cookie

Wednesday, July 17, 2013

மிதிலையை தேடி

"ஆறு வருஷமா ஒரே Company ல வேலை பாக்குறேன்னு சொல்லி, பொண்ணு  வீட்ல என்ன வேணாம்னு சொல்லிட்டாங்க" 

சமீபத்தில் மணமகள் தேடி வரும் நண்பர் என்னிடம் கூறியது. 

கம்பராமாயணத்தில் சிறந்த பகுதி "சுந்தர காண்டம்" என்பது பொதுவான கருத்து. ஆனால், எனக்குப் பிடித்த பகுதி "அயோத்தி காண்டம்". அதன் காரணம், (Handsome) ராமனும், (Gorgeous) சீதையும் சந்தித்துக் கொண்ட அந்த நிகழ்வுகளை அவர் விளக்கிய விதம்.

"பெண் பார்க்கும் படலத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்".


மன்னிக்கணும், இன்னும் நான், என்னப்பத்தி உங்ககிட்ட அறிமுகம் செஞ்சுக்கல.

எம் பேரு வெங்கடேசன் ராஜாராம்.

நீங்க என்ன "வெங்கட்" ன்னே கூப்பிடலாம். M. C. A படிச்சிட்டு, ஒரு தனியார்   நிறுவனத்துல வேலை பார்க்கிறேன். ரெண்டு வருசத்துக்கு முன்னாலதான்  MIDDLE CLASS ங்கிற STATUS  ல  இருந்து UPPER MIDDLE CLASS ங்கிற STATUS க்கு UPGRADE ஆனேன் (ஊதிய உயர்வுக்குப் பின்). 

அப்பா, GOVT. EMPLOYEE (கையூட்டு பெற முடியாத, பெற விரும்பாத துறை), இன்னும் 2 YEARS ல RETIRED ஆயிருவார். அம்மா அன்பான குடும்பத் தலைவி.

கூடப் பொறந்தவங்க  இல்லை. அப்பா, அம்மாவுக்கு ஒரே பையன். அவங்க சொல்றபடி கேக்குற நல்ல பையன் (அப்படீன்னு அவங்க நெனச்சிக்கிட்டு இருக்காங்க).

எனக்கு பொண்ணு பாக்கும் போது நடந்ததத்தான் உங்ககிட்ட சொல்லப் போறேன். 

என்னோட FRIENDS எல்லோரும் CAMPUS லையே SELECT ஆயிட்டாங்க, நான் மட்டும்தான் தேடி அலஞ்சிகிட்டு இருந்தேன்.

என்ன சொல்றேன்னு புரியலையா? படிக்கும்போதே LOVE பண்ணி, அப்புறம் கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிட்டாங்க. நான் மட்டும்தான் எங்க அப்பா அம்மாவோட RECOMMENDATION காக WAIT பண்ணேன்.

பொண்ணு தேட ஆரம்பிக்கிறதுக்கு முன்னால, அம்மா கிட்ட என்னோட REQUIREMENTS எல்லாம் சொன்னேன். அதையே உங்ககிட்டையும் சொல்றேன்.
       
1. SLIM மா அழகா இருக்கணும், குறிப்பா என்ன விட COLOR ரா இருக்கணும்.
     
இதே மாதிரி பொண்ணுங்களும் கேட்டா, உனக்கு எப்படி கல்யாணம் ஆகும்.?

2. B. E / M.C.A / M.Sc படிச்சிருக்கணும்.    

எதுக்கு வேலைக்கு அனுப்பலாம் னு PLAN னா?

3. உயரம் 5, 6" to 5, 8" இருக்கணும்

கல்யாணத்துக்கு பொண்ணு வேணுமா, இல்ல Military க்கு ஆள் வேணுமா?

4. நகை, பணம்னு எதுவும் வேண்டாம்
         
பரவயில்லையே... ஆச்சர்யகுறி

5. UPPER MIDDLE CLASS FAMILY யா, வீட்டுக்கு ஒரே பொண்ணா இருந்தா பரவால்ல.

இப்போ புரியுது உன்னோட தாராள மனசும், தொலைநோக்குப் பார்வையும்.

6. கவிதை எழுத தெரியனும், குறைந்தபட்சம் ரசிக்கவாவது தெரியனும்.

எதுக்கு, உன்னோட கிறுக்கள்கள வசிக்க ஒரு ஆளாவது வேணுமோ?

7. தலைமுடி இடுப்பு வரைக்கும் இருக்கணும்.

இப்பெல்லாம், பொண்ணுங்களுக்கும் வழுக்கை விழுது, ரொம்ப கஷ்டம்....

8. நல்லா "தமில்" பேசத் தெரியனும்.

உனக்கு "தமிழ்" னு  சொல்லவே தெரியலையே...

   
நான் சொன்ன ஒவ்வொரு POINT க்கும் நீங்க உங்க மனசுக்குள்ள பச்ச, பச்சையா என்ன நினைச்சீங்கன்னு, எனக்கு நல்லா தெரியுது.

வேலைக்கு APPLY பண்ணும்போது கூட, நான் இவ்வளவு சிரமப்படலங்க. ஆனா, இந்த பொண்ணுங்க வீட்ல கொடுக்க தயார் பண்ண BIO-DATA இருக்கே, அத முடிக்கிறதுக்குள்ள போதும், போதும்னு ஆயிடிச்சி. ஒரு வழியாக தரகர் கிட்ட MODEL ஒன்ன வாங்கி, அம்மா, அப்பா, உதவியோடு கடைசியாக எனக்குன்னு ஒரு BIO-DATA தயார் பண்ணிட்டேன்.

அதுக்கு முன்னால வரைக்கும், சினிமா பாக்குறது இல்லாம எனக்கு வேற எந்தப் பொழுது போக்கும் கிடையாது.  எனக்கு BIO-DATA மாதிரி கொடுத்த மகராசன், "புத்தகம் படிப்பது" னு அவரோட பட்டியல்ல போட்டு இருந்தாரு. நல்லா இருந்ததுன்னு அத சுட்டு என்னோட BIO-DATA ல போட்டுக்கிட்டேன். ஒருத்தங்க கிட்ட இருந்து நல்ல விசயத்த கத்துக்கிறது நல்லதுதான, அதுனால தான்.

என்ன கொடுமை சரவணன் இது? 

இப்போதாங்க முக்கியமான கட்டம், "PHOTO".

நம்ம ஊர்ல, ஒரு STUDIO ல கூட யாருக்கும் PHOTO எடுக்கவே தெரியலங்க.

இப்போ என்ன எடுத்துக்கோங்க, நேர்ல பார்க்க எவ்வளவு SMART டா, HANDSOME மா இருக்கேன்.

கடவுளே...

PHOTO ல பார்த்தா, ரொம்ப சுமாராத்தாங்க தெரியுது.

ஜட்டில அய்யய்யோ தப்பு,  சட்டியில என்ன இருக்கோ அது தான அகப்பைல வரும்.

என்ன செய்ய? சுமாரா இருந்தாலும் போதும்னு, இருக்குற PHOTO வ குடுத்தேன். பெருசா எந்த RESPONSE ம் இல்ல.

கல்யாண வீடு, கோவில்னு ஒன்னு விடல. சொந்தகாரங்க யாரு கல்யாண  பத்திரிக்க குடுத்தாலும் சரி, எந்த நாளா இருந்தாலும், எந்த ஊரா இருந்தாலும் பரவாயில்லன்னு OFFICE க்கு LEAVE போட்டிட்டு கூட சுத்திப் பாத்தேன். ஒன்னும் அமையல.

இதுவரைக்கும் ஜாதக பொருத்தம் பார்க்க குடுத்த காசுல சென்னைல ஒரு வீடே வாங்கி இருக்கலாம்.

கொஞ்ச நாள் போனதுக்கப்பறம் எங்க அம்மாவே சொல்லிடுவாங்க. இந்த STAR க்கு, இந்த PLANET க்கு இந்த SATELLITE தான் பொருந்தும்னு. எங்க அம்மா பொருத்தம் பார்த்து சரின்னு சொன்னாதான் அடுத்து ஜோசியர்கிட்ட போறது.

அப்படித்தான் ஒரு நாளு அந்தப் பொண்ணோட ஜாதகம் வந்தது. அம்மாவும் பொருத்தம் இருக்குதுன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் என்ன பொண்ணப் போய் பாக்க வேண்டியதுதான். என்னோட முதல் அனுபவம்.

டார்க் பிரவுன் கலர் புடவை ல வந்தது பொண்ணு. நல்லா இல்லேன்னு சொல்ல முடியாது. ஆனா கொஞ்சம் அதிகமா சதைப்பிடிப்போடு இருந்தது. பெங்களுர்ல வேலை பாக்குறதா சொன்னாங்க.

சினிமா பார்த்து வளர்ந்த பலவீனமான கூட்டத்துல நானும் ஒருத்தன், அதனால பெட்டர்மாஸ் லைட் டேதான் வேணும்னுட்டு, அந்தப் பொண்ண வேண்டாம்னு சொல்லிட்டேன்.

அதுக்கு அடுத்த வாரம் எங்க வீட்ல இருந்து போன் பண்ணாங்க, எங்க ஊர்லையே இன்னொரு பொண்ணு இருக்குதுனு. அவங்க அந்தப் பொண்ண ஏற்கனவே பாத்துட்டாங்கலாம், எல்லாருக்கும் புடிச்சிருக்குதாம், நான் வந்தா மட்டும் போதும், பேசி முடிச்சிரலாம்னு சொன்னங்க.

வெள்ளிகிழமை OFFICE க்கு போறதுக்கு முன்னாலையே "லூயிஸ் பிலிப்பே" ஷோ ரூம்க்கு போய் லைட் கலர்ல ஒரு ஷர்ட் வாங்கிட்டேன். அந்த மாதிரி ஷர்ட்லதான் நான் கொஞ்சம் ப்ரைட்டா தெரிவேன். அடுத்த நாள், சலூன்ல போய் ஷேவ் பண்ணிட்டு காலைலையே ரெடி ஆயிட்டு, சாயங்காலம் வரைக்கும் வெயிட் பண்ணேன்.

05:00 மணிக்கு கிளம்பி பொண்ணு வீட்டுக்கு போனோம், முதல் மாடில வீடு. படில ஏறி உள்ள போகும் போது பொண்ணோட அம்மா வந்தாங்க. எங்கள ஹால்ல உட்காரச் சொல்லிட்டு, ரூக்குள்ள போயிட்டாங்க கொஞ்ச நேரம் கழிச்சி வந்தாங்க. காபி, பலகாரம் எல்லாம் பொண்ணோட அம்மாதான் குடுத்தாங்க. கடைசி வரை பொண்ணு வெளிய வரவே இல்ல. எங்க மாமா  "பொண்ண கூப்பிடுங்கன்னு" கேட்கவே செஞ்சிட்டாரு. அப்புறமா பொண்ணு வெளிய வந்தாங்க. என்னோட முதுகிக்கு பின்னால நின்னிட்டு அப்படியே உள்ள போயிட்டாங்க. அடுத்த 2 நிமிஷத்துல நாங்களும் கிளம்பிட்டோம். கடைசிவர பொண்ணப் பாக்கவே இல்லை.

ரெண்டு நாள் கிழிச்சிதான் விசயமே தெரியவந்துச்சி, எங்க அம்மா, அப்பாவ பாத்துட்டு நானும் கலரா இருப்பேன்னு பொண்ணோட அம்மா தப்பா நினைசிட்டாங்களாம். என்ன முதல்லையே பாத்திருந்தா, எங்கள பொண்ணு பாக்க வரச்சொல்லி இருக்க மாட்டங்களாம்  

அதுக்கு அப்புறம் தான் கண்ணாடில என் முகத்த இன்னொரு தடவ நல்லா பார்த்தேன். என்னுடைய கற்பனை மனைவிக்கு அதுவரைக்கும் போட்டிருந்த மேக்கப்ப கொஞ்சம் மாத்திட்டேன். ரெண்டு மூணு வாரம் ஆயிரிச்சி மனசுல பட்ட அந்தக் காயம் சரியாக.

அதுக்கப்புறம் எங்க வீட்ல தெளிவா சொல்லிட்டேன், நான் கலர் கம்மிதான்னு முதல்ல சொல்லிரனும்,போட்டோவயும் காட்டிரணும்.அதுக்கப்புறமும் பொண்ணு வீட்ல புடிச்சிருந்தாவேணா  போயி பொண்ணப் பாக்கலாம். இப்படி சும்மா சும்மா அவமானப் படமுடியாதுனு.

நான் சொன்ன மாதிரியே எங்க வீட்லயும்,என்னப்பத்தி சொல்லி போடோவையும் காட்டி ஒரு பொண்ண முடிவு பண்ணாங்க. ரெண்டுபேர் வீட்லையும் எல்லாருக்கும் புடிச்சி போச்சி. நானும், பொண்ணும் நேர்ல பாக்கணும் அவ்வளவுதான். பொண்ணு, சென்னைலதான் வேலை பாக்குறதா சொன்னங்க. அதனால ரெண்டுபேர் வீட்லயும் பெரியவங்க சென்னைக்கு வந்துட்டு, வடபழனி முருகன் கோவில்ல வச்சி பொண்ணு பாக்குறதா பேசி முடிச்சாங்க.

வெள்ளிக்கிழம காலைலே எங்க அப்பா, அம்மா MORNING TRAIN ல சென்னைக்கு கிளம்பிட்டாங்க. கிளம்புறதுக்கு முன்னால எனக்கும்,பொண்ணு வீட்டுக்கும் போன் பண்ணி "கிளம்புரோம்னு" சொல்லிட்டாங்க.

ஒரு மூணு மணிநேரம் கழிச்சி மறுபடியும் எங்க அம்மா எனக்கு போன் பண்ணாங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, பொண்ணோட தம்பி எங்க அப்பாகிட்ட போன்ல பேசினதாகவும், நாளைக்கு பொண்ணு வீட்ல இருந்து யாரும் கோவிலுக்கு வரப்போறது இல்லைன்னு சொன்னதாகவும்,  சொன்னங்க. வேற எதுவும் சொல்லாம உடனே கட் பண்ணிட்டாங்காலமா. மறுபடி எங்க அப்பா போன் பண்ணா, யாருமே எடுத்து பேசலன்னு சொன்னங்க.

வெறுப்பின் உச்சத்துக்கே போன என்னோட அப்பாவும், அம்மாவும் அடுத்த ஸ்டாப்லயே இறங்கி அப்படியே திரும்ப ஊருக்கு போயிரலமானு முடிவு பண்ணிட்டாங்க. அப்புறம் நான் தான் சமாதனப் படுத்தி சென்னைக்கு வரச்சொன்னேன்.

திங்கள் கிழமை திரும்ப எங்க ஊருக்கு போன அப்பா, தரகர்கிட்ட விசாரிக்கும் போதுதான் தெரிய வந்தது. அந்தப் பொண்ணு, கூட வேலை பாக்குற பையனை வீட்ல சொல்லாம ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கிட்டதாம். இந்த விஷயம் அவங்க வீட்டுக்கே வெள்ளிகிழமதான் தெரியுமாம். கோபமா போன எங்கப்பா, இந்த விஷயம் தெரியவும் பொண்ணோட அப்பாவுக்கு அறுதல் சொல்லிட்டு பாவமா திரும்பி வந்தாரு.    

இந்த மாதிரி மொத்தமா நாலு Incidents நடந்தது எனக்கு. அதுக்கப்புறம், இனிமே பொண்ணே பாக்கப் போறதில்லன்னு முடிவு பண்ணிட்டேன். இந்த சமயத்துலதான் வேலை விஷயமா வெளிநாடு போக வேண்டி வந்தது. இத காரணமா வச்சி எங்க வீட்ல சொல்லிட்டேன். நீங்களே ஒரு பொண்ண பார்த்து முடிவு பண்ணி, கல்யாணம் Fix பண்ணிட்டு, என்னக்கு சொல்லுங்க தாலி கட்டுறதுக்கு மட்டும் நான் வர்றேன்னு.

5 மாசத்துக்கு அப்புறமா, மறுபடியும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சது. "பொண்ணு வீட்ல பாக்கணும்னு சொல்றாங்க"னு எங்கம்மா போன் பண்ணாங்க. SKYPE ல பார்க்கலாம்னு DATE, TIME Fix பண்ணிட்டோம்.

அந்த நாளும் வந்துச்சி, SKYPE ல VIDEO வ ON பண்ணா CALL  CUT ஆகுது. LOW BANDWIDTH காரணமா ரெண்டு பேருடைய முகம், ரெண்டு பேருக்கும் தெரியல. மறுபடியும் இன்னொரு நாள் TRY பண்ணினோம், அப்பாவும் இதே PROBLEM தான்.

இதுக்கு இடைல என்ன நடந்ததுன்னு தெரியல, பொண்ணு வீட்ல ஒத்துகிட்டு கல்யாணத்துக்கு நாள் பார்த்துட்டாங்க. நான் இல்லாமலே நிச்சயதார்த்தம் முடிஞ்சது.

நிச்சயதார்த்த போட்டோ தான் எனக்கு அனுப்பினாங்க.போட்டோ வ பார்த்துட்டு மோசம் இல்லன்னு தோணுச்சி.கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாலதான் ஊருக்கு போனேன், என் வருங்கால மனைவியை பார்க்க.
            
பொண்ணு, அவங்க பாட்டி வீட்ல இருந்தாங்க. எங்க வீட்டுக்கு பக்கத்துலதான் அவங்க பாட்டி வீடு, என்னப் பாக்க  வெட்கப்பட்டுகிட்டு கதவுக்கு பின்னால  போய் ஒளிஞ்சிருந்த டார்லிங்க, எங்க அம்மாதான் வெளிய கூட்டி வந்தாங்க.

1. Slim மா, அழகா, என்ன விட COLOR ரா.

2. M.Sc படிப்பு     

3. உயரம் 5, 6"

4. நகை, பணம் -  (இஹிஹிஹி )

5. Upper Middle Class Family, வீட்டுக்கு ஒரே பொண்ணு.

6. கவிதை ரசிக்க தெரியும்.

7. தலைமுடி இடுப்புக்கு மேல வரைக்கும்.

8. நல்லா "தமில்" பேச தெரியும்.


இன்னமும் நம்ப ஊர்ல யாருக்கும் சரியா PHOTO எடுக்க தெரியல.

கல்யாணத்துக்கு இன்னும் 6 நாள் காத்திருக்கனுமா...?

Tuesday, July 16, 2013

தந்தி

 163 வருடங்களாக இயங்கிவந்த தந்தி சேவைக்கு, ஜூலை 14 ம் நாள் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தரித்திரத்தின் காரணமாக நிறுத்தப்பட்ட தந்தி சேவை இனி சரித்திரத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும்.

இனிவரும் ஆண்டுகளில், "வரலாற்றில் இன்று" என்று ஜூலை 14 ம் நாள், இந்திய தந்தி சேவையும் சேர்த்து தொலைக்காட்சியில் காட்டப்படும்.    

80 களின் இடையில் விஸ்வரூபம் எடுத்து இயங்கிய இந்த சேவையில், சமயங்களில் 6 கோடி தந்திகள் கூட ஒரே நாளில் அனுப்பிய மெடிக்கல்  மிராக்கில்களும் அடங்கும்.

இது போன்ற பல சாதனை விளக்கப் பட்டியல்களை பல முறை நீங்கள் சமீபத்தில் படித்திருப்பீர்கள் என்பதால், மேலும் உங்களை புள்ளி விவரம் கொடுத்து சலிப்பை ஏற்படுத்த விரும்பாமல் சொல்ல விரும்பிய செய்திக்கு வருகிறேன்.

நான் கொடுத்த முதல் (கடைசி) தந்தி...

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அரையாண்டு தேர்வு விடுமுறையில்,வீட்டில் இருப்பவர்களின் உயிரை தவணை முறையில் எடுத்துக் கொண்டிருந்தேன். இதே சமயத்தில் ஊரில் இருந்து மாமாவின் புதல்விகள் இருவர் விடுமுறையில் என்னிடம் அடி வாங்கு வதற்கு என்றே பாட்டி வீட்டிற்கு வந்திருந்தனர்.

பாட்டி வீடும், எங்கள் வீடும் வெகு அருகில் இருந்தன. விடுமுறையில் என்னுடைய முக்கிய பொழுதுபோக்கு என்னவென்றால் அக்கா, தங்கை, தம்பி (தம்பி,தங்கை இருவரும் சித்தியின் வாரிசுகள்) மற்றும் மாமா மகள்கள் அனைவரையும் பட்டியல் போட்டு பந்தாடுவது.

அரைமணிக்கு ஒரு முறை யாராவது ஒருவர் என் அம்மாவிடம்  என்னைப் பற்றிய புகாருடன் பஞ்சாயத்துக்கு போய் நிற்ப்பார்கள். எங்கள் வீட்டின் IRON MAN வரும் வரை இது இப்படியே தொடரும்.

இந்த சமயத்தில் ஒரு நாள், காலை 10:00 மணி ஆகியும் அன்றைய அடிகளை வாங்க அன்னக்கிளிகள் வரவில்லை. சிறுது நேரம் கழித்து பாட்டிதான் வந்தார். மாமாவின் மூத்த மகள் பூப்படைந்து விட்டதாகவும் அந்த செய்தியை மாமாவின் வீட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறிக்கொண்டிருந்தார்.

அன்றைய தினம் எங்களின் உற்றார் உறவினர் யார் வீட்டிலும் தொலைபேசி கிடையாது. விரைவாக செய்தி அனுப்ப தந்திதான் ஒரே வழி, கையில் கொஞ்சம் காசு கொடுத்து (சுருக்கமாக) தந்தி கொடுக்க என்னை அனுப்பினர்.

இந்த நிகழ்விற்கு சில நாட்களுக்கு முன்பு, எங்கள் வகுப்பு ஆசிரியை தங்கரத்தினம் அவர்கள், அவரின் சொந்த ஆர்வத்தாலும், தன்னுடைய மாணவர்களின் நடைமுறை வாழ்விற்கு தேவையான அறிவை வளர்த்துக் கொள்ளவும் பல முயற்சிகளையும் எடுப்பார்கள். அதில் ஒன்றுதான் தந்தி எவ்வாறு அனுப்பவேண்டும் என்பது குறித்த விளக்க வகுப்பு. 

"நானெல்லாம் எதுக்கு தந்தி அடிக்கப் போறேன்", என்ற எண்ணத்தில் அரைகுறையாக ஏதோ கற்றுக்கொண்டதாக நினைவு.

பணத்தை வங்கிக் கொண்டு, கோவில்பட்டி மெயின் ரோடு,  பாரத ஸ்டேட் வங்கிக்கு அருகில் இருந்த தந்தி அலுவகத்திற்கு சென்றேன். அலுவலரிடம் இருந்து படிவம் பெற்றுக்கொண்டேன். அனுப்புநர் மற்றும் பெறுனர் குறித்த விவரம் நிரப்பப்பட்டு விட்டது. அடுத்தது செய்தி...

முதலில் அனுப்ப வேண்டிய செய்தியை தனியாக ஒரு காகிதத்தில் எழுதினேன்.

"<பெயர்> குத்த வச்சிட்டா "

"<பெயர்> சமஞ்சிட்டா."

நல்லா இல்லையே, சரி இப்படி சொல்லுவோம்.

"<பெயர்> பெரிய மனுசி ஆயிட்டா. மஞ்சள் தண்ணி நாளைக்கு ஊற்றுகிறோம். உடனே வரவும் "

அடுத்து தான் "Mission: Impossible", இந்த செய்தியை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வது எப்படி?

இத அப்படியே மாத்துவோம், அவ்வளவு தானே. என்று மனதை தேற்றிக் கொண்டு பலமுறை முயன்றும் செய்தியை தொடங்கக்கூட முடியவில்லை.  தந்தி அலுவலரிடமும் உதவி கிடைக்கவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அருகில் மிடுக்கான உடை அணிந்த ஒருவர் தந்தி படிவத்தை பூர்த்தி செய்து கொண்டிருந்தார். அவரிடம் உதவியை நாடலாம் என்று முயன்று பார்த்தேன்.

நான் கூறிய செய்தி அனைத்தையும் முழுமையாக கேட்டுவிட்டு, என்னைப் பார்த்து  "என்ன படிக்கிற" என்றார். 8 ம் வகுப்பு என்று நான் கூறியதும். என்னையும் இந்த சமுதாயத்தையும் கடுமையாக சாடினார். 8ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு இந்த சாமர்த்தியம் கூட இல்லையே என்று. போனால் போகட்டும் நமக்கு உதவி செய்தால் போதும் என்று நினைத்தேன் ஆனால் கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

வேறு வழியில்லாமல் ஒரு ஓரமாக நின்று கொண்டேன், வேறு யாரிடம் உதவி கேட்கலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் முந்தய அந்த மிடுக்கு மனிதரை கவனித்தேன். அவரும் செய்தியை சொந்தமாக எழுதவில்லை, யாரோ எழுதிக் கொடுத்ததை அச்சு பிறளாமல் பிரதி எடுத்துக் கொண்டிருந்தார்.

இனி யாரிடமும் உதவி கிடைக்காது என்பதால், என்னிடம் இருந்தே உதவியை பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்து மீண்டும் நான் ஏற்கனவே எழுதி வைத்த செய்தியை மொழி மாற்றம் செய்ய முயன்றேன்.

            
"<பெயர்> பெரிய மனுசி ஆயிட்டா. மஞ்சள் தண்ணி நாளைக்கு ஊற்றுகிறோம். உடனே வரவும் "

"<NAME> IS BIG LADY NOW. YELLOW WATER TOMORROW. START NOW".

இந்த செய்தி பொறிக்கப்பட்ட படிவம் அலுவலரின் கைக்கு மாறியது. எந்த சலனமும் இல்லாமல் அவரும் வங்கிக் கொண்டார். செய்தியும் காற்றில் பறந்தது.  

அன்று மாலையே என்னுடைய மாமாவும், அத்தையும் வந்ததன் மூலம், நான் அனுப்பிய தந்தி அவர்களுக்கு சென்று விட்டது, புரிந்தும் விட்டது என்பதை நினைத்த போது, கொல்கத்தாவில் இருந்து டைமண்டு ஹார்பர்க்கு முதல் தந்தி அனுப்பியவரின் வெற்றிக்களிப்பை அன்று நான் உணர்ந்தேன்.