cookie

Tuesday, October 23, 2012

ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan Horse) - 2



காவல் நிலையத்தின் தொலைபேசி மணி ஒலித்தது, எடுத்து பேசிய  முருகானந்தத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மீண்டும் திருட்டு..

பெருங்குடி தேவாலய சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீட்டில் கயவர்களின் படையெடுப்பு.

தினேஷ் கவலையுடன் இருக்கையில் அமர்த்திருந்தார், அருகில் மோனிகாவும் வாடிய முகத்துடன் காத்திருந்தார்,காவல்துறையின் வரவுக்காக.

சரவணனும், திருப்பதியும் வீட்டின்  உள்ளே வந்தார்கள். நடுவீட்டின் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி எட்டை நெருங்க 5 நிமிடத்திற்காக காத்துக் கொண்டிருந்தது.  நடு வீட்டில் தள்ளுவண்டியுடன் இணைக்கப்பட்ட பெட்டி தனியாக நின்றது. தினேஷ் மற்றும் மோனிகா இருவர் முகத்திலும் கவலையுடன் சேர்ந்த களைப்பும் காணப்பட்டது.

"Mr தினேஷ், நான் இன்ஸ்பெக்டர்" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார் சரவணன்.

இப்போதான் ஊர்ல இருந்து வர்றீங்களா தினேஷ்?என்று தினேஷின் பதிலுக்காக காத்திராமல் தானே உரையாடலை தொடர்ந்தார். 

       ஆமா சார், Close Relative இறந்துட்டாங்கன்னு நேத்து Phone வந்தது, அதான் அவசரமா ஊருக்கு போயிருந்தோம். இப்போ தான் வந்தோம். வந்து பாத்தா...

என்ன வெல்லாம் காணாம போச்சு?

      அடமானம் வைக்கிறதுக்காக 50 பவுன் நகை வீட்ல வச்சிருந்தேன்.  இன்னைக்கு புது வீடு வாங்குறதுக்கு அட்வான்ஸ் கொடுக்கணும், அதுக்காகதான் நகையை வீட்ல வச்சிருந்தேன். நேத்து  ஊர்ல இருந்து Phone வந்த உடனே கிளம்பிட்டோம்.

நகைய எங்க வச்சிருந்தீங்க?

    Water Proof Packet ல போட்டு Toilet Tank ல வச்சிருந்தோம். வீட்டுக்குள்ள வந்த உடனே Check பண்ணோம், காணோம் Sir.

நிலைமையை விளக்கும் போதே துக்கம் குரல் வலையை அடைத்ததால்  வார்த்தைகள் கண்களின் வழியாக வழிந்தன. மனைவியின் முன்பு கண்கள் கசிவதை விரும்பாததால் சமாளித்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தார் தினேஷ்.

   இது Friend டோட  வீடு Sir, அவன் வெளி நாட்ல இருக்கான். இன்னும் 2 Months ல திரும்ப வரான், அதுக்குள்ள சொந்த வீடு வங்கி போயிரலாம்னு நினைச்சேன். 

வார்த்தைகளை தினேஷ் முடிக்கும் முன்பே உவர் முத்துக்கள் அவர் கண்களின் மடை தாண்டி உதிர்ந்து கொண்டிருந்தன. இருக்கையை விட்டு எழுந்து சென்று சரவணன் வலது கையால் தினேஷின் இடது தோள்பட்டையை ஆதரவாக தட்டினார்.

கவலப்படாதீங்க Mr தினேஷ், காணாமல் போன நகையை நிச்சயம் கண்டு புடிச்சிரலாம். நகை இல்லாம வேற என்ன காணோம்?

Office ல கொடுத்தTablet டும் காணோம் Sir 

உங்க Office லTablet கொடுத்தாங்களா தினேஷ்?

ஆமா Sir, நான் Software கம்பெனி ல Test Lead டா வேலை பார்க்குறேன். Mobile Application Test பண்றதுக்காக கொடுத்தாங்க.

தினேஷின் பதிலை கேட்டவுடன் சரவணன் மூளையின் தேடுபொறி, வலை ஊர்தியை  (Web Crawler) ஓட்டி தகவலை தேடியது, சில நொடியில்...

தினேஷ், உங்க Tablet ல "Locate My Device" Activate பண்ணியிருக்கீங்களா?

எனக்கு அத பத்தியெல்லாம் தெரியாது Sir,எங்க Office ல Develop பண்ற Application ன Test பண்றதோட சரி, மத்தபடி படம் மட்டும் தான் பார்ப்பேன்.

சரி பரவா இல்ல, அதுல என்ன Operating System இருந்தது, I Mean OS Version என்ன இருந்தது தெரியுமா?

Sorry Sir, அதுவும் தெரியாது.

உங்க Office Systems Team கிட்ட கேட்டு உடனே சொல்றீங்களா?

ஐயோ Sir, நான் Phone பண்ணா 10:00 மணிக்கு முன்னால அவங்க Call Pickup பண்ண மாட்டங்க Sir.

 எரிச்சலடைந்த சரவணன், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல். 

"உங்க Systems Team Head டோட Phone Number கொடுங்க நான்பேசுறேன்"  என்று கூறி அலைபேசி என்னை வாங்கிக்கொண்டார். 

மறுமுனையில் அலை பேசி ஒலிக்க, புது எண் பளிச்சிடுவதால் யாரென்று தெரிந்து கொள்ள Systems Head பேசியை எடுத்து அழைப்பை ஏற்றார்.

Hello, நான் Inspector பேசுறேன், நீங்க ".... Company Systems Head" தான?

ஆமா Sir, உங்களுக்கு என்ன வேணும்.

உங்க Office ல வேல பாக்குற Mr. தினேஷ் சோட Tablet ல என்ன OS Version Install ஆகி இருக்கு, கொஞ்சம் அவசரம் உடனே சொல்ல முடியுமா Please?

Sir Office Information வேணும்னா நீங்க Office க்கு  தான் வரனும், அதுமட்டுமில்லாம Information Release பண்றதுக்கு Approval வேணும். 11 மணிக்கு மேல Office வாங்க பேசலாம்.

I Understand That Very Well Mr, Situation கொஞ்சம் Serious அதனால தான் உடனே கேட்குறேன். Information இப்போ கொடுங்க 11 O'Clock Formal லா Constable ல அனுப்பி வக்கிறேன்.   

சரவணன், இவ்வளவு கூறியும், கணினியின் தலைவர் இறங்கி வராததால். நாணயம் சுழன்று சிங்கம் வெளியானது. அடுத்த நொடி அனைத்து விவரங்களும் அட்டவணை படுத்தப் பட்டது.

Locate My Device : Not Activated 

OS Version : 6.0  

3G Enabled : Yes 

தினேஷ், உங்க Tablet ல, OS Version 6.0 இருக்குது அதனால Locate My Device Service Default டா Activate ஆகி இருக்கும். ஆனா உங்க Tablet Switch OFF ஆகி இருந்தா கொஞ்சம் சிக்கல்தான். By Any Chance, Alarm எதுவும் Set பண்ணி இருக்கீங்களா?

"இதுக்காவது ஆமான்னு சொல்லுங்கன்னு" சரவணன் மனதுக்குள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, மோனிகாவிடம் இருந்து பதில் வந்தது.      

ஆமா Sir, இவருக்கு "Diabetes" இருக்கு, After Every Meal, Insulin Injection போடணும். Monday to Friday After Lunch போட வேண்டிய  Injection க்காக இவருடைய Tablet ல நான் Alarm Set பண்ணீருக்கேன். 12:30 க்கு அடிக்கும்.  Morning, Night and Weekend ல நானே அவருக்கு Injection போட்றுவேன். அதனால Weekdays மட்டும் தான் Alarm Set பண்ணிருக்கேன். 

Very Good Mrs தினேஷ், Approximately நமக்கு இன்னும் 4 Hours இருக்கு அந்த Device ச contact பண்றதுக்கு.   

சரவணனின் பதிலை கேட்டு உற்சாகம் அடைந்த மோனிகா "அப்போ காணாம போன எங்க நகை உடனே கிடைச்சிருமா Sir"?

"உடனே கிடைச்சிரும்னு சொல்ல முடியாது Madam, உடனே கிடைக்கிறதுக்கு உண்டான வாய்ப்பு ரொம்ப பிரகாசமா இருக்கு" என்று ஆறுதல் மொழிந்து விட்டு, தினேஷிடம் இருந்து Tablet டை தொடர்பு கொள்ளும் கடவுச்சொல்லை பெற்றுக்கொண்டு தன் "கருப்பு தொப்பி" வேலையை தொடர்ந்தார் சரவணன்.

திருப்பதி, காணமல் போன நகைகள் குறித்த புகாரை எழுதி இருவரிடமும் கையொப்பம் பெற்றுக்கொண்டார். சரவணனையும், திருப்பதியையும் சுமந்து கொண்டு காவல் வண்டி தன் நிலையம் நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது. வழியில் சரவணனிடம் சில தொழில்நுட்ப சந்தேகங்களை கேட்டார் திருப்பதி.

Switch Off ஆகி இருந்தா எப்பிடி அய்யா அந்த Tablet ட தொடர்பு கொள்ள முடியும்?

முடியும் திருப்பதி, தினேஷ்க்கு கொடுத்த Tablet ல Special Option இருக்கு. Battery Life 4% இருக்கும் போது அந்த Device Switch Off ஆயிரும். Remaining Power, Emergency Alert Service காக Preserve ஆகிஇருக்கும். தினேஷ் Wife சொன்னங்க இல்லையா 12:30 Alarm, அப்போ அந்த Device Switch Off ஆகி இருந்தாலும், தானா On ஆகி Alarm அடிக்கும். அந்த ரெண்டு Second குள்ள கண்டிப்பா நம்மால அந்த Tablet ட Connect பண்ண முடியும். ஆன Device ச Reset பண்ணி இருந்தா, கொஞ்சம் கஷ்டம் தான். 

இந்த பதிலை கேட்டு வியந்து கொண்டே வண்டியை முன்னோக்கி செலுத்தினார் திருப்பதி.


காவல் நிலையத்தில் 


இதுவரை எத்தனையோ வித்தியாசமான வழக்குகளை இந்த காவல் நிலையம் எதிர் கொண்டிருந்தாலும், இந்த வழக்கு சற்று புதிராக இருந்ததால் இன்னும் 30 நிமிடத்தில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு அனைவரையும் பற்றிக் கொண்டது.

நிலைய கடிகாரத்தில் மணி சரியாக 12:00

சரவணன் தன் சோதனைக்கு தேவையான அனைத்தையும் ஆயத்த படுத்திக் கொண்டு காத்திருந்தார். நொடிகள் நிமிடமாகாதா என்ற எதிர்பார்ப்பு அனைவரையும் ஆட்கொண்டது. 

ஒரு நிமிடம் எஞ்சி இருக்கும் போது சரவணன் தன் கணிப்பொறியை தட்டி, தினேஷின் Tablet டை தொடர்பு கொள்ளும் கோரிக்கையை Server வழியாக GPS செயற்கை கோளுக்கு அனுப்பினார்.முதல் இரண்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது.

சரியாக 12:30 மணி 23 நொடியில், தினேஷின் Tablet மனம் இறங்கி 12 இலக்க எண்ணை 130418801620 மட்டும் அனுப்பியது . அது அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளை குறிக்கும் எண்கள் என்பதை சரவணன் அறிவார். 

அந்த எண் உலக வரைபடத்தில், Richi Street இல் உள்ள ஒரு இடத்தை காட்டியது.  

Latitude: 13°04'18" N  
Longitude: 80°16'20" E

இந்த தகவலை  காவல் துறை  கட்டுப்பட்டு அறை, எழும்பூர், சென்னை - 8 க்கு  அதிக பட்ச முன்னுரிமையுடன் கவனிக்குமாறு தெரிவித்தார் சரவணன்.

காவல்துறை விரைந்து சென்று Richi Street இல் இருக்கும் ஒரு மின்னணுவியல் பொருட்கள் விற்கும் கடையை கையகப் படுத்தியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் சரவணன் அந்த கடையில் இருந்தார்.

மேசையில் பாவமாக உறங்கிக் கொண்டிருந்தது Tablet. நாற்காலியில் சாதாரணமாக அமர்ந்து கொண்டிருந்தார் 45 வயது மதிக்கத்தக்க கடையின் முதலாளி.

உங்க பேரு?

     முரளி

இந்த Tablet உங்களுக்கு எப்படி கிடைச்சது?

      இன்னைக்கு காலைல 10:30 மணிக்கு  ஒரு பையன் வித்துட்டு போனான் Sir

அந்த பையன் யாரு? இதுக்கு முன்னால அவன பாத்துருக்கீங்களா?

     இல்ல, கீழ கிடந்ததுன்னு கொண்டு வந்து கொடுத்தான், அவசரம்னு காசு கேட்டான். காசு கொடுத்துட்டு Tablet ட வங்கிக்கிட்டேன்.

பையன் பாக்குறதுக்கு எப்படி இருந்தான், எவ்வளவு உயரம், கலர், எப்படி  பேசுனான்?

    வயசு 20 இருக்கும், கருப்புன்னு சொல்ல முடியாது ஆனா கொஞ்சம் கலர் கம்மிதான். பேசுனத வச்சி பாத்தா ரொம்ப படிச்சவன் மாதிரி தெரியல, சென்னை பையன்தான். உயரம் 5 அடி இருப்பான் Sir. 

கூட யாராவது இருந்தாங்களா?

   இல்ல Sir, யாரும் இல்ல, கொஞ்சம் தூரம் போய் ஆட்டோ ல ஏறி போயிட்டான்.

"Excellent"

"திருப்பதி, இவர்கிட்ட மத்த Details Collect பண்ணிடுங்க. திருட்டு சாமான வாங்கி விக்கிறதுக்காக இவர் மேல Case போட்ருங்க" என்று கட்டளையிட்டார் சரவணன்.

அதுவரை சாதரணமாக இருந்த கடை முதலாளி அதிர்ச்சியானார்.

"Sir நீங்க வேற எதாவது எதிர் பாக்குரீங்கன்னா, தயங்காம" என்று பேசிக் கொண்டிருந்தவரை திருப்பதி வேகமாக அமைதியாக்கினார்.

அருகில் இருந்த ஆட்டோ நிறுத்தத்தை நோக்கி விரைந்தார் சரவணன்.         

போலிஸ் தங்களை நோக்கி வருவதை உணர்ந்து கொண்ட ஆட்டோ  ஓட்டுனர்கள், எழுந்து நின்றனர்.

"எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? "என்று கேட்டார் சரவணன் 

    எந்த Inspector ரும் இதுவரை இவ்வாறு கேட்டதில்லை என்பதால் சற்று வியப்பாக இருந்தது அவர்களுக்கு. அதுவே சரவணன் கையூட்டுப் பெற வரவில்லை என்பதை அவர்களுக்கு உறுதி செய்தது. கூட்டாக "நல்லா இருக்கோம் Sir"  என்றனர்.

கடைக்காரர் சொன்ன அங்க அடையாளங்களை கூறி யார் அவனை அழைத்துச் சென்றது என்று கேட்டார்.

     "நான் தான் Sir"  என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்  அதில் ஒருவர்.

அந்த பையனை எங்க விட்டீங்க? கூட யாராவது இருந்தாங்களா?

     சத்யம்ல விட்டேன் Sir, கூட ஒரு பொண்ணு இருந்தது Sir. Lover னு நினைக்கிறேன்.

எந்த படத்துக்கு போனாங்க தெரியுமா?

      நல்லாவே இல்லன்னு சொன்னேன் Sir, அப்போதான் கூட்டம் கம்மியா இருக்கும்னு சொல்லிட்டு, சட்டையே போடாம ஒருத்தன் நடிப்பானே, அந்த படத்துக்கு போறேன்னு சொன்னாங்க.

ஹிந்தி படத்துக்கா?

     இல்ல Sir, தமிழ் படம் தான்...

என்ன படம் என்பதை புரிந்து கொண்டார் சரவணன். அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுனரையும் உடன் அழைத்துக் கொண்டு சத்யம் விரைந்தார்.  

திரைஅரங்க மேலாளரிடம் பேசிவிட்டு திரைஅரங்க பணியாளரை  உள்ளே சென்று அந்தப் பையனை அழைத்து வரச்சொன்னர் சரவணன்.  எந்த இருக்கை  என்பதை ஏற்க்கனவே CCTV கேமரா மூலமாக உறுதி செய்துவிட்டு  சென்றதால் சுலபமாக அவர்களை அடைந்தார் திரை அரங்க பணியாள். காதல் பறவைகளை பிரித்து பிராமஹத்தி தோசத்திற்க்கும் ஆளானார். ஆண் பறவை மட்டும் வெளிவந்து மாட்டிக்கொண்டது.

"இந்த பருப்பா, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டா உடனே போயிறலாம், எந்த Problem மும் இல்ல OK?" என்று விசாரணையை தொடங்கினார் சரவணன். 

   அவன் எதுவும் பேசவில்லை...    

இன்னைக்கு காலைல ஒரு Electronic சாமான் ஒன்ன Richi Street ல வித்தேல்ல, அத உனக்கு யார் கொடுத்தா (அ) நீ எங்கருந்து எடுத்த?

    நிலவரத்தின் கலவரத்தை புரிந்து கொண்டு பொய் சொல்ல துணியாமல் உண்மையை சொன்னான் அந்த பையன் 

      நேத்து எங்க அப்பா கிட்ட இருந்தது, அது என்னன்னு சரியா தெரியல, படத்துக்கு போக காசு கேட்டேன் குடுக்கல அதான் எடுத்துகிட்டு வந்துட்டேன்.


உங்க வீடு எங்க இருக்கு, உங்க அப்பா யாரு?

விவரங்கள் பெறப்பட்டது.

 "உங்க அப்பா கிடைக்கிற வரைக்கும் நீ போலீஸ் ஸ்டேஷன் ல இருப்பா. யாருக்கும் Phone பண்ணாத " என்று சிந்தாதரிப்பேட்டை காவலரிடம் ஒப்படைத்து விட்டு அந்த பையனின் வீடு நோக்கிப் பறந்தார் சரவணன், உடன் திருப்பதியும் சென்றார். 


போலீஸ் வண்டி, வடபழனி கங்கை அம்மன் கோவில் மூன்றாவது தெருவில் , மூன்று இலக்கங்கள் எழுதப்பட்ட வீட்டின் முன்பு நின்றது. 

மிகவும் மோசமான நிலையில் இருந்த வாயில் கதவின் சட்டத்தின் வழியாக நோட்டமிட்டார் சரவணன். தீப்பட்டியை போல வரிசையாக அடுக்கப்பட்ட சிறிய அளவிலான வீடுகள் அதில் வலது பக்கம் நாலாவது வீடு.

கதவு தட்டும் சத்தம் கேட்டு ஒரு பேரிளம்பெண் வெளியே வந்தார். சரவணன் கூறிய பெயரை கேட்டு, அந்த மணாளனை மணந்தது இந்த மங்கையின் பாக்கியம் என்று ஒப்பாரி வைத்தார்.  

      "அது இப்போ வெளிய போயிருக்கு சார், ரவைக்கு தான் வரும். எதாவது தப்பு தண்டா பன்னிருச்சா? அப்படியெல்லாம் பண்ணாது சார். கோவம் வந்தா என்னதான் அடிக்கும் வேற எந்த தப்பும் பண்ணாது சார்" என்று சரவணனிடம் முன் வாய்தாவுக்கு விண்ணப்பித்தார் அந்த பெண்மணி.

அதெல்லாம் ஒன்னும் இல்லங்க, நீங்க பயப்படாதீங்க, சும்மா விசாரிக்கணும் அவ்வளவுதான். இப்போ அவர எங்க பாக்கலாம்?

     தெரியல சார், எதாவது சாராயக்கடைல இருக்கும். வழக்கமா வடபழனி சரயக்கடைலதான் இருக்கும்.

அவரு என்ன வேலை பாக்குறாரு?

       நிரந்தரமா எந்த வேலையும் இல்ல, அப்பப்போ எதோ "கான்ட்ராட்" வேலைக்கு போகும். சந்தோசமா இருந்தா காசு கொடுக்கும் இல்லேன்னா குடிக்கும் அப்புறம் வீட்ல வந்து சண்ட போடும்  (அழுகிறார்)...

நீங்க வேலைக்கு போறீங்களா?

            வீட்டு வேலை பாக்க போவேன் சார்.

உங்க பையன்?

           படிப்பு வரல, வேலைக்கும் போக மாட்ரான், ஊற சுத்தறான் சார்.

உங்க வீட்டுக்காரர் வந்தார்னா, இந்த நம்பருக்கு போன் பண்ணச் சொல்லுங்க. அப்புறம் அவரோட போட்டோ இருக்கா?

       சொல்றேங்க, ஓட்டு போடுற அட்டைல இருக்கு, இருங்க தர்றேன்.

"இந்த  போட்டோவ நான் கொண்டு போறேன், அப்புறமா தர்றேன்" என்று அந்த பெண்மணியிடம் கூறிவிட்டு குடிமகனை தேடி புறப்பட்டார் சரவணன்.

பகலவன் அனலை கக்கிக் கொண்டிருக்க, அரசாங்கம் ஏற்று நடத்தும் மதுபான சேவை மையம் விழா கோலம் பூண்டிருந்தது. மாற்று உடையில் இருந்த திருப்பதி உள்ளே சென்று தேடினார். சிறிது நேரத்தில் அரை மயக்கத்தில் இருந்த ஒருவரை தள்ளிக் கொண்டு வந்தார்.

திருப்பதி, இவர இங்கேயே விட்டிட்டு, பக்கத்து மெடிக்கல் ஷாப் ல  "Dihydromyricetin, 2 mg" வாங்கிட்டு வாங்க.  

அய்யா,  என்ன பேரு சொன்னீங்க?

DHM னு கேளுங்க, 2 mg வாங்கிட்டு வாங்க.    

மருந்து செலுத்தப்பட்ட 10 நிமிடத்தில் தடுமாறி  எழுந்து நின்றவரை பார்த்த சரவணன்.

"நான் கேக்குற கேள்விக்கு சரியா பதில் சொல்லீட்டிங்கன்னா, நாளைக்கு குடிக்கிறத்துக்கு வாய்  இப்போ இருக்குற மாதிரியே இருக்கும், இல்லேன்னா இடம் மாறிப்போகும் " என்று  வலது கையை முழுவதும் மூடி இருந்த சட்டையை  மடித்துக் கொண்டே கேட்டார் சரவணன்.

நேத்து நீங்க அந்த எலேக்ட்ரோனிக் சமான எங்கருந்து எடுத்துட்டு வந்தீங்க? யார் எடுக்கச் சொன்னது? எனக்கு தேவை ஆளு யாருங்கிறது மட்டும் தான். 

     பதில் ஏதும் வரவில்லை


எனக்கு நிச்சயமா தெரியும், யாரோ சொல்லித்தான் இத பண்ணிருக்கீங்க, அது யாரு.

    மீண்டும் மௌனம்.

சரவணனின் கண் சிமிட்டலின் அர்த்தம் புரிந்து கொண்ட  திருப்பதி,அந்த உருவத்தை இழுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்து குறுகலான  பாதைக்கு சென்றார். மயக்க மருந்து இல்லாமல் அந்த உருவத்தின் வாயில் இருந்த இரண்டு கோரை பற்களை கழட்டினார். 

சில நிமிடங்களுக்கு முன்னால் செலுத்தப் பட்ட DHM தன் வேலையை முழுவதும் காட்டி  திருப்பதியின் வைத்தியத்தை தெளிவான  மூளைக்கு முழுவதும் உணர்த்தியது. இனிமேல் தாங்க முடியாது என்பதை உணர்ந்து தன் பின்னணியை முன்மொழிந்தார் குடிமகன்.



ட்ரோஜன் ஹார்ஸ்


மறுநாள் காலை 07:30 மணி 

24/11 கோ சு மணி தெரு, சூளைமேடு, இரண்டாவது மாடியில் இருக்கும் வீடு   

வெங்கட் வாசலில் இருந்த ஆங்கில பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே வந்தார். சுவாரஸ்யமான தகவல் எதுவும் இல்லை. மூடி வைத்துவிட்டு மடிக்கணினியை எழுப்பினார். தகவல் தளத்தில் சில வினாக்களை தொடுத்துக் கொண்டிருந்தார். அவரின் விருப்பத்திற்கு ஏற்ப தகவல்களை அட்டவணைப் படுத்திக் கொண்டிருந்தது கணினி.

கதவு தட்டப் படும் சப்தம் கேட்டு கதவில் மாட்டப்பட்டிருந்த மீன்கண் ஆடியின் வழியாக யார் வெளியே இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு   புன்னகையுடன் கதவை திறந்தார் வெங்கட்.   

வாங்க "Engineer Sir" என்று வந்தவரை வரவேற்று இருக்கையில் அமரச் சொன்னார் வெங்கட்.

இருக்கையில் அமர்ந்தவரை பார்த்து, Coffee யா Tea யா  என்ன சாப்பிடுறீங்க? என்று கேட்டார் வெங்கட் 

Coffee   

"Ready யா இருக்கு" என்று குவளையில் இருந்த குழம்பியை இரண்டு கோப்பைகளில் நிரப்பினார். 

கோப்பையில் இருந்த குழம்பியை உறிஞ்சிக்கொண்டே கேட்டார் வெங்கட் "என்ன விசயமா வந்தீங்க Sir"

      குடித்து முடித்த கோப்பையை கீழே வைத்து விட்டு, "  அது, உங்களுக்கே தெரியுமே Mr.வெங்கட்" என்றார்.

Thanks for the Coffee, போலாமா வெங்கட்?

  எதுக்கு, எங்க Sir ?

இதுவரைக்கும்  13 + 1 மொத்தம் 14 திருட்டு, உங்களுக்கு ஒரு Cell ல Reserve பண்ணிட்டு தான் வந்துருக்கேன்.

    Ohh, நீங்க Engineer ரா வரல, Inspector ரா வந்துருக்கீங்க இல்லையா சரவணன்? என்ன ஆதாரம் இருக்கு உங்க கிட்ட Inspector?

  உங்களோட, Outsourcing Manager and Executive ரெண்டுபேரும் already statement கொடுத்துட்டாங்க.

இதழ்களில் புன்னகை மாறாமல் தலையை மட்டும் அசைத்து கேட்டுக் கொண்டிருந்தார் வெங்கட். வேற என்ன Information வச்சிருக்கீங்க Inspector என்னப் பத்தி.

நிறையா இருக்கு வெங்கட்.

           7 வருசத்துக்கு முன்னால பெசென்ட் நகர் பீச் ல  இருந்து பைக் ஒன்ன திருடிட்டு போய் ஒரு மாசம் கழிச்சு செக்க்போஸ்ட் ல மாட்டிகிட்டது. அதுக்கப்புறம் புது பைக் வாங்கி கொடுத்து அந்த கேஸ் ச Close பண்ணது.


              அதுக்கப்புறம் 5 Years  no more activities.

              Last two Years ல 13 திருட்டு.


  Good Inspector, அந்த drunken  stupid idiot, அந்த Tablet ட எடுக்காம இருந்துருந்தா இன்னும் கொஞ்ச நாள் அகிருக்கும்ல.

       May be வெங்கட், ஆனா ரொம்ப நாளைக்கு நீங்க தப்பிக்க முடியாது. நீங்க தான் Master Mind னு கண்டு புடிச்சிட்டேன்.ஆனா ஏன் பண்றீங்கன்னு தான் புரியல. உங்க கிட்ட காசுக்கா குறைச்சல்?

        எல்லா செயலுக்கும் காரண காரியங்கள் இருக்கணும்னு அவசியம் இல்ல Inspector. இது என்னோட Passion. இதுல ஒரு போதை இருக்கு அது வேற எதுலையும் கிடைக்காது. அது உங்களுக்கு சொன்ன புரியாது. A Type of behavior that can not be beaten, once adopted.  This strategy is true for my victims. Ohh, I Shouldn't have told that. உங்களுக்கு தெரியுமா Inspector, நான் கொள்ளை அடிக்கிற இடத்த எப்படி choose பண்றேன்னு?

        தெரியும் வெங்கட்,  Location Based Apps and Social Network.  

       Clever Inspector, காலைல கக்கூஸ் போறதுல இருந்து நைட்டு கட்டிலுக்கு போற வரைக்கும் எல்லாத்தையும் FaceBook ல போட வேண்டியது. Trojan war ல use பண்ண horse மாதிரிதான் எனக்கு இந்த social network.  Social Network க்கு அடிமையான கூட்டம், என்ன பண்றோம், ஏது பண்றோம்னு தெரியாம. எல்லாத்தையும் அதுல post பண்ணவேண்டியது. I am not choosing my victims actually they are choosing me. Just I am using the information. நீங்க என்ன arrest பண்றதால மட்டும் இது நிக்கப் போறது இல்ல Inspector. It is a continuous reaction.

      அத நாங்க பாத்துக்குறோம்  வெங்கட், உங்களுக்காக கீழ ஜீப்பும், ஸ்டேஷன் ல Cell லும் wait பண்ணிக் கிட்டிருக்கு வாங்க போலாம்.


முற்றும்... 


சரவணன் சமர்ப்பித்த குற்றப் பத்திரிகையில் இருந்து 


  • கோபாலின் மனைவி விஜி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தவறாமல் சமூக வலைதளத்தில் பதியும் வழக்கம் உடையவர். ஞாயிறு அன்று திருமணத்திற்கு சென்று வந்ததை புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.அதற்க்கு வந்த பின்னூட்டத்தில், தான் அணிந்திருந்த நகைகள் குறித்த முழுத் தகவலும் குறிப்பிட்டிருந்தார். தான் வெளியில் செல்லும் இடங்களில் எல்லாம் மறக்காமல் சமூக வலைதளத்தில் "செக்-இன்"  செய்யும் வழக்கமும் கொண்டவர்.

  • தினேஷ் தான் வீட்டு மனை வாங்க போவதையும், வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கப் போவதையும் சமூக வலை தளத்தில் குறிப்பிட்டிருந்தார். முதல் நாள் ஊருக்கு போனதையும் குறிப்பிட்டிருந்தார். 

  • வெங்கட் சமூக வலை தளங்களில் கிடைக்கும் தகவல்களை கொண்டு யாரை, எப்போது, எப்படி கொள்ளை அடிக்க வேண்டும் என்ற திட்டமிடும் வேலையை மட்டும் செய்பவர். சிறு வயதில் இருந்தே திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருபவர், அதனால் அவருக்கு பல தவறான நபர்களுடன் வெகு நாட்களாக தொடர்பு உண்டு. தான் சேகரித்த தகவல்களை இதற்கென்று ஒருவரை நியமித்து அவரிடம் ஒப்படைத்து விடுவார். கொள்ளை அடிப்பதில் வெங்கட்டுக்கு முக்கிய பங்கு. கொள்ளை அடிக்க தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வெங்கட் கவனித்துக் கொள்வார். 

  • தங்க நகைகளை கொள்ளையடிப்பதை மட்டும் வாடிக்கையாக கொண்டுள்ளார் வெங்கட். வீட்டில் சிறிய அளவில் இரசாயன சோதனை சாலையும் வைத்துள்ளார். nitric மற்றும்  hydrochloric அமிலங்களை கொண்டு சுத்த தங்கத்தை  மட்டும் பிரித்து விடுவார்.

     

சரவணனின் வேட்டை தொடரும்... 

Saturday, October 6, 2012

ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan Horse)


வேளச்சேரி... 


தனக்கு  விருப்பம் இல்லா விட்டாலும் தன்  மனைவி அனுவின் வின் கட்டாயத்திற்காக அந்த நடிகரின் திரைப்படத்திற்கு செல்ல முன்பதிவு செய்த நுழைவுச் சீட்டை அச்சடிக்க அலுவலகத்தின் அச்சுப்பொறிக்கு கட்டளையிட்டான் நந்தா. வெள்ளிக் கிழமை மாலை தன்னை வேலை செய்யச் சொன்ன கோபத்தை வேறு யாரிடமும் காட்ட முடியாமல், காகிதமாக உருமாறிய அந்த மரத்தின் மேல் மையை உமிழ்ந்து, காட்டிக் கொண்டிருந்தது அச்சுப்பொறி. 

மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது, காத்திருந்த நுழைவுச்சீட்டை கையகப் படுத்த ஆயத்தமானான் நந்தா. தன் உயரத்தை குறைத்துக் கொண்டு மெதுவாக சென்று அச்சடித்த காகிதத்தை கைப்பற்றி, தன் இடம் திரும்பினான். 2000 ஒலிம்பிக் போட்டியில் 5 பதக்கம் பெற்ற மரியன் ஜோன்ஸ் போல் தன்னை உணர்ந்தான். மூட்டை, முடிச்சை கட்டிக்கொண்டு வீட்டுக்கு போக தயாரானான்.   

"டக் டக்..." நந்தாவின் மேசை எழுப்பப்பட்டது 

 "நந்தா, நீங்க வீட்டுக் போறதுக்கு முன்னால என்ன மீட் பண்ணிட்டுப் போங்க,  15 Minutes, ஒரு Project Discussion  இருக்கு"  என்றார் Project Manager ஆல்பர்ட். 

ஆல்பர்ட் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று தான் தன் அனைத்து யுத்திகளையும் பயன்படுத்தி தப்பிக்க முயன்றான் நந்தா. 

நான் இப்போ கிளம்பிட்டேன் ஆல்பர்ட், Monday discuss பண்ணலாமா?

இது ரொம்ப  important நந்தா, இன்னைக்கே report அனுப்பனும். quick கா முடிச்சிரலாம். ஒரு 15 minutes?

ஆல்பர்ட் கடிகாரத்தில் ஒரு நிமிடத்திற்கு 600 நொடிகள் என்பது நந்தாவுக்கு நன்றாகத் தெரியும். "2007 டிசம்பர் 12 இல் ஐந்து பதக்கங்களும் திரும்பப் பெறப்பட்ட ஜோன்சின் முகம் நினைவுக்கு வந்தது".

அரை கோடிக்கு அவசரப்பட்டு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் மாத வட்டி விகிதம் பயமுறுத்தியதால், வேறு வழியில்லாமல் அலுவலகத்தின் அனைத்து கட்டளைகளுக்கும் "ஆம்"என்ற பதிலை மட்டும் கூறும் கட்டாயத்தில்  நந்தா.

மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து சொல்ல தைரியம் இல்லாததால், ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பி விட்டு அலைபேசியோடு சேர்ந்து  அவனும் ஊமையானான். 

தேவையான தகவல் முழுவதும் கிடைக்காததால், மீண்டும் திங்கள் காலை தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டு இரவு 08:00 மணிக்கு கலந்துரையாடல் வழக்கம் போல முடிவை எட்டாமல் முடிக்கப்பட்டது. 

மனைவியை சமாதனம் செய்ய வழிமுறைகளை தேடினான்.அதே திரைப்படத்தின் இரவுக் கட்சிக்கான நுழைவுச்சீட்டு வாங்க முயற்சி செய்தான், கிடைக்கவில்லை. எப்படியும் இரவு உணவு கிடைக்காது என்பது தெரிந்ததால்,ரொட்டித் துகள்களை உடல் முழுவதும் பூசிக்கொண்டு  கொதிக்கும் எண்ணையில் குழித்த கோழியை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

வழக்கத்திற்கு மாறாக அன்று கொஞ்சம் அதிகமாகவே இருட்டி இருந்தது.  மகிழ்வுந்தை நிறுத்தி விட்டு வெளியே இறங்கினான். அதுவரை இரண்டாம் மாடியின் கன்னி மாடத்தில் காத்திருந்த அனு ,கணவன் தன்னை பார்த்து விட்டதை உறுதி செய்து கொண்டு, தன் கோபத்தை காட்டும் விதமாக வேகமாக உள்ளே சென்றார்.     

இது எதிர் பார்த்ததுதான் என்றாலும் சற்று ஏமாற்றத்துடன் படிகளில் ஏறினான்  நந்தா. மேலிருந்து ஒரு பெண் இறங்கிவர, வழிவிட்டு ஒதுங்கினான். முன்பின் பார்த்திராத அந்தப் பெண் நந்தாவின் அருகில் வந்து எதோ கேட்க முயன்றார்.  

"excuse me sir, என்னோட aunt வீட்டுக்கு வந்தேன், She is not here, I forgot my mobile. please உங்க phone தர்ரீங்களா, ஒரு call பண்ணிக்கிறேன்? " என்று அந்த பெண் கேட்க 

"Sure" என்று கால் சட்டையில் அலைபேசியை தேடிகொண்டிருக்கும் போது, ஒரு இளம் வயது வாலிபன் அந்த பெண்ணின் பின்னால் வந்து நின்றான். பரிச்சயம் இல்லாத மேலும் ஒரு வாலிபன் நந்தாவின் பின்புறம் நின்றான்.

விபரீதத்தின் விளிம்பில் நிற்கிறோம் என்பதை உணரும் மும்பு, முன்னால் நின்ற வாலிபனின் முஷ்டி நந்தாவின் கண்களை காயமாக்கியது. நிலை குலைந்து விழுந்தவன் உடனே சுதாரித்துக்கொண்டு எழுந்தான். தோளில் மாட்டியிருந்த மடிக்கணினியை பாதுகாப்புக்காக  வேகமாக சுழற்றினான், தன்னால் முடிந்த அளவு பலமாக "உதவி" என அலறினான்.

நெடுந்தொடரிடம் தஞ்சமடைத்த அடுக்குமாடி வாசிகளின் காதுக்கு எதுவும் எட்டவில்லை. விளம்பர இடைவேளையில் அலைவரிசை மாறும் அந்தக் கணத்தில் ஏதோ குரல்  கேட்டு முதல் மாடியில் இருந்த ஒரு வீட்டின் கதவு திறக்கப் பட்டு பின்பு உடனே மூடப்பட்டது.        

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அந்த கும்பல் நந்தாவை அப்படியே விட்டு விட்டு ஓடியது.     

தடுமாறி எழுந்து, மெல்ல நடந்து, நந்தா வீட்டு வாசலை அடையவும் அனு கதவை திறக்கவும் சரியாக இருந்தது. உதிரம் பூசிய முகத்துடன் நின்ற கணவனை கண்டதும் செய்வதறியாமல் திகைத்து நின்றார் அனு.

மனைவியை சமாதானம் செய்துவிட்டு, அவசரம் இல்லாமல் அழைத்தார் அவசர போலீசை. மறுமுனையில் காவல்துறை குசலம் விசாரித்து விட்டு உடனே வருவதாக கூறிய  20 நிமிடத்தில் அங்கு வந்தார் ஒரு காவலாளி.

எத்தன பேரு இருந்தாங்க?

      மூனு பேரு இருந்தாங்க சார், அதுல ஒரு பொண்ணு.

அடையாளம் சொல்லமுடியுமா?

       "இருட்டு சரியா பாக்க முடியல. ஒருத்தன் 6 அடி உயரம் இருந்தான். மாநிறம் . அந்த பொண்ணு பேசுனத வச்சி பார்த்தா படிச்ச பொண்ணு மாதிரி இருந்தது. மொபைல் போன் கேட்டது"

என்று நந்தா நடந்ததை விவரித்தார். கண்ணில் தாக்கியது அடையாளம் கண்டுகொள்ள கூடாது என்பதற்குதான் என்று காவல்துறை விளக்கினார்.

Mr. நந்தா, நீங்க உதவிக்காக யாரையாவது கூப்பிடும் போது கொஞ்சம் கவனமா இருக்கணும். ஏன்னா அவங்க பதட்ட மாயிட்டங்கன்னா உங்கள அமையாக்க என்ன வேனா பண்ணலாம். அவன் கைல கத்தி இருந்ததுன்னு வைங்க ரொம்ப சங்கடமா போயிருக்கும். ஒரு போலீஸ் இப்படி சொல்லக்கூடாது இருந்தாலும், உங்கள காப்பாதிக்க வேற வழி இல்ல. நிலமைய சமாளிக்க கைல இருக்குறத கொடுத்துருங்க. குறைந்த பட்சம் சின்ன காயத்தோட போகும்

நாளைக்கு காலைல police station வந்து ஒரு complaint கொடுத்துருங்க

இப்போ சொன்னது போதாதா sir ?

Formal லா complaint வேணும் Mr. நந்தா, மறக்காம documents கொண்டு வந்துருங்க.

"Formal" லுக்கு அர்த்தம் "காசு" என்பதை புரிந்து கொண்டார் நந்தா.


சில மாதங்களுக்குப் பிறகு...

பெருங்குடி...


பிள்ளையார் கோவில் தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு...

ஞாயிறு மாலை 07:45 மணி, வரும் வாரத்திற்கு தேவையான சாமான்களை வங்கிக் கொண்டு கோபாலும், விஜியும் வீட்டுக்கு திரும்பினர்.

விஜி வாங்கிவந்த காய்கறிகளை குளிர்சாதன பெட்டிக்குள் திணித்துக் கொண்டிருந்தார். கோபால் தளர்வாக மஞ்சத்தில் அமர்ந்தார்.

விஜி, நான் நாளைக்கு office போகும் போது மறக்காம pack பண்ணி குடுத்துரு

எதுங்க?

கல்யாணத்துக்கு போகணும்னு locker ல இருந்து எடுத்துட்டு வந்தோமே...

ஓ "Jewels" சா கண்டிப்பா, மறக்க மாட்டேன்.

மறுநாள் காலை 06:00 மணி

"என்னங்க, என்னங்க, எழுந்திரிங்க, எழுந்திரிங்க" தந்தி அடித்துக் கொண்டு விஜியின் குரல் அயர்ந்து நித்திரையில் இருந்த கோபாலை எழுப்பின...

என்ன விஜி, என்னாச்சு?

நகைய, நகைய...

நகைக்கு என்னாச்சு?

காணோங்க....

என்ன உளர்ற, நேத்து நாந்தானே வச்சேன்

இருவரும் எல்ல இடங்களில் தேடியும் நகை கிடைக்க வில்லை.

வேறு வழி இல்லாமல் கோபால் மூன்று இலக்கங்களை அழுத்தினார் தொலைபேசியில்.

சிறிது நேரம் கழித்து...

கதவு தட்டப்பட்டது, வாசலில் சரவணன்.             

Mr. கோபால், நான் Inspector சரவணன் (மாற்று உடையில் இருந்தார்).

வாங்க Inspector.

கடைசியா எப்போ நகைய பார்த்தீங்க?
  
நேத்து afternoon ஒரு marriage function னுக்கு போயிட்டு வந்து எடுத்து வச்சோம் சார். அதுக்கப்புறம் பார்க்கல.

எவ்வளவு நகை?

ஒரு 30 பவுன் இருக்கும் சார்.

வீட்ல நகைய எங்க வச்சிருந்தீங்க, பீரோலையா ?

இல்ல சார், வளையல் எல்லாம் groceries items கூட சேர்த்து பிளாஸ்டிக் டப்பால போட்டிருந்தோம். செயின் எல்லாம் கட்டிலுக்கு கீழ வச்சிருந்தோம்.

வேற எதுவும் திருடு  போகலையா கோபால் ?

இல்ல சார், நகை மட்டும் தான் காணோம், பீரோ ல கொஞ்சம் பணம் இருந்தது, அது அப்படியே தான் இருக்கு.     

கதவு, ஜன்னல் வேற எதுவும் உடஞ்சி இருக்கா?

இல்ல சார், அந்த மாதிரி எதுவும் ஆயிருந்தா நேத்தே கண்டு புடிசிருப்போம்.

"திருப்பதி, finger print மத்த evidence collect பண்ணனும். அதுக்கு arrange பண்ணுங்க. காணமல் போன jewels details ச correct டா வாங்கிடுங்க" என்றார் சரவணன்.

Mr.கோபால், நல்லா தேடிட்டு சொல்லுங்க வேற எதுவும் காணாம போகலையா?

கோபால் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விஜி அறையில் இருந்து வெளியே வந்து calculator ஒன்றை காணோம் என்றார். கோபால், விஜியை எரிச்சலுடன் பார்த்தார்.

"நகை காணாமப் போனதால எவ்வளவு ரூபா போச்சுன்னு calculate பண்றதுக்காக தேடினேன், வெளிய table ல தான் இருந்தது, இப்போ காணோம்" என்றார் விஜி.

தேங்க்ஸ் மேடம், நல்ல information குடுத்தீங்க.

என்ன சொல்றீங்க inspector?

Mr. கோபால், calculator கூட சேர்ந்து வேற transistor radio எதுவும் காணமான்னு சொல்லுங்க?

மீண்டும் உள்ளே சென்ற விஜி பழைய transistor ஒன்றை காணோம் என்றார்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தார் கோபால்.

ஒரு simple metal detector பண்றதுக்கு தேவையான உபகரணங்கள் தான் calculator மற்றும் transistor என்று விளக்கினார் சரவணன்.

பூட்ட உடைக்காம எப்படி sir திருடன் வீட்டுக்கு உள்ள வந்தான்?

அந்த வீட்டு கதவின் பூட்டை ஆராய்ச்சி செய்த சரவணன், உங்க கதவுல இருக்குறது "Warded lock". இதுக்கு "skeleton key" அல்லது "passing key" ஒன்னு இருக்கு. அத வச்சி சுலபமா திறக்கலாம்.

இப்படித்தான் பண்ணி இருக்காங்கன்னு நிச்சயமா சொல்ல முடியாது. ஆனா இப்படியும் பண்ணியிருக்கலாம்.

இதை எல்லாம் கேட்டு விரக்தியின் உச்சத்துக்கே சென்ற கோபால், அப்ப எப்படி தான் sir பாதுகாப்பா இருக்குறது ? என்று சரவணனிடம் கேட்டார்.

"இந்த கேள்விக்கு என்கிட்டே பதில் இல்ல Mr. கோபால், ஆனா கவலைப் படாதீங்க, உங்க நகை கண்டிப்பா கிடைக்கும். நகை கிடச்ச உடனே உங்களுக்கு call பண்றோம்" என்று கூறி விட்டு. மற்ற வேலைகளை முடித்து விட்டு வருமாறு திருப்பதியை பணித்து விட்டு சென்றார் சரவணன்.       

காவல் நிலையம் 

அய்யா, நம்மகிட்ட இருக்குற criminals list எடுத்து இந்த திருட்டு case ச விசாரிக்கலாமா?

அது ஒரு option னா வச்சிக்கலாம் திருப்பதி, ஆனா இந்த திருட்ட பார்க்கும் போது எனக்கு வேற மாதிரி தோனுது. நகைய திருடுனவன் நல்லா plan பண்ணிதான் செஞ்சிருக்கான். அதனால இதுக்குள்ள நகைய உருக்கிருப்பான். அல்லது வேற எங்கயாவது வித்துருப்பான். இருந்தாலும் நீங்க இந்த திருட்டு நகைய deal பண்றவங்கள பத்தி விசாரிங்க.

சரிங்கய்யா.


நாட்கள் நகர்ந்தன, தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தார் சரவணன்.ஆனால் ஒரு வாரம் ஆகியும் காணாமல் போன நகை குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.

அன்று...

காவல் நிலையத்தின் தொலைபேசி மணி ஒலித்தது, எடுத்து பேசிய  முருகானந்தத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மீண்டும் திருட்டு...

குதிரை ஓடும்...