cookie

Tuesday, December 18, 2012

கள்வரின் கள்வன்


காலை 07:00 மணி 

மாமாவின் வீட்டில் அமர்ந்திருந்தான் ராஜு.

"என்ன ராஜு, காலைலயே வந்துட்ட, எதாவது அவசரமா?"  என்று மாமா விசாரிக்க. அவர் என்ன நினைத்து கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டு.

"அவசரம் எதுவும் இல்ல மாமா, அப்பா நல்லாத்தான் இருக்கார். ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான் வந்தேன்" என்றான் ராஜு.

"சொல்லு ராஜு" என்று கேட்ட மாமாவுக்கு, தன்னுடைய அலைபேசியில் எதோ ஒரு படக் காட்சியை ஓடச் செய்து கொடுத்தான். படக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த மாமா திடீரென பதட்டமானர்.

"ராஜு, இது?"

"சந்தேகம் இல்லாம அவன் தான் மாமா" என்று உறுதி படுத்தினான் ராஜு.

"இது எப்படி உனக்கு கிடைச்சது? இத வச்சிக் கிட்டு என்ன பண்ணப் போற?" என்றார் மாமா.

"நேத்து, நான் தான் இத எடுத்தேன். இத வச்சிதான் அவங்களுக்கு தண்ணி காட்டப் போறேன்" என்றான் ராஜு.

"வேண்டாம் ராஜு, இது பெரிய பிரச்சனை யாயிடும்" என்று அறிவுரை வழங்கிய மாமாவுக்கு

"விட்டத பிடிக்க இதவிட்டா வேற வழியில்ல மாமா" என்று எதற்கும் துணிந்தான் ராஜு


சில நாட்களுக்கு முன்பு...    

வியாழன் காலை 07:30 மணி.

ராஜு Power House மைதானத்தை இரண்டு வட்ட மடித்து மூன்றாவது சுற்றை ஆரம்பிக்கும் போது, அலைபேசியில் பாடிக் கொண்டிருந்த புதிய பாடலை பின்னுக்கு தள்ளி விட்டு விட்டு, அவசரமாக தொலைபேசி அழைப்பு முன்னுக்கு ஓடி வந்தது. மறுமுனையில் ராஜுவின் அம்மா.

காலையில் எதிர்பார்க்காத நேரத்தில் அம்மாவின் அலைபேசியில் இருந்து அழைப்பு வரவும், எடுத்து பேசுவதற்கு முன்பு, அந்த சில மணித் துளிகளுக்குள் அவன் மூளை பலவாறு சிந்திக்க ஆரம்பித்து விட்டது. ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு பச்சை பொத்தானை அழுத்தினான்.

"என்னம்மா இந்நேரம் Phone பண்ணிருக்க, என்னாச்சு?" என்று கேட்டான் ராஜு.

"ஒன்னும் இல்லப்பா சும்மாதான் Phone பண்ணேன்" என்று சற்று தடுமாறிய குரலில் ராஜுவின் தாய் பதில் அளித்தார்.

"ஒன்னும் இல்லாம இந்த நேரம் பேச மாட்டியே, சொல்லு என்ன ஆச்சு? யாருக்கும் உடம்பு சரி இல்லையா? அப்பா எங்க? அப்பா நல்லா தான இருக்காரு?" என்று அம்மாவிடம் கேள்விகளை அடுக்கினான் ராஜு.

அதுவரை தேக்கி வைத்த அம்மாவின் "கண்" அணை உடைந்தது.

"அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பா, இப்போ நான் ஜோதி Hospital ல இருந்து தான் பேசுறேன்." என்று தன்னிடம் இருந்த மொத்த பாரத்தை ராஜுவிடம் இறக்கினார் அம்மா.

"அப்பாவுக்கு என்ன? Sugar Level கூடிருச்சா? Dr. என்ன சொன்னாரு? பக்கத்துல Dr யாராவது இருந்தா பேச சொல்லு" என்ற பரபரத்தான் ராஜு.

அருகில் இருந்த மருத்தவரிடம் அலைபேசியை ஒப்படைத்து விட்டு தன் அழுகையை தொடர்ந்தார் ராஜுவின் அம்மா. 

அலைபேசியை வாங்கிய மருத்துவர் அவன் தந்தையின் உடல் நிலையை விளக்க ஆரம்பித்தார்.

"உங்க அப்பாவுக்கு Type 1 Diabetes இருக்குறது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், கொஞ்ச நாளுக்கு முன்னால அவருக்கு கால்ல சின்ன காயம் பட்டிருக்கு, அத கவனிக்காம விட்டுட்டாரு. அது பெருசாகி ஒரு Stage க்கு மேல அவர் Blood ல Ketoacidosis Form ஆக ஆரம்பிச்சிருச்சி. இன்னைக்கி Morning  Ketoacidosis Level Very High ல இருந்து இருக்கு அதனால இப்போ உங்க அப்பா COMA ல இருக்காரு" என்று அலை பேசி வழியாகவே மருத்துவர் ராஜுவுக்கு மயக்க மருந்து கொடுத்தார்.

இந்த செய்தியை கேட்டதும் ராஜு தடுமாறித்தான் போய் விட்டான். வீட்டுக்கு ஒரே மகன். எதுவாக இருந்தாலும் இப்போது அவன்தான் செய்தாக வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள மருத்துவரையே கேட்டான்.     

"Situation கொஞ்சம் Serious தான் ராஜு, ஆன நீங்க பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல. உங்க Father COMA ல இருந்து Recover ஆகுற வரைக்கும் Insulin கொடுத்து Monitor பண்ணிக்கிட்டு இருப்போம். Don't Worry இன்னும் Maximum 18 Hrs குள்ள COMA ல இருந்து Recover அகிருவார், அதுக்கு அப்புறம் தான் வேற என்ன Problem இருக்குதுன்னு பார்க்கணும்." என்று மருத்துவர், சற்று ஆறுதலையும் மேலும் பயத்தையும் ஏற்றினார். 

மருத்துவரிடம் பேசிவிட்டு, அம்மாவுக்கும் அறுதல் சொல்லிவிட்டு, மைதானத்தில் இருந்து வீட்டை நோக்கி ஓடினான் ராஜு. 

ராஜு, முதுகலை கணிப்பொறி பயின்று விட்டு சென்னைக்கு வேலை தேடி வந்தான்.ஒரு வருடம் கழித்து ஒரு சுமாரான வருமானத்தில் இப்போது தான் ஒரு வேளையில் அமர்ந்திருக்கிறான். உடன் தங்கி இருக்கும் ராஜுவின் மற்ற நண்பர்கள் ஏற்க்கனவே பல பன்னாட்டு மூன்றெழுத்து நிறுவனங்களில் பணியில் இருந்தனர். 

தன் தந்தையின் நிலையை நண்பர்களிடமும், அலுவலக மேலாளரிடமும் விளக்கி விட்டு, விடுப்பு எடுத்துக் கொண்டு தன் ஊர் கோவில்பட்டிக்கு பயணத்தை தொடங்கினான்.

12 மணி நேர பேருந்து பயணத்திற்கு பின்பு கோவில்பட்டி பேருந்து நிலையத்தை  அடைந்தான்.

பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே ஜோதி மருத்துவமனையும் இருந்ததால், சில நிமிடங்களில் மருத்துவ மனை வாசலை நோக்கி வந்த அவன் அம்மாவை சந்தித்து விட்டான்.

"என்னாச்சுமா? அப்பா எப்படி இருக்காரு?" என்று கேட்டான் ராஜு.

"அப்பா முழிச்சி ஒரு மணி நேரம் ஆகுது, வா பார்க்கலாம்" என்று காபி வாங்க போகாமல், கையில் கொண்டு வந்த FLASK கை எடுத்துக் கொண்டு, மகனையும் அழைத்துக் கொண்டு, ராஜுவின் தந்தை அனுமதிக்கப் பட்டிருந்த அறையை நோக்கிச் சென்றார் அம்மா.

அப்பாவுக்கு ஆறுதல் வார்த்தை கூறிவிட்டு, அவரின் உடல் குறித்த முழுத் தகவலையும் அறிந்து கொள்ள மருத்துவருக்காக காத்திருந்தான்.

அது தனியார் மருத்துவ மனை என்பதால் மருத்துவர் சரியான நேரத்திற்கு வந்து விட்டார். ராஜு தந்தையின் இதய துடிப்பையும், உடல் வெப்ப நிலையும் சரிபார்த்து விட்டு. நுண்துளை குழாய் வழியாக ஏறிக்கொண்டிருந்த "NS" என்று குறிக்கப் பட்டிருந்த புதிய  க்ளுகோஸ் பையை மாற்றிவிட்டு ராஜுவின் கேள்விகளுக்கு விடையளிக்க வந்தார்.

"உங்க அப்பாவுக்கு வலது பக்க KIDNEY ல INFECTION ஆகியிருக்கு. கொஞ்சம் SERIOUS தான். MONDAY மதுரை அம்மன் HOSPITAL க்கு கொண்டு போங்க. நான் LETTER தர்றேன். Dr.கேசவன் ன MEET பண்ணுங்க, இந்த TREATMENT ல அவர் SPECIALIST, கண்டிப்பா CURE ஆயிரும் பயப்பட வேண்டாம்" என்று நம்பிக்கை மொழிந்தார் அந்த மருத்துவர்.

"எவ்வளவு செலவாகும் Dr?" என்றான் ராஜு.

"இவ்வளவு தான் ஆகும்னு சரியா சொல்ல முடியாது, ஏன்னா அது  உங்க அப்பாவோட உடம்பு எப்படி TREATMENT க்கு COOPERATE பண்ணுதுன்னு வச்சிதான் சொல்ல முடியும். APPROXIMATE டா சொல்லனும்னா 2 லிருந்து 3 லட்ச ரூபாய் ஆகும்." என்று ராஜுவின் தலையில் கதிரேச மலையை எடுத்து வைத்தார் மருத்துவர். (கதிரேச மலை கோவில்பட்டியில் இருக்கும் ஒரே ஒரு மலை).

மாலை பணி முடிந்தது வீட்டுக்கு செல்லும் முன்பு, தான் முன்பு கூறிய கடிதத்தை ராஜுவிடம் ஒப்படைத்து விட்டு சென்றார் மருத்துவர். இரவு 08:00 மணிக்கு ராஜுவின் தாய் மாமா சேகர் மருத்துவ மனைக்கு வந்தார்.

அம்மா, அப்பாவின் அருகில் அமர்ந்திருக்க, தனியாக பேசவேண்டும் என்று,  மாமாவை மட்டும் மருத்துவ மனைக்கு வெளியே அழைத்தான் ராஜு.

மாமா சேகரின் கட்டளையை ஏற்று, அருகில் இருந்த கடையில் இருந்து இரண்டு தேநீர் எடுத்து வந்து ஆளுக்கு ஒன்றாக கொடுத்து விட்டு சேகரிடம் 10 ரூபாய் பெற்றுக்கொண்டு சென்றான் அந்த சிறுவன்.

"என்ன ராஜு" என்று தேநீரின் மேற் பரப்பில் தவழ்ந்து கொண்டிருந்த ஆவியை  ஊதிக் கொண்டே உரையாடலை துவங்கினார் மாமா சேகர்.

"அப்பாவுக்கு OPERATION பண்ண வேண்டி இருக்கும் போலருக்கு, 3 லட்ச ரூபா வர செலகும்னு DOCTOR சொல்றார், MONDAY மதுரைக்கு கொண்டு போகணும். பணத்துக்கு என்ன பண்ணணு யோசனையா இருக்கு" என்று தொடங்கினான் ராஜு.

"என்கிட்டே இப்போ BANK ல 25 ஆயிரம் இருக்கும், உன்கிட்ட எவ்வளவு இருக்கு" என்றார் மாமா.

"என்கிட்டே 10 ஆயிரம் தான் இருக்கு, அம்மாவோட நகையும் அந்த இடம் வாங்குறதுக்கு அடமானம் வச்சாச்சி. FRIENDS கிட்ட தான் கேட்கலாம்னு இருக்கேன்". என்று தன் திட்டத்தை மாமாவிடம் பகிர்ந்து கொண்டான் ராஜு.

"சரி, உன் FRIENDS கிட்ட கேட்டுப்பாரு, நானும் இங்க எதாவது கைமாத்த முடியுமானு பாக்குறேன்" என்றார் மாமா. மேலும் ராஜு தற்போது தான் வேளையில் சேர்ந்துள்ளதால் மேலும் விடுப்பு எதுவும் எடுக்க வேண்டாம் என்றும் தானே மதுரை மருத்துவ மனையில் அப்பாவை திங்கள் அன்று சேர்த்து விடுவதாக கூறினார்"

"உங்க BANK ACCOUNT NUMBER கொடுங்க மாமா, MONDAY உங்க ACCOUNT க்கு MONEY TRANSFER பண்றேன், அப்பாவ  HOSPITAL ல ADMIT பண்ணும் போது தேவைப்படும்" என்றான் ராஜு.

"NUMBER ஞாபகம் இல்ல ராஜு, வீட்ல போயி, எழுதி கொண்டு வர்றேன்" என்று கூறிவிட்டு, சில ஆறுதல் மொழிகளையும் வழங்கி விட்டுச் சென்றார் மாமா சேகர்.

திங்கள் காலை 06:00 மணிக்கு திருச்சி வரை  செல்லும் புகை வண்டியில் மாமாவுடன் சேர்ந்து மதுரைக்கு செல்லுமாறு அம்மாவிடம் கூறிவிட்டு. அம்மாவிடம் மாமா எழுதி கொடுத்திருந்த வங்கிக்கணக்கு எண்ணையும் வாங்கிக் கொண்டு ஞாயிறு இரவு பேருந்தில் ஏறினான் ராஜு.

மறுநாள் காலை தன் அறை நண்பர்களை சந்தித்து தன் தந்தையின் நிலையை விளக்கினான்.

வாங்கும் சம்பளத்தை என்ன செய்ய என்று தெரியாமல், அடுக்குமாடி திரை அரங்குகளிலும், தப்பாமல் இருதய நோயை கொண்டு வரும் உயர்தர உணவகங்களிலும் செலவு செய்யும் ராஜுவின் நம்பர்கள் ஐவர் ஆளுக்கு 50 ஆயிரம் கடனாக (வட்டியில்லாமல்) தருவதாக ஒப்புக் கொண்டார்கள்.

சிறிது நேரத்தில் 2.5 லட்ச ரூபாய் ராஜுவின் வங்கிக் கணக்கில் தஞ்சம் அடைந்தது. அதில் இரண்டு லட்ச ரூபாயை மாமா சேகர் எழுதிக் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு இடம் மாற்றினான் ராஜு.

எதிர்பார்த்த பணம் தக்க சமயத்தில் கிடைத்து ராஜுவிற்கு பெரும் பாரத்தை குறைத்தது.  அலுவலகம் செல்லும் முன்பு பணம் அனுப்பி விட்ட தகவலை மாமாவிடம் தெரிவித்து விட்டான். மாமா சேகர் மருத்துவ மனையில் இருப்பதாகவும், அவன் அப்பா சேர்க்கை முடிந்தவுடன் ருபாய் எடுத்துக் கொள்வதாக கூறினார்.

மதியம் 02:00 மணிக்கு மாமா சேகரிடம் இருந்து அழைப்பு வரவும் என்ன வென்று கேட்க, இன்னும் அனுப்பிய பணம் வந்து சேரவில்லை என்றார் மாமா.

"என்ன மாமா சொல்றீங்க? பணம் இன்னும் Credit ஆகலையா?" என்றான் ராஜு குழப்பத்துடன்.

"ஆமா ராஜு, இப்போதான் Check பண்ணேன், நான் குடுத்த ACCOUNT NUMBER க்கு தான அனுப்பி வச்ச?" என்று சந்தேகத்துடன் கேட்டார் மாமா.

மாமா எழுதிக் கொடுத்த காகிதம் தன்னுடைய மேல் சட்டையின் இடது மேல் பையில், இதயத்துக்கு அருகில் பத்திரமாக இருந்தது.மாமாவை சரி பார்க்கச் சொல்லிவிட்டு, ஒவ்வொரு எண்ணாக வாசிக்க ஆரம்பித்தான் ராஜு.

 0 0 0 1 0 1 5 2 4 9

"ராஜு, இப்போ கடைசியா சொன்னேல்ல, அங்க  9 இல்ல 3 வரணும்" என்று இடியை இருதயத்தில் இறக்கினார் மாமா.

"அய்யையோ!!, மாமா  இதுல நீங்க 9 னு எழுதி கொடுத்திருக்கீங்க" என்று பதறினான் ராஜு.

"BANK PASS BOOK க பாத்துதான் எழுதிக் கொடுத்தேன், இப்போ கூட அதப் பாத்துதான் சொல்றேன். 3 தான் உனக்கு 9 னு தெரிஞ்சிருக்கு போல ராஜு" என்றார் மாமா.

அதற்க்கு மேல் ராஜுவால் பேச முடியவில்லை. மாமாவை வங்கியில் விசாரிக்க சொல்லிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்தான்.

ராஜுவிடம் அவன் பணம் அனுப்பிய எண்ணை வங்கிக் கொண்டு வங்கியை தொடர்பு கொண்டார் மாமா. எந்த தகவலும் அவருக்கு கிடைக்க வில்லை. இந்த தகவலை அறிந்த ராஜு உடனே மீண்டும் ஊருக்கு புறப்பட்டான்.  (முதல் ஒன்பது இலக்கங்கள் மாமாவின் வங்கிக் கணக்கு எண்ணை ஒத்து இருந்ததால், கண்டிப்பாக பணம் அனுப்பிய அந்த எண் நிச்சயம் கோவில்பட்டியை சேர்ந்த எண்ணாக இருக்க வேண்டும் என்று நம்பினான் ராஜு). 

மறுநாள்  


காலை 10 மணிக்கு கோவில்பட்டியின் மாநில வங்கியில் நின்றான் ராஜு. நிலைமையை காசாளரிடம் விளக்கினான்.

"உங்க PROBLEM எனக்கு நல்லா புரியுது, ஆனா என்னால இதுக்கு எதுவுமே பண்ண முடியாது. பெரிய AMOUNT ட INTERNET ல TRANSFER பண்றீங்கன்னா, அதுக்கு முன்னால ஒரு சின்ன AMOUNT ட அனுப்பி அந்த ரூபா போய் சேந்துச்சானு தெரிஞ்சிக் கிட்டு, மீதி பணத்த அனுப்பனும். நீங்க விவரம் இல்லாம இப்படி பண்ணீட்டிங்க. இப்போ ஒண்ணுமே பண்ண முடியாது" என்று தன் பங்குக்கு பீதியை கிளப்பினார் காசாளர்.

"நீங்க வேணா MANAGER ர பாருங்க" என்று சும்மா உட்கார்ந்திருந்த வங்கியின் மேலாளருக்கு வேலை கொடுத்தார் காசாளர்.

சிறுது நேரம் காத்திருந்த பின்பு மேலாளர் அறையினுள் அனுமதிக்கப் பட்டான் ராஜு. காசாளரிடம் வந்த அதே பதில் மேலாளரிடமும் இருந்து வந்தது.

"AT LEAST, அந்த ACCOUNT NUMBER யாருதுனாச்சும் சொல்லுங்க SIR" என்று  மேலாளரிடம் கெஞ்சினான் ராஜு.

"அதுவும் உடனே சொல்ல முடியாது, சட்டப் படி அத சொல்லக் கூடாது" என்று நீதிபதியாகவும் மாரி சட்ட ஒழுங்கை காப்பாற்றினார் மேலாளர்.

"வேற வழியே இல்லையா சார்?" என்று ராஜு விடாமல் முயற்சிக்க.

"நீங்க கைப்பட ஒரு LETTER எழுதிக் கொடுங்க, உடனே ACTION எடுத்து ONE WEEK ல அந்த ACCOUNT OWNER DETAILS ச தருவோம்" என்றார் மேலாளர் அதிரடியாக.
                               
இதை கேட்டுக் கொண்டிருக்கும் போதே, ராஜுவின் உயர் ரத்த அழுத்தம் 180 mm Hg யை தாண்டிக் கொண்டிருந்தது. உடலின் உள் வெப்பம் சதம்மடித்தும் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு மணிநேரத்தில் அதிகபட்சமாக சுரக்கவேண்டிய 4 லிட்டர் வியர்வையை, ராஜுவின் வியர்வை சுரப்பி 15 நிமிடத்தில் சுரந்து வறண்டு கொண்டிருத்தது.

மூளை சிந்திக்கும் திறனை முழுவதும் துறந்திருந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், அனிச்சை செயலால் வாசலை நோக்கி நகர்த்தப் படுக்கொண்டிருந்தான் ராஜு.

வாய் முழுவதும் மூடப் பட்டிருந்ததால் வலிப்பில் உடல் உதறிக் கொண்டிருந்த அலைபேசியை இரும்புக் கரம் கொண்டு அனைத்து அடக்கினான் ராஜு.  மறு முனையில் அம்மா.

என்ன சொல்வது... சொல்லவா?  வேண்டாமா?

தெரியாமல் தவித்தான் ராஜு...

"ராஜு, எங்கப்பா இருக்க? அப்பாவுக்கு OPERATION DATE கொடுத்திருக்காங்க. அடுத்த புதன் கிழமை." என்றார் அம்மா.

"சரிம்மா, இப்போ ஊர்ல தான் இருக்கேன். அதுக்குள்ள பணத்துக்கு ஏற்ப்பாடு பண்ணிரலாம். அப்பா இப்போ எப்படி இருக்காரு ?" என்றான் ராஜு.

"அப்பா நல்லா இருக்காரு, நீ HOSPITAL வரும் போது வீட்ல இருந்துஅந்த கட்டப் பைய எடுத்துட்டு வந்துரு. அதுல கொஞ்சம் மாத்திக்க துணி வச்சிருந்தேன், புறப்படும் போது எடுக்க மறந்துட்டேன். இப்போ என்கிட்ட இருக்குற துணி ரெண்டு நாளைக்கு தான் வரும்" என்றார் அம்மா.

"சரிம்மா கொண்டு வந்துர்றேன்" என்று அம்மாவுக்கு பதில் அளித்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ராஜுவின் நண்பன் குமாரின் தொலைபேசி அழைப்பு வந்தது.

குமாரின் தந்தை அதே மாநில வங்கியின் திருநெல்வேலி கிளையில் மேலாளராக பணி புரிகிறார். இதை முற்றிலும் மறந்திருந்தான் ராஜு. நல்ல வேளையாக குமாரே அழைத்துவிட, அவனிடம் இந்த தகவலை கூறி அந்த வங்கிக் கணக்கின் உரிமையாளரின் விவரங்களை வாங்கி விட்டான் ராஜு.

அந்த வங்கிக் கணக்கின் விலாசம்,  59 சாலிகாபுரம் முதல் தெருவிற்கு ராஜுவை அழைத்துச் சென்றது. பழைய எண், புது எண், என அந்த கதவில் அடித்து அடித்து மூன்று எண்களும், இரண்டு பார்களும் இருந்தன. கோவில்பட்டியில் இப்போது எல்லா வீடுகளிலும் பார்கள் புகுந்து விட்டன.

இரண்டு முறை கதவை தட்ட, அரைக்கால் சட்டையுடன் ஒருவர் வெளியே வந்தார்.

"கண்ணன் இருக்காரா?" என்று ராஜு கேட்க, நான் தான் அது என்பது போல தலையை அசைத்து விட்டு என்ன வேண்டும் என்று கேட்க.

"உங்க கிட்ட தான் SIR பேசணும், நீங்க தப்பா எடுத்துக்கலேன்னா கொஞ்சம் வீட்டுக்கு உள்ள போயி பேசலாமா?" என்று ராஜு கேட்டான், அரை மனதுடன் ராஜுவை உள்ளே வரச்சொன்னார் கண்ணன்.

உள்ளே சென்று உட்கார்ந்தவுடன் தன்னை முதலில் அறிமுகம் செய்து கொண்டு, தான் வந்ததன் நோக்கத்தை விளக்கினான் ராஜு.

"தவறுதலா உங்க ACCOUNT க்கு ரூபா அனுப்பிட்டேன், நீங்க அத எடுத்து குடுத்தீங்கன்னா, எனனக்கு ரொம்ப உதவியா இருக்கும். அடுத்த வாரம் எங்கப்பாவுக்கு OPERATION. " என்று ராஜு முடிக்க.

கண்ணன் அமைதியாக இருந்தார்.

உள்ளிருந்து கண்ணனின் மனைவி தண்ணீர் கொண்டு வந்து ராஜுவிற்கு கொடுத்தார். தண்ணீர் குடித்து விட்டு வெற்று குவளையை நன்றியால் நிரப்பி  கண்ணன் மனைவியிடம் கொடுத்து விட்டு கண்ணனின் பதிலுக்காக காத்திருந்தான் ராஜு.

"உங்களுக்கு நான் என்ன சொல்றதுன்னு தெரியல ராஜு, என்ன புடிச்ச சனியன் இப்போ உங்களையும் பிடிச்சிக் கிச்சி" என்று ராஜுவை குழப்பினார் கண்ணன்.

"என்ன SIR சொல்றீங்க, எனக்கு புரியல" என்று ராஜு கேட்க...

"நான் சின்னதா ஒரு MATCH FACTORY நடத்திக் கிட்டு இருந்தேன், அவசரம்னு இங்க ஒருத்தர் கிட்ட கடனுக்கு பணம் வாங்கி இருந்தேன். ரொம்ப வருசமா  பணம் கட்டிக் கிட்டு இருக்கேன், இன்னனும் முடியல. MATCH FACTORY ய வித்துட்டேன். இப்போ பக்கத்து மில்ல்லுக்கு தான் வேலைக்கு போறேன்." என்று கண்ணன் கூறிக் கொண்டிருக்கும் போதே ராஜு இடை மறித்து.

"சரி SIR, அதுக்கும் இப்போ நான் சொல்றதுக்கும் என்ன சம்மந்தம்?" என்று கேட்டான்.

"என்னோட சம்பளம் BANK ACCOUNT ல போட்ருவாங்க அதனால என்னோட ATM CARD, CHECK BOOK, PASS BOOK" எல்லாமே அந்த படுபாவி பிடிங்கிட்டு போயிட்டான். என் வீட்டுக்காரி யோட வருமானத்துல தான் இப்போ குடும்பமே ஓடுது" என்று முடித்தார் கண்ணன்.

"உங்களுக்கு ரூபா குடுத்தவர் கிட்ட போய் பேசி பார்க்கலாமா SIR?" என்று ராஜு கேட்க

"என்னங்க நா இவ்வளவு சொல்றேன் நீங்க மறுபடியும் அவங்க கிட்ட பேசலாம்னா நான் என்ன சொல்ல?" என்று பணம் கொடுத்த காந்திய வாதிகளின்  தீவிர வாதத்தின் உயரத்தை விளக்கினார் கண்ணன்.

"DIRECT டா BANK ல போய் பேசி ரூபா எடுக்க எதாவது வழி இருக்கான்னு பாக்கலாமா SIR" என்று மீண்டும் ராஜூ முயற்சிக்க.

"அது முடியவே முடியாதுங்க, நீங்க உங்க ரூபாய மறந்துற வேண்டியதுதான்" என்று அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்தார் கண்ணன்.

"உங்களுக்கு பணம் கொடுத்தது யாருன்னு சொல்லுங்க SIR, நா வேணா பேசிப் பாக்குறேன்" என்று கேட்டான் ராஜு.

"வைரம் GROUPS" னு கேளுங்க, பெரிய அரசியல் புள்ளி அடுத்த M. L. A " என்று வில்லனை அறிமுகம் செய்தார் கண்ணன்.

"என் கூட நீங்களும் வர முடியுமா SIR?" என்று ராஜூ கண்ணனை கேட்க.

"நான் சொல்றத நீங்க நம்புரீங்கலான்னு எனக்கு தெரியல, சரி வர்றேன்" என ராஜுவுடன் சிங்கத்தை அதன் குகையில் சந்திக்க தானும் வருவதாக ஒப்புக் கொண்டார் கண்ணன்.

கண்ணனும், ராஜுவும் சாலிகாபுரம் 6 வது தெருவிலேயே பெரிய வீட்டிற்கு சென்றனர். வாசலில் ஆளுயரத்தில் ஒரு நாய், வீட்டுக்குள் ஆட்களாகவே பல திரிந்தன....

பழைய ஆடு, புதிய ஆட்டை உடன் அழைத்து வந்திருப்பதை அறிந்து கொண்டு இருவரும் குகைக்குள் அனுமதிக்கப் பட்டனர்.

ராஜு, நடந்ததை விளக்க விளக்க உள்ளுக்குள் குதூகலமானாலும் வெளியில் சலமில்லாமல் உட்கார்ந்திருந்தார் உயர்ந்த உள்ளம் படைத்த அந்த உலக உத்தமர்.

"தம்பி நீங்க சொல்றது எல்லாம் சரிதான், ஆனா இத விட்டா, இவர் கிட்ட இருந்து நான் காசு வாங்க முடியாது பாருங்க. நீங்க, இவர் கிட்ட இருந்து காசு வாங்கிக் கோங்க, அவர் எனக்கு குடக்க வேண்டியது கொடுத்ததுக்கு அப்புறம்." என்று அலட்சியமாக முடித்தார் வைரம்.

"SIR எங்க அப்பாவுக்கு OPERATION, ரொம்ப மோசமான நிலைமைல இருக்காரு"என்று ராஜு கெஞ்ச..

"அதுக்கு நான் என்ன பண்ண முடியும் தம்பி. கிளம்புங்க எனக்கு நிறைய வேல இருக்கு வசூலுக்கு போகணும்" என்று புறப்பட்டார் வைரம்.  புறப்படும் முன்பு

"தப்பா எடுத்துக்காதீங்க, இதுஎன்னோட தொழில்" என்று முடித்தார்.

அப்போதே கண்ணனும், ராஜுவும் வெளியே அனுப்பப் பட்டனர்.

கோவில்பட்டியின் கிழக்கு பகுதியில் வசிக்கும் ராஜுவுக்கு வைரம் பற்றி எதுவும் தெரிந்திருக்க வில்லை. அவர்கள் பற்றி தன் மாமா விடமும் மற்றவர்களிடமும் விசாரிக்க ஆரம்பித்தான். அதன்படி அவன் அறிந்து கொண்டது.

  • கோவில்பட்டியில் தீப்பெட்டி மூலப் பொருட்கள் விற்பனை செய்யும் சேட்டுகளின் தொடைர்பை, தன் துணையை சில மணிகள், பல நாட்கள்  சேட்டுகளுக்கு  துணையாக்கி பெற்றுக்கொண்டார் வைரம்.  
  • பின்பு, சேட்டுகளுக்கு வட்டி வசூல் செய்யும் முழு உரிமையையும் கிழக்கிந்திய கம்பெனிக்கு பின்பு பட்டயம் போட்டு பெற்றுக் கொண்டவரும் இவரே.       
  • இவரின் வட்டிகணக்கில் பிறக்கும் குட்டிகளை எளிதாக TASMANIAN DEVIL  குட்டிகளை மிஞ்சி விடும். 
  • பணம் பெருக பெருக அரசியலிலும் இவர் தவிர்க்க முடியாதவர் ஆகிப்போனார்.  
  • மூன்று மகன்கள், முதலாமானவர் இராபர்ட் கிளைவ் விட்டுப் போன பணியை தொடர சூளுரைத்தவர். இரண்டமானவர் தன் குடும்பத்திற்கு வரும் வெளிநாட்டுச் சதிகளை சமாளிக்க சட்டம் படித்தவர். மூன்றமானவர் ராஜாராம் மோகன் ராய்க்குப்  பிறகு பெண் குலத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர்.       
  • இவர்களிடம் இருந்து பணம் திரும்பப் பெறுவது. சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்திய கறுப்புப் பணத்தை திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வருவதை விட கடினமானது.  

நேரம் இப்போதே இரவை எட்டி விட்டதால். இனிமேல் மருத்துவ மனைக்கு செல்ல முடியாது. அதனால் அம்மாவை தொடர்பு கொண்டு நாளை வருவதாக தெரிவித்து விட்டான் ராஜு. 

அடுத்து என்ன செய்யலாம் சென்று யோசிக்கும்போது, சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய நிலம் நினைவுக்கு வந்தது. வெகு நாட்களாக அந்த இடத்துக்கு அருகில் தீப்பெட்டித் தொழில் நடத்தி வரும் சாத்தூரை சேர்ந்த ஒருவரின் நினைவு வந்தது. 

அவரை தொடர்பு கொண்டு பேசினான் ராஜு, மறுநாள் மதியம் நிலப் பத்திரத்தை எடுத்துக் கொண்டு  ராஜுவை சாத்தூர்க்கு வரச்சொன்னார் அவர்.

அம்மாவிடம் நிலம்  பற்றி இப்போது எதுவும் சொல்லவேண்டாம் என்று தீர்மானித்தான். அதற்க்கேற்ப்ப நிலமும் அவன் பெயரில் இருந்ததால், அதற்க்கான தேவையும் குறைவாக இருந்தது.

அடுத்த நாள் மதியம், முன்பு அம்மா எடுத்துக் கொண்டு வரச்சொன்ன கட்டைப் பையை மறக்காமல் எடுத்துக்கொண்டு  அதனுடன் நிலப் பத்திரத்தின் நகலை எடுத்துக் கொண்டு சாத்தூருக்கு சென்றான். சாத்தூரில் வேலையை முடித்து விட்டு அப்படியே மதுரை மருத்துவமனைக்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்தான் ராஜு.

அந்த தீப்பெட்டி தொழிற்சாலை அதிபர் சாத்தூரிலும் எதோ தொழில் செய்து கொண்டிருந்தார். பேருந்து நிலையம் அருகில் இருந்த அவரின் அலுவலகம் சென்ற போது அவர் அங்கு இல்லை. சிறிது நேரம் காத்திருந்த பின்பு தொலை பேசியில் அழைத்து ராஜுவை வேறொரு இடத்திற்கு வரச் சொன்னார் தொழில் அதிபர். சாத்தூர் குறித்து அதிகமாக தெரியாததால் எதாவது இடக்குறிப்பு கூறுமாறு கேட்டான். "சவக் கிடங்கு குடவுன்" னு கேட்டா தெரியும் என்று அவர் சொல்ல தேடிக் கண்டுபிடித்து அங்கு சென்றான் ராஜு. அவர் சொன்ன இடத்திற்கு வெகு தொலைவில் சவக் கிடங்கு இருந்தது.

இரண்டாயிரம் சதுர அடி அளவுள்ள இடத்தை 5 லட்ச ரூபாய்க்கு கடைசியாக பேசி முடித்தார் அதிபர். அந்த இடத்தின் மதிப்பு இதை விட மேலும் அதிகம் என்பதால், அப்போது சம்மதம் எதுவும் தெரிவிக்காமல் விளக்கெண்ணை தடவிய பதிலை செல்லி விட்டு புறப்பட்டான் ராஜு.  அன்று மாலை வழக்கத்திற்கு மாறாக சற்று  முன்னதாகவே அந்த இடம் இருள் சூழந்து விட்டது.  பேச்சுவார்த்தை சுவாரசியம் கூட்டாததால், மனக் குதிரையை தட்டி விட்டு அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனையுடன்  நடக்க ஆரம்பித்தான் ராஜு.

சற்று தூரத்தில் ஜீப் ஒன்று, யாரோ ஒருவனை இறக்கி விட்டு விட்டு அப்படியே சென்று விட்டது. பிணவறையை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான் அந்த ஒருவன். பிணவறையை நெருங்கியதும் அவன் முகம் சற்று மங்கலாக தெரிந்தது. இவனை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று ராஜுவின் எண்ணத்தில் மின்னல் வெட்டியது.


இன்று 


மாமாவின் வீட்டில் அமர்ந்திருந்தான் ராஜு.

"என்ன ராஜு, காலைலயே வந்துட்ட, எதாவது அவசரமா?"  என்று மாமா விசாரிக்க. அவர் என்ன நினைத்து கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டு.

"அவசரம் எதுவும் இல்ல மாமா, அப்பா நல்லாத்தான் இருக்கார். ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான்" என்றான் ராஜு.

"சொல்லு ராஜு" என்று கேட்ட மாமாவுக்கு, தன்னுடைய அலைபேசியில் எதோ ஒரு படக் காட்சியை ஓடச் செய்து கொடுத்தான். படக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த மாமா திடீரென பதட்டமானர்.

"ராஜு, இது?" என்று மாமா கேட்க,

"சந்தேகம் இல்லாம அவன் தான் மாமா" என்று உறுதி படுத்தினான் ராஜு.

"இது எப்படி உனக்கு கிடைச்சது? இத வச்சிக் கிட்டு என்ன பண்ணப் போற?" என்று கேட்ட மாமாவுக்கு

"நேத்து நான் தான் இத எடுத்தேன். இத வச்சிதான் அவங்களுக்கு தண்ணி காட்டப் போறேன்" என்றான் ராஜு.

"வேண்டாம் ராஜு, இது பெரிய பிரச்சனை யாயிடும்" என்று அறிவுரை வழங்கிய மாமாவுக்கு

"விட்டத பிடிக்க இதவிட்டா வேற வழியில்ல மாமா" என்று எதற்கும் துணிந்தான் ராஜு                   

"நேத்து நம்ம நிலத்த விக்கலாம்னு சாத்தூர் வரைக்கும் போயிருந்தேன், அங்க இருந்த ஒரு சவக் கிடங்கில் தான் இவன் இருந்தான். வைரத் தோட மூனாவது பையன்." என்று ராஜு நடந்ததை மாமாவுக்கு விளக்க.

"இத வச்சிக்கி கிட்டு அவங்க கிட்ட பணம் கேட்கப் போறியா? உன்னோட Plan அதுதான்னா. அது ரொம்ப தப்பான Plan ராஜு"

"நிச்சயமா இல்ல மாமா, இவங்க கிட்ட எல்லாம் நாம நேரடியா மோதக் கூடாது. என்னோட Plan வேற."

அந்த நான்கு எழுத்து எதிர் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பள்ளி நண்பனிடம் ஏதோ பேசி அலைபேசியை ஒப்படைத்தான் ராஜு.

"கவலப் படாத ராஜு, உங்க அப்பா OPERATION ன கட்சி பாத்துக்கும்" என்றான் நண்பன்.

"இல்ல, அதெல்லாம் வேண்டாம். எனக்கு கைல காசக் குடுத்துரு, நான் இதுல INVOLVE ஆகி இருக்கிறது வெளிய தெரியக் கூடாது" என்று கட்டளையிட்டான் ராஜு.

"இந்த ஒரு VIDEO போதும், வைரத்த நிரந்தரமா வீட்லையும், அவன் பையன மாமியார் வீட்லயும் உட்கார வச்சிரலாம். உன்னோட பேரு வெளிய வராம நான் பாத்துக்குறேன்" என்று உறுதி அளித்தான் நண்பன்.

கட்சி மேலிடத்தில் கணிசமான பணத்தை வாங்கிக் கொடுத்தான் எதிரிக் கட்சி நண்பன்.        

மாலை பணத்துடன், கட்டைப் பையை எடுத்துக் கொண்டு தந்தையை பார்க்கக் புறப்பட்டான் ராஜு.

வைரத்தின் வார்த்தைகள் எதிரொலித்தன "தப்பா எடுத்துக்காதீங்க, இதுஎன்னோட தொழில்".

Sunday, November 11, 2012

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

       
1997 என் வாழ்வில் மறக்க முடியாத ஆண்டு, நம் சுதந்திர இந்தியாவின் பொன் விழா ஆண்டும் கூட. என்னை எப்படியாவது ஒரு பொறியாளராக மாற்றிட தன்னால் முடிந்த அனைத்து யுத்திகளையும் என் தந்தை முழு முயற்சியுடன் செய்து விட்டு என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.

காலை 
     07:00 முதல் 08:00 வரை கணக்கு 
     08:00 முதல் 09:00 வரை இயற்பியல் 

என கூடுதல் பயிற்சி வகுப்புகளை முடித்து விட்டு வீட்டுக்கு வந்து காலை உணவு சாப்பிட்டு முடித்து 09:20 மணிக்கு பள்ளிக்கு செல்வேன். 

மாலை 
   06:00 முதல் 07:00 மணி வரை வேதியல்  

என்னுடைய கணக்கு மற்றும் இயற்பியல் பயிற்சி வகுப்பு பேராசிரியர்கள் என் தந்தை பணி புரியும் அதே கல்லூரியில் தான் பணி புரிந்தார்கள் என்பதால். அன்றைய வகுப்பில் நான் புரிந்த சாகசங்களை அன்றைய தினமே என் தந்தையிடம் சுட சுட தெரிவித்து விடுவார்கள். அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதை நான் விளக்க தேவை இல்லை (புரியாதவர்கள் இங்கே செல்லவும் ).

பள்ளியில் எனக்கு வகுப்பு எடுக்கும் அதே ஆசிரியரிடம் தான் வேதியல் கூடுதல் வகுப்பிற்கும் சென்றேன். வேதியல் ஆசிரியர் மிகவும் நல்லவர். மாதா மாதம் அவருக்கு கட்டவேண்டிய கப்பம் சரியாக கட்டிவிட்டால் வேறு எதையும் கண்டு கொள்ள மாட்டார். வருட இறுதில் செய்முறை தேர்வில் 50 மதிப்பெண் கண்டிப்பாக போட்டுவிடுவார். 

அங்கிலம் கற்றுக் கொடுத்த ஆசிரியர் இன்னும் ஒரு படி மேலே போய், தன்னிடம் கூடுதல் பயிற்சி வகுப்பு படிக்காத மாணவர்களுக்கு Internal மதிப்பெண் "20" போடப் போவது இல்லை என்றே பகிரங்கமாக அறிவித்து விட்டார். கடைசி ஒரு மாதம் அவருக்கும் கப்பம் கட்டினேன்.

கூடுதல் பயிற்சி வகுப்புக்கு போகாதது "தமிழ்" பாடத்துக்கு மட்டும் தான். பாவம் தமிழ் ஆசிரியர் கூடுதல் வருமானத்திற்கு வழியில்லமல் போய் விட்டது.     

கணிதம் மற்றும் இயற்பியல் தொல்லைகள் முழு ஆண்டுத் தேர்வு முடிந்த பின்பும் ஒரு மாதம் தொடர்ந்தன. பொறியியல் படிப்பிற்க்கான நுழைவுத் தேர்வு முடிந்தவுடன் அதோடு இந்த தொல்லைகளும் முடிவுக்கு வந்தன. சரியாக ஒரு மாதம் என் மனம் போன போக்கில் மகிழ்ச்சியாக இருந்தேன். 

அன்று தேர்வு முடிவுகள் வெளியாயின. 1100 மதிப்பெண்களுக்கு மேல் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால்  என் பெற்றோர்கள் செய்திதாளில் என்னுடைய தேர்வு எண்னை தேடவில்லை. மதிப்பெண் பட்டியலை பெறுவதற்காக மறுநாள் பள்ளிக்கு சென்று காத்திருந்தேன். காலை பத்து மணியளவில் பள்ளி அலுவலகத்திற்கு முன்பு உறங்கிக் கொண்டிருந்த மரப் பலகையில் மதிப்பெண் பட்டியல் ஒட்டப்பட்டது. ஆர்வமுடன் சென்று பார்த்தபோது, என் பெயரருகே  "சாத்தான் எண்" தலை கீழாக உறங்கிக் கொண்டிருந்தது.

அடுத்த அரை மணியில் மதிப்பெண் பட்டியல் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஏதாவது அச்சுப் பிழையாக இருக்கலாம், நிச்சயம் மதிப்பெண் பட்டியலில் வேறு மதிப்பெண் இருக்கும் என நம்பி, நடுங்கி, வரிசையில் நின்றேன். வேறு மதிப்பெண் வேண்டு மென்றால் வேறொருவருடைய மதிப்பெண் பட்டியலைத்தான் தர வேண்டும் என்பதைப்போல் அதே சாத்தான் மீண்டும் மிரட்டியது.

வேறு வழியில்லாமல் மதிப்பெண் பட்டியலை வங்கிக் கொண்டு என்னுடைய வீட்டுக்கே சென்றேன். என் புறநானுற்றுத் தாய், நான் புற முதுகு காட்டித் திரும்பியுள்ளேன் என்பதை அறியாமல் என்னை வரவேற்க ஆர்வமுடன் காத்திருந்தார். எத்தனை மதிப்பெண் வாங்கியுள்ளேன் என்ற கேள்வி அம்மாவிடம் இருந்து வரும் முன்பு, நானே முந்திக் கொண்டு "எதிர் பார்த்ததை விட கொஞ்சம் குறைஞ்சி போச்சு" என்றேன்.

"குறைஞ்சி" அல்ல சுத்தமாக "தேஞ்சே" போச்சு என்பதை பட்டியலை பார்த்து புரிந்து கொண்டார் என் அம்மா. அனைவரும் காத்திருந்தோம் என் தந்தையின் வரவுக்காக. சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் நுழைந்த என் தந்தை, என் அம்மா முகத்தில் "பயக்" கலையையும், என் முகத்தில் "சவக்" கலையையும் கண்டு  நான் அள்ளிக் கொண்டுவந்த மதிப்பெண் என்ன என்பதை புரிந்து கொண்டார்.

அடுத்த ஒரு மணி நேரம் எங்கள் வீட்டில் "பேசும் படம்" ஓடியது.

எதுவும் சொல்லாமல் எழுந்து வெளியே சென்று விட்டார் அப்பா. திரும்பி வந்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொண்டு அப்போதே பெட்டியை கட்டி, சித்தி ஊருக்கு என்னை அனுப்பி விட்டார் அம்மா.

ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு நான் திரும்பி வந்த போதும் நிலைமையில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. அம்மா பலமுறை என்னுடைய விடைத்தாள் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொண்டும் அப்பா தீவிரமாக மறுத்து விட்டார். அதற்க்கு அவர் கூறிய காரணம். "இவன் கண்டிப்பா fail தான் ஆகிருப்பன்,. பாவம்னு Pass Mark போட்டிருப்பாங்க. மறுபடியும் apply பண்றது waste".

சில நாட்கள் சென்றது, என் நண்பர்கள் அனைவரும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். நான்  மட்டும் வீட்டில். கல்லூரி துவங்கி 20 நாட்கள் சென்ற பிறகு ஒரு நாள் என்னை கல்லூரிக்கு வரச் சொன்னார் அப்பா ( அவர் பணிபுரியும் அதே கலை கல்லூரிக்கு). "சிபாரிசு" எந்த மொழியில் இருந்து வந்திருந்தாலும் அது அவருக்கு பிடிக்காத வார்த்தை தான். என்ன செய்ய நான் மகனாக பிறந்த பிறகு அவருக்கு வேறு வழியில்லாமல் போனது.

இயற்பியலில் நான் அதிக ( மற்ற பாடங்களை ஒப்பிடும் போது ) மதிப்பெண் பெற்றிருந்ததால் அதே பிரிவில் இளம்கலை முதல் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டேன் (குருவியின் தலையில் பனம் பழமல்ல, பலாப்பழம்).

நிறைய அறிவுரைகளும், கொஞ்சம் (அக்கறையுடன்) மிரட்டல்களும் துறை தலைவரிடம் இருந்துவந்தது (இயற்பியல் துறை தலைவர் என் தந்தையின் நலம் விரும்பி).

ஓரளவு சுமாரான படிப்போடு, சிக்கல் ஏதும் இல்லாமல் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று  முதல் பருவத் தேர்வில் தேறி விட்டதால் கல்லூரிக்கு செல்ல "TVS-CHAMP" (அக்காவுக்காக வாங்கியது) கொடுத்தார் அப்பா, அதோடு   சில அறிவுரைகளும் வழங்கினார்.

இயற்பியல் பிரிவில், கணக்கும் ஒரு பாடமாக சேர்க்கப் பட்டிருந்தது. அதே போல் வேதியல் பயிலும் மாணவர்களுக்கும் கூடுதல் பாடமாக கணிதம் இருந்தது. அதனால் அந்த கணக்கு பாடத்திற்கு மட்டும் இயற்பியல் மற்றும் வேதியல் பிரிவு மாணவர்கள் சேர்ந்து ஒரே வகுப்பில் அமர்வோம். அவ்வாறு வந்தவர்களில் எனக்கு நண்பனானவர் தான் "சங்கர்" (பெயர் மாற்றப் படவில்லை).

சங்கர் "ஸ்ரீனிவாச ராமானுஜம்" அவர்களின் பக்கத்து வீட்டுப் பையன் போலும். கணக்கில் புலி. கோவில்பட்டிக்கும் ஈரோடுக்கும் (ராமானுஜம் அவர்கள் பிறந்த ஊர்) தொலைவு அதிகம் என்பதால் எனக்கு கணக்கு "கணக்க" ஆரம்பித்தது. எவ்வளவு முயன்றாலும் 75 க்கு 45 க்கு மேல் வாங்கியதில்லை. 

"முதல்வனாய் இரு அல்லது முதல்வனோடு இரு" என்று பள்ளியில் படித்ததாக நினைவு. அதன்படி இருந்து, கணக்கு பாடங்களில் சில பல முறைகள் சங்கரிடம் தெளிவு பெற்றுள்ளேன்.          

நாட்கள் இவ்வாறு செல்ல, என்னைப் பற்றி என் தந்தைக்கு முன்பு இருந்த கருத்து மெல்ல மெல்ல நல்ல விதமாக மாறிக் கொண்டு வந்தது (எப்படி என்று கேட்டல் தெரியாது, ஒரு உள்ளுணர்வுதான்) .          

இந்த சமயத்தில் வந்தது கல்லூரி ஆண்டு விழா...

எப்போதும் கல்லூரி ஆண்டு விழா வெள்ளிக் கிழமை மாலை தான் நடக்கும். அதேபோல் 1997 ம் ஆண்டும் ஒரு வெள்ளிக் கிழமை நடைபெற இருந்தது. மாணவர்கள் எவரும் அன்றைய தினம் வகுப்புகளுக்கு வர வேண்டியதில்லை. மாலை 06:00 மணிக்கு விழாவுக்கு நேராக வந்தால் போதுமானது.

என் தந்தை வழக்கம் போல காலையில் சென்றுவிட மாலைக்காக நான் காத்திருந்தேன். நானும் எனது அக்காவும் அன்றைய தினம் வீட்டில் இருந்ததால், மதிய உணவும் சேர்த்து கலையில் சமைக்கப் படவில்லை அதனால் என் தந்தைக்கு மதிய உணவு நான் எடுத்துச் சென்றேன். எங்கள் வீட்டில் இருந்து கல்லூரி கிட்டத்தட்ட 7 k.m. "TVS CHAMP" பை எடுத்துக் கொண்டு, உணவுப் பையை மாட்டிக் கொண்டு புறப்பட்டேன். 

கல்லூரிக்கு செல்லும் வழியில் இருக்கும் ஒரு  பேருந்து நிறுத்தம் "அரச மரம் நிறுத்தம்", அங்கு பேருந்துக்காக காத்திருந்தார் "சங்கர்".  நண்பன் காத்திருப்பது தாளாமல் அவரையும் உடன் அழைத்துச் சென்றேன். கல்லூரியில் சங்கரை இறக்கி விட்டு விட்டு, மதிய உணவை என் தந்தையிடம் கொடுத்து விட்டு திரும்பி கல்லூரியை விட்டு வெளியே செல்லும் வழியில் மீண்டும் சங்கர். என்ன என்று விசாரிக்க, கல்லூரியில் இந்த நேரம் மற்ற நண்பர்கள் யாரும் இல்லை அதனால் தன்னை மீண்டும் அதே "அசர மரம்" நிறுத்தத்தில் விட்டு விடும் படி கேட்டுக் கொண்டார். சரி என்று சங்கரும் நானும் அரசமரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தோம். 

புறப்பட்ட சிறிது நேரத்தில் சங்கர் தான் அந்த வண்டியை ஓட்ட வேண்டும் என்று வற்புறுத்தியதாலும்,தனக்கு நன்றாக வாகனத்தை செலுத்த தெரியும் என்று உறுதியாக கூறியதாலும், "TVS-CHAMP" சங்கரின் வசம் கை மாறியது. முதலில் தடு மாறினாலும் பின்பு சுதாரித்துக் கொண்டு கவனமாக மிதமான வேகத்தில் வாகனத்தை செலுத்திய சங்கர்,தேசிய நெடுஞ்சாலையை கடந்தவுடன் வண்டியின் வேகத்தை உச்சத்துக்கு உயர்த்தினார்.சில நொடிகளில் வாகனம் கட்டுப்பாடு இழந்து தடுமாறத் துவங்கியது. பதற்றத்தில் செய்வதறியாது இருந்த சங்கர், சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது வண்டியை மோத விட்டு விட்டார். அடிபட்டவர் அங்கேயே விழ, வண்டி சரிந்த நிலையில் சாலையில் உரசிக் கொண்டே சிறிது தூரம் சென்று நின்றது. அதையும் தாண்டி நானும் சங்கரும் விழுந்தோம்.

வண்டிக்கோ, எங்கள் இருவருக்கோ எந்த பெரிய பாதிப்பும் இல்லை. அங்கங்கே சிறிய சிராய்ப்பு காயங்கள் தான். அந்தத் தருணத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அப்போது எனக்கு தெரிய வில்லை. அடிபட்டவரை அங்கேயே விட்டு விட்டு ஓடிவிடலாம் என்ற முடிவை எடுத்தோம்.          

 பின்பு வீட்டுக்கு சென்ற நான், யாரிடமும் இந்த விபத்து குறித்து எதுவும் சொல்லாமல், வண்டியை வீட்டில் வைத்து விட்டு பேருந்தில் கல்லூரிக்கு சென்று விட்டேன். ஆண்டு விழாவில் மனம் செல்லவில்லை.   மணி சரியாக இரவு 08:10 இருக்கும், என் தந்தை வந்தார். என்னை தேடி காவல் துறையினர் வந்திருப்பதாக கூறினார். என்ன நடந்தது என்று என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார். 

மறுநாள் காலையில், காவல் நிலையம் சென்று விசாரித்து விட்டு வந்த என் தந்தை எங்களிடம் புது கதையை கூறினார்.

 "வண்டியை ஒட்டியது நான், பின்னால் உட்கார்ந்து வந்தது சங்கர். சங்கர் காயம் பட்டவர் அருகில் இருந்துள்ளார். காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த காவலர்களிடம், இந்த விபத்து குறித்த மேலே சொன்ன  அனைத்து தகவல்களையும், என்னுடைய முகவரி தெரியாததால் என்னுடைய தந்தை குறித்தும், கல்லூரி குறித்தும் அனைத்து தகவலையும் கூறியது சங்கர்". இதனால் விபத்தின் முழுப் புகாரும் என் மேல் அதனால் என்னை (கைது செய்து) அழைத்துச் சென்று விசாரிக்கவே நேற்று இரவு காவல் துறையினர் நேற்று கல்லூரிக்கு வந்துள்ளனர்.   

"குறிப்பு: TVS-CHAMP என்னிடம் கொடுத்த போது என் அப்பா கூறிய அறிவுரைகளில் முக்கியமான ஒன்று யாருக்கும் வண்டியை இரவல் கொடுக்காதே, நீயும் யாரிடமும் இரவல் வாங்காதே". 

அதன் பின்பு நடந்த சம்பவங்கள்... 

காவல் நிலையம்
       அன்று மாலை நான், எனது தந்தை, மாமா, ஒரு அரசியல் பிரமுகர்  நால்வரும்  காவல் நிலையம் சென்று காவலர்களை கவனிக்க வேண்டி இருந்தது.  ஆயிரங்களை வாங்கிக் கொண்டு சம்பிரதாயங்களை முடித்து எங்களை வீட்டுக்கு அனுப்பினார். 

என்னிடம் ஓட்டுனர் உரிமம் கிடையாது...

        சிக்கல்கள் இதோடு முடியவில்லை. மீண்டும் மண்டல போக்குவரத்து அதிகாரியை சந்திக்க வேண்டி வந்தது. அவரும் ஆயிரங்களை வாங்கிக் கொண்டு சில அறிவுரைகளை வழங்கி,முக்கியமான காகிதங்களில் கையெழுத்திட்டு என்னை திரும்ப அனுப்பினார்.

இந்த விபத்து சம்பவம் நடந்ததி லிருந்து சங்கர் என்னிடம் பேசுவது கிடையாது. காவல் நிலையம் செல்லவும், போக்குவரத்து அதிகாரியை சந்திக்கவும் நான் இரண்டு நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டி வந்தது. அப்போது கூட என்ன நடந்தது என்று விசாரிக்ககூட சங்கருக்கு மனமில்லை.

அடிபட்டவருக்கு என்ன ஆயிற்று?

          இதற்கிடையில் அடிபடவருக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க நானும் என் தந்தையும் சென்றிருந்தோம். அவருக்கு ஏற்க்கனவே ஒரு விபத்தில் கால் முறிந்து, இரண்டு மாதங்கள் மருத்துவ விடுப்பு முடிந்து ஓரவுளவு குணமாகி அன்று தான் பணிக்கு திரும்பியுள்ளார்.சங்கரின் தயவாள் மீண்டும் மருத்துவமனைக்கே திரும்பி விட்டார். மீண்டும் முறிந்தது அதே கால் எழும்பு.

வாகன காப்பீடு அப்போது தான் முடிந்துள்ளது

  என்னுடைய வாகனத்திர்க்கான காப்பீடு சமீபத்தில்தான் நிறைவடைந்துள்ளது. இதை நாங்கள் யாரும் கவனிக்க வில்லை. அதனால் விபத்தில் அடிபட்டவருக்கு இழப்பீடு என் அப்பாவின் பணத்தில் தான் கொடுக்க வேண்டும்.     

இந்த பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் என் தந்தை தத்தளிக்க ஆரம்பித்து விட்டார். அந்த கோபம் என்மேல் திரும்பியது....

பணத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, நான் அதி புத்திசாலியாக  யோசித்து சங்கரிடம் சென்று பேசினேன். இதுவரை இவ்வளவு செலவு ஆகியுள்ளது. எனக்கு அத்தனை பணமும் வேண்டாம் அதில் பாதி கொடுத்தால் கூட போதும், அதனால் உன் தந்தையிடம் இது பற்றி பேசுவாயா? என்று கேட்டதற்கு சற்றும் யோசிக்காமல் "முடியாது" என்று கூறி விட்டு உடனே அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டார் சங்கர்.
இந்த செய்தி என் அம்மாவின் வாயிலாக என் அப்பாவை அடைய, என் அப்பா நேரடியாக சங்கரின் அப்பாவை சந்திக்க சென்று விட்டார். சங்கரின் அப்பாவும் சரியான பதில் எதுவும் கூறவில்லை ஆனால் சங்கரின் மாமா பாதி பணம் தருவதாக கூறினார்.   

அடுத்து நீதி மன்றம்.

              இதுதான் கடைசி என்று நீதி மன்றத்தையும் பார்த்து விட்டேன். என்னை  நீதி மன்றத்துக்கு வெளியே காத்திருக்கச் சொல்லிவிட்டு, என்னுடன் வந்த  காவலர் வேறொரு வழக்கை பார்க்கச் சென்று விட்டார். அதற்கிடையில் மூன்று முறை என் பெயர் அழைக்கப் பட்டுள்ளது. எனக்கு அவர்கள் அழைத்தது கேட்கவில்லை. சிறிது நேரம் கழித்து வந்த காவலர், "உன்னை அழைத்தார்களா" என்று கேட்க, தெரியாது என்றேன், பதறிக்கொண்டு உள்ளே சென்ற காவலர், அங்கே இருந்த நீதிமன்ற பணியாளரிடம் எதோ சொல்லி மீண்டும் என்னை அழைத்தனர். நாங்கள் உள்ளே சென்ற உடன். நீதிபதி  காவலரிடம் இவ்வாறு கேட்டார். "இவன இங்க திரிய விட்டிட்டு நீ எங்கையா ஊர் மேய போயிருந்த"? (நீதிபதியின் உயர்ந்த உள்ளமும், சொல்வன்மையும் என்னை மிகவும் கவர்ந்தது, இதனால் நீதிபதிகளின் மேல் வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் மேலும் பல மடங்காக கூடியது )   

அதற்க்கு எதோ ஒரு பதிலை சொல்லிக் கொண்டிருந்தார் காவலர். அதை சற்றும் கவனிக்காமல் குனிந்து கொண்டார் நீதிபதி.

அடுத்து, விபத்தும் அதன் பின்னணியும் வாசிக்கப்பட்டது. அது எனக்கு,  தமிழ் மிகவும் நுணுக்கமான மொழி என்பதை  உணர்த்தியது. "அதிவேகமாக, கவனக் குறைவாக, ஒலிப்பானை ஒலிக்காமல்.." என்று  எதுகை மோனைகளுடன் சம்பவங்கள் எனக்கு எதிராக புனையப்பட்டிருந்தது.

அனைத்திற்கும் "ஆம்" என்ற பதிலை கூறிவிட்டு, நான் ஒப்புக் கொண்ட தண்டனைக்கு அபராதம் கட்டிவிட்டு, நீதி மன்ற பணியாளர்களுக்கும் அன்பளிப்பு வழங்கிவிட்டு வீட்டுக்கு வந்தேன். 


நான் செய்த தவறுகள்

1. ஓட்டுனர் உரிமம் மற்றும் காப்பீடு இல்லாமல் வாகனத்தை ஓட்டியது

2. விபத்து நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது.

3. அனைத்திற்க்கும் மேலாக தந்தையின் சொல்லை மீறியது.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 
        இடுக்கண் களைவதாம் நட்பு. (788) 

Tuesday, October 23, 2012

ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan Horse) - 2



காவல் நிலையத்தின் தொலைபேசி மணி ஒலித்தது, எடுத்து பேசிய  முருகானந்தத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மீண்டும் திருட்டு..

பெருங்குடி தேவாலய சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் வீட்டில் கயவர்களின் படையெடுப்பு.

தினேஷ் கவலையுடன் இருக்கையில் அமர்த்திருந்தார், அருகில் மோனிகாவும் வாடிய முகத்துடன் காத்திருந்தார்,காவல்துறையின் வரவுக்காக.

சரவணனும், திருப்பதியும் வீட்டின்  உள்ளே வந்தார்கள். நடுவீட்டின் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி எட்டை நெருங்க 5 நிமிடத்திற்காக காத்துக் கொண்டிருந்தது.  நடு வீட்டில் தள்ளுவண்டியுடன் இணைக்கப்பட்ட பெட்டி தனியாக நின்றது. தினேஷ் மற்றும் மோனிகா இருவர் முகத்திலும் கவலையுடன் சேர்ந்த களைப்பும் காணப்பட்டது.

"Mr தினேஷ், நான் இன்ஸ்பெக்டர்" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார் சரவணன்.

இப்போதான் ஊர்ல இருந்து வர்றீங்களா தினேஷ்?என்று தினேஷின் பதிலுக்காக காத்திராமல் தானே உரையாடலை தொடர்ந்தார். 

       ஆமா சார், Close Relative இறந்துட்டாங்கன்னு நேத்து Phone வந்தது, அதான் அவசரமா ஊருக்கு போயிருந்தோம். இப்போ தான் வந்தோம். வந்து பாத்தா...

என்ன வெல்லாம் காணாம போச்சு?

      அடமானம் வைக்கிறதுக்காக 50 பவுன் நகை வீட்ல வச்சிருந்தேன்.  இன்னைக்கு புது வீடு வாங்குறதுக்கு அட்வான்ஸ் கொடுக்கணும், அதுக்காகதான் நகையை வீட்ல வச்சிருந்தேன். நேத்து  ஊர்ல இருந்து Phone வந்த உடனே கிளம்பிட்டோம்.

நகைய எங்க வச்சிருந்தீங்க?

    Water Proof Packet ல போட்டு Toilet Tank ல வச்சிருந்தோம். வீட்டுக்குள்ள வந்த உடனே Check பண்ணோம், காணோம் Sir.

நிலைமையை விளக்கும் போதே துக்கம் குரல் வலையை அடைத்ததால்  வார்த்தைகள் கண்களின் வழியாக வழிந்தன. மனைவியின் முன்பு கண்கள் கசிவதை விரும்பாததால் சமாளித்துக்கொண்டு மீண்டும் தொடர்ந்தார் தினேஷ்.

   இது Friend டோட  வீடு Sir, அவன் வெளி நாட்ல இருக்கான். இன்னும் 2 Months ல திரும்ப வரான், அதுக்குள்ள சொந்த வீடு வங்கி போயிரலாம்னு நினைச்சேன். 

வார்த்தைகளை தினேஷ் முடிக்கும் முன்பே உவர் முத்துக்கள் அவர் கண்களின் மடை தாண்டி உதிர்ந்து கொண்டிருந்தன. இருக்கையை விட்டு எழுந்து சென்று சரவணன் வலது கையால் தினேஷின் இடது தோள்பட்டையை ஆதரவாக தட்டினார்.

கவலப்படாதீங்க Mr தினேஷ், காணாமல் போன நகையை நிச்சயம் கண்டு புடிச்சிரலாம். நகை இல்லாம வேற என்ன காணோம்?

Office ல கொடுத்தTablet டும் காணோம் Sir 

உங்க Office லTablet கொடுத்தாங்களா தினேஷ்?

ஆமா Sir, நான் Software கம்பெனி ல Test Lead டா வேலை பார்க்குறேன். Mobile Application Test பண்றதுக்காக கொடுத்தாங்க.

தினேஷின் பதிலை கேட்டவுடன் சரவணன் மூளையின் தேடுபொறி, வலை ஊர்தியை  (Web Crawler) ஓட்டி தகவலை தேடியது, சில நொடியில்...

தினேஷ், உங்க Tablet ல "Locate My Device" Activate பண்ணியிருக்கீங்களா?

எனக்கு அத பத்தியெல்லாம் தெரியாது Sir,எங்க Office ல Develop பண்ற Application ன Test பண்றதோட சரி, மத்தபடி படம் மட்டும் தான் பார்ப்பேன்.

சரி பரவா இல்ல, அதுல என்ன Operating System இருந்தது, I Mean OS Version என்ன இருந்தது தெரியுமா?

Sorry Sir, அதுவும் தெரியாது.

உங்க Office Systems Team கிட்ட கேட்டு உடனே சொல்றீங்களா?

ஐயோ Sir, நான் Phone பண்ணா 10:00 மணிக்கு முன்னால அவங்க Call Pickup பண்ண மாட்டங்க Sir.

 எரிச்சலடைந்த சரவணன், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல். 

"உங்க Systems Team Head டோட Phone Number கொடுங்க நான்பேசுறேன்"  என்று கூறி அலைபேசி என்னை வாங்கிக்கொண்டார். 

மறுமுனையில் அலை பேசி ஒலிக்க, புது எண் பளிச்சிடுவதால் யாரென்று தெரிந்து கொள்ள Systems Head பேசியை எடுத்து அழைப்பை ஏற்றார்.

Hello, நான் Inspector பேசுறேன், நீங்க ".... Company Systems Head" தான?

ஆமா Sir, உங்களுக்கு என்ன வேணும்.

உங்க Office ல வேல பாக்குற Mr. தினேஷ் சோட Tablet ல என்ன OS Version Install ஆகி இருக்கு, கொஞ்சம் அவசரம் உடனே சொல்ல முடியுமா Please?

Sir Office Information வேணும்னா நீங்க Office க்கு  தான் வரனும், அதுமட்டுமில்லாம Information Release பண்றதுக்கு Approval வேணும். 11 மணிக்கு மேல Office வாங்க பேசலாம்.

I Understand That Very Well Mr, Situation கொஞ்சம் Serious அதனால தான் உடனே கேட்குறேன். Information இப்போ கொடுங்க 11 O'Clock Formal லா Constable ல அனுப்பி வக்கிறேன்.   

சரவணன், இவ்வளவு கூறியும், கணினியின் தலைவர் இறங்கி வராததால். நாணயம் சுழன்று சிங்கம் வெளியானது. அடுத்த நொடி அனைத்து விவரங்களும் அட்டவணை படுத்தப் பட்டது.

Locate My Device : Not Activated 

OS Version : 6.0  

3G Enabled : Yes 

தினேஷ், உங்க Tablet ல, OS Version 6.0 இருக்குது அதனால Locate My Device Service Default டா Activate ஆகி இருக்கும். ஆனா உங்க Tablet Switch OFF ஆகி இருந்தா கொஞ்சம் சிக்கல்தான். By Any Chance, Alarm எதுவும் Set பண்ணி இருக்கீங்களா?

"இதுக்காவது ஆமான்னு சொல்லுங்கன்னு" சரவணன் மனதுக்குள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே, மோனிகாவிடம் இருந்து பதில் வந்தது.      

ஆமா Sir, இவருக்கு "Diabetes" இருக்கு, After Every Meal, Insulin Injection போடணும். Monday to Friday After Lunch போட வேண்டிய  Injection க்காக இவருடைய Tablet ல நான் Alarm Set பண்ணீருக்கேன். 12:30 க்கு அடிக்கும்.  Morning, Night and Weekend ல நானே அவருக்கு Injection போட்றுவேன். அதனால Weekdays மட்டும் தான் Alarm Set பண்ணிருக்கேன். 

Very Good Mrs தினேஷ், Approximately நமக்கு இன்னும் 4 Hours இருக்கு அந்த Device ச contact பண்றதுக்கு.   

சரவணனின் பதிலை கேட்டு உற்சாகம் அடைந்த மோனிகா "அப்போ காணாம போன எங்க நகை உடனே கிடைச்சிருமா Sir"?

"உடனே கிடைச்சிரும்னு சொல்ல முடியாது Madam, உடனே கிடைக்கிறதுக்கு உண்டான வாய்ப்பு ரொம்ப பிரகாசமா இருக்கு" என்று ஆறுதல் மொழிந்து விட்டு, தினேஷிடம் இருந்து Tablet டை தொடர்பு கொள்ளும் கடவுச்சொல்லை பெற்றுக்கொண்டு தன் "கருப்பு தொப்பி" வேலையை தொடர்ந்தார் சரவணன்.

திருப்பதி, காணமல் போன நகைகள் குறித்த புகாரை எழுதி இருவரிடமும் கையொப்பம் பெற்றுக்கொண்டார். சரவணனையும், திருப்பதியையும் சுமந்து கொண்டு காவல் வண்டி தன் நிலையம் நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது. வழியில் சரவணனிடம் சில தொழில்நுட்ப சந்தேகங்களை கேட்டார் திருப்பதி.

Switch Off ஆகி இருந்தா எப்பிடி அய்யா அந்த Tablet ட தொடர்பு கொள்ள முடியும்?

முடியும் திருப்பதி, தினேஷ்க்கு கொடுத்த Tablet ல Special Option இருக்கு. Battery Life 4% இருக்கும் போது அந்த Device Switch Off ஆயிரும். Remaining Power, Emergency Alert Service காக Preserve ஆகிஇருக்கும். தினேஷ் Wife சொன்னங்க இல்லையா 12:30 Alarm, அப்போ அந்த Device Switch Off ஆகி இருந்தாலும், தானா On ஆகி Alarm அடிக்கும். அந்த ரெண்டு Second குள்ள கண்டிப்பா நம்மால அந்த Tablet ட Connect பண்ண முடியும். ஆன Device ச Reset பண்ணி இருந்தா, கொஞ்சம் கஷ்டம் தான். 

இந்த பதிலை கேட்டு வியந்து கொண்டே வண்டியை முன்னோக்கி செலுத்தினார் திருப்பதி.


காவல் நிலையத்தில் 


இதுவரை எத்தனையோ வித்தியாசமான வழக்குகளை இந்த காவல் நிலையம் எதிர் கொண்டிருந்தாலும், இந்த வழக்கு சற்று புதிராக இருந்ததால் இன்னும் 30 நிமிடத்தில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு அனைவரையும் பற்றிக் கொண்டது.

நிலைய கடிகாரத்தில் மணி சரியாக 12:00

சரவணன் தன் சோதனைக்கு தேவையான அனைத்தையும் ஆயத்த படுத்திக் கொண்டு காத்திருந்தார். நொடிகள் நிமிடமாகாதா என்ற எதிர்பார்ப்பு அனைவரையும் ஆட்கொண்டது. 

ஒரு நிமிடம் எஞ்சி இருக்கும் போது சரவணன் தன் கணிப்பொறியை தட்டி, தினேஷின் Tablet டை தொடர்பு கொள்ளும் கோரிக்கையை Server வழியாக GPS செயற்கை கோளுக்கு அனுப்பினார்.முதல் இரண்டு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது.

சரியாக 12:30 மணி 23 நொடியில், தினேஷின் Tablet மனம் இறங்கி 12 இலக்க எண்ணை 130418801620 மட்டும் அனுப்பியது . அது அட்ச மற்றும் தீர்க்க ரேகைகளை குறிக்கும் எண்கள் என்பதை சரவணன் அறிவார். 

அந்த எண் உலக வரைபடத்தில், Richi Street இல் உள்ள ஒரு இடத்தை காட்டியது.  

Latitude: 13°04'18" N  
Longitude: 80°16'20" E

இந்த தகவலை  காவல் துறை  கட்டுப்பட்டு அறை, எழும்பூர், சென்னை - 8 க்கு  அதிக பட்ச முன்னுரிமையுடன் கவனிக்குமாறு தெரிவித்தார் சரவணன்.

காவல்துறை விரைந்து சென்று Richi Street இல் இருக்கும் ஒரு மின்னணுவியல் பொருட்கள் விற்கும் கடையை கையகப் படுத்தியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் சரவணன் அந்த கடையில் இருந்தார்.

மேசையில் பாவமாக உறங்கிக் கொண்டிருந்தது Tablet. நாற்காலியில் சாதாரணமாக அமர்ந்து கொண்டிருந்தார் 45 வயது மதிக்கத்தக்க கடையின் முதலாளி.

உங்க பேரு?

     முரளி

இந்த Tablet உங்களுக்கு எப்படி கிடைச்சது?

      இன்னைக்கு காலைல 10:30 மணிக்கு  ஒரு பையன் வித்துட்டு போனான் Sir

அந்த பையன் யாரு? இதுக்கு முன்னால அவன பாத்துருக்கீங்களா?

     இல்ல, கீழ கிடந்ததுன்னு கொண்டு வந்து கொடுத்தான், அவசரம்னு காசு கேட்டான். காசு கொடுத்துட்டு Tablet ட வங்கிக்கிட்டேன்.

பையன் பாக்குறதுக்கு எப்படி இருந்தான், எவ்வளவு உயரம், கலர், எப்படி  பேசுனான்?

    வயசு 20 இருக்கும், கருப்புன்னு சொல்ல முடியாது ஆனா கொஞ்சம் கலர் கம்மிதான். பேசுனத வச்சி பாத்தா ரொம்ப படிச்சவன் மாதிரி தெரியல, சென்னை பையன்தான். உயரம் 5 அடி இருப்பான் Sir. 

கூட யாராவது இருந்தாங்களா?

   இல்ல Sir, யாரும் இல்ல, கொஞ்சம் தூரம் போய் ஆட்டோ ல ஏறி போயிட்டான்.

"Excellent"

"திருப்பதி, இவர்கிட்ட மத்த Details Collect பண்ணிடுங்க. திருட்டு சாமான வாங்கி விக்கிறதுக்காக இவர் மேல Case போட்ருங்க" என்று கட்டளையிட்டார் சரவணன்.

அதுவரை சாதரணமாக இருந்த கடை முதலாளி அதிர்ச்சியானார்.

"Sir நீங்க வேற எதாவது எதிர் பாக்குரீங்கன்னா, தயங்காம" என்று பேசிக் கொண்டிருந்தவரை திருப்பதி வேகமாக அமைதியாக்கினார்.

அருகில் இருந்த ஆட்டோ நிறுத்தத்தை நோக்கி விரைந்தார் சரவணன்.         

போலிஸ் தங்களை நோக்கி வருவதை உணர்ந்து கொண்ட ஆட்டோ  ஓட்டுனர்கள், எழுந்து நின்றனர்.

"எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? "என்று கேட்டார் சரவணன் 

    எந்த Inspector ரும் இதுவரை இவ்வாறு கேட்டதில்லை என்பதால் சற்று வியப்பாக இருந்தது அவர்களுக்கு. அதுவே சரவணன் கையூட்டுப் பெற வரவில்லை என்பதை அவர்களுக்கு உறுதி செய்தது. கூட்டாக "நல்லா இருக்கோம் Sir"  என்றனர்.

கடைக்காரர் சொன்ன அங்க அடையாளங்களை கூறி யார் அவனை அழைத்துச் சென்றது என்று கேட்டார்.

     "நான் தான் Sir"  என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்  அதில் ஒருவர்.

அந்த பையனை எங்க விட்டீங்க? கூட யாராவது இருந்தாங்களா?

     சத்யம்ல விட்டேன் Sir, கூட ஒரு பொண்ணு இருந்தது Sir. Lover னு நினைக்கிறேன்.

எந்த படத்துக்கு போனாங்க தெரியுமா?

      நல்லாவே இல்லன்னு சொன்னேன் Sir, அப்போதான் கூட்டம் கம்மியா இருக்கும்னு சொல்லிட்டு, சட்டையே போடாம ஒருத்தன் நடிப்பானே, அந்த படத்துக்கு போறேன்னு சொன்னாங்க.

ஹிந்தி படத்துக்கா?

     இல்ல Sir, தமிழ் படம் தான்...

என்ன படம் என்பதை புரிந்து கொண்டார் சரவணன். அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுனரையும் உடன் அழைத்துக் கொண்டு சத்யம் விரைந்தார்.  

திரைஅரங்க மேலாளரிடம் பேசிவிட்டு திரைஅரங்க பணியாளரை  உள்ளே சென்று அந்தப் பையனை அழைத்து வரச்சொன்னர் சரவணன்.  எந்த இருக்கை  என்பதை ஏற்க்கனவே CCTV கேமரா மூலமாக உறுதி செய்துவிட்டு  சென்றதால் சுலபமாக அவர்களை அடைந்தார் திரை அரங்க பணியாள். காதல் பறவைகளை பிரித்து பிராமஹத்தி தோசத்திற்க்கும் ஆளானார். ஆண் பறவை மட்டும் வெளிவந்து மாட்டிக்கொண்டது.

"இந்த பருப்பா, கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டா உடனே போயிறலாம், எந்த Problem மும் இல்ல OK?" என்று விசாரணையை தொடங்கினார் சரவணன். 

   அவன் எதுவும் பேசவில்லை...    

இன்னைக்கு காலைல ஒரு Electronic சாமான் ஒன்ன Richi Street ல வித்தேல்ல, அத உனக்கு யார் கொடுத்தா (அ) நீ எங்கருந்து எடுத்த?

    நிலவரத்தின் கலவரத்தை புரிந்து கொண்டு பொய் சொல்ல துணியாமல் உண்மையை சொன்னான் அந்த பையன் 

      நேத்து எங்க அப்பா கிட்ட இருந்தது, அது என்னன்னு சரியா தெரியல, படத்துக்கு போக காசு கேட்டேன் குடுக்கல அதான் எடுத்துகிட்டு வந்துட்டேன்.


உங்க வீடு எங்க இருக்கு, உங்க அப்பா யாரு?

விவரங்கள் பெறப்பட்டது.

 "உங்க அப்பா கிடைக்கிற வரைக்கும் நீ போலீஸ் ஸ்டேஷன் ல இருப்பா. யாருக்கும் Phone பண்ணாத " என்று சிந்தாதரிப்பேட்டை காவலரிடம் ஒப்படைத்து விட்டு அந்த பையனின் வீடு நோக்கிப் பறந்தார் சரவணன், உடன் திருப்பதியும் சென்றார். 


போலீஸ் வண்டி, வடபழனி கங்கை அம்மன் கோவில் மூன்றாவது தெருவில் , மூன்று இலக்கங்கள் எழுதப்பட்ட வீட்டின் முன்பு நின்றது. 

மிகவும் மோசமான நிலையில் இருந்த வாயில் கதவின் சட்டத்தின் வழியாக நோட்டமிட்டார் சரவணன். தீப்பட்டியை போல வரிசையாக அடுக்கப்பட்ட சிறிய அளவிலான வீடுகள் அதில் வலது பக்கம் நாலாவது வீடு.

கதவு தட்டும் சத்தம் கேட்டு ஒரு பேரிளம்பெண் வெளியே வந்தார். சரவணன் கூறிய பெயரை கேட்டு, அந்த மணாளனை மணந்தது இந்த மங்கையின் பாக்கியம் என்று ஒப்பாரி வைத்தார்.  

      "அது இப்போ வெளிய போயிருக்கு சார், ரவைக்கு தான் வரும். எதாவது தப்பு தண்டா பன்னிருச்சா? அப்படியெல்லாம் பண்ணாது சார். கோவம் வந்தா என்னதான் அடிக்கும் வேற எந்த தப்பும் பண்ணாது சார்" என்று சரவணனிடம் முன் வாய்தாவுக்கு விண்ணப்பித்தார் அந்த பெண்மணி.

அதெல்லாம் ஒன்னும் இல்லங்க, நீங்க பயப்படாதீங்க, சும்மா விசாரிக்கணும் அவ்வளவுதான். இப்போ அவர எங்க பாக்கலாம்?

     தெரியல சார், எதாவது சாராயக்கடைல இருக்கும். வழக்கமா வடபழனி சரயக்கடைலதான் இருக்கும்.

அவரு என்ன வேலை பாக்குறாரு?

       நிரந்தரமா எந்த வேலையும் இல்ல, அப்பப்போ எதோ "கான்ட்ராட்" வேலைக்கு போகும். சந்தோசமா இருந்தா காசு கொடுக்கும் இல்லேன்னா குடிக்கும் அப்புறம் வீட்ல வந்து சண்ட போடும்  (அழுகிறார்)...

நீங்க வேலைக்கு போறீங்களா?

            வீட்டு வேலை பாக்க போவேன் சார்.

உங்க பையன்?

           படிப்பு வரல, வேலைக்கும் போக மாட்ரான், ஊற சுத்தறான் சார்.

உங்க வீட்டுக்காரர் வந்தார்னா, இந்த நம்பருக்கு போன் பண்ணச் சொல்லுங்க. அப்புறம் அவரோட போட்டோ இருக்கா?

       சொல்றேங்க, ஓட்டு போடுற அட்டைல இருக்கு, இருங்க தர்றேன்.

"இந்த  போட்டோவ நான் கொண்டு போறேன், அப்புறமா தர்றேன்" என்று அந்த பெண்மணியிடம் கூறிவிட்டு குடிமகனை தேடி புறப்பட்டார் சரவணன்.

பகலவன் அனலை கக்கிக் கொண்டிருக்க, அரசாங்கம் ஏற்று நடத்தும் மதுபான சேவை மையம் விழா கோலம் பூண்டிருந்தது. மாற்று உடையில் இருந்த திருப்பதி உள்ளே சென்று தேடினார். சிறிது நேரத்தில் அரை மயக்கத்தில் இருந்த ஒருவரை தள்ளிக் கொண்டு வந்தார்.

திருப்பதி, இவர இங்கேயே விட்டிட்டு, பக்கத்து மெடிக்கல் ஷாப் ல  "Dihydromyricetin, 2 mg" வாங்கிட்டு வாங்க.  

அய்யா,  என்ன பேரு சொன்னீங்க?

DHM னு கேளுங்க, 2 mg வாங்கிட்டு வாங்க.    

மருந்து செலுத்தப்பட்ட 10 நிமிடத்தில் தடுமாறி  எழுந்து நின்றவரை பார்த்த சரவணன்.

"நான் கேக்குற கேள்விக்கு சரியா பதில் சொல்லீட்டிங்கன்னா, நாளைக்கு குடிக்கிறத்துக்கு வாய்  இப்போ இருக்குற மாதிரியே இருக்கும், இல்லேன்னா இடம் மாறிப்போகும் " என்று  வலது கையை முழுவதும் மூடி இருந்த சட்டையை  மடித்துக் கொண்டே கேட்டார் சரவணன்.

நேத்து நீங்க அந்த எலேக்ட்ரோனிக் சமான எங்கருந்து எடுத்துட்டு வந்தீங்க? யார் எடுக்கச் சொன்னது? எனக்கு தேவை ஆளு யாருங்கிறது மட்டும் தான். 

     பதில் ஏதும் வரவில்லை


எனக்கு நிச்சயமா தெரியும், யாரோ சொல்லித்தான் இத பண்ணிருக்கீங்க, அது யாரு.

    மீண்டும் மௌனம்.

சரவணனின் கண் சிமிட்டலின் அர்த்தம் புரிந்து கொண்ட  திருப்பதி,அந்த உருவத்தை இழுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்து குறுகலான  பாதைக்கு சென்றார். மயக்க மருந்து இல்லாமல் அந்த உருவத்தின் வாயில் இருந்த இரண்டு கோரை பற்களை கழட்டினார். 

சில நிமிடங்களுக்கு முன்னால் செலுத்தப் பட்ட DHM தன் வேலையை முழுவதும் காட்டி  திருப்பதியின் வைத்தியத்தை தெளிவான  மூளைக்கு முழுவதும் உணர்த்தியது. இனிமேல் தாங்க முடியாது என்பதை உணர்ந்து தன் பின்னணியை முன்மொழிந்தார் குடிமகன்.



ட்ரோஜன் ஹார்ஸ்


மறுநாள் காலை 07:30 மணி 

24/11 கோ சு மணி தெரு, சூளைமேடு, இரண்டாவது மாடியில் இருக்கும் வீடு   

வெங்கட் வாசலில் இருந்த ஆங்கில பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள்ளே வந்தார். சுவாரஸ்யமான தகவல் எதுவும் இல்லை. மூடி வைத்துவிட்டு மடிக்கணினியை எழுப்பினார். தகவல் தளத்தில் சில வினாக்களை தொடுத்துக் கொண்டிருந்தார். அவரின் விருப்பத்திற்கு ஏற்ப தகவல்களை அட்டவணைப் படுத்திக் கொண்டிருந்தது கணினி.

கதவு தட்டப் படும் சப்தம் கேட்டு கதவில் மாட்டப்பட்டிருந்த மீன்கண் ஆடியின் வழியாக யார் வெளியே இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்து கொண்டு   புன்னகையுடன் கதவை திறந்தார் வெங்கட்.   

வாங்க "Engineer Sir" என்று வந்தவரை வரவேற்று இருக்கையில் அமரச் சொன்னார் வெங்கட்.

இருக்கையில் அமர்ந்தவரை பார்த்து, Coffee யா Tea யா  என்ன சாப்பிடுறீங்க? என்று கேட்டார் வெங்கட் 

Coffee   

"Ready யா இருக்கு" என்று குவளையில் இருந்த குழம்பியை இரண்டு கோப்பைகளில் நிரப்பினார். 

கோப்பையில் இருந்த குழம்பியை உறிஞ்சிக்கொண்டே கேட்டார் வெங்கட் "என்ன விசயமா வந்தீங்க Sir"

      குடித்து முடித்த கோப்பையை கீழே வைத்து விட்டு, "  அது, உங்களுக்கே தெரியுமே Mr.வெங்கட்" என்றார்.

Thanks for the Coffee, போலாமா வெங்கட்?

  எதுக்கு, எங்க Sir ?

இதுவரைக்கும்  13 + 1 மொத்தம் 14 திருட்டு, உங்களுக்கு ஒரு Cell ல Reserve பண்ணிட்டு தான் வந்துருக்கேன்.

    Ohh, நீங்க Engineer ரா வரல, Inspector ரா வந்துருக்கீங்க இல்லையா சரவணன்? என்ன ஆதாரம் இருக்கு உங்க கிட்ட Inspector?

  உங்களோட, Outsourcing Manager and Executive ரெண்டுபேரும் already statement கொடுத்துட்டாங்க.

இதழ்களில் புன்னகை மாறாமல் தலையை மட்டும் அசைத்து கேட்டுக் கொண்டிருந்தார் வெங்கட். வேற என்ன Information வச்சிருக்கீங்க Inspector என்னப் பத்தி.

நிறையா இருக்கு வெங்கட்.

           7 வருசத்துக்கு முன்னால பெசென்ட் நகர் பீச் ல  இருந்து பைக் ஒன்ன திருடிட்டு போய் ஒரு மாசம் கழிச்சு செக்க்போஸ்ட் ல மாட்டிகிட்டது. அதுக்கப்புறம் புது பைக் வாங்கி கொடுத்து அந்த கேஸ் ச Close பண்ணது.


              அதுக்கப்புறம் 5 Years  no more activities.

              Last two Years ல 13 திருட்டு.


  Good Inspector, அந்த drunken  stupid idiot, அந்த Tablet ட எடுக்காம இருந்துருந்தா இன்னும் கொஞ்ச நாள் அகிருக்கும்ல.

       May be வெங்கட், ஆனா ரொம்ப நாளைக்கு நீங்க தப்பிக்க முடியாது. நீங்க தான் Master Mind னு கண்டு புடிச்சிட்டேன்.ஆனா ஏன் பண்றீங்கன்னு தான் புரியல. உங்க கிட்ட காசுக்கா குறைச்சல்?

        எல்லா செயலுக்கும் காரண காரியங்கள் இருக்கணும்னு அவசியம் இல்ல Inspector. இது என்னோட Passion. இதுல ஒரு போதை இருக்கு அது வேற எதுலையும் கிடைக்காது. அது உங்களுக்கு சொன்ன புரியாது. A Type of behavior that can not be beaten, once adopted.  This strategy is true for my victims. Ohh, I Shouldn't have told that. உங்களுக்கு தெரியுமா Inspector, நான் கொள்ளை அடிக்கிற இடத்த எப்படி choose பண்றேன்னு?

        தெரியும் வெங்கட்,  Location Based Apps and Social Network.  

       Clever Inspector, காலைல கக்கூஸ் போறதுல இருந்து நைட்டு கட்டிலுக்கு போற வரைக்கும் எல்லாத்தையும் FaceBook ல போட வேண்டியது. Trojan war ல use பண்ண horse மாதிரிதான் எனக்கு இந்த social network.  Social Network க்கு அடிமையான கூட்டம், என்ன பண்றோம், ஏது பண்றோம்னு தெரியாம. எல்லாத்தையும் அதுல post பண்ணவேண்டியது. I am not choosing my victims actually they are choosing me. Just I am using the information. நீங்க என்ன arrest பண்றதால மட்டும் இது நிக்கப் போறது இல்ல Inspector. It is a continuous reaction.

      அத நாங்க பாத்துக்குறோம்  வெங்கட், உங்களுக்காக கீழ ஜீப்பும், ஸ்டேஷன் ல Cell லும் wait பண்ணிக் கிட்டிருக்கு வாங்க போலாம்.


முற்றும்... 


சரவணன் சமர்ப்பித்த குற்றப் பத்திரிகையில் இருந்து 


  • கோபாலின் மனைவி விஜி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தவறாமல் சமூக வலைதளத்தில் பதியும் வழக்கம் உடையவர். ஞாயிறு அன்று திருமணத்திற்கு சென்று வந்ததை புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.அதற்க்கு வந்த பின்னூட்டத்தில், தான் அணிந்திருந்த நகைகள் குறித்த முழுத் தகவலும் குறிப்பிட்டிருந்தார். தான் வெளியில் செல்லும் இடங்களில் எல்லாம் மறக்காமல் சமூக வலைதளத்தில் "செக்-இன்"  செய்யும் வழக்கமும் கொண்டவர்.

  • தினேஷ் தான் வீட்டு மனை வாங்க போவதையும், வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்கப் போவதையும் சமூக வலை தளத்தில் குறிப்பிட்டிருந்தார். முதல் நாள் ஊருக்கு போனதையும் குறிப்பிட்டிருந்தார். 

  • வெங்கட் சமூக வலை தளங்களில் கிடைக்கும் தகவல்களை கொண்டு யாரை, எப்போது, எப்படி கொள்ளை அடிக்க வேண்டும் என்ற திட்டமிடும் வேலையை மட்டும் செய்பவர். சிறு வயதில் இருந்தே திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருபவர், அதனால் அவருக்கு பல தவறான நபர்களுடன் வெகு நாட்களாக தொடர்பு உண்டு. தான் சேகரித்த தகவல்களை இதற்கென்று ஒருவரை நியமித்து அவரிடம் ஒப்படைத்து விடுவார். கொள்ளை அடிப்பதில் வெங்கட்டுக்கு முக்கிய பங்கு. கொள்ளை அடிக்க தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் வெங்கட் கவனித்துக் கொள்வார். 

  • தங்க நகைகளை கொள்ளையடிப்பதை மட்டும் வாடிக்கையாக கொண்டுள்ளார் வெங்கட். வீட்டில் சிறிய அளவில் இரசாயன சோதனை சாலையும் வைத்துள்ளார். nitric மற்றும்  hydrochloric அமிலங்களை கொண்டு சுத்த தங்கத்தை  மட்டும் பிரித்து விடுவார்.

     

சரவணனின் வேட்டை தொடரும்... 

Saturday, October 6, 2012

ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan Horse)


வேளச்சேரி... 


தனக்கு  விருப்பம் இல்லா விட்டாலும் தன்  மனைவி அனுவின் வின் கட்டாயத்திற்காக அந்த நடிகரின் திரைப்படத்திற்கு செல்ல முன்பதிவு செய்த நுழைவுச் சீட்டை அச்சடிக்க அலுவலகத்தின் அச்சுப்பொறிக்கு கட்டளையிட்டான் நந்தா. வெள்ளிக் கிழமை மாலை தன்னை வேலை செய்யச் சொன்ன கோபத்தை வேறு யாரிடமும் காட்ட முடியாமல், காகிதமாக உருமாறிய அந்த மரத்தின் மேல் மையை உமிழ்ந்து, காட்டிக் கொண்டிருந்தது அச்சுப்பொறி. 

மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது, காத்திருந்த நுழைவுச்சீட்டை கையகப் படுத்த ஆயத்தமானான் நந்தா. தன் உயரத்தை குறைத்துக் கொண்டு மெதுவாக சென்று அச்சடித்த காகிதத்தை கைப்பற்றி, தன் இடம் திரும்பினான். 2000 ஒலிம்பிக் போட்டியில் 5 பதக்கம் பெற்ற மரியன் ஜோன்ஸ் போல் தன்னை உணர்ந்தான். மூட்டை, முடிச்சை கட்டிக்கொண்டு வீட்டுக்கு போக தயாரானான்.   

"டக் டக்..." நந்தாவின் மேசை எழுப்பப்பட்டது 

 "நந்தா, நீங்க வீட்டுக் போறதுக்கு முன்னால என்ன மீட் பண்ணிட்டுப் போங்க,  15 Minutes, ஒரு Project Discussion  இருக்கு"  என்றார் Project Manager ஆல்பர்ட். 

ஆல்பர்ட் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று தான் தன் அனைத்து யுத்திகளையும் பயன்படுத்தி தப்பிக்க முயன்றான் நந்தா. 

நான் இப்போ கிளம்பிட்டேன் ஆல்பர்ட், Monday discuss பண்ணலாமா?

இது ரொம்ப  important நந்தா, இன்னைக்கே report அனுப்பனும். quick கா முடிச்சிரலாம். ஒரு 15 minutes?

ஆல்பர்ட் கடிகாரத்தில் ஒரு நிமிடத்திற்கு 600 நொடிகள் என்பது நந்தாவுக்கு நன்றாகத் தெரியும். "2007 டிசம்பர் 12 இல் ஐந்து பதக்கங்களும் திரும்பப் பெறப்பட்ட ஜோன்சின் முகம் நினைவுக்கு வந்தது".

அரை கோடிக்கு அவசரப்பட்டு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் மாத வட்டி விகிதம் பயமுறுத்தியதால், வேறு வழியில்லாமல் அலுவலகத்தின் அனைத்து கட்டளைகளுக்கும் "ஆம்"என்ற பதிலை மட்டும் கூறும் கட்டாயத்தில்  நந்தா.

மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து சொல்ல தைரியம் இல்லாததால், ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பி விட்டு அலைபேசியோடு சேர்ந்து  அவனும் ஊமையானான். 

தேவையான தகவல் முழுவதும் கிடைக்காததால், மீண்டும் திங்கள் காலை தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டு இரவு 08:00 மணிக்கு கலந்துரையாடல் வழக்கம் போல முடிவை எட்டாமல் முடிக்கப்பட்டது. 

மனைவியை சமாதனம் செய்ய வழிமுறைகளை தேடினான்.அதே திரைப்படத்தின் இரவுக் கட்சிக்கான நுழைவுச்சீட்டு வாங்க முயற்சி செய்தான், கிடைக்கவில்லை. எப்படியும் இரவு உணவு கிடைக்காது என்பது தெரிந்ததால்,ரொட்டித் துகள்களை உடல் முழுவதும் பூசிக்கொண்டு  கொதிக்கும் எண்ணையில் குழித்த கோழியை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

வழக்கத்திற்கு மாறாக அன்று கொஞ்சம் அதிகமாகவே இருட்டி இருந்தது.  மகிழ்வுந்தை நிறுத்தி விட்டு வெளியே இறங்கினான். அதுவரை இரண்டாம் மாடியின் கன்னி மாடத்தில் காத்திருந்த அனு ,கணவன் தன்னை பார்த்து விட்டதை உறுதி செய்து கொண்டு, தன் கோபத்தை காட்டும் விதமாக வேகமாக உள்ளே சென்றார்.     

இது எதிர் பார்த்ததுதான் என்றாலும் சற்று ஏமாற்றத்துடன் படிகளில் ஏறினான்  நந்தா. மேலிருந்து ஒரு பெண் இறங்கிவர, வழிவிட்டு ஒதுங்கினான். முன்பின் பார்த்திராத அந்தப் பெண் நந்தாவின் அருகில் வந்து எதோ கேட்க முயன்றார்.  

"excuse me sir, என்னோட aunt வீட்டுக்கு வந்தேன், She is not here, I forgot my mobile. please உங்க phone தர்ரீங்களா, ஒரு call பண்ணிக்கிறேன்? " என்று அந்த பெண் கேட்க 

"Sure" என்று கால் சட்டையில் அலைபேசியை தேடிகொண்டிருக்கும் போது, ஒரு இளம் வயது வாலிபன் அந்த பெண்ணின் பின்னால் வந்து நின்றான். பரிச்சயம் இல்லாத மேலும் ஒரு வாலிபன் நந்தாவின் பின்புறம் நின்றான்.

விபரீதத்தின் விளிம்பில் நிற்கிறோம் என்பதை உணரும் மும்பு, முன்னால் நின்ற வாலிபனின் முஷ்டி நந்தாவின் கண்களை காயமாக்கியது. நிலை குலைந்து விழுந்தவன் உடனே சுதாரித்துக்கொண்டு எழுந்தான். தோளில் மாட்டியிருந்த மடிக்கணினியை பாதுகாப்புக்காக  வேகமாக சுழற்றினான், தன்னால் முடிந்த அளவு பலமாக "உதவி" என அலறினான்.

நெடுந்தொடரிடம் தஞ்சமடைத்த அடுக்குமாடி வாசிகளின் காதுக்கு எதுவும் எட்டவில்லை. விளம்பர இடைவேளையில் அலைவரிசை மாறும் அந்தக் கணத்தில் ஏதோ குரல்  கேட்டு முதல் மாடியில் இருந்த ஒரு வீட்டின் கதவு திறக்கப் பட்டு பின்பு உடனே மூடப்பட்டது.        

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அந்த கும்பல் நந்தாவை அப்படியே விட்டு விட்டு ஓடியது.     

தடுமாறி எழுந்து, மெல்ல நடந்து, நந்தா வீட்டு வாசலை அடையவும் அனு கதவை திறக்கவும் சரியாக இருந்தது. உதிரம் பூசிய முகத்துடன் நின்ற கணவனை கண்டதும் செய்வதறியாமல் திகைத்து நின்றார் அனு.

மனைவியை சமாதானம் செய்துவிட்டு, அவசரம் இல்லாமல் அழைத்தார் அவசர போலீசை. மறுமுனையில் காவல்துறை குசலம் விசாரித்து விட்டு உடனே வருவதாக கூறிய  20 நிமிடத்தில் அங்கு வந்தார் ஒரு காவலாளி.

எத்தன பேரு இருந்தாங்க?

      மூனு பேரு இருந்தாங்க சார், அதுல ஒரு பொண்ணு.

அடையாளம் சொல்லமுடியுமா?

       "இருட்டு சரியா பாக்க முடியல. ஒருத்தன் 6 அடி உயரம் இருந்தான். மாநிறம் . அந்த பொண்ணு பேசுனத வச்சி பார்த்தா படிச்ச பொண்ணு மாதிரி இருந்தது. மொபைல் போன் கேட்டது"

என்று நந்தா நடந்ததை விவரித்தார். கண்ணில் தாக்கியது அடையாளம் கண்டுகொள்ள கூடாது என்பதற்குதான் என்று காவல்துறை விளக்கினார்.

Mr. நந்தா, நீங்க உதவிக்காக யாரையாவது கூப்பிடும் போது கொஞ்சம் கவனமா இருக்கணும். ஏன்னா அவங்க பதட்ட மாயிட்டங்கன்னா உங்கள அமையாக்க என்ன வேனா பண்ணலாம். அவன் கைல கத்தி இருந்ததுன்னு வைங்க ரொம்ப சங்கடமா போயிருக்கும். ஒரு போலீஸ் இப்படி சொல்லக்கூடாது இருந்தாலும், உங்கள காப்பாதிக்க வேற வழி இல்ல. நிலமைய சமாளிக்க கைல இருக்குறத கொடுத்துருங்க. குறைந்த பட்சம் சின்ன காயத்தோட போகும்

நாளைக்கு காலைல police station வந்து ஒரு complaint கொடுத்துருங்க

இப்போ சொன்னது போதாதா sir ?

Formal லா complaint வேணும் Mr. நந்தா, மறக்காம documents கொண்டு வந்துருங்க.

"Formal" லுக்கு அர்த்தம் "காசு" என்பதை புரிந்து கொண்டார் நந்தா.


சில மாதங்களுக்குப் பிறகு...

பெருங்குடி...


பிள்ளையார் கோவில் தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு...

ஞாயிறு மாலை 07:45 மணி, வரும் வாரத்திற்கு தேவையான சாமான்களை வங்கிக் கொண்டு கோபாலும், விஜியும் வீட்டுக்கு திரும்பினர்.

விஜி வாங்கிவந்த காய்கறிகளை குளிர்சாதன பெட்டிக்குள் திணித்துக் கொண்டிருந்தார். கோபால் தளர்வாக மஞ்சத்தில் அமர்ந்தார்.

விஜி, நான் நாளைக்கு office போகும் போது மறக்காம pack பண்ணி குடுத்துரு

எதுங்க?

கல்யாணத்துக்கு போகணும்னு locker ல இருந்து எடுத்துட்டு வந்தோமே...

ஓ "Jewels" சா கண்டிப்பா, மறக்க மாட்டேன்.

மறுநாள் காலை 06:00 மணி

"என்னங்க, என்னங்க, எழுந்திரிங்க, எழுந்திரிங்க" தந்தி அடித்துக் கொண்டு விஜியின் குரல் அயர்ந்து நித்திரையில் இருந்த கோபாலை எழுப்பின...

என்ன விஜி, என்னாச்சு?

நகைய, நகைய...

நகைக்கு என்னாச்சு?

காணோங்க....

என்ன உளர்ற, நேத்து நாந்தானே வச்சேன்

இருவரும் எல்ல இடங்களில் தேடியும் நகை கிடைக்க வில்லை.

வேறு வழி இல்லாமல் கோபால் மூன்று இலக்கங்களை அழுத்தினார் தொலைபேசியில்.

சிறிது நேரம் கழித்து...

கதவு தட்டப்பட்டது, வாசலில் சரவணன்.             

Mr. கோபால், நான் Inspector சரவணன் (மாற்று உடையில் இருந்தார்).

வாங்க Inspector.

கடைசியா எப்போ நகைய பார்த்தீங்க?
  
நேத்து afternoon ஒரு marriage function னுக்கு போயிட்டு வந்து எடுத்து வச்சோம் சார். அதுக்கப்புறம் பார்க்கல.

எவ்வளவு நகை?

ஒரு 30 பவுன் இருக்கும் சார்.

வீட்ல நகைய எங்க வச்சிருந்தீங்க, பீரோலையா ?

இல்ல சார், வளையல் எல்லாம் groceries items கூட சேர்த்து பிளாஸ்டிக் டப்பால போட்டிருந்தோம். செயின் எல்லாம் கட்டிலுக்கு கீழ வச்சிருந்தோம்.

வேற எதுவும் திருடு  போகலையா கோபால் ?

இல்ல சார், நகை மட்டும் தான் காணோம், பீரோ ல கொஞ்சம் பணம் இருந்தது, அது அப்படியே தான் இருக்கு.     

கதவு, ஜன்னல் வேற எதுவும் உடஞ்சி இருக்கா?

இல்ல சார், அந்த மாதிரி எதுவும் ஆயிருந்தா நேத்தே கண்டு புடிசிருப்போம்.

"திருப்பதி, finger print மத்த evidence collect பண்ணனும். அதுக்கு arrange பண்ணுங்க. காணமல் போன jewels details ச correct டா வாங்கிடுங்க" என்றார் சரவணன்.

Mr.கோபால், நல்லா தேடிட்டு சொல்லுங்க வேற எதுவும் காணாம போகலையா?

கோபால் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விஜி அறையில் இருந்து வெளியே வந்து calculator ஒன்றை காணோம் என்றார். கோபால், விஜியை எரிச்சலுடன் பார்த்தார்.

"நகை காணாமப் போனதால எவ்வளவு ரூபா போச்சுன்னு calculate பண்றதுக்காக தேடினேன், வெளிய table ல தான் இருந்தது, இப்போ காணோம்" என்றார் விஜி.

தேங்க்ஸ் மேடம், நல்ல information குடுத்தீங்க.

என்ன சொல்றீங்க inspector?

Mr. கோபால், calculator கூட சேர்ந்து வேற transistor radio எதுவும் காணமான்னு சொல்லுங்க?

மீண்டும் உள்ளே சென்ற விஜி பழைய transistor ஒன்றை காணோம் என்றார்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தார் கோபால்.

ஒரு simple metal detector பண்றதுக்கு தேவையான உபகரணங்கள் தான் calculator மற்றும் transistor என்று விளக்கினார் சரவணன்.

பூட்ட உடைக்காம எப்படி sir திருடன் வீட்டுக்கு உள்ள வந்தான்?

அந்த வீட்டு கதவின் பூட்டை ஆராய்ச்சி செய்த சரவணன், உங்க கதவுல இருக்குறது "Warded lock". இதுக்கு "skeleton key" அல்லது "passing key" ஒன்னு இருக்கு. அத வச்சி சுலபமா திறக்கலாம்.

இப்படித்தான் பண்ணி இருக்காங்கன்னு நிச்சயமா சொல்ல முடியாது. ஆனா இப்படியும் பண்ணியிருக்கலாம்.

இதை எல்லாம் கேட்டு விரக்தியின் உச்சத்துக்கே சென்ற கோபால், அப்ப எப்படி தான் sir பாதுகாப்பா இருக்குறது ? என்று சரவணனிடம் கேட்டார்.

"இந்த கேள்விக்கு என்கிட்டே பதில் இல்ல Mr. கோபால், ஆனா கவலைப் படாதீங்க, உங்க நகை கண்டிப்பா கிடைக்கும். நகை கிடச்ச உடனே உங்களுக்கு call பண்றோம்" என்று கூறி விட்டு. மற்ற வேலைகளை முடித்து விட்டு வருமாறு திருப்பதியை பணித்து விட்டு சென்றார் சரவணன்.       

காவல் நிலையம் 

அய்யா, நம்மகிட்ட இருக்குற criminals list எடுத்து இந்த திருட்டு case ச விசாரிக்கலாமா?

அது ஒரு option னா வச்சிக்கலாம் திருப்பதி, ஆனா இந்த திருட்ட பார்க்கும் போது எனக்கு வேற மாதிரி தோனுது. நகைய திருடுனவன் நல்லா plan பண்ணிதான் செஞ்சிருக்கான். அதனால இதுக்குள்ள நகைய உருக்கிருப்பான். அல்லது வேற எங்கயாவது வித்துருப்பான். இருந்தாலும் நீங்க இந்த திருட்டு நகைய deal பண்றவங்கள பத்தி விசாரிங்க.

சரிங்கய்யா.


நாட்கள் நகர்ந்தன, தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தார் சரவணன்.ஆனால் ஒரு வாரம் ஆகியும் காணாமல் போன நகை குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.

அன்று...

காவல் நிலையத்தின் தொலைபேசி மணி ஒலித்தது, எடுத்து பேசிய  முருகானந்தத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மீண்டும் திருட்டு...

குதிரை ஓடும்...