்பத்தினர்சித்தியை கண்டவுடன்...

அமுதன்ஹாய் ஆன்டிநோ.... வணக்கம் அத்தை

சித்தி: "அத்தஇல்ல கண்ணு "சித்தி"

அமுதன்: சுத்சுத்தி... இஸ் தட் ரைட்?

சிவாஹிஹிசுத்தி இல்ல சித்தீஈஈஈஈ......


அமுதன்வணக்கம் சித்தி.

குமுதாசித்திஎனக்கு தர்ஷ்டியா இருக்குவாட்டர் வேணும்.

சித்திஇதோ கொண்டுவாரேன் கண்ணு

குமுதாசித்திஇந்த வாட்டர் ரொம்ப ஸ்வீட்டா இருக்குசுகர் மிக்ஸ் பண்ணீங்களா?

சித்தி : அஸ்கா சேக்கல சாமிஇது சிறுவாணித் தண்ணி.

அமுதன்சென்னைல பேசுன டமில் டடிப்ரெண்ட்டா இருந்தது. நீங்க பேசுற டமில் டடிப்ரெண்ட்டா இருக்கே?

சித்திஇது கொங்குத் தமிழ் கண்ணுரொம்ப மரியாதையான தமிழ்.

அமுதன்ஓ அப்பிடியாஇந்த டமில்லோட ஸ்பெஷலிட்டி என்ன?

சித்திகொங்குத் தமிழோட அம்சமே 'வும் 'ங்கும் தான்.என்னோட உன்னோட கிறத "என்ற", "உன்றனு சொல்லுவோம்.

சிவா: "என்னடாகிறத "என்றானு சொல்வோம்அதோட நீதிடா,நேர்மைடா,எருமைடா னு கூட சொல்வோம்.

சித்திஅப்பிடி பேசக்கூடாது கண்ணு

சிவா: சரிங் மா  

அமுதன்டாடிஇந்த சிட்டியோட ஸ்பெஷலிட்டி என்ன?

செல்வம்கோயம்புத்தூர் இஸ் "மான்செஸ்டர் ஒப் சௌத்இண்டியா".

அமுதன்"மான்செஸ்டர்னாஅமெரிக்கால ஹார்ட்போர்ட் பக்கதுல இருக்கே அதுவா?

செல்வம்இல்லஇந்த மான்செஸ்டர் இங்கிலாந்துல இருக்கு.

சிவா:  அது மட்டும் இல்ல.. வருஷம் முழுசும் வெயிலே தெரியாதுகுளுகுளுன்னு இருக்கும்.

செல்வம்இந்தியாவின் எடிசன் ஜி.டி நாயிடு பிறந்த ஊரு இது தான்

அமுதன்இங்க வேற என்னவெல்லாம் இருக்கு?

சித்தி: நெறையா இருக்கு, முதல்ல நாமெல்லாம் மலைக்கிப் போறோம்.

குமுதா: மலையா, அது என்ன மலை?    

சிவா:  

BMG: https://www.youtube.com/watch?v=uLcXLvAPCkE (15 முதல் 23 நொடிகள்)

அங்கிருந்த துண்டு ஒன்றை எடுத்து முட்டியில் இழுத்து வைத்துக்கொண்டு நடனமாட

சித்தி: சிவா, என்னடா பண்ற....

சிவா: (துண்டை கீழே போட்டுவிட்டு  உடனே)

BGM:  https://www.youtube.com/watch?v=82qfhI7uZf0  (முதல் 42 நொடிகள்....) 

போலாமா? 

அமுதன், குமுதா:   போலாமே....  


காட்சி 6

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
சித்தியின் குடும்பம்,
மகன்சிவா 

(மேடையை விட்டு வெளியே சென்று மீண்டும் சில நொடிகளில் திரும்பி வருகிறார்கள்.
காவடி ஆட்டக் குழுவினர் தயாராக இருக்கின்றனர்)  

குமுதா: அவங்கல்லாம் யாரு? shoulder ல என்ன வச்சிருக்காங்க?

சித்தி: அதுக்குப் பேரு காவடி கண்ணு, அவங்க ஆடப்போற ஆட்டத்துக்குப் பேரு "காவடியாட்டம்".

காவடியாட்டம்... 


காட்சி 7

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
சித்தியின் குடும்பம்,

சித்திஇன்னும் ரெண்டு நாளு இருந்துபோட்டு போலாமுல்லங்க்கா

ராஜிஇல்லமாஇன்னும் ரெண்டு ஊருக்கு போகவேண்டியது இருக்கு.

சிவாஅடுத்து எங்க போறீங்க?

அமுதன்ஸ்டோன் டம்ஹொவ் டு சே இன் டமில் டாடி

செல்வம்கல்லணைக்கு போறோம்அங்கிருந்து அப்படியே மதுரைகிப்போறோம்.

சித்தி:உங்க friend வூட்டுக்கா அத்தான்?

செல்வம்: ஆமா, அவரு எனக்கு அண்ணன் மாதிரி.  

சித்தி: நல்லபடியா போயிட்டு வாங்க.    

ராஜிசரிம்மா .


காட்சி 8

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
செல்வத்தின் நண்பரின் குடும்பம் (பெரியப்பா)


ஹாலில் உட்கார்ந்து பெரியப்பா பேப்பர் படித்துக்கொண்டிருக்க, அமுதன் காபி பருகிக்கொண்டே வருகிறான்

அமுதன்பெரியப்பாஇங்க கல்லணை என்ன அவ்வளவு ஸ்பெசலா?

பெரியப்பாஆமா அமுதாsecondu century’layeகரிகாலன் கட்னதாக்கும் இந்த அணை.

அமுதன்: வாவ்

பெரியப்பாகல்லையும்களிமண்ணையும் மட்டும் வச்சிண்டு கட்னதாக்கும் இது. இந்த லோகத்துக்கே பாசனத்த சொல்லி கொடுத்தது நம்ம முன்னவா தான்..

அமுதன்தஞ்சாவூர் பத்தி கொஞ்சம் explain பண்ணுங்களேன்.

(பெரியம்மா உள்ளே வருகிறார்)

பெரியம்மாநான் சொல்றேண்டா ராஜா.
நம்மளோட நெற்களஞ்சியம் தஞ்சாவூர்தான்சோழர்களோட தலைநகரமாகவும் இருந்திருக்கு டா அம்பி.

அமுதன்சோழர்கள்னா யாரு?

பெரியம்மாதமிழ்நாட்டை பல மன்னர்கள் ஆண்டாஅவாள்' முக்கியமானவா சோழர்கள்.

அமுதன்கரிகாலனும் சோழ மன்னனா?

பெரியம்மாஆமாஅதுல most important ராஜராஜசோழன்.
பெரியகோவில கட்டினது வாதான்இவரோட புள்ளாண்டான்
 ராஜேந்திரசோழன். அவரும் ரொம்ப popular டா அம்பி

அமுதன்பெரிய கோவிலா?

பெரியப்பாஇந்தியால பெரிய கோயில் ரொம்ப ப்ரெசித்தம் டா கண்ணா வா உன்ன நான் கோவிலுக்கே அழைச்சிண்டு போயி காட்றேன்..

காட்சி 9


கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
பெரியப்பா குடும்பம் 

இடம்: பெரிய கோவில்  

அமுதன்இந்த temple'கு அப்டி என்ன importance?

பெரியம்மாகிரானைட் கல்லால 1000 வருசத்துக்கு முன்னால கட்னா.  தமிழரின் கட்டடக்கலைக்கு இதான் பெஸ்டு proofஅங்க இருக்குற சிலைகள் எல்லாமேகலை நயத்தோட இருக்கும்..

அமுதன்அது எப்படி? 

பெரியம்மாஇந்த சிலையைப் பாருநோக்கு என்ன புரியர்துன்னு சொல்லு? 

அமுதன்பாம்ப மிதிச்சிக்கிட்டு ஒருத்தர் நிக்கிறாரு

பெரியம்மாநன்னா  பாருயானை எத்தன பெருசு.. அதையே பாம்பு விழுங்கர்து

குமுதாயானை big animal’nu தமிழ் ஸ்கூல்ல படிச்சிருக்கேன்.

பெரியம்மாசரியாசொன்னபோ,
யானையையே முழுங்கற பாம்ப, கால்'ல மிதிச்சிண்டு நிக்கற த்வாரபாலகர் எத்தன powerful'ஆ இருப்பார்?

அவரே கும்பிடுறார்னாஅப்ப சாமீ எவ்ளோ பெரியவரு?

அத சொல்ற சிலைதான் இது.

அமுதன்இப்ப புரியிது

(வேறொரு சிலையக் காட்டிஇந்த சிலை என்ன சொல்லுது பெரியப்பா?

பெரியப்பா: நம்ம பரதக் கலையோட விசேஷத்த குறிகர்து

அமுதன்பரதம்னா?

பெரியப்பாஅது ஒரு திவ்யமான நாட்டியம். நோக்கு பாக்கணுமா?

அமுதன்ஓ பாக்லாமே..
  
பரதம்

காட்சி 10

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
மாமாவின் குடும்பம்
மாமா: செந்தில்
மகன்கார்த்தி

மாமா வீட்டு வாசலில்...

அமுதன்Momஅங்கிள் வீட்ல பேசுற டமில் டிப்ரெண்ட்டா இருக்குமா?

ராஜிஆமா அமுதன்அவங்க மதுரைத் தமிழ் பேசுவாங்க.

செல்வம்சங்கம் வச்சி தமிழ் வளர்த்த ஊருடா..

வாசலில் காத்திருந்த மாமவின் குடும்பத்தினர்அனைவரையும் உபசரித்து உள்ளே அழைத்துவந்தனர்.

மாமாபிரயாணமெல்லாம் எப்படி இருந்துச்சுகா?

ராஜிநல்லா இருந்தது செந்தில்நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?

மாமாஎல்லாரும் நல்லா இருக்கோம்.

செல்வம்கார்த்தி எங்க செந்தில்?

மாமாவெளிய போயிர்க்கான்வெள்ளனே வந்திருவான்

குமுதா, முக்குல பிள்ளைய வெளையாட்ரத அப்டி என்ன வெறிச்சு பாக்குறீக?

குமுதாWait maama, lemme go and see..

குமுதா தெருவில் பிள்ளைகள் விளையாடுவதை பார்க்கிறாள். ஒரு குரூப் பாண்டி ஆடி கொண்டிருக்கிறார்கள்.

குமுதா: நீங்க என்ன பண்றீங்க?

Group Member 1: நாங்கலாம் வெளையாட்றோம்.
குமுதா: என்ன விளையாட்டு இது?

Group Member2இதுதான் பாண்டி ஆட்டம்.

Group Member3: நீயும் வரியா?

குமுதா: so nice. நீங்க continue பண்ணுங்க.. நான் நாளைக்கு join பண்ணிக்கிறேன்.

இதற்கிடையில் மாமவின் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் சிலர் அமுதன் குடும்பத்தைக்காண அங்கு வந்தனர்.

இளம் வயது பாட்டி ஒருவர்செந்துலுசெந்துலுஒன்னோட வீட்டுக்கு அமெரிக்காவுல இருந்து யாரோ வந்துர்க்காங்கலாமேயாரது?

மாமா: என்னோட அக்கா வீட்ல இருந்து வந்துருக்காக.

பாட்டி1: அவிகள  கூப்புடு

மாமா: அக்காஅமுதாகுமுதா கொஞ்சம் இங்க வாங்க.

குமுதா: அமுதாஹூ ஆர் தே (என்று அமுதனிடம் கேட்டாள்)

அமுதன்ஹொவ் டூ  நொவ்ஆஸ்க் அங்கிள்.

பாட்டி2: (பாட்டி 1 ன்னிடம்சின்னப் புள்ள என்னமா இங்கிலீபீஷ் பேசுது

பாட்டி1: அடி என்னாடி லந்து பண்றவ?அமெரிக்காவுலஇத விட சின்னப் புள்ளைங்கெல்லாம் இங்கிலீபீஷ் பேசுமாமே?

பாட்டி2: ஆமாஇவ வண்டியூர் தெப்பக் குளத்த தாண்டினதில்ல பெருசா அமெரிகாவப்பத்தி பேச வந்துட்டாம்ம்க்கும்

பாட்டி 1: செந்திலுஊம் மருமவன செத்த நேரம் இங்கிலீபீஷ்ல பேசச்செல்லேன்?

மாமாஅமுதாஅவிக கூட எதாவது இங்கிலீஷ்ல பேசேன்

அமுதன்Really??? அங்கிள்ஜஸ்ட் லைக் தட் டாக் னா வாட் கேன்  டாக்?

மாமா:(பாட்டிகளிடம்) அக்கா நீங்க எதாவது கேளுங்கஅவன் பதில் சொல்லுவான்.
பாட்டி1: (பாட்டி 2  பார்த்துநீ எதாவது இங்கிலீபீஷ்ல கேளு.

பாட்டி2: நா பெரிய எலிசபெத்து ராணி பேத்திபக்கி… நீதானடி அஞ்சாங் கிளாச விருதுநகர்ல அஞ்சி வருஷம் படிச்சவநீ கேளு?

பாட்டி 1: அமுதாஅமுதா வாட் இச் யுவர் நேமு?

அமுதன்(பெரு மூச்சுடன்) oh no…நாட் அகைன்...

பாட்டி 2: அமுதான்னு நல்ல பேர வுட்டுட்டு வாயிலையே வராத "நாட்டு" "பூட்டுனுஎதோ பேரு வச்சிருக்காங்க.

இதற்கிடையில் கார்த்தி வந்துவிட

கார்த்தி(பாட்டிகளை பார்த்து) என்னம்மா நீங்க இப்பிடிப் பண்றீங்கலேம்மாஅதுக்குள்ள பட்டறைய போட்டீங்கலேம்மா?
“பாட்டிகள் வினோதமாக கார்த்தியைப் பார்க்க”

கார்த்திஅமெரிகாவுலேர்ந்து மாமா வந்துர்காக, அத்தை வந்துர்காக, அமுதா-குமுதா லாம் வந்துர்காக.. நீங்கலாம் போயிட்டு அப்புறம் வாங்கம்மா மின்னல்...

All Paati’s: அதுக்கு ஏன் ஹெ ஹெ னு அலப்பறைய போட்ற ? நாங்க போயிட்டு பைய வாரோம் (பாட்டிகள் அனைவரும் புறப்பட்டு விட்டனர்)

அமுதன்ஹாய் கார்த்திக்

கார்த்திஹாய் அமுதன்நைஸ் டு மீட் யூ.

அமுதன்கார்த்திநீ டமில்லையே பேசலாம்எனக்கு டமில் புரியும்.

கார்த்திஅப்பிடியாதமிழ்நாட்ல எந்த ஊர்லாம் போனீங்க?

அமுதன்சென்னைகோவைதஞ்சை

கார்த்தி:  சூப்பர், இன்னைக்கி இங்க ஒரு மியூசிக் ப்ரோக்ராம் இருக்கு, நாம எல்லாரும் அங்க போலாமா?
  
அமுதன்: நல்ல பீட் சாங் வித் புல் எனெர்ஜியோட கேட்கமுடியுமா? எக்ஸாம்பில் சொல்லனும்னா, "மைகேல் ஜாக்சன்" பாட்டு மாதிரி.

இந்தா, இதக் கேட்டுப்பாரு... 

கார்த்தி: இதென்ன பெரிய விஷயம்,  "மைகேல் ஜாக்சன்" னோட professor ரே இங்க இருக்காரு.

அமுதன்: வாட் டூ யு மீன்?

கார்த்தி: இதோ அவங்களே வந்துட்டாங்களே....

கார்த்தி பறை குழுவிடம்                                

அண்ணே, நம்ம பையன் வேற மாதிரி ட்யூன் ஆகியிருக்கான். அதனால நீங்க கத்துக்கிட்ட மொத்த விதையையும் முழுசா இறக்கி செம குத்து குத்துங்க    

பறை குழு நபர் 1: என்னப்பு அவ்ளோ லேசா சொல்லிப்புட்டே. பொறபுக்கும் இறப்புக்கும் பறை உண்டுப்பே. பறைன்னா ச்சொல்ரதுன்னு அருத்தம். அப்பெல்லாம் ஊர்காறேங்களுக்கு பறை அடிச்சிதான் சேதி சொல்லுவாங்கே தெர்யுமா? தோல் வாதியத்துக்கு எல்லாம் இவுக தான் முன்னோடி. இது நம்மவூட்டு பாரம்பரியம்.. தமிழனோட அடையாளம். இப்போ இத கேளு ராசா.  


பறை...

காட்சி 11

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
மாமாவின் குடும்பம்
மாமா: செந்தில்
மகன்கார்த்தி

கார்த்திஎன்ன அமுதா பறை எப்பிடி இருந்தது?

அமுதன்ரொம்ப நல்ல இருந்ததுஇண்டியா  கிளாச்சிக் டான்ஸ் மட்டும்தான் இருக்கும்னு நெனச்சேன்.

கார்த்திசென்னைகோவைமதுரை எந்த தமிழ் பிடிச்சிருக்கு?

அமுதன்எல்லாமே நல்லாத்தான் இருக்கு?

கார்த்திஇதுவரைக்கும் நீ கேட்காத ஒரு தமிழ் இருக்கு

அமுதன்என்னது அது?

கார்த்திசொல்றேன் நீ கேளு இப்போ

அமுதன்ஒன்னு மே புரிலையே

கார்த்தி: சரியா சொன்னீங்க your honor... இதுல தமிழ் இருக்கும்ம்... ஆனா இருக்காது... :)

செந்தில்டேய் அகராதிஇதெல்லாம் சொல்லி அமுதன் பேசுற தமிழ கோளாறு பண்ணாத

அமுதன்நோ அங்கிள்வி ஆர் ஹவிங் பன்

செந்தில்: சீக்கிரமா தூங்குங்க.. நாளைக்கி வெள்ளனவே நீங்க கெளம்பனும்கன்னியாகுமரிக்கு போறீக இல்ல

காட்சி 12

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
சித்தப்பா குடும்பம்

இடம்கன்னியாகுமரி veedu

அமுதன் சித்தப்பா சித்தப்பா என்று அழைத்தபடியே உள்ளே வருகிறான்
சித்தப்பா என்னப்பா என்றபடியே உள்ளே வருகிறார்..

அமுதன்: வந்த உடனே கேக்கணும் நு நெனச்சேன்... தாத்தா எங்கஅவர பாக்க தானே ஆசையா வந்தோம்.

chitthi: தாத்தா பக்கத்துக்கு ஊரு பஞ்சாயத்துக்கு போயிர்காக.... ரவைக்கு வந்ருவாக

அமுதன்: OK… சித்தப்பாஇந்த வள்ளுவர் சிலைய நேர்ல பார்க்கப் போலாமா?

சித்தப்பாவள்ளுவர் யாருன்னு தெரியுமா மக்கா ?

குமுதா: O, தெரியுமே, எவ்ரி வீக் எங்க டமில் ஸ்கூல ஒரு திருக்குறள் சொல்லுவோம்.

சித்தப்பாஎங்க ஒரு குறள் சொல்லு மக்கா ?

குமுதா: தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்

சித்தப்பாபிரம்மாதம் மக்காபிரம்மாதம்வள்ளுவர் சிலையோட உயரம் 133 அடிஇது திருக்குறள்ள உள்ள 133 அதிகாரத்த குறிக்கி.

அமுதன்அது என்ன பாறை?

சித்தப்பாஅதுவா மக்கா விவேகானந்தர் பாறைஅவரு யாருன்னு தெரியுமா?

அமுதன்சிகாகோல நடந்த Conference’la ஹிந்து ரிலீஜியன் பத்தி பேசுனாரு

குமுதா: "நீ எதுவாக ஆக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்னு சொன்னவரு.

சித்தப்பாஅண்ணே அமுதனையும்குமுதாவையும் நெனைச்சா எனக்கு
எத்தரை பெருமையா இருக்கு கேட்டியா .

செல்வம்எல்லாம் தமிழ் ஸ்கூல்ல கத்துக்கிட்டது

சித்தப்பா: பசங்களா, இந்த ஊருக்கு இன்னொரு சிறப்பு இருக்கு கேட்டியா. .

அமுதன்: அது என்ன சித்தப்பா?

சித்தப்பா: வில்லுப் பாட்டுஇன்னிக்கி உச்சத்துல நடக்குது.. நாம போவோம்.. எத்தரை வட்டம் கேட்டாலும் சலிக்காது...

அமுதன்heyyy… sooopereee... 

வில்லுப்பாட்டு

காட்சி 13

கதாப்பாத்திரங்கள்
அமுதனின் குடும்பம்,
தாத்தா

செல்வம்அமுதா வீட்டுக்கு போனவுடனேதாத்தா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ.

அமுதன்Why Paa?

செல்வம்பெரியவங்கள பாத்தா கால்ல விழுந்து ஆசீ வாங்கனும்அது நம்ம பண்பாடு.

அமுதன்: ......

பேரப்பிள்ளைகளை கண்டவுடன் தூக்கியணைகத்து முத்தமிட முன்சென்றார் தாத்தா.

அமுதன் அம் நாட்  பேபி (என்று ஒதுங்கிக் கொண்டான் அமுதன் )

செல்வம்அப்பா டோன்ட் மிஸ்டேக் ஹிம்...

தாத்தாபரவாயில்ல செல்வம்நா அவனோட தாத்தாஅவன் என்னோட பேரன்இது என்னைக்கும் மாறாது.

செல்வம்உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு?

தாத்தா: எனக்கென்ன... நான் நல்லவே இருக்கேன் பா.

செல்வம்உங்களைப் பத்தி நாங்க வொர்ரி பண்ணாத நாளே இல்ல பாநீங்க எங்ககூட வந்து ஸ்டே பண்ணலாம்லகிட்ஸ்ம் என்ஜாய் பண்ணுவாங்க.

தாத்தாஅது இருக்கட்டுமப்பாநீ பேசுன 10,15 வார்த்தைலஎத்தன ஆங்கில வார்த்தைகள் பரு.

குழந்தைங்ககிட்ட "பண்ணிதமிழ் பேசாத செல்வம்பண்பட்ட தமிழ் பேசு.

செல்வம்சாரி ப்பா.... கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறேம்பா...

தாத்தாநல்லது செல்வம்

(குழந்தைகளைப் பார்த்து )

ரெண்டு பேரும் இங்க வாங்கதாத்தா உங்களுக்கு ஒரு கதை சொல்றேன்.

அமுதன்: "ஆபத்தில் உதவா நண்பன்கதையா தாத்தா?

குமுதாஅது எங்க தமிழ் ஸ்கூல்லையே சொல்லிக் கொடுத்தாங்க.

தாத்தாஇது வேற கதை

குமுதாOhh. That’s exciting

குழந்தைகள் இருவரும் தாத்தாவின் அருகில் வந்து அமர்ந்தனர்

தாத்தாஒரு காட்லஅம்மா சிங்கம் இரை தேடி வெளிய போச்சுஅப்போ குட்டி சிங்கம் விளையாடிகிட்டே வழிமாறி எங்கையோ போயிரிச்சி.

குமுதாஅப்புறம் என்னாச்சி தாத்தா

தாத்தாஅப்போஅந்த வழியா வந்த ஆட்டுக்கூட்டம்கூட சேந்துக்கிச்சி சிங்கக்குட்டி.

குமுதாஅப்புறம்

தாத்தாஇப்படி ஆடுங்ககூட இருந்த சிங்கம் தன்ன ஆடுன்னே நெனைசிருச்சி.

குமுதாஅப்பிடீன்னாசிங்கம் புல்லைத் தின்னதா?

அமுதன்குமுதா, ஸ்டோரியக் கேளுசும்மா சும்மா டிஸ்டர்ப் பண்ணாத.

தாத்தாஒரு நாள்அங்க வேட்டைக்கு வந்த இன்னொரு சிங்கம்ஆடுங்கூட இருந்தஇந்தக் குட்டி சிங்கத்தப் பாத்தது.

குமுதா: நோ

தாத்தாஅந்த சிங்கம்குட்டி சிங்கத்துக்கிட்ட சொன்னதுநீ ஆடு இல்ல "சிங்கம்னு.

குமுதாஅதுக்கு, குட்டி சிங்கம் என்ன சொன்னது?

தாத்தாமுதல்லகுட்டிக்கு தான் யாருன்னு புரியலஅப்புறமா புரிஞ்சிக்கிச்சிஆடு கூட இருந்ததால நாம ஆடு ஆகமாட்டோம்எங்க இருந்தாலும் சிங்கம்சிங்கம்தான்னு.

......

அந்த வழி தவறிப்போன சிங்கம் மாதிரி இல்லாமயார் கூட இருந்தாலும்எந்த ஊர்ல இருந்தாலும் நாம தமிழர்கள்ங்கிறத மறக்கவே கூடாது.

அமுதன்நாங்கதான் தமிழ் பேசுறோமே தாத்தா.

தாத்தாபேச்சில மட்டும் தமிழ் இருந்தா போதாது அமுதா , உனக்கு மூங்கில் தெரியுமா?

அமுதன்தெரியும் தாத்தாபேம்பூ ட்ரீ

தாத்தாமூங்கில் மரம் இல்ல அமுதாஅது புல்உள்ளீடு இல்லாத எதுவும் மரம் ஆகமுடியாது.

அமுதன், அப்பிடியா?

தாத்தாநம்மோட தனித்தன்மைய நாம இழந்துட்டோம்னாநாமளும் உள்ளீடு இல்லாத புல்லுக்குச் சமம்தான்.

கதையை தாத்தா கூறி முடித்தவுடன்அமுதன் ஓடிவந்து தாத்தாவை அணைத்துக்கொண்டான்.


================


காணொளி 

https://www.youtube.com/watch?v=32Kv-o_M5ko&feature=youtu.be


Tuesday, January 20, 2015

ஆரஞ்சு மிட்டாய்...

தங்கராஜ் சிறுகுறிப்பு வரைக?


எனது துவக்கப்பள்ளி நாட்களையும் தங்கராஜையும் பிரிதல் இயலாது. பிறர்நலம் போற்றிப் பேணுவதில் அவனுக்கு நிகரில்லை. அவனுக்கு இருந்த தொலைநோக்குப் பார்வைக்கும் நுண்ணறிவுக்கும் நிச்சயம் இச்சமயம் சிகரங்களைத் தொட்டிருப்பான்.

தங்கராஜ் பற்றி பெருங்குறிப்பு வேண்டுவோர் கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கவும்

http://arun-radhakrishnan.blogspot.com/2012/09/blog-post.html

பெருஞ்சுவர்  


தங்கராஜின் ஞானக் கண்களின் அறிவுத் தேடுதலுக்கு தகுந்த விடை மூன்றாம் வகுப்பில் அந்த ஆண்டு கிடைக்காததால், அடுத்த ஆண்டும் அதே மூன்றாம் வகுப்பில் தொடர்ந்து தேடினார். என்னுடைய பூனைக் கண்கள் எதையும் தேடாததால் அடுத்த வகுப்பிற்கு விரட்டப் பட்டேன். துவக்கப்பள்ளியில் அதுவரை சேர்ந்து படித்த இருவரும் விதியின் சதியால் முதன் முறையாகப்  பிரிக்கப்பட்டோம். 

துக்கம் தொண்டையை அடைக்க விம்மலுடன் விடைபெற்றேன் என் மானசீக குருவிடம். ஆசி வழங்கி அடுத்த வகுப்பிற்கு அனுப்பினார் "தங்கமான ராஜ்". ஒரு சுவர் மட்டுமே எங்களைப் பிரித்தது. வகுப்பு நேரம் தவிர மற்ற அனைத்து தருணங்களிலும் எங்களுடைய சிந்தனைப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தன.

புதிய உலகம்


அன்று வெள்ளிக் கிழமை, மதியம் உணவு இடைவேளையில் உண்டமயக்கம் களைய நடை பயிற்சியில் இறங்கினோம் நானும், அவரும். பள்ளியைவிட்டு சிறிது தூரம் வெளியே வந்தவுடன், வழக்கமான வழியில் செல்லாமல் புதிய திருப்பத்தில் திருப்பினார் குரு. நானும் அவரைத் தொடர்ந்தேன். அந்தப் புனிதப் பயணம் ஒரு "பாய்" கடையை அடைந்தது. 

பெரிய "பாய்"ன் வாரிசு, சின்ன "பாய்" அங்கே வீற்றிருந்தார். அவரையும் "பாய்" என்றே அழைத்தார் தங்கராஜ். சின்ன பாயின் காதுகளில் ஏதோ மந்திரங்களை தங்கராஜ் ஜெபிக்க, ஒரு வஸ்துவை வெளியே எடுத்து கடையின் முன்புறம் தொங்கவிட்டார் சின்ன "பாய்".

வகுப்பில் வழக்கம்போல திருதிருவென்று விழிப்பதைப் போல ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் அந்த வஸ்துவை. "தங்கராஜூ, இது என்னதுடா?" என்று பயபக்தியுடன் நான் கேட்டதற்க்கு, "இது தான் லக்கி ப்ரைஸ்" என்று விளக்கமளித்து, அந்தப் புதிய உலகத்தின் கதவுகளைத் திறந்து,  எனக்குப் பிறவிப் பயனையளித்தார் தங்கராஜ்.

லக்கி ப்ரைஸ்


செவ்வகமான அட்டையில் மேல்புறம் சில பரிசுப் பொருட்கள் எண் குறிப்பிடப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு தொங்கவிடப் பட்டிருக்கும். செவ்வக அட்டையின் கீழ்புறம், சதுரம், சதுரமாக கிழிப்பதற்கு ஏதுவாக காகிதத்தில் செய்யப்பட்ட உறை போன்ற ஒன்று ஒட்டப்பட்டிருக்கும் . 25 பைசா கொடுத்தால்(விலை மாறுதலுக் குட்பட்டது), அதில் ஒரு உறையை கிழிக்கலாம். அந்த உறையினுள் இருக்கும் மற்றொரு சிறிய காகிதத்தில் எதாவது எண் இருக்கும். அந்த எண்ணும், மேலே தொங்கவிடப் பட்டிருக்கும் பரிசுப்பொருட்களில் உள்ள ஏதாவது எண்ணும் பொருந்துமேயானால் அந்தப் பரிசு கிழிப்பவருக்குக் கிடைக்கும்.        
                 

என் செல்லப் பெயர் 


இந்த விதிமுறையை எனக்கு விளக்கிவிட்டு, "லிக்கி ப்ரைஸ்" கிழிக்க தயாரானார் தங்கராஜு. அப்போது எனக்கு ஒரு ஐயம் எழுந்தது. பொதுவாக குருநாயரிடம் சட்டையிருக்கும், சட்டையில் பையிருக்கும் ஆனால் பணம் ?

அப்போதுதான் குரு அவருடைய குருவான "ராபின் ஹூட்" என்பவரைப் பற்றி விளக்கினார். "ராபின் ஹூட்"டின் அறிவுரைப்படி தங்கராஜு, பணமிருக்கும் அவரின் அப்பாவின் சட்டைப் பையிடமிருந்து பணத்தை எடுத்து பணம் இல்லாத வேறொரு சட்டைப் பையிடம் கொடுத்துவிட்டார். அந்த வேறொரு சட்டையைத்தான் இன்று அவர் அணிந்து வந்துள்ளார்.      

தங்கராஜ் வாஸ்துசாஸ்த்திரத்திலும் வல்லுனர் என்பது அன்றுதான் எனக்குத் தெரியும். அவர் விரும்பிய பரிசுப்பொருளில் தன் வலதுகை கட்டைவிரலைப் பதித்து இரண்டு "ஜான்" கீழ்நோக்கி அளந்தார். இரணடாவது "ஜான்" முடிந்த இடத்திலிருந்த அந்தச் சதுர உரையைக் கிழித்தார். உள்ளே ஒரு எண், அந்த எண்ணும் அவர் விரும்பிய பரிசுப்பொருள் எண்ணும் ஒத்திருந்தது. அன்றுதான் எனக்குத் தெரியும் தங்கராஜூவின் "செல்லப் பெயர் அதிர்ஷ்டம்" என்பது. 

என்னையும் ஒரு உறையை கிழிக்கப் பணித்தார். என்னிடம் 10 பைசா மட்டுமே இருந்தது. அதனால் திங்கள்கிழமை கிழிப்பதாக உறுதிமொழி எடுத்துவிட்டு , இருந்த 10 பைசாவிற்க்கு மிட்டாய் வாங்கிக் கொண்டு திரும்ப வந்துவிட்டோம்.

அந்த 25 பைசா


மறுநாள், என் அம்மாவிடம் 25 பைசா கேட்டேன். தன் நலனைவிட என் நலன் பேணும் என் அக்கா, நான் "லக்கி ப்ரைஸ்கிழிக்கத்தான் காசு கேட்கிறேன் என்பதை அம்மாவிடம் போட்டு உடைக்க, வழக்கமாக கிடைக்கும் 10 பைசாவும் அன்று கிடைக்கவில்லை.    

அன்றிரவு மீண்டும் மீண்டும் "ராபின் ஹூட்" என் கனவில் வந்து ஆசி வழங்கினார். மறுநாள் (ஞாயிறு)  காலை, "ராபின் ஹூட்"டின் முழு ஆசியுடன் என்னுடைய அம்மாவின் சிறுவாடில் இருந்து 25 பைசா என்னுடைய கால்சட்டைக்கு இடம் மாறியது.

ஞாயிறு மதியம், ஒரு கோழிக்கு மோட்சமளித்த திருப்தியில் எங்கள் வீட்டில் அனைவரும் உறங்கிவிட, எனக்கு மட்டும் உறக்கம் வரவில்லை. மற்றவர்களையும் உறங்கவிடாமல் தொல்லை கொடுத்ததால், பக்கத்துக்கு வீட்டுக்கு விரட்டியடிக்கப் பட்டேன். பக்கத்துவீட்டு மேரியக்கா அவர் போகும் "சண்டே க்ளாசுக்கு" என்னையும் அழைத்துக் கொண்டுபோனார். 

"சண்டே க்ளாஸில்" வெள்ளை அங்கி அணிந்த அந்த மனிதர் இயேசு பெருமான் மகளுக்காகப்  பட்ட துன்பங்கள் அனைத்தையும் விளக்கினர். அதைக் கேட்டு கிளிசரின் இல்லமல் என் கண்கள் நீரைக் கசிந்தன. அவரின் கதை என் அப்பாவிடம் நான் வாங்கிய பல சன்மானங்களை கண்முன் நிறுத்தியது. 

பின்பு, ஒரு வழியாக ஞாயிறு வகுப்பு முடிவுக்கு வந்தது. நாங்கள் புறப்பட தயாராக இருக்கும்போது, அதுவரை உருக்கமாக கதைசொன்ன அந்த மாந்தர் கையில் உண்டியலுடன் எங்கள் முன் வந்து நின்று ஏதோ காரணம் சொல்லி தங்களால் இயன்றதை கொடுக்கும்படி கேட்டார். சற்றும் யோசிக்காமல் கால்சட்டையில் இருந்த 25 பைசாவை உண்டியலுக்கு இடம்பெயரச்செய்தேன். முகமலர்ச்சியுடன் அந்த கதைசொல்லி எனக்கு ஒரு ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தார்.

வீட்டுக்கு வந்த பிறகுதான் என் தானத்தின் பக்கவிளைவு புரிந்தது. 25 பைசா போனதின் பாதிப்பு மிகப் பலமாக இருந்தது. சாப்பிடக்கூட முடியவில்லை. மீண்டும் அம்மாவின் சிறுவாட்டிடம் போகலாம் மென்றால் பயம், வேறு வழியில்லை, வெறுங்கையுடன் திங்கள் காலை பள்ளிக்குச் சென்றேன்.        


மீண்டும் அதிர்ஷ்டம் 


சொன்ன சொல் மாறாத தங்கராஜ் மீண்டும் 25 பைசவுடன் அன்று பள்ளிக்கு வந்திருந்தார். உணவு இடைவேளையில் மீண்டும் பாய் கடைக்கு சென்றோம். என்னிடம் பணம் இல்லை என்பதையும், அதன் காரணத்தையும்  தங்கராஜிடம் கூறினேன். அதைக்கேட்டு "பயந்தாங்கொலிப் பக்கடா" என்று எள்ளி நகையாடினார் குரு.        

இந்த முறை  பாய் கடையில் அப்பா "பாய்" இருந்தார். "லக்கி ப்ரைஸ்" அட்டையில் இன்று அழகான "சுவர் கடிகாரம்" இருந்தது. வாஸ்து வல்லுனர் தங்கராஜ், சுவர் கடிகாரத்தை தனதாக்கிக் கொள்ள அன்று செய்தது போலவே இன்றும் தன் சித்து வேலையைக் காட்டினார். 

என்னை ஏளனம் செய்து எள்ளி நகையாடிய குருவிற்க்கு பரிசு விழக்கூடாது என்று இயேசு பெருமானை மனதிற்க்குள் வேண்டிக் கொண்டேன். ஒன்று நான் கொடுத்த 25 பைசாவை திருப்பிகொடு, இல்லை தங்கராஜுக்கும் பரிசு விழக்கூடாது என்று அவரிடம் உடன்படிக்கை செய்துகொண்டேன்.

இதற்கிடையில் தங்கராஜு அந்த சதுர உறையை கிழித்துவிட்டார். உறையை பிரித்து அவர் அந்த எண்ணை பார்ப்பதற்க்கு முன்னர் படபடப்பில் என் இதயம் வெளியே வந்து விழுந்து விடும் போலானது.

ஒரு வழியாக உள்ளே இருக்கும் அந்த எண்ணைப் பார்த்தார் தங்கராஜு, அதில் அன்று மதியம் நாங்கள் சாப்பிட்ட முட்டை பப்பறப்பா வென்று படுத்துக்கிடந்தது. சில நொடிகளில் தங்கராஜு ஓ வென்று அழத்தொடங்கி விட்டார். குரு அழுவதைப் பார்த்து நானும் ஏனென்று புரியாமல் அழுதேன். 

நாங்கள் அழுவதைப் பார்த்த அப்பா "பாய்" நடந்தது புரியாமல் என்னவென்று விசாரித்தார். பின்பு இருவருக்கும் ஆறுதல் கூறினார். தங்கராஜு சமாதானம் அடைவதாக தெரியவில்லை. பின்பு "பாய்" இருவருக்கும் "ஆரஞ்சு மிட்டாய்" கொடுத்து, இனிமேல் இந்தப் பக்கமே வரக்கூடாது என்று விரட்டியடித்தார்.