கயல்விழி: அங்கிள், எங்கப்பா xoom ல transfer பண்ண டாலரா இப்படி flex banner ராவும், புரட்சிப்படையாவும் மாறியிருக்கு?
மாமா: இதுவும் அரசியல்ல சாதாரணம் கண்ணு...
இந்த மாமாவும், இந்த அஞ்சு கோடி தொண்டர்களும் இருக்குற வரைக்கும். தமிழ்நாட்ல உன்ன யாரும் எதுவும் பண்ணமுடியாது.
கயல்விழி:
அங்கிள் இங்க 5 people தான இருக்காங்க, ஆனா நீங்க 50 மில்லியன் people இருக்காங்கன்னு சொல்றீங்க ?
மாமா: நம்மகிட்ட போடோஷாப் பண்றதுக்கு திறமையான ஆளிருக்கு, வெறும் அஞ்ச, அஞ்சு கோடியா மாத்திரிவோம்பல கண்ணு. அப்பதான ஒரு இதுவா இருக்கும்.
முதல்ல மாமா உன்ன வச்சி ஒரு சினிமா எடுக்குறேன். நீயும் நெறைய "பஞ்ச" டயலாக் பேசி ஆக்ட் பண்ணு, அப்புறம் பாரு. நீ எங்கையோ போயிடுவ. தமிழ்நாட்டு அரசியல்ல பெரியாளா வர அதுதான் கண்ணு first qualification.
கயல்விழி: அங்கிள்! I don't like politics, leave me alone... நா இங்க வந்தது உங்க எல்லாரையும் பாக்கத்தான்... first my dear பாட்டிய பார்க்கப்போறேன். Bye bye uncle, see you later...
மாமா: அய்யையோ கட்சிக்கு வளர்ச்சி நிதி வாங்காம உட்டோமே... (தொண்டர்களைப் பார்த்து)
நீங்க ஏண்டா காச வாங்கிட்டு கத்தாம சும்மா நிக்கிறீங்க... கத்துங்கடா...
தொண்டர் தலைவன்: வருங்கால முதல்வரே!
தொண்டர்கள்: வருக வருக
மாமா: அதான் அம்மா போயாச்சில்ல... இப்போ என்னக்கு கோசம் போடுங்க.
தொண்டர் தலைவன்: வருங்கால முதல்வரின் மாமாவே!
தொண்டர்கள்: வாழ்க
தொண்டர் தலைவன்: வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் மாமாவே!
தொண்டர்கள்: வாழ்க
காட்சி 2
கதாப்பாத்திரங்கள்
- கயல்விழி
- பாட்டி
- பேரன்
- வடைசட்டி, காணாமல்போன வடை
- குள்ளநரி
- வேப்பமரம்
இடம்: பாட்டியின் வீடு
பாட்டி: பேராண்டி, இன்னிக்கி என்னப்பெத்த ஆத்தா கயலு இந்தப்பாட்டிய பாக்க வர்றா...
பேரன்: இதையே எத்தன தடவ சொல்லுவ பாட்டி? எனக்கு எப்ப வடையத் தருவ, அத சொல்லு?
பாட்டி: பொறுடா பேராண்டி! சுட்டது ஒரு வட கயலு வரட்டும், உனக்குப்பாதி கயலுக்குப்பாதி...
என்று கூறிக்கொண்டே சுட்ட ஒரு வடையை எடுத்து தட்டில் வைக்க...
பேரன்: இந்த ஒரு வடைக்குதான் இந்த build up ஆ... அதுசரி, ஏன் வீட்டுக்குள்ள வடைய சுடாம இந்த வேப்பமரத்துக்கு கீழ உக்காந்துக்கிட்டு இருக்க...
பாட்டி: அப்பதான நரி வந்து வடைய தூக்கிட்டுபோகும். அதுதான நம்ம பண்பாடு...
பேரன்: ஆ... என்னது நரிக்குத்தான் வடைய சுட்டியா?
பாட்டி: இல்ல பேராண்டி, நா... சும்மா உன்னைய கலாய்ச்சேன்...
என்று பாட்டி சொல்லிகொண்டிருக்கும் போதே குள்ளநரி வடையை தூக்கிக்கொண்டு ஓடியது...
பேரன்: அய்யய்யோ... வட போச்சே!!!
......
இதற்கிடையில் அங்கு கயல் வந்துவிட, பாட்டி சோகமாக இருப்பது கண்டு...
கயல்விழி: பாட்டி.. பாட்டி...
பாட்டி: வா செல்லம் வா, நல்லா இருக்கியா கண்ணு...
கயல்விழி: நான் நல்லா இருக்கேன் பாட்டி. ஆமா நீங்க ஏன் சோகமா இருக்கீங்க?
பேரன்: நான் சொல்றேன்... நான் சொல்றேன்...
கயல்விழி: சரி சொல்லு...
பேரன்: பாட்டி
சுட்ட
கயல்விழி: ஒன்னுக்கு கீழ ஒன்னா?
பேரன்: அதுதான கவித...
கயல்விழி: சரி சொல்லு
பேரன்: பாட்டி சுட்ட வடைய சுட்டது குள்ளநரி...
கயல்விழி: அடடடே ஆச்சர்யகுறி...
பாட்டி: பேராண்டி சும்மா இருடா
கயல்விழி: பாட்டி, வடைய எடுத்த நரிய விரட்டப்பிடிக்க வேண்டியதுதானே? ஏன் பிடிக்கல?
பேரன்: அம்மா வரட்டும்னு காத்திருக்கோம்...
கயல்விழி: (சற்று எரிச்சலுடன்) சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசுறானே, யாரு பாட்டி இவன்?
பாட்டி: இவன தெரியாதா? இவன்தான் உங்க மாமா பையன் "நாஞ்சில் சர்பத்"...
கயல்விழி: ஓ... அவனா நீ?
பேரன்: yeah that's me...
பாட்டி: உனக்கு கொடுக்க இந்த பாட்டிகிட்ட எதுவுமே இல்லையே கண்ணு...
கயல்விழி: உங்க அன்பு மட்டும் போதும் பாட்டி.
பாட்டி கயல்விழியை அணைத்துக்கொள்கிறார்
ஆனாலும் பாட்டி அந்த நரிய நான் சும்மா விடமாட்டேன்.
பாட்டி: கண்ணு அது பொல்லாத நரி...
கயல்விழி: பாட்டி எம் பேரு கயல்விழி... எனக்கு இன்னொரு பேரும் இருக்கு "டோரா கயல்விழி"
பேரன்: "கயல்விழி"ங்கிறது உன்னோட பேரு, "டோரா"ங்கிறது நீ படிச்சி வாங்குன பட்டமா?
பாட்டி: அவன் உன்னைய கலாய்ச்சிட்டாணாமா...
கயல்விழி: "நாஞ்சில் சர்பத்து"... அப்புறமா ஞாபகப்படுத்து கண்டிப்பா சிரிக்கிறேன்...
பாட்டியைப் பார்த்து
பாட்டி, வடைக்கு பதிலா இவன ஏன் நரி தூக்காமப்போச்சு?
பாட்டி: அவன உடுமா...
கயல்விழி:வடைய சுட்டது சாதாரண நரியில்ல, அது swiper the sneaky fox... நான் போயி வடைய மீட்டுட்டு வர்றேன். என்னைய ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி.
பாட்டி: வடையோட திரும்பிவா கண்ணு... அப்பிடியே இவனையும் கூட்டிகிட்டுப்போ...
கயல்விழி: திரும்பி வந்தா வடையோட வருவோம்... இல்லேன்னா வடைய வாங்கி சாப்டிட்டு வருவோம்...
காட்சி 3
கதாப்பாத்திரங்கள்
- கயல்விழி
- பேரன்
- தேநீர் கடை மற்றும் கடைக்காரர்
- பச்சைத்தமிழன்
- Smartphone with Siri
இடம்: தேநீர் கடையருகில்
பச்சைத்தமிழன்: நான் யாரு! என்னோட background என்ன? என்னப்பாத்து இப்பிடி ஒரு வார்த்த சொல்லிட்ட... வீரத்தமிழன்டா... மானத்தமிழன்டா... கவரிமான் சாதிடா... ஒரு முடி விழுந்தாலும் உசிரவிட்ருவோம் ல... யாருகிட்ட?
தேநீர் கடைக்காரர்: ஏ தம்பி... இங்க வா!
பச்சைத்தமிழன்: (மிகவும் பணிவுடன்) சொல்லுங்கண்ணே...
தேநீர் கடைக்காரர்: உனக்கு இப்போ என்ன பிரச்சன?
பச்சைத்தமிழன்: அண்ணன், நான் யாரு, எவ்வளவு பெரிய ஆளு...
தேநீர் கடைக்காரர்: அந்த details எல்லாம் போன வாரம்தான் times of india ல படிச்சேன்... நேர விசயத்துக்கு வா...
பச்சைத்தமிழன்: இலவச மிக்ஸி வாங்கப்போன, என்னைய வரிசையில வரச்சொல்றான்...
தேநீர் கடைக்காரர்: நீ.. கவரிமான் சாதியா? போரியா இல்ல சுடுதண்ணிய புடிச்சி மூஞ்சியில ஊத்தவா?
வீரத்தமிழன் உயிர்பயத்தில் அவ்விடம் விட்டு ஓடுகிறான்
இவ்வேளையில் கயலும், சர்பத்தும் அங்கு வருகின்றனர்...
சர்பத்: கயலு! இப்போ அந்த நரிய் எப்பிடி கண்டுபிடிக்க?
கயல்விழி: அதுக்கு என்கிட்ட ஒரு super idea இருக்கு.
சர்பத்: என்னது அது?
கயல்விழி: Smartphone, இது கிட்ட கேட்டா நமக்குத் தேவையான answer கிடைக்கும்.
சர்பத்: cool
கயல்விழி: Siri...
சர்பத்: ஹி ஹி...
கயல்விழி: Siri...
சர்பத்: ஹி ஹி...
கயல்விழி: "Siri" ன்னு நான் உன்னைய சிரிக்கச் சொல்லல. என் smartphone கிட்ட பேசுறேன்
சர்பத்: ஆஹாங்
கயல்விழி: Siri எங்க அந்த நரி?
Siri: This feature is not available in கயல்புறம். Please install டீகடை plugin...
சர்பத்: இந்தா புள்ள சிரி.. தமிழ்... தமிழ்ல சொல்லு...
Siri: இந்த வசதி கயல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது இல்லை. எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் உங்களுக்கு அருகில் இருக்கும் தேநீர் கடையில் கேட்கவும்.
சர்பத்: ஹா... ஹா... அசிங்கப்பட்டாள் அமெரிக்காகாரி...
கயல்விழி: :(
சர்பத்: எங்கவந்து, யாருகிட்ட என்ன பேச்சு பேசுற... follow me...
இருவரும் தேநீர் கடையை அடைந்தனர். கடைக்காரரிடம்
சர்பத்: அண்ணே! இந்தப்பக்கம் நரி ஒண்ணு வடையக் கவ்விகிட்டு ஓடிவந்ததா?
கடைக்காரர்: ஆமாப்பா.. இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னால போச்சு... அதோ அந்த ஒத்தையடிப் பாதைக்குள்ளதான் போச்சு...
சர்பத்: ரொம்ப thanks அண்ணா... you saved my day...
கடைக்காரர்: நான் சேவிங் எல்லாம் பண்றதில்லப்பா. ஆமா, வடைக்காகவா நரியத் தேடுறீங்க? அண்ணன் கடையில வடை fresh சா இருக்கு, ரெண்டு அள்ளுங்க!
சர்பத்: Sorry ண்ணா ஒரு மாசத்துக்கு முன்னால சுட்ட வடையெல்லாம் நாங்க சாப்பிடுறதில்ல...
கடைக்காரர்: எவ்வளவு திமிறா பேசுறான்!
சர்பத்: அப்புறம்ணே யாருமே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துறீங்க?
(தேநீர் கடைக்காரர் மீண்டும் சுடுநீரை குவளையில் ரொப்ப...)
கயல் வா ஓடிறலாம்...
காட்சி 4
கதாப்பாத்திரங்கள்
- கயல்விழி
- பேரன்
- கலைக்குழுவினர்
- சிற்றுண்டி விடுதி
இடம்: தமிழ்ப்பள்ளி
சர்பத்: கயல், அந்த ஒத்தையடிப் பாதைக்கு போற வழியில்தான் எங்க தமிழ்ப்பள்ளி இருக்கு. இன்னைக்கு அங்க ஆண்டுவிழா. அங்க போயிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு போகலாமா...
கயல்விழி: வேண்டாம்னு சொன்ன விட்ருவியா?
சர்பத்: மாட்டேன்!
கயல்விழி: அப்புறம் எதுக்கு கேட்டுகிட்டு... தமிழ்ப்பள்ளி போகலாம்...
கலைநிகழ்ச்சி...
கலைநிகழ்ச்சி முடிந்தவுடன்
சர்பத்: கயல் எனக்கு பசிக்குது...
கயல்விழி: சரி வா, canteen போகலாம்
சிற்றுண்டி வேலையாள்: என்ன வேணும்?
சர்பத்: என்ன இருக்கு?
சிற்றுண்டி வேலையாள்: donut, pizza, burger, fries, cola...
(வேலையாள் ஒவ்வொன்றாக கூறக்கூற அதே வரிசையில் திரையில் அவர் கூறும் உணவுப்பொருள் தோன்றி அதன் கீழே
இவை அனைத்தும் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்)
கயல்விழி: அதெல்லாம் வேண்டாம், இளநீர் கொடுங்க...
காட்சி 5
கதாப்பாத்திரங்கள்
- கயல்விழி
- பேரன்
- அவ்வை V 5.0
- அதியமான் V 2.0
- மறைந்து நின்ற நரி
இடம்: அரசமரம், அவ்வையின் உறைவிடம்
ஒத்தையடிப் பாதையை பின் தொடர்ந்து கயலும், சர்பத்தும் செல்கின்றனர்...
கயல்விழி: ஒத்தையடிப்பாதை இந்த இடத்துல முடியுது (வேட்டையாடு விளையாடு பின்னணி இசை).
சர்பத்தைப் பார்த்து
அந்த மரத்துக்கு பக்கத்துல யாரு?
சர்பத்: வா போய்ப் பார்க்கலாம்...
இருவரும் அருகில் சென்று பார்க்க அங்கு ஒரு பாட்டி கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருக்கிறார் அருகில் ஒரு வாலிபர் நின்று கொண்டு இருக்கிறார்.
கயல்விழி அங்கிருந்த வாலிபரிடம்
கயல்விழி: நீங்க யாரு? இந்த பாட்டி யாரு? இங்க என்ன பண்றீங்க?
சர்பத்: எத்தன கேள்வி, கேப்ப கயல்? இப்பிடியெல்லாம் கேட்கக்கூடாது. இப்போ இதையே நான் தமிழ்ல தெளிவா கேக்குறேன் பாரு,
dude what's up
வாலிபர்: சத்தம் போடாதீர்கள், அம்மாவின் தியானம் கலைந்துவிடும்.
சர்பத்: என்னது, இவங்கதான் அம்மாவா!
என்று ஆச்சர்யத்துடனும், பயபக்தியுடனும் அம்மாவின் கால்களின் விழுந்து வணங்குகிறான்...
வாலிபர்: பெரியவர்களிடம் மிகுந்த மரியாதையுடைய சிறுவன் போல.
கயல்விழி: (பரிகாசத்துடன்...) நீங்க, அம்மான்னு சொன்னீங்கள்ள அதனாலதான், எங்களுக்கு urgent டா ஒரு question கேக்கணும்!
வாலிபர்: உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் அம்மாவிடம் பதில் கிடைக்கும், சிறிது நேரம் காத்திருங்கள்.
சர்பத்: அதுக்கு முன்னால இவங்க யாருன்னு சொல்லுங்க?
வாலிபர்: இவங்கதான் அவ்வை.
கயல்விழி அவ்வையை வணங்குகிறார்
கயல்விழி: "அறம் செய்ய விரும்பு" ன்னு சொன்னாங்களே அந்தப் பாட்டியா?
வாலிபர்: இல்ல, அவங்க அவ்வை version 1
சர்பத்: அப்ப, இவங்களோட version என்ன?
வாலிபர்: இவங்க latest release, version 5
கயல்விழி, சர்பத்: ஓ....
சர்பத்: அப்போ, நீங்க யாரு?
வாலிபர்: நான் அதியமான் version 2
சர்பத்: அதியமான், அவ்வைக்கு ஆயுள் நீடிக்க நெல்லிக்கனி கொடுத்தார். நீங்க இந்த புது அவ்வைக்கு என்ன கொடுத்தீங்க?
அதியமான்: நான் ஆப்பிள் கொடுத்தேன்.
கயல்விழி: ஆப்பிள்ளா !!!
அதியமான்: அவ்வை up to date டா இருக்க நான் கொடுத்தது, ஆப்பிள் iPad.
இதற்குள் அவ்வை தியானம் முடித்து கண்கள்திறக்க...
அதியமான்: (அவ்வைக்கு வணக்கம் செலுத்திவிட்டு) அம்மா, தங்களைக் காண இந்த சிறுவர்கள் வந்துள்ளனர்.
கயல்விழி: அவ்வை பாட்டி, உங்ககிட்ட ஒரு question கேட்கணும்.
சர்பத்: இரு கயல், நம்ம பண்பாடு படி அவ்வைகிட்ட கேட்கவே கொஞ்ச கேள்விகள் இருக்கு.
கயல்விழி: சர்பத், அதுக்கெல்லாம் நேரம் இல்ல, சரி ஒரே ஒரு கேள்விவேணா கேளு.
சர்பத்: அவ்வையே, கொடியது என்ன?
அவ்வை: கொடியது கேட்கின் நாஞ்சில் சர்பத்
கொடிது கொடிது fast food கொடிது
அதனினும் கொடிது; அம்மாவே அதை வாங்கித் தருவது...
கயல்விழி: நொவ் இட்ஸ் மை turn; அவ்வையே, என் பாட்டி சுட்ட வடைய நரி ஒன்னு திருடிட்டு இந்தப் பக்கம் ஓடி போயிருச்சி. அது எங்கன்னு உங்களுக்கு தெரியுமா?
அவ்வை: நிச்சம் சொல்கிறேன் குழந்தாய், அதற்க்கு முன்னர், இந்த ஊரின் பெயர் என்ன சொல்?
சர்பத்: "கயல்விழிபுரம்"
அவ்வை: அது, கயல்விழின் தந்தை அமெரிக்கா சென்று டாலர்களை இங்கே கொட்டிய பிறகு. அதற்கு முன்னர் இந்த இடத்தின் பெயர் "நரிக்காடு".
சர்பத்: இது எனக்கு தெரியாதே!
அவ்வை: காடுகளை அழித்து இப்போது நீங்கள் புகுந்துள்ளது நரிகளின் வீட்டுக்குள். உண்ண உணவும் இல்லாமல், இருக்க இடமும் இல்லாமல் அண்டை தேசத்தில் புலிகளும், இங்கே நரிகளும் தவிக்கின்றன.
கயல்விழி: அப்போ பாட்டி, காடுகளை அழிக்கக் கூடதுன்னா நாம எங்க stay பண்றது?
அவ்வை: குழந்தாய், இவ்வுலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மண்புழுவுக்கும் சொந்தம். பரிணாம வளர்ச்சியில் பின்தங்கிய சிறுபான்மை மனித இனம் பெரும்பான்மை விலங்குகளையும், காடுகளையும் அழிப்பது நியாமா?
சர்பத்: தப்புதான் பாட்டி
அவ்வை: பசுவிடம் பாலைத் திருடிக்கொண்டு, பசு நமக்கு பால் கொடுக்கும் என்று தன் செயலை நியாப்படுத்திக் கொள்கிறது மனித இனம்.
கயல்விழி: நீங்க சொல்றது சரிதான் பாட்டி. இப்போ அந்த வடைய என்ன பண்ண?
அவ்வை: இருந்தாலும், திருடுதல் தவறு.
மரத்தின் பின்னால் மறைந்திருந்த நரியை அழைக்கிறார் அவ்வை. நரியும் தயக்கத்துடன் அவ்வையின் அருகில் வந்து நிற்கிறது. பின்பு தன்னிடம் இருக்கும் வடையை அவ்வையிடம் தருகிறது. அதை
அவ்வை: "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை"
என்று வடையை பிட்டு மூவரிடமும் கொடுக்கிறார். மூவரும் வடையை மகிழ்ச்சியுடன் உண்கின்றனர்.
---சுபம்---