cookie

Friday, December 12, 2014

மேற்க்கிந்திய கம்பெனி



தலைப்பை பார்த்தவுடன் இது இந்திய சுதந்திர போரட்ட வரலாறு என்றோ, ஆங்கிலேயர்களின் அட்டூழியங்களின் அணிவகுப்பு என்றோ புரிந்துகொள்ள வேண்டாம்.

படிப்பிற்க்காகவோ, பணியின் நிமித்தமாகவோ, பஞ்சம் பிழைக்கவோ, பகட்டான வாழ்விற்காகவோ அல்லது ஏதோ ஒரு காரணத்திற்காக அமெரிக்கா பறக்கும் நம் பழம்பெரும் நாட்டின் புதல்வர்களில் சி(ப)லர் சிறுமூளையில் சிந்திக்கத் தொடங்கிவிடுகின்றனர். அவற்றில் சில உங்கள் சிந்தனைக்கு        

கற்புள்ள உடை 

  தன்னுடைய பட்டமளிப்பு விழாவிற்கு மேற்க்கத்திய உடையணிந்து செல்ல விரும்பிய அந்த நபர். இங்லாந்தின் ரகசிய உளவாளி ,திரைப்படத்தில் அணிவதுபோல் ஓர் விலை உயர்ந்த உடையை வாங்கினார். ஏன் இவ்வளவு விலைகொடுத்து வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு, இது எனக்கு ஒரு நாள்தான் தேவை, விழா முடிந்தவுடன் இந்த உடையை திருப்பிக் கொடுத்துவிடுவேன் என்று எந்த குற்ற உணர்வும் இல்லாமல் கள்ளம்நிறைந்த சிரிப்புடன் கூறினார் .       

அப்படியானால் உடையை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாமே என்று கேட்டதற்க்கு, வாடகை உடையை பலபேர் உடுத்தி இருப்பார்கள். அதை நான் எப்படி உடுத்துவது?

உடையிடமும் கற்பை எதிர்பார்த்த அந்தக்கனவான்,  கடன் அட்டையில் உடையை வாங்கி, சொன்ன சொல் மாறாமல் விழா முடிந்தவுடன் திருப்பபிக் கொடுத்தும்விட்டார். 

அவருக்கு முன்பு அவரைப்போல் எத்தனை பேரிடம் போய் திரும்ப வந்ததோ அந்த கற்புள்ள உடை. 


வந்தது ஆனா வரல

நவம்பர் மாதம் நான்காம் வியாழன்  நன்றிநவிலும் நன்னாளக அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. அதற்க்கு அடுத்த நாள் கருப்பு வெள்ளி. அன்றைய தினம் தள்ளுபடி விலையில் பெருட்கள் விற்கப்படும்.

அந்நாளில், மற்றொரு அன்பர் இணையம் வழியாக சில பொருட்களை வாங்கினார். வாங்கிய பொருள் பத்திரமாக வந்து சேர்ந்தவுடன். வாடிக்கையாளர் சேவைமையத்தை தொடர்புகொண்டு தான் பணம்கொடுத்து வாங்கிய பொருள் இன்னும் வந்து சேரவில்லையென்றும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் கூறுவார்.

அப்போதைய தேவைக்கு எற்றாற்படி, அதே பொருளை மீண்டும் அனுப்பவோ அல்லது கொடுத்த பணத்தை திரும்பவோ கேட்பார். 

பல சமயங்களில் வேறு கேள்விகள் எதுவும் கேட்காமல் அந்தக் கடைகள் பணத்தை திருப்பிக் கொடுப்பதும் உண்டு.

கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் நிச்சயம் புரியும். சில ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்ததைவிட தற்போது அனைத்து கடைகளும் பெரும்பாலும் தங்களுடைய விற்பனை செய்த பொருட்களை திரும்பப் பெரும் காலக்கெடுவை வெகுவாக குறைத்து விட்டன.   

ஏமாற்றுவது என்றுமே புத்திசாலித்தனமாகது. நம்முடைய குழந்தைகள் நம்மைப் பார்த்துக்கொண்டும் கவனித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்கள் மனதில் நாம் பதியவைக்கப் போகும் செய்தி என்ன?

நம் சந்ததிகளுக்கு சிறப்பான எதிகாலத்தை வழங்குவது மட்டுமல்ல. எதிர்காலத்திற்கு சிறப்பான சந்ததிகளை வழங்குவதும் நம் கடமைதான்.

நல்ல மாற்றம் நம்மிலிருந்து, இன்றிலிருந்து தொடங்கட்டும்...

Friday, October 31, 2014

கொக்கு பற பற...

சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, என்னைப்பார்க்க நண்பர் ஒருவர் உணவு இடைவேளையில் என்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தார். அடையாளஅட்டையில்லாமல் அலுவலக கட்டிடத்தினுள்ளே வரமுடியாது என்பதால், அவரை அழைத்துவர நான்காவது மடியில் இருந்த என்னுடைய அலுவலகத்திலிருந்து தரைத்தளத்தில் இருந்த கட்டிடமுகப்பு அறைக்கு மின்னுயர்த்தி (elevator) வழியாக சென்றேன்.   

மின்னுயர்த்தி தரைத்தளத்தை அடைந்தவுடன் "டிங்" என்ற ஒலியுடன் தன்வாயை அகலமாகத் திறந்தது. இரவு முழுவதும் பட்டியில் அடைபட்டுக்கிடந்த செம்மறியாட்டுக் கூட்டம் காலையில் மேய்ப்பர் பட்டியைத் திறந்தவுடன் இலை தளைகளை கடிக்க கண்மண் தெரியாமல் முன்னே ஓடுவதைப்போல, மணிக்குப் பதிலாக, கழுத்தில் அடையாளஅட்டையைத் தொங்கவிட்டுக்கொண்டு பர்கரையும், பீசாவையும் கடிக்கும் கூட்டம் மொதுமொது வென்று உள்ளே நுழைந்தது. 

தரையிறங்க வேண்டியவனை மீண்டும் உள்ளே புகுத்தி, மின்தூக்கியின் சுவற்றோடு சுவராக அறைந்தது அந்தக் கூட்டம். "எக்ஸ்கியூஸ்மீ, எக்ஸ்கியூஸ்மீ" என்று பலமுறை ஏலம் போட்டும் எவர்காதிலும் என் ஓலம் ஏறவில்லை. பன்னிரண்டுபேரை அள்ளிக்கொண்டு மேலே உந்திச்சென்ற மின்தூக்கி மூன்றாவது மாடியில் மூச்சுவாங்கி நின்றது. விட்டால் போதும் என்று நானே என்னை அங்கிருந்து விடுதலை செய்துகொண்டு இருமுடியில்லாமல் படிகளில் கீழ்க்கண்ட பாடலைப் பாடிக்கொண்டே பயணம் செய்து தரையிரங்கினேன்.

கொக்கு பறக்கும்! புறா பறக்கும்!
குருவி பறக்கும்! குயில் பறக்கும்!
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்
நான் ஏன் பறப்பேன் நராதிபனே!

மின்தூக்கியை உபயோகிக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகளில் முதன்மையானது, உள்ளிருந்து வெளியேவரும் மக்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிர்ப்பது. இதை நான் எதிர்பார்த்தது மெத்தப்படித்த மேதாவிகள் என்று உலகத்திற்குப் பறைசாற்றிக் கொள்பவர்களிடம்.

மற்றோர் ஒற்றுமை என்னை மேலும் அதிரச் செய்தது. சிலசமயம் என் தந்தை வாழ்ந்த கிராமத்திற்க்குச் செல்லும்போது பார்த்ததுண்டு. சாலையைக்கடக்கும் எருமைகள் (buffaloes) வந்துகொண்டிருப்பது முதலுதவி வண்டியா, மகிழ்வுந்தா, பேருந்தா என்பதைப் பற்றி எந்த கவனச்சிதரல்களும் இல்லாமல் கருமமே கண்ணாக முன்னோக்கிச் செல்லும், அதுபோல மூடிக்கொண்டிருக்கும் மின்தூக்கியில் கடைசி நொடியிலாவது இடம்பிடித்து விடலாம் என்று ஓடிவரும் மனிதர்களைப் பார்த்தபின்பும், மின்தூக்கியின் உள்ளே இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு கருமமே கண்ணாக வேடிக்கை பார்க்கும் சில விந்தை மனிதர்கள் என்னை பலசமயம் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

என்குலத்தை எப்படித் திருத்துவது? எங்கிருந்து தொடங்குவது? யாமறியேன் பராபரமே!!! 

Tuesday, March 11, 2014

வயசுப் பசங்க...



16ஆம் வகுப்பு படிக்க பிறந்தஊர் துறந்து 50 மைல் தொலைவில் இருந்த புது ஊருக்குள் புகுந்தான் பாலா. மகனை மறுவீட்டிற்க்கு அனுப்ப பெற்றோரும் உடன்வந்தனர். உலகத்தாய்மார்களின் "என் மகன் யோக்கியன்" விதிக்கு முற்றலும் உடன்பட்ட பாலாவின்தாய் "தம்பி நல்லா சாப்பிடு, உடம்ப பாத்துக்கோ, உன்ன மாதிரி நல்ல பசங்க கூட மட்டும் சேந்துக்கோ, வாரவாரம் ஊருக்கு வந்துரு"...

"இந்தா..., வாராவாரம் ஊருக்கு வரக்கூடாது, ஒழுங்கா இங்கயே இருந்து படி. வாரவாரம் ஊருக்கு வந்தா சாப்பாடுக்கு நான் கட்டுற காசு வீனாப்போகும். மாசத்துக்கு ஒரு தடவ வந்தாப் போதும்" (இத யாரு சொல்லியிருப்பாங்கன்னு தனியா சொல்லனுமா?)              

"நீங்க சும்மா இருங்க, உனக்கு அம்மாவைப் பாக்கணும்னு தோனுச்சுன்ன வந்துரு" என்று பாசத்தைப் பொழிந்துவிட்டு பெற்றோர் இருவரும் வீட்டுக்கு திருபினர். (80 மாணவர்கள் விடுதியில் இருந்தும்) பாலா மட்டும் தனியாக தன்னுடைய அறை நோக்கிச் சென்றான்.

அவன் வாழ்வில் முதல் முறையாக விடுதிவாசம். பார்த்த முகம், பழகிய மணம் எங்கும் தென்படவில்லை விடுதியில். முதல்நாள் வகுப்பிற்கு சென்றபோது விடுதியில் பார்த்த சிலமுகங்கள் சிரிக்க சற்று ஆறுதலானது பாலாவிற்கு. மாலை வகுப்புகள் முடந்தபின்பு மீண்டும் விடுதி. தனிமையில் இருந்து விடுபட உடன் படிக்கும் மாணவன் அறைக்குச் சென்றான் பாலா.

வரலாறு நினைவு கூறப்பட்டது. செய்ததை, (சுவாரசியம் கருதி) செய்ய நினைத்ததை, செய்யாமல் விட்டதை, பிறர் செய்ததையும்கூட தான் செய்ததாக புனைந்த பலகதைகள் மாணவர்களுக்கு இடையில் மன்ப்பெயர்ச்சி அடைந்தன. "வாங்க"வில் ஆரம்பித்த அறிமுகம், "வாடா"வில் பற்றிக்கொண்டது. 16 வருட கதைகள் அல்லவா? எவ்வளவு நேரம் பேசினாலும் போதவில்லை.   

இப்படி பழங்கதை பேசிக்கொண்டிருந்த ஒருநாள். படிப்பதற்க்கான நேரத்தை நினைவுறுத்தும் மணி ஒலித்தபின்பும் பாலாவும் அவன் நண்பன் குமாரும் உணர்ச்சிபொங்க எதையோ பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அந்த நேரம்தான் நீண்ட விடுப்பிற்குப் பின்பு மீண்டும் பணிக்கு திரும்பி இருந்தார் துனைக்காவலர் (sub-warden) ராஜு.

பேச்சின் ஈர்ப்புவிசை எந்த அளவு என்றால்? மற்ற மாணவர்கள் அனைவரும் ராஜுவின் வருகையை புரிந்து கொண்டு பதுங்குளியில் ஒளிவதைக்கூட கவனிக்காத அளவுக்கு இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தது குமாரின் அறையின் முன்பு  ராஜு MUFTI யில் (Bermuda Shorts மற்றும் T-Shirt) இருந்தார். யாரோ உணவுவிடுதியின் சமையல் அறையில் வேலை செய்பவர்தான் வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர் இருவரும்.

எதுவும் காட்டிக் கொள்ளாமல் ராஜுவும் சிலநொடிகள் அங்கேயே நின்றார். சிலநொடிகள் கழித்து யாரோ நிற்ப்பதை உணர்ந்த பாலா. "என்னண்ணே வேணும்?" என்று கேட்க.

குழப்பம் அடைந்த ராஜு "நான் யாருன்னு நினைசீங்க?" என்று கேட்க.

"Kitchen Master Assistant தான ?" என்று குமாரும், பாலாவை ஆமோதிக்க.

இரத்த நாளங்கள் புடைக்க "சிக்கல் சண்முகசுந்தரத்தை" விட OVER REACTION கொக்டுக்க ஆரம்பித்தார் ராஜு.

(Click play button and continue )



ராஜு stay in a process
top dollar
going loosed
getting time
ready come on
yeah, lets go to sub-warden room...................


என்று இருவரையும் இழுத்துக்கொண்டு தன்னுடைய அறையை அடைந்தார். அறையின் முன்பு, நிலையின் மேல்புறம்

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
     உயிரினும் ஓம்பப் படும் 

ராஜு நிகழ்த்திய பல சாதனைகள் குறித்த சொற்ப்பொழிவோடு சில மிரட்டல்களையும் சேர்ந்துக் கொண்டார். இறுதியாக 45 நிமிட பிரசங்கம் முடிந்தபிறகு பாலா மற்றும் குமார் இருவரையும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுச் சொல்லுமாறு கூறினார்.

இருவருக்கும் மன்னிப்புக் கடிதத்தில் என்ன எழுதவேண்டும், எதற்க்கெல்லாம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தெரியவில்லை. அதனால் ராஜுவிடம் ஒரு மாதிரி கடிதம் கேட்டனர்.

"ஒரு apology letter கூட எழுதத் தெரியாதா?"

"முன்னப் பின்ன எழுதுனது இல்ல Sir"

"ஓ ! நீங்க ரெண்டுபேரும் அவ்வளவு நல்லவங்க....   இருக்கட்டும், இருக்கட்டும் அதையும்  பாக்கலாம்..."
 
ராஜு, அலமாறி ஒன்றைத் திறந்து விட்டு அதிலிருந்து ஒரு மாதிரிக் கடிதம் எடுத்துக்கொள்ளும்படி கூறினார். அங்கு இருந்த மனிப்புக் கடிதங்களையெல்லாம் விலைக்குப் போட்டால் ஒரு மாத விடுதிக்கட்டணம் கட்டிவிடலாம். அவ்வளவு பாவங்களுக்கும் மனிப்பு வழகியுள்ளார் ராஜு. தங்களுக்குப் பொருத்தமான கடிதத்தை தேடும்போது, அதில் ஒன்றில் இனிமேல் நான் "சிறுநீர் கழிக்கச் செல்லமாட்டேன்" என்று எழுதி இருந்தார் ஒரு மாணவர். "ஐயோ பாவம், இதுக்கு நாம பரவாஇல்ல" என்று மனதை தேற்றிக்கொண்டு தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு தேடிக்கொண்டனர்.

பாலா மற்றும் குமார் இருவரும் மனிப்புக் கடிதம் கொடுத்த செய்தி விடுதி முழுவதும் தெரிந்து ஒருவர் மாறி ஒருவர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள வந்தனர். வந்தவர்கள் அனைவரும் அவர்களுக்கே உரித்தான மொழியில் "ராஜு" குறித்து சிறு குறிப்பு வரைந்தனர்.

"ராஜு" சிறுகுறிப்பு வரைக

1. Botany department lecturer
2. ஆந்திராவில் இருந்து வந்தவர். இருந்தாலும் தமிழ் தெரியும்
3. இன்னும் திருமணம் ஆகவில்லை.
4. பொண்ணு பாக்க போறதுக்கு அடிக்கடி லீவ் போட்டு ஊருக்கு போயிடுவார்.
5. ரொம்ப கோவக்காரர்
6. Strict Officer
7.  (குற்றப் புலனாய்வு துறையில் பணிசெய்ய வேண்டியவர் உயரக் குறைவின் காரணமாக இங்கு வந்துவிட்டார்)

இன்னும் நெறையா,  பசங்க சொன்னத அப்படியே எழுதமுடியாது அதனால நீங்களே நடுவுல, நடுவுல உங்களுக்கு தெரிஞ்ச ரொம்ப நல்ல கெட்ட வர்த்தைகள போட்டுக்கோங்க...

இப்படியே சில நாட்கள் கழிந்தன. மெல்ல மெல்ல பாலாவுக்கு விடுதிவாசம் பிடிக்கத் தொடங்கியது. குமார் இல்லாமல் மேலும் நான்கு நண்பர்கள் கிடைத்தார்கள். ஊருக்குப் போகும் நாளை எண்ணி ஏங்கத் தொடங்கியது பாலாவின் மனம்.

வெள்ளி மாலை வகுப்புகள் முடிந்தவுடன் கிடைத்த முதல் பேருந்தில் தாங்கள் பிறந்த ஊருக்கு பயணித்தனர் நண்பர்கள். சிறந்த கவனிப்பு முடிந்து 2 கிலோ எடை கூடி கூட்டுக்குத் திரும்பினர் மீண்டும்.

விடுமுறை சாதனை விளக்கக் கூட்டம் போட நால்வர்  அணி மீண்டும் திரண்டது.

பாலா: "லீவ் ல என்னடா பண்ணீங்க"

குமார்: "மாமா கல்யாணத்துக்கு போயிருந்தேன்".

சேகர் : "ஒன்னும் செய்யல, வீட்லதான் இருந்தேன்"

கணேஷ்: "படத்துக்கு போயிருந்தேன்".

குமார்:  "என்ன படத்துக்கு போன ?"

கணேஷ்:   


மூவரும்: "அய்யய்யோ, கணேஷ் வெட்கப்படுராண்டா"

குமார்: "கணேசா, மரியாதையா சொல்லிரு..."

கணேஷ்:   "BODY" அப்புறம் ஏதோ வந்துச்சி....

மூவரும்: "BODY யா"

சேகர்:  "கணேசு, படம் பேரே சூப்பரா இருக்கு, கத சொல்றா..."

கணேஷ்: " இப்பெல்லாம் நம்ப ஊர் படத்துலையே கதை இல்ல, நீ என்னடான்னா...

இந்த மாதிரி படத்துக்கெல்லாம் ஏதுடா கத?. இதெல்லாம் சொல்லிப் புரியவைக்க முடியாது. "

கணேஷ்: "நீங்க மூணுபேரும் இந்த மாதிரி படம் பார்த்ததே இல்லையா?"       

சேகர், குமார்: "பாத்துருக்கோம்..."  

பாலா: 

கணேஷ்: "அப்ப பாலா நீ இன்னும் வயசுக்கு வரல. சரி உடு மாமன் உனக்கு குச்சி கட்டீர்றேன்"

பாலா:


கணேஷ்: "இந்த வாரம், நாம யாரும் ஊருக்கு போகப்போறது இல்லேல்ல?"

மூவரும்:  "இல்ல..."

கணேஷ்: "சனிக்கெழம half day தான காலேஜ், அதுக்கப்புறம் free evening தான. 5 மணிக்கு வெளிய போயிட்டு 11 மணிக்கு வந்தாப் போதும்ல. அதனால அன்னைக்கி நாம எல்லாரும் படத்துக்குப் போறோம்"

குமார்: "பிளான் ஓகே, ஆனா சனிக்கெழம நாம எதிர்பார்க்குற படம் ஓடணுமே?".

கணேஷ்: "சிட்டிக்குள்ள, செந்தில் ஆண்டவர்னு ஒரு தியேட்டர் இருக்கு. அதுல முக்கால்வாசி இந்த மாதிரிப் படம்தான். அப்படி இல்லேன்னா day scholar பசங்ககிட்ட சொல்லி என்ன படம் ஓடுதுன்னு பாத்துட்டு வரச்சொல்லுவோம்"

பாலா : "அது ஏண்டா எல்லா ஊர்லயும் இந்த மாதிரிப் படம் எல்லாம் சாமிப் பேரு வச்ச தியேட்டர்லையே போடுறாங்க. எங்க வீட்டுக்கு பக்கத்துல கூட  இந்த மாதிரி ஒரு தியேட்டர் இருக்கு, அது பேரு மூர்த்தி"

சேகர்: "இப்ப அதுவா முக்கியம்? சனிக்கெழம படத்துக்குப் போறோம் குஜால் பண்றோம்."

கணேஷ்: "பாலா, வீட்டுக்குப் பக்கத்லையே தியேட்டர் வச்சிக்கிட்டு படம் பாத்ததில்லேன்னு சொல்ற?"

பாலா: "வீட்டுக்கு பக்கத்துல இருந்ததாலதான் பாக்க முடியல..."


வியாழக்கிழமை

பாலா: "கணேஷ், என்ன படம் ஓடுதுன்னு விசாரிச்சியா ?"

கணேஷ்: "கேட்டாச்சு, நேத்துதான் படம் மாத்திருக்கான். நம்மக்கு தேவையான படம்தான் ஓடுது".    


நால்வரும் சனிக் கிழமைக்காக காத்திருந்தனர், சனியும் வந்தது...

05:00 மணி அடிக்கவும், நால்வரும் பேருந்து நிறுத்தம் நோக்கிப் பறந்தனர்.

பாலா: "சீக்கிரமா போகணும், நான் படத்த மொத சீன்ல இருந்து பாக்கணும்..."

சேகர்: "உன்னோட ஆர்வத்த கொஞ்சம் அடக்கிகிட்டு வா, 06:30 க்கு தான் படம் போடுவாங்க..."

அங்கு வந்த முதல் அரசுப் பேருந்தில் நால்வரும் ஏறிக்கொண்டனர்.  பேருந்து நகர, நகர பாலாவின் நாடித்துடிப்பும் உயர்ந்து கொண்டே வந்தது. சிறிது நேரத்தில் நகர எல்லையைத் தொட்டது பேருந்து. பேருந்தின் படிகள் காலியாக இருப்பதால் அதிலும் ஆட்க்(டு)களை நிறப்புவதற்க்காக நிறுத்தத்தில் நிறுத்தினார் ஓட்டுனர். அங்கிருந்த சுவரில் செந்தில் ஆண்டவர் திரையரங்கத்தின் சுவரொட்டி ஓட்டப்பட்டிருந்தது அதில்

"மிசன் இம்ப்பாசிபிள் 2அஞ்சா நெஞ்சன்  டாம் க்ருஸ்
(நினைத்ததை முடிப்பவன்)"

நால்வரும் ஒருவரை ஒருவர் சோகத்துடன் பார்த்துக் கொண்டனர். அம்மன் தரிசனம் கிடைக்காததால் அஞ்சா நெஞ்சனை தரிசித்துவிட்டு வந்தனர்.

விடுதி வந்தும் ஏமாற்றம் குறையவில்லை பாலாவிற்கு. பாலா வெறியுடன் கணேஷ்ப் பார்க்க...

கணேஷ்: "படத்த மாத்திட்டா அதுக்கு நான் என்னடா பண்ண... சரி விடு அடுத்தவாரம் பக்கத்து ஊருக்கு போயாச்சும் பாக்குறோம்"

கணேஷ் என்ன ஆறுதல் கூறியும் பாலா சமாதானம் அடையவில்லை. பதில் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டான்...

ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு கணேஷ், சேகர் குமார் மூவரும் பாலாவின் அறைக்கு வந்தனர். பாலா அவர்கள் வந்ததின் காரணம் புரியாமல் விழித்தான்.

கணேஷ்: " 10 நம்பர் ரூம்ல இருக்கான்ல botany department செல்வம்...
 அதாண்டா ஓசி சோப்பு"

பாலா: "ஆமா, அவனுக்கென்ன?"

சேகர்: "அவனுக்கு ஒன்னும் இல்ல, hostel க்கு லீவ் போட்டு ஊருக்கு போனவன் நாளைக்கி வராம இன்னைக்கே வந்துட்டான்"

பாலா: "இதெல்லாம்  ஒரு மேட்டரா?"

குமார்: "அது மேட்டரில்ல, அடுத்து அவன் சொன்னதுதான் மேட்டரு"

பாலா: "என்னது?"

கணேஷ்: "லட்சுமி தியேட்டர்ல இன்னைக்கி  படம் மாத்திட்டான் ம்ம்ம்....  நம்ம படம்தான்  ஓடுது..... போலாமா? "

பாலா: "சனிக்கெழம போறதுக்கு இப்போவே எதுக்குடா அலப்பர... ?"

குமார்: "ஒன்றே செய், நன்றே செய், இன்றே செய், இப்பொழுதே செய்"

பாலா: "நீங்கெல்லாம் என்ன லூசாடா? attendance எடுக்க வருவாங்க. மாட்டிப்போம். பெரிய பிரச்சன ஆயிரும்"

சேகர்: "என்கிட்டே பிளான் இருக்கு.

              1.01:00 to 4 silent hour
              2. மதியம் 01:15 மணிக்கு attendance போடுவாங்க
              3. 4 to 7 free time
              4. 7 to 8 dinner time

 சரியா 01:45 க்கு ஒவ்வொரு ஆளா foot ball ground side வழியா college ஸ்டாப்க்கு அடுத்த stop ல போய் பஸ் ஏற்றோம். லட்சுமி தியேட்டர் பக்கத்து ஊருதான். 02:00 மணிக்கு பஸ் ஏர்னா 02:45 க்கு போயிறலாம். 03:00 மணிக்குப் படம். 04:30 மணிக்கு முடியும் 05:30 மணிக்கு திரும்ப வந்துரலாம்.

என்ன சொல்ற... ? "

பாலா: "சரிதான், ஆனா கொஞ்சம் பயமா இருக்கு..., இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா...
 
படம் பேரென்ன...?"

கணேஷ்: "Sex Revenger"

01:59 க்கு நால்வரும் பேருந்து நிறுத்தத்தில் நின்றனர். அவர்கள் போட்ட திட்டம் எதிர்பார்த்தது போலவே நடந்தது. லட்சுமி தியேட்டரை அடைந்தவுடன் அருகில் இருந்த தேநீர் கடையில் தஞ்சம்புகுந்தனர்.

நுழைவுச் சீட்டு வாங்க யார் போவது? அனைவருக்கும் தயக்கம். "முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்க்கு?" என்று பாலா தானே நுழைவுச் சீட்டு  வாங்கச் சென்றான். பின்பு அனைவரும் திரையரங்கத்திற்க்குள் ஓடிச்சென்று ஒளி குறைவாக இருக்கும் இடம் தேடி அமர்ந்து கொண்டனர்.

விளம்பரங்கள் சில நிமிடங்கள் பின்பு படம் திரையிடப்பட்டது...

படம் பெயர், நடிகர், நடிகைகள் பெயர் வரிசையாக வர அடுத்து "costumes" என்று வரவும். பாலாவிற்கு சந்தேகம் வந்துவிட்டது. அருகில் இருந்த சேகரிடம் கேட்டான்.

"என்னடா costumes னு வருது, நாம எதிர் பார்க்குறது..."

அதற்க்கு சேகர் "இந்த மாதிரி படத்துல பெரிய பெரிய shoe மட்டும் போட்டுகிட்டு வருவாங்க. குதிர, நாய் அதெல்லாம் டிரஸ் போட்டிருக்கும். அதுக்கான  costumes. நீ ஒன்னும் கவலப்படாத" என்று நண்பனுக்கு ஆறுதல் கூறினான்.      

நோஞ்சான் போலிருக்கும் ஒருவன்தான் நாயகன், படம் சுழல ஆரம்பித்தது. சிறிது நேரத்தில், நோஞ்சான் நாயகன் வேதியல் கழிவுகள் இருக்கும் தொட்டியில் சில வில்லன்களால் தள்ளப்படுகிறான்.

பலமுறை இருக்கையின் நுனிக்கு வந்து பின்பு இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் பாலா.

சிறிது நேரத்தில் மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் "இடைவேளை" என்று அறிவிக்கப்பட்டது.

நளபாகம் எதிர்பார்த்துக் காத்திருந்த பாலாவிற்கு, 45 நிமிட படம் ஓடி முடிந்தும் இன்னனும் ஒரு ஊறுகாய் கூட கிடைக்காதது வெறுப்பின் உச்சத்திற்க்கு தள்ளியது. அதை உணர்ந்து கொண்ட கணேஷ். "இருடா இப்பத்தான படம் சூடு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு, நோஞ்சான் மாதிரி இருந்தவன் இப்பதான் சக்திமான் மாதிரி ஆயிருக்கன். இனிமேப் பாரு புல்லா ... ம் ம் அப்பிடி இருக்கப் போகுது"

தன்னுடைய பங்கிற்கு சேகரும் "அப்படி இல்லேன்னா நடுவுலையே audience கேட்டாங்கன்னா, பார்வையாளர்களின் வேண்டுகோளுக்கு இனங்கன்னு துண்டுப் படம் ஓட்டுவங்க" என்று பாலாவின் இளைமைத் தீயிற்கு எரிபொருள் சேர்த்தான்.

இடைவேளை முடிந்த பின்பு படம் உச்சத்தை அடைந்தது. சக்திமானாக உருமாறிய நாயகன், பார்வை இழந்த பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பதும். வயதானவர்களுக்கு சாலையை கடக்க உதவுவதும். பலாத்காரத்தில் சிக்கிய பெண்களை காப்பாற்றுவதும்...

அதுவரை நம்பிக்கை இழக்காத பாலாவிற்கு அப்போது அழுகையே வந்தது...

இனியும் பொறுக்க முடியாது என்ற எண்ணம் வந்த போது, எழுந்து நின்று
"பிட்டு போடு........" என்று கத்த ஆரம்பித்தான். அவனுடன் சேர்ந்து மற்றமூவரும் கத்த, அணைத்து வைக்கப் பட்டிருந்த திரையரங்கத்தின் அத்தனை விளக்குகளும் பிரககசமாக ஒளிர்ந்தன.

அப்போதுதான் நால்வரும் கவனித்தனர், அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு இரண்டு வரிசைக்கு முன்பு sub-warden ராஜுவும் அமர்ந்திருந்தார்....  அவரும் இவர்களைப் பார்த்துவிட்டார்.

திரையரங்க அலுவலர்கள், நண்பர்கள் நால்வரையும் அரங்கத்தை விட்டு வெளியேற்றிவிட்டு படத்தை தொடர்ந்தனர்...

நால்வரும் சோகமாக வெளியே வர... பாலா மட்டும் "இப்படி ஆயிருச்சே, இப்படி ஆயிருச்சே, இதுக்கு தான் நான் மொதல்லையே சொன்னேன்..." என்று  புலம்பிக்கொண்டே வந்தான்.

 குமார் பாலாவிடம்  "நமக்கு எப்படித் தெரியும் அவரு இங்க இருப்பாருன்னு, சரி பயப்படாத பாத்துக்கலாம்."

பாலா: "நான் அதுக்கு வருத்தப் படல, 15 ரூவா குடுத்து டிக்கெட் வாங்கினோம் ஒரு சீன் கூட இல்ல, அத நெனைச்சாதான் வருத்தமா இருக்கு... ச்சே இப்படி ஆயிருச்சே..."

Tuesday, February 11, 2014

"வாய்" எனும் கழிவு நீக்க உறுப்பு

வண்ணங்களையும் (சில) தமிழர்தம் வாழ்வினையும் பிரித்தல் இயலாது.

நீலப்படம் பார்ப்பார்கள் 
மஞ்சள் பத்திரிக்கை படிப்பார்கள்
சிகப்பு விளக்கு பகுதிக்கு போவர்கள்  
பச்சை பச்சையாய் பேசுவார்கள் 

நானும் எனது நண்பர்களும் 2002ம் ஆண்டு முகவரி தேடி சென்னைக்கு வந்தோம். அப்போதுதான் முதல் முறையாக அந்த  (புதிரா) புனிதமான, ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த, சிறியவர் பெரியவர் என்று வயது வித்தியாசம் இல்லாமல், பணக்காரன் ஏழை என்ற பேதம் இல்லாமல் அனைவரிடமும் நீக்கமற நிறைந்திருந்த அந்த வார்த்தையைக் கேட்டோம். தொல்காப்பியத்தின் எல்லா விதிகளையும் மீறி சில சென்னை பச்சைத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட தொகைச்சொல்லாக்கம் அது. சில மாதிரிகள் கீழே 

O​​__ படம் சூப்பர் டா 
O​​__ எங்கடா போன?
O​​__ எவ்வளவு நேரம் வெயிட் பண்றது?

என்னுடன் பணிபுரிந்த ஒரு வட்டார மொழி வல்லுநர்தான் அந்த சொல்லாக்கத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தையும் பயன்பாட்டையும் விளக்கினார்.

கடந்த பல வருடங்களாக இந்தச் சொல்லை தென் மாவட்டங்களிலும் காலூன்றச் செய்த பெருமை திரைப்படங்களையே சாரும்.

"வசை"யின் குடும்பத்தைச் சார்ந்த கடுமையான சொற்கள் பொதுவாக பெரும்பாலும் வெறுப்பைக் காட்டுவதற்கே பயன்படுத்தப்பட்டு வந்தன. வசைபாடுவதற்கு "கொச்சை"யான சொற்களை உபயோகிப்பதன் உள்நோக்கம் என்னவென்று சற்று அகழ்ந்து பார்த்தால் அதை இவ்வாறுதான் புரிந்து கொள்ள முடிகிறது. கடுமையான சொற்களால் திட்டிய பொழுதும் ஆத்திரத்தின் வீரியம் சற்றும் குறையாததால் அடுத்த கட்டமாக கொச்சையான சொற்களை பயன்படுத்த நம் மூளையில் உறங்கிக் கொண்டிருக்கும் அது கட்டளையிடுகிறது.

இந்தக் கொச்சை குடும்பத்தை சேர்ந்த பெரும்பாலான வார்த்தைகள் கழிவுநீக்க உறுப்புகளை குறிப்பதாகவோ அல்லது கழிவுடன் தொடர்புகொண்ட வார்த்தைகளாகவோ இருக்கின்றன. இதன் உள்நோக்கம் திட்டப்படுபவரை கழிவுடன் ஒப்பிட்டு அவரின் தன்மானத்தையும் கொவரவத்தையும் குத்திக் கிழிப்பதுவே.         

அநாகரீகமான வார்த்தைகளை பிரயோகிக்கும் போது எதிராளியை மீளமுடியாத அவமானத்திற்கு ஆட்படுத்தி விட்டதாக நம் மனம் எண்ணிக் கொ(ல்)ள்கிறது. "அவனை/அவளை நல்லா அசிங்கப் படுத்திட்டோம்" என்ற எண்ணம் வரும்போது கோபத்தின் வீரியம் குறைந்து மனித மிருகம் அமைதி அடைகிறது.

என்னுடன் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், அவர் என்ன பேசினாலும் அதில் நிச்சயம் "S***", "F**K" நிச்சயம் இருக்கும். ஒரு நாள் அவரிடம் இது குறித்து கேட்கவே செய்துவிட்டேன். அதற்க்கு அவர் கூறிய பதில் 

"இதுவே எனக்கு பழக்கமாகி விட்டதால் தவிர்க்க முடியவில்லை, என்னுடைய நண்பர்கள் அனைவரும் இப்படித்தான் பேசிக்கொள்வோம்". 

"உங்கள் நண்பர்கள் சரி, வீட்டில் உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளிடம் எப்படி பேசுவீர்கள்?"

"வீட்டில் கவனமாக இதுபோன்ற வார்த்தைகளை தவிர்த்துவிடுவேன்".

என்ன sir ஞாயம் இது? உங்க குழந்தைகள் இருக்கும் போது பேசமாட்டீங்க, ஊர்ல இருக்குற மத்தவங்க குழந்தைகளை பத்தி உங்களுக்கு கவலை இல்லையா?

பேதமில்லாமல் பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரியது ஆனால் வசை பாடுவதிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகராகவும் சில சமயம் அவர்களுக்கு மேலாகவும் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பது வேதைக்குரியது. "தமிழில் திட்டினால் தானே கொச்சை அசிங்கமெல்லாம், ஆங்கிலத்தில் திட்டுவோம்". மொழி எதுவானாலும் அதன் பொருள் தரும் வீரியமும் , தாக்கமும் குறையப் போவது இல்லை. 

தவறு செய்வது/செய்தது யாராக இருந்தாலும் பெரும்பாலும் வசையின் கசை திட்டப்படுபவரின் குடும்பம் சார்ந்த பெண்களை, குறிப்பாக தாயை நோக்கியே நீளும். இதன்மூலம் எதிரி உச்சகட்ட பாதிப்பிற்கு உள்ளாவதை உறுதி செய்து கொள்கிறது திட்டுபவரின் மனம்.

முடி, மயிரு ஒரு பொருள் தரும் இந்த இரு வார்த்தைகளில் "மயிரு" மட்டும் தீஞ்சொல் ஆனதேன்?
       
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் 
நிலையின் இழிந்தக் கடை ( குறள் 964)
                               
தலையில் ஒட்டிக்கொண்டு இருக்கும் வரைக்கும்தான் அது முடி, அதுவரைக்கும் தான் அதற்க்கு அலங்காரம். உதிர்ந்த பின்பு அது மயிர். எந்த வார்த்தையில் திட்டினாலும் "நீ விரும்பத்தகாத இழிவானவன்" என்பதையே பதிவு செய்ய விரும்புகிறது மனம்.

People learn best by watching others; it's how we learn as children.

இப்படி ஒரு நிலைமையை யோசித்துப் பாருங்கள். மழழை மாறாத உங்கள் குழந்தை ஏதேனும் கொச்சையான வார்த்தையை (எந்த மொழியானாலும்) உங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உங்கள் நண்பர்கள் முன்னிலையில் கூறினால் எப்படி இருக்கும்?

கடுமையான ஒரு சொல் என் முழு நாளையும் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது. அநாகரீகமான வசை உண்டாக்கும் மன அழுத்தம் தற்கொலைக்கு கூட தூண்டுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மனிதர்களை மட்டுமல்ல மனங்களை கொள்வதும் கொலைதான்

It takes a village to raise a child - நம் வீட்டை மட்டுமல்ல, சமுதாயத்தையும் நஞ்சு கலவாமல் காப்பது நம் கடமை.


முன்னுறு ஆயிரம் வார்த்தைகள் கொண்ட செழுமையான மொழியில் இனிய சொற்களுக்கா பஞ்சம் ?


இனிய உளவாக இன்னாது கூறல்
கனிஇருப்பக் காய் கவர்ந்தற்று 

புன்னகையும், இன்சொல்லும் உதிர்க்கும் வரைதான் வாய், இல்லையேல் அது மற்றொரு கழிவுநீக்க உறுப்பே! 

Wednesday, January 8, 2014

Onsite எனும் அக்கப்போரு - நாடகம்

கதாப்பாத்திரங்கள்

Team Leader - அன்பு
Project Manager - வாசு
Team members - சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

கௌரவ கதாப்பாத்திரங்கள் : DBA, Architect, Peter Babe, Phone    

இவர்களோடு நீங்களும்...


குறிப்பு

இந்த நாடகத்தில் வரும் கதாப்பாத்திரங்களும், சம்பவங்களும் முழுக்க முழுக்க கற்பனையே. கதையின் போக்குக்காக சில தர்க்க மீறல்கள் திணிக்கப்பட்டுளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.    


காட்சி - 1

நாள் : வெள்ளிக் கிழமை

நேரம்:  காலை 10:00 மணி.

நடிகர்கள்:  Team Leader (அன்பு)  , Project Manager (வாசு) , Phone

அன்பு கனிப்பொறியில் தீவிரமாக மூழ்கி விசைப்பலகையை பதம் பார்த்துக் கொண்டிருக்க, மேசையின் மேல் இருந்த தொலைபேசியில் மணி ஒலிக்கிறது. மறு முனையில் வாசு.

அன்பு: hello

வாசு: அன்பு, நான் வாசு பேசுறேன், busy யா இருக்கீங்களா? கொஞ்சம் என்னோட cabin க்கு வறீங்களா? please.

அன்பு: No problem வாசு. உடனே வர்றேன்.


காட்சி - 2      

இடம்: வாசுவின் அலுவலக அறை

நடிகர்கள்:   அன்பு, வாசு, SRS document.

knock, knock

வாசு: Yes, come in அன்பு......   take your seat.

அன்பு: thanks ..........   என்ன விஷயமா வரச் சொன்னீங்க வாசு?

வாசு: ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் வரச்சொன்னேன். weekend plan என்ன அன்பு?

     அன்புவின் மனக்குரல் : இவரு எதுக்கு நம்ம plan ன கேக்குறாரு? weekend க்கு வேட்டு வைக்கப் போறாரா?

அன்பு: பெரிய plan ஒன்னும் இல்ல வாசு, தீவாளி purchase இருக்கு.

வாசு: very good, very good. அதுக்குள்ள purchase சா? ஓ, தல தீபாவளி இல்லையா? மாமனார் வீட்டு கவனிப்புன்னு சொல்லுங்க.

அன்பு:  (அசட்டுச் சிரிப்புடன்) ஆமா வாசு.

வாசு: உங்களுக்கு ஒரு good news சொல்லத்தான் வரச்சொன்னேன்.

அன்பு, ஆச்சர்யம் கலந்த ஆர்வத்துடன் முகத்தை வைத்துக்கொண்டு வாசு கூறப்போவதை கேட்க ஆவலாக இருந்தார்.

வாசு: நமக்கு புது US project கெடச்சிருக்கு. இந்த project ட successfully ல complete பண்ணிட்டீங்கன்னா உங்களுக்கு நிச்சயம் onsite opportunity கிடைக்கும்.

(பின்னணியில் "கண்ணா லட்டு தின்ன ஆசையா ?" என்று கேட்க்கும் குரலுக்கு ஆமாம் என்பது போல தலையை அசைக்கிறார் அன்பு).

அன்புவின் கற்பனையில்

தன் புது மனைவியுடன் அமெரிக்காவின் பல முக்கிய இடங்களில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது போல நினைத்துப் பார்கிறார்.    

வாசு: அதோட மட்டும் இல்ல, உங்களுக்கு GC யும் process பண்ணுவோம்.

(பின்னணியில் "கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா ?" என்று கேட்க்கும் குரலுக்கு ஆமாம் என்பது போல தலையை அசைக்கிறார் அன்பு).

அன்புவின் கற்பனையில்

பெரிய சொந்த வீட்டின் முன்பு 

அன்பு, அவரின் மனைவி, 

குழந்தை 1,

குழந்தை 2,

SUV கார் 



முதலியவை வரிசையாக வருவது போல கற்பனை செய்து கொள்கிறார்

அன்புவின் முகத்துக்கு முன்பு கையை அசைத்தவாரே வாசு கேட்கிறார் 

என்ன அன்பு அதுக்குள்ள dream மா ? கார், வீடு, நயாகரா... ?

வாசுவின் குரல் கேட்டு இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்புகிறார் அன்பு, அசடு வழிய..

உங்கள சொல்லி ஒன்னும் தப்பு இல்ல, அந்த ஊரோட ராசி அப்படி...

வாசு: SRS document ட உங்களுக்கு share பண்ணிருக்கேன். WBS போட்டு கொண்டு வறீங்களா? weekend நீங்க ஏதோ purchase க்கு போறதா சொன்னீங்கள்ள..

அன்பு: அது ஒன்னும் problem இல்ல வாசு. நா அத உடனே பாத்துர்றேன். நாளைக்கே WBS போட்டுட்டு உங்களுக்கு email அனுப்பீர்றேன்.

வாசு: very good அன்பு. நீங்க போயி உடனே வேலைய ஆரம்பிங்க..

அன்பு: Thanks Vasu.

வாசு: no problem, all the best.

அன்பு அந்த அறையை விட்டு வெளியேறுகிறார்...


காட்சி - 3

நடிகர்கள்: அன்பு, வாசு   
நாள்:  திங்கள்
நேரம்: காலை 10:30 மணி

WBS சை அனுப்பிவிட்டு வாசுவின் பதிலுக்காக ஒரே படப்பிடிப்புடன் காத்திருந்தார் அன்பு...

தொலைபேசி மணி ஒலிக்க மீண்டு மறுமுனையில் வாசு.

வாசு: என்னோட cabin க்கு வாங்க அன்பு.

அன்பு அடுத்த நொடி வாசுவின் அலுவலக அறையில்.
  
வாசு: anbu, what is your plan for this new project?

அன்பு மனதிற்குள், வழக்கம் போல email ல படிக்கலையா

அன்பு: 6 resource, 8 sprint ல project ட முடிச்சிரலாம் வாசு.

வாசு: (இறுக்கமான முகத்துடன்) என்ன அன்பு இந்த POC project டுக்கா 6 resource சும் 4 மாசமும் கேக்குறீங்க?

உங்களுக்கு 6 resource வேணும்னா office security யும் சேர்த்துதான் தரனும்.

Impossible அன்பு,

உங்களுக்கு 4 resource சும் 2 மாசமும் தர்றேன் அதுக்குள்ளே முடிச்சிருங்க. உங்க onsite க்கு நான் guarantee. OK ?

அன்புவின் பதிலுக்காக காத்திராமல் வாசு தொடர்கிறார்.

அன்பு, let me introduce your new team.

வாசு தொலைபேசியில் அழைக்க. ஒன்றின் பின் ஒன்றாக slow motion effect ல்  நால்வரும் உள்ளே வருகின்றனர்

(kakka kakka BGM)

நால்வரும் கைகளை பின்புறம் கட்டி, கால்களை அகற்றி தயாராக நிற்க்கின்றனர்.

வாசு: These guys are handpicked by me and will report directly to you.

சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

சேதுவும், சேகரும் சாத்தூர்ல இருந்து வந்துருக்காங்க. கண்ணனும் கார்த்திக்கும் விருதுநகர்ல இருந்து வந்துருக்காங்க. இவங்க நாலு பேரும் ஒண்ணா college ல படிச்சிருக்காங்க.

அதனால அவங்களுக்குள்ள நல்ல chemistry இருக்கும்.

அன்பு mind voice: நான் என்ன ஜோடி நம்பர் 1 சீசன் 8 க்கா ஆள் கேட்டேன் 
ஏன்யா கொல்ற. project பண்ண ஆள் கேட்டா chemistry class எடுத்துக்கிட்டு.

அன்பு: வாசு, I want to have one to one discussion before I commit.

வாசு: off-course. actually you should.  


காட்சி - 4


நேர்முக விவாதம்

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்


அன்பு: tell me about yourself

        சேது: I am சேது, studied B.A (Chemistry)

        சேகர் : I am சேகர், studied B.Com (History)

        கண்ணன்: I am கண்ணன், studied B.B.A (English)

        கார்த்திக்:  I am கார்த்திக், studied B.Com tamil medium.

Studied very old sir, அதனால forgot sir.

அன்பு: நீங்க இப்படி இங்கிலீஷ் பேசுனா மெகா சீரியல் தான் எடுக்கணும். இது short story தான் அதனால தமில்லையே பேசுங்க.

சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: இஹி ஹி, thank you sir.

அன்பு: நீங்கெல்லாம் ஒண்ணா படிசீங்கன்னு வாசு சொன்னாரே?

      கார்த்திக்: நாங்கெல்லாம் ஒண்ணா PGDCA படிச்சோம்.

அன்பு: உங்க strength என்ன?

       சேது: நான் நல்லா படம் வரைவேன்.
     
       கார்த்திக்: நல்லா கவிதா sorry sir கவித எழுதுவேன்.
     
       சேகர்: 1 நிமிசத்துல 50 push ups எடுப்பேன் சார்.
     
       கண்ணன்: கோபமே பட மாட்டேன் sir.       

அன்பு: என்ன language தெரியும்?

      சேகர்: தமிழ், தெலுங்கு...  

அன்பு: computer language என்ன தெரியும்னு கேட்டேன்?

      சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: கொஞ்சம் ஜாவா தெரியும்

அன்பு: எதுக்காக இந்த job ல join பண்ணீங்க?

      சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: கல்யாணம் ஆகுறதுக்கு sir. Software மாப்ளைக்குதான் easy யா பொண்ணு கிடைக்குது.

அன்பு: very good     


காட்சி - 5

நடிகர்கள்: அன்பு, வாசு

வாசு: are you comfortable with your new team ?

அன்பு: are you serious vasu? இவங்கள வச்சிக்கிட்டு, இந்தப் project ட two months ல முடிக்கிறது impossible.

வாசு: if it's easily possible then why "anbu". that's why i told you about onsite and GC.
வேலைக்கு சேந்த உடனே onsite போகணும்னு நெனைச்ச முடியுமோ?
team கிடைச்ச உடனே project ட start பண்ணிரலாம்னு நினைக்க முடியுமோ?

இந்த project ல நீங்க training குடுங்க. அடுத்த project ல அந்த பசங்க வேறொரு team க்கு training குடுப்பாங்க. அதெல்லாம் இருந்து பாக்குறதுக்கு நீங்க இங்க இருக்க மாட்டீங்க onsite போயிருவீங்க. ஆனா முதல்ல training "அன்பு" தான் கொடுத்தாரு. இதென்ன உங்களுக்கு பெருமையா? கடம.

அன்பு: (மனதிற்குள்: எல்லா தமிழ் படத்தையும் பார்த்து டயலாக்க மனப்பாடம் பண்ணிக்கிட்டு வந்து ஏன்யா என் உயிர வாங்குற)

Training எல்லாம் குடுத்து project ட complete பண்றது முடியாது வாசு. என்ன விட்ருங்க நான் போறேன்.

வாசு: அன்பு, நான் என்ன வச்சிகிட்டா வஞ்சன பண்றேன். MD யோட recommendation ல வேலைக்கு வந்த பசங்க வேண்டாம்னு சொன்னா என்னோட வேலை, உன்னோட வேலை ரெண்டும் போயிரும். recession time வேற.

அன்பு: (சிறிது யோசனைக்குப் பிறகு) வாசு, I will do my best.


காட்சி - 6


நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

அன்பு: come on guys let's start our game.

சேது: சார், இப்போ நம்ம project பண்ணப்போறது இல்லையா? விளையாடப் போறமா?.

அன்பு: வேலைய ஆரம்பிப்போம்னு சொன்னேன்...

Requirement documents எல்லாம் Server-72 ல SRS folder ல இருக்கு. Files எல்லாம் உங்க local PC க்கு copy பண்ணிக்கோங்க.

என்று தன் குழுவுக்கு கட்டளை இட்டுவிட்டு தன் இடத்துக்கு அன்பு சென்றுவிட. நால்வரும் ஒருவர் பின் ஒருவராக 72 சர்வர் முன்பு வரிசையில் நின்றனர். முதலில் சேது Server-72 இல் ஏதோ செய்துவிட்டு அவருக்கென்று கொடுத்த கணிப்பொறியில் போய் மீண்டும் ஏதோ செய்தார். அதையே மற்ற மூவரும் செய்தனர். சில நிமிடம் கழித்து அங்கு வந்த அன்பு.

அன்பு: document copy பண்ணியாச்சா?

சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: copy ஆக மாட்டக்கிது sir.

அன்பு: copy ஆகலையா, என்ன பண்ணீங்க ?

சேது: Server-72 ல file ல select பண்ணி mouse right click பண்ணிட்டு copy option ன select பண்ணிட்டு. என்னோடோ computer ல போய் paste பண்ணினேன் sir.

அன்பு:   என்ன சொன்னீங்க.....   இப்படி நீங்க எப்படி copy பண்ண முடியும் ?

சேது: எல்ல computer ரும் network ல connect ஆகித்தான sir இருக்கு. அதனால இப்படி பண்ணா copy அகனும்ன்ல, copy ஆகாதா?

சேதுவின் இந்த பதிலைக் கேட்டு, அன்பு பேய் அறைந்ததைப் போல நின்றார்... 

(நான் ஒரு கேள்வி கேட்டா, நானே அசந்து போற மாதிரி என்ன ஒரு கேள்வி கேட்க வேண்டியது)

காட்சி - 7

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக், DBA

அன்பு : (தன் குழுவை நோக்கி) table design பண்ணிட்டு DBA கிட்ட verify பண்ணிட்டு வந்துருங்க.

சேது, சேகர், கண்ணன், கார்த்திக்: OK sir.

DBA விடம் தாங்கள் தயாரித்த தரவு தள அட்டவனையை (database table design) காட்டினார் அவரிடம் ஓப்புதல் பெறுவதற்கு.

அதனை சரி பார்த்துக் கொண்டிருக்கும் போதே...

DBA: ( table ஒன்றை காட்டி) இதுக்கு key இல்லையே

கண்ணன் தன்னுடைய கால்சட்டை பையை துலாவி தன்னிடம் இருந்த சாவியை எடுத்து DBA விடம் நீட்டி விட்டு பெருமிதத்துடன் தன் சகாக்களை நோக்கினான்.

சேது, சேகர், கார்த்திக்: super மச்சி.

அதிர்ச்சியில் DBA...



காட்சி - 7.1

நடிகர்கள்: அன்புசேது, சேகர், கண்ணன், கார்த்திக்

அன்பு: Architect கூட ஒரு discussion இருக்கு.

கண்ணன், கார்த்திக் நீங்க ரெண்டு பேரும் DBA கொடுத்த review comments க்கு ஏத்தபடி table ல modifications பண்ணிடுங்க. 

கண்ணன், கார்த்திக்: O.K sir

அன்பு: சேது, சேகர் நீங்க ரெண்டு பேரும் architect கிட்ட discussion க்கு போங்க. architecture finalize பண்ணிரலாம்.

சேது: Architect என்ன பண்ணுவாரு sir?

அன்பு: ஒரு Software க்கான  structure எப்படி இருக்கணும்கிற recommendations குடுப்பாரு. அவருகிட்ட போய் பேசுங்க உங்களுக்கே ஒரு idea கிடைக்கும்.


காட்சி - 7.2

நடிகர்கள்: architect, சேது, சேகர்

சேது, சேகர் இருவரும் architect இருப்பிடத்தின் முன்பு நிற்க, architect கவனம் சிதறாமல் தன்னுடைய கணினியை நோக்கிக் கொண்டிருந்தார். காதுகள் headphone வசம் இருந்தன.

சேகர்: (மிகவும் பணிவுடன், குனிந்து கொண்டு) சார்.... சார்...

Architect டிடம் இருந்து எந்தவித எதிர்வினையும் இல்லை

சேகர்: (மீண்டும்) சார்................... சார்........................

சேது: சேகர், என்ன பிச்சையா எடுக்குற? (பார்வையாளர்களை நோக்கி "ரொம்ப அடக்கமாமாம்")

இருவரும் மீண்டும் மிக அருகில் செல்ல architect நிமிர்ந்தார். என்ன வேண்டும் என்பது போல தலையை அசைத்தார்.

சேகர்: புது project க்கு design discussion க்காக வந்துருக்கோம்.

உட்காருங்க என்பது போல தலையை அசைத்தார். இருவரும் அமர்ந்து கொள்ள.

Architect: Project details சொல்லுங்க.

சேது requirement document முதல் பக்கத்தில் இருக்கும் தகவல்களை வாசிக்கத் தொடங்க...

Architect: Cut the crap, Just tell me the key points.

சேகர்: இந்த project ட முடிச்சாதான் எங்களுக்கு increment டும் அன்பு sir க்கு onsite டும் கிடைக்கும்னு சொல்லி இருக்காங்க.

Architect: (ஸ் சப்பா...) please document ட குடுப்பா, நானே படிச்சிக்கிறேன்...

சில நிமிடங்களுக்குப் பிறகு... architect சொல்லப் போவதை குறிப்பெடுக்க தயாராக இருந்தனர் சேகரும் சேதுவும். உ, விநாயகர் துணை என்று எழுதி முடிப்பதற்கு முன்பே

Architect: different types of output ட publish பண்றதுக்கு factory pattern use பண்ணிக்கோங்க. "publish calculation" னு ஒரு method மட்டும் interface ல இருக்கட்டும். Class diagram போட்டு கொண்டு வாங்க.

என்று தன்னுடைய ஆலோசனையை கூறி முடித்து விட்டு அடுத்த நொடியே அவ்விடம் விட்டு சென்று விட்டார்.

சேது: சேகர், அவரு என்ன சொன்னாருன்னு புரிஞ்சதா?

சேகர்:  எதோ calculation போடுற மாதிரி class room படம் வரையச் சொன்ன மாதிரி எனக்கு புரிஞ்சது.

சேது: ஏன்டா மச்சி class room படம் வரையனும்?

சேகர்: நீ தான அன்பு sir கிட்ட நல்லா படம் வரைவன்னு சொன்ன, அதனால இருக்கும். மச்சி உன்னோட படம் வரையிற திறமையை காட்ட இது நல்ல chance.         

சில நிமிடங்களில் சேது தன் கடமையை முடித்துவிட்டு திறமையை architect டிடம் காட்ட ஆர்வமுடன் காத்திருந்தார்.
இயற்கையின் அழைப்பை முடித்துவிட்டு வந்த architect டிடம் பெருமிதத்துடன் படத்தை காட்டினார் சேது.

படத்தை பார்த்து நிலைமையை புரிந்து கொண்ட architect மனதிற்குள் சேது, சேகர் இருவரையும் மாறி மாறி தலையில் கொட்ட வேண்டும் போல இருந்தது. ஆனால் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு, 

"உங்க team ல யாராவது பெரியாள் இருந்தா கூட்டிட்டு வாங்க" ன்னு சொல்லி இருவரையும் அனுப்பிவிட்டார்.


காட்சி - 7.3

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

அன்பு: இந்த பசங்க எங்க போனாங்க ?

சுற்றும் முற்றும் தேடினார் அன்பு, சிறிது தூரத்தில் நால்வரும் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. கையை அசைத்து அழைத்துப் பார்த்தார். நால்வரின் கவனமும் அந்த மங்கையிடமே மையல் கொண்டிருந்தது.

அன்பு: (சற்று சப்தமாக) சேகர்...

அன்பு அழைக்கும் சப்தம் கேட்டு அந்தப் பெண் நால்வரையும் உஷார் படுத்தினார். நால்வரும் அன்புவை நோக்கி விரைந்தனர்.

அன்பு: உங்களுக்கு கொடுத்த வேலைய முடிச்சிட்டீங்களா?

சேது, சேகர்: இல்ல, Architect உங்ககிட்டதான் பேசணும்னு சொன்னாரு Sir.

கண்ணன், கார்த்திக்: Database Changes இன்னும் முடியல sir.

அன்பு: Very Good. இந்த ரெண்டு மாசத்துல, Project Work முடிக்கிறோமோ இல்லையோ!கல்யாணம் முடிக்கனும்கிற உங்க லட்சியம் கண்டிப்பா நிறைவேறிடும்.

ஆமா, அந்த "Peter Babe" க்குதான் தமிழ் தெரியாதே ! பின்ன நீங்க என்ன பேசுனீங்க?

சேது: English knowledge ஜ improve பண்ணிக்கத்தான் sir அந்தப் பொண்ணுகிட்ட பேசிக்கிட்டு இருந்தோம்.

அன்பு: ம்....

இப்போதான் Architect ட பாத்து பேசிட்டு வர்றேன். என்ன நடந்ததுன்னு சொன்னாரு...  

உங்களோட English ஆர்வத்த கொஞ்சம் control பண்ணிக்கிட்டு, முதல்ல programming கத்துக்கோங்க.      


காட்சி - 7.4

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

இடம்: அலுவலக வகுப்பறை

அன்பு: முதல்ல உங்களுக்கு Encapsulation, Inheritance, Polymorphism தெரியனும்.

(நால்வருக்கும் வகுப்பை ஆரம்பித்தார் அன்பு...
ஒரு வழியாக அடிப்படை போதனை முடிந்தது)

அன்பு: சேது, Inheritance - real time example  சொல்லுங்க?

சேது: எங்க அப்பா மாதிரி, எனக்கும் திருட்டு முழின்னு எங்க அம்மா சொல்லுவாங்க Sir.

அன்பு: கண்ணன் Polymorphism பத்தி சொல்லுங்க.

கார்த்திக்: அன்புங்கிற ஒன்னு, நாம யாரு கிட்ட காட்டுறமோ அவங்க வயசுக்கு ஏத்தமாதிரி வேற வேற அர்த்தம் வரும்.

சின்ன குழந்தைன்னா - அன்பு / பாசம்
வயசுப் பொண்ணுன்னா - காதல் (வெட்கத்துடன்)
வயசான வங்கன்னா - பரிவு

அன்பு: நீங்க தான கவித எழுதுவேன்னு சொன்னீங்க?

கார்த்திக்: ஆமா sir.

அன்பு: ஒரு கவித சொல்லுங்க.       

கார்த்திக்:

உன் விழி ஈர்ப்பு விசையில் பயின்றேன் இயற்பியல்.
உன் அருகாமையில் என் உடலுக்குள் வேதியல்.
எப்போது நாம் இருவரும் பயில்வோம் உயிரியல்.               

கண்ணன்: அடடே ஆச்சர்யக் குறி...

மற்ற மூவரும் கரகோஷம் செய்கின்றனர்...   

அன்புவும் சிரிக்கிறார்...

அன்பு: அடுத்து முக்கியமான ஒன்னு, debugging. debugging ன்னா program ல இருக்குற mistakes எல்லாம் correct பண்றது.

கண்ணன்: sir, அப்ப coding னா, program ல mistakes ச போடுறதா sir.

அன்பு: .....   உங்களையெல்லாம் இப்படி கேக்கச் சொல்லி யாரு சொல்லித் தர்றது... ?      


காட்சி - 8

நடிகர்கள்: அன்பு,  DBA


DBA: அன்பு இந்த பசங்கள வச்சி நீங்க எப்படி project ட முடிக்கப் போறீங்களோ தெரியல?

அன்பு: புன் சிரிப்பு...

DBA: table ல key எங்கன்னு கேட்டா? pocket ல இருந்து எடுத்துக் காட்டுறாங்க.

அன்பு: மீண்டும் சிரிப்பு...

அன்பு: அந்த பசங்க கிட்ட, இந்த வேலைக்கு ஏன் வந்தீங்கன்னு கேட்டேன்? அதுக்கு அவங்க கல்யாணம் அகுரதுக்குன்னு சொன்னங்க. அவங்க நேர்மை எனக்கு புடிச்சது. அது மட்டும்மில்லாம அவங்ககிட்ட ஒரு fire இருக்கு. நிச்சயமா எங்களால இந்த வேலைய முடிக்க முடியும். அதுக்கு என்கிட்டே ஒரு plan இருக்கு.


காட்சி - 9

நடிகர்கள்: அன்பு, வாசு


கையில் பெட்டி படுக்கையுடன் அன்பு அலுவலகத்திற்குள் நுழைகிறார். அதே வேளையில் வாசுவும் அலுவலகத்திற்குள் வர.


வாசு: அன்பு என்ன பெட்டியோட வர்றீங்க.

அன்பு mind voice: பண்றதையும் பண்ணிட்டு கேள்வியப்பாறு

அன்பு: என்னோட wife அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டேன். apartment ட காலி பண்ணிட்டு இங்கயே வந்துட்டேன். ஒரு நாளைக்கு ரெண்டு மணிநேரம் தங்குறதுக்கு எதுக்கு வீடு. வீட்டு வாடகையவது மிச்சமாகும் பாருங்க அதுதான்.

கடமைதான் முதல் மனைவின்னு என்னைக்கு சொன்னானோ தெரியல....

வாசு mind voice பையன் செம கடுப்புல இருக்கான் போல...


காட்சி - 10

நடிகர்கள்: அன்பு, சேது, சேகர், கண்ணன், கார்த்திக்

பெட்டி படுக்கையுடன் அலுவலகம் வந்தது அன்பு மட்டுமல்ல அவனது குழுவும் தான்.


விக்ரமன் படத்தில் இருந்து ஒரு பாடல் ஒளிபரப்பாகிறது....  வேலையும் விரைவாக முடிகிறது.


காட்சி - 11

Delivery Date 

அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு deployment க்கு அனுப்பியாகி விட்டது.

waiting for the client response.

நகம் கடித்துக்கொண்டு ஐவரும் காத்துக் கொண்டிருக்க. தொலை பேசி அழைப்பு வருகிறது.

வாசு: அன்பு, client கிட்ட இருந்து call வந்திருக்கு.

அன்பு: Issues எதுவும் இருக்கா வாசு? 

வாசு: ஒரே ஒரு Issue தான் வந்திருக்கு. "unable to login".

அன்பு: என்ன username / password use பண்ணாங்க?

வாசு: admin/admin.

அன்பு: correct தான். one minute வாசு?

அன்பு: கார்த்திக் login module நீங்க தானே check பண்ணீங்க? hard-code எதுவும் பண்ணீட்டீங்களா ?

.......

கார்த்திக்: sorry sir, password is "PRIYA"...

அன்பு: இந்த ரணகலத்துளையும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குது.

சிறிது நேரம் கழித்து...

வாசு: அன்பு  first level UAT completed. client QA team will continue their testing. you did it அன்பு.

அன்பு: no வாசு, we did it...