cookie

Monday, August 20, 2012

கருப்பு பெட்டி - பாகம் 2

பாகம் 1 - தொடர்ச்சி


கிருஷ்ணனை இனம் புரியாத கலவரம் ஆட்கொண்டது

"சீ சீ  அதெல்லாம் ஒன்னும் இல்ல, சுத்த மூட நம்பிக்கை" என்று சமாதானம் செய்துகொண்டு வேலையை தொடர்ந்தவர், சிறிது நேரத்திலேயே தன்னை அறியாமல் நிமிர்ந்து பார்த்தார். பார்த்தவுடன் உடலின் அனைத்து மயிர்க் கால்களும் சிலிர்த்து நின்றன...




ஒரு நிலையில்லாத பெண்ணைப் போன்ற உருவம் வெளியில் இருந்து வாசலின் வழியாக உள்நோக்கிச் சென்றது. அடுத்த சில நொடிகளில் கிருஷ்ணன் அமர்ந்திருந்த வராண்டாவில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைந்தது. இந்த அதிர்ச்சியில் தன்னை அறியாமல் வந்த கூச்சலை உணர்ந்த கிருஷ்ணன் உடனே வீட்டைப் பூட்டி விட்டு மிதிவண்டியை கிளப்பினார்.

சிறிது நேரம் சந்தையில் சுற்றி விட்டு, திரைஅரங்க வாசலில் மனைவிக்கு காத்திருந்தார். படம் முடிந்து  வெளியே வரும் மனைவியை பார்த்து ஓரளவு அறுதல் அடைந்தார். மகன் ஏற்க்கனவே தூங்கி இருந்தான். ஆறு கால்களும் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கின. ராணியின் தங்கை, பார்த்த படத்தை விமர்சித்துக் கொண்டிருந்தார். சம்பிரதாயத்துக்கு மட்டும் படம் எப்படி இருந்தது என்பதை மனைவியிடம் கேட்டு விட்டு வந்த பதிலை வாங்கிக் கொண்டு தொடர்ந்து நடந்தனர். வீட்டில் நடந்தது பற்றி இப்போது சொல்லி அனைவரையும் பயமுறுத்த வேண்டாம் என முடிவு செய்தார் கிருஷ்ணன். இரவு உணவு உண்ட பின்பு அனைவரும் தூங்க கிருஷ்ணன் மட்டும் எதோ யோசனையில் மூழ்கி இருந்தார். பின்பு அவரும்.


விளக்கம்       


 மறுநாள் காலையில் வழக்கம் போல் கல்லூரிக்குச் சென்றாலும், வழக்கமாக பணியில் ஈடுபட அவரால் முடியவில்லை. இதைப் பற்றி யாரிடம் கேட்பது என்று தெரியாமல் குழம்பினார். தன் பயத்தையும் வெளியே கட்டிக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை. இறுதியில் தன் மரியாதைக்கும் நம்பிக்கைக்கும் உரிய இயற்பியல் பேராசிரியர் முனைவர்  ராமசாமியிடம் நடந்தவைகளை கூறினார். 

அனைத்தையும் பொறுமையாக கேட்ட பேராசிரியர்,

இந்த உலகத்ல உயிருள்ள ஒவ்வொரு ஜீவராசிக்கும் "உயிர் மின்சார" சுழற்சி இருக்கு, அது 60 Hz ல இருக்கும். அந்த மின்சாரம் தான் இதயம், மூளை, நரம்பு மண்டலம் என முக்கியமான உறுப்புகள் வேலை செய்ய உதவுது. இது கூட சம்மந்தம் ஆன ஆற்றல் விதி ஒன்னு இருக்கு. அது என்னன்னா "ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனா ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்ற முடியும்". இந்த மனித வாழ்வு அல்லது உயிர்னு  நாம சொல்றதுல மூன்றில் இரண்டு பங்கு சிந்தனையிலும் ஆன்மாவிலும் இருக்கு, ஒரு பங்கு மட்டும் தான் இந்த உடம்பு. இரண்டு பங்கு உயிர் கண்ணுக்கு தெரியாத ஆற்றலா இருக்குதுன்னா, நாம இறந்ததுக்கு அப்புறம் அந்த ஆற்றல் எங்க போகுது? science படி அது அழிஞ்சி போக வாய்ப்பு இல்ல.

அதனால ஒரு மனிதர் இறந்த பிறகு இந்த உயிர் சக்தி உடம்ப விட்டு வெளிய போயி சுற்று சூழல் கூட கலந்ரும். அப்புறம் அது செயல் பாடற்ற நிலை ஆற்றலா மாறிடும். இல்லேன்னா ஒரு பொருள் அல்லது இடம்னு எதுகூடவாவது சக பிணைப்ப உண்டாக்கிக்கும். அப்படியும் இல்லேன்னா electron பற்றாக்குறை உள்ள எது கூடவாவது சேர்ந்துக்கும். சரி அப்படி அது அமைதியாகாம unstable லா அலைஞ்சா என்னாகும்னா... 

  1. ஒரு வகையான மின்காந்த அலைகள் உண்டாகும். அது வீட்ல இருக்குற electric devices ச affect பண்ணும்.

 2. வெப்பநிலை மாற்றம் இருக்கும். சாதாரணமா 10 இருந்து 30 டிகிரி பாரன்ஹீட் வரைக்கும் temperature குறையும் அல்லது கூடும்.   

 3. இது ஒளி அலைகளையும் பாதிக்கும் அதனால சில சமயத்ல திடீர்னு ஏதோ  உருவம் எல்லாம் தெரியும்.

புற உலகத்துல இந்த உயிர் மின்சாரத்தின் ஆற்றல்னு பாத்ததா, நீங்க lab ல பாத்திருப்பீங்களே! ஒரு சட்டக் காந்தம் அவ்வளவுதான். அப்படித்தான்  physics சொல்லுது. இது இல்லாம "பேய்" எல்லாம் சுத்த பொய். 

 England ல இருந்த ஒரு மனோதத்துவ வல்லுநர் magnetic field பத்தி ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லைனு prove பண்ணி இருக்கார்.   அதை மக்களுக்கு காட்டுறதுக்காக பேய், பிசாசு இருந்துச்சின்னு  சொன்ன  800 வருட பழங்காலக் கட்டடத்ல பேயினால் பாதிக்கப் பட்டவங்கள வச்சி ஆராய்ச்சி பண்ணார். அதுல பேய் மற்றும் பிசாசு பிடிச்சவங்க, அவங்களுக்கு  பேய் பிடிச்சப்போ திடீர் சத்தம் கேட்டதாவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்ட தாவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைஞ்சி போச்சின்னும் சொன்னாங்க.  

பேய், பிசாசு இருக்குன்னு சொன்ன அந்த இடத்துல இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில சில நரம்புகள் பாதிக்கப்பட்டவங்க அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுறவங்க இந்த இடத்துக்கு போகும் போது அந்த அதீத காந்தபுலம் அவங்க சொல்ற மாதிரி பிரம்மைகளை  ஏற்படுத்தி இருக்கலாம், அதனால பேயோ, பிசாசோ அதைச் செய்யலனு விஞ்ஞானக் கருவிய வச்சி அதை நிரூபிச்சார்.  

அதனால என்னோட சொந்த அபிப்ராயம், பேய் பிசாசு இது எல்லாம் நம்ம மனசுக்குள்ள உள்ள பயம் கலந்த ஒரு கற்பனை. 

ஆனா நீங்க முற்ப்போக்கு வாதியாச்சே கிருஷ்ணன்! இதை எல்லாமா நம்புவீங்க?

       இல்ல sir நான் நம்பல, இருந்தாலும் விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு தெளிவு படுத்திகிட்டா கொஞ்சம் நிம்மதி அதான்...

இருவரும் சிரித்துக் கொண்டனர்...     

உங்க wife கிட்ட இதப்பத்தி எதாவது பேசுனீங்களா?

      இல்ல sir, என் wife க்கு இதுல எல்லாம் நெறைய நம்பிக்கை இருக்கு. அதனால தேவை இல்லாம பயமுறுத்த வேண்டா மேன்னு யாரு கிட்டயும் சொல்லல.
  
நல்லது, நான் அடுத்த வாரம் ஒரு presentation காக வெளியூர் போறேன். இது பத்தி உங்களுக்கு வேற எதாவது தெரியனும்னா நான் ஊருக்கு போயிட்டு வந்த பிறகு பேசலாம்.

பேராசிரியரின் பதில் போதுமான நம்பிக்கை அளித்ததால், நடந்தவைகளை அன்றே முற்றிலும் மறந்து இயல்பான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அடுத்த சில நாட்களாக எந்த விதமான சம்பவமும் நிகழாததால் கிருஷ்ணன் முற்றிலுமாக அமானுட நிகழ்வுகளை மறந்தார்.

மகன் நான்கு கால்களால் நடக்க (தவழ) ஆரம்பித்தான், கிருஷ்ணன் மற்றும் ராணியிக்கு அவர்களுடைய மொத்த மகிழ்ச்சியும் அழகான குட்டி உருவத்தில் அங்கும் இங்கும் திரிவதை கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர்.

முன்பு போல் இல்லாமல் இப்போது மகன் அமுதன் இரவில் அடிக்கடி  முழிப்பதோ, அழுவதோ இல்லை அதனால் கிருஷ்ணன் இரவில் தடையில்லாமல் தூங்க முடிந்தது.

ராணியின் தந்தை ஜாதகங்களில் நிறைய நம்பிக்கை உடையவர். அமுதன் பிறந்த போது, பிறந்த நேரத்தை வைத்து கணித்து சில எழுத்துக்களை கூறி, அந்த எழுத்துக்கள் எதாவது ஒன்றில் குழந்தையின் பெயர் தொடங்க வேண்டும் என்றார். திருமணத்திற்கு முன்பே குழந்தையின் பெயரை முடிவு செய்துவிட்ட கிருஷ்ணன் அதை ஏற்க்கவில்லை.

"அமுதன்" என்ற பெயருக்கான காரணத்தை இவ்வாறாக ராணியிடம் விளக்கினார் கிருஷ்ணன்.

  1.  முதல் எழுத்து "அ" (A) வில் தொடங்க வேண்டும். அப்போதுதான் வகுப்பறையிலும், தேர்வரையிலும் முதலில் அமர்வான். ஆசிரியரின் முதல் கவனம் இவன் மேல் இருக்கும். 

  2. பெயரின் மொத்த எழுத்துக்கள் நான்குக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


 மீண்டும்... 


அன்று இரவு ஏதோ சத்தம் கேட்டு கிருஷ்ணன் விழித்துக் கொண்டார். மணி சரியாகத் தெரியவில்லை. மின் மினியாய் ஒளிர்ந்த இரவு விளக்கில் சுற்றிலும் பார்த்தார். இருவருக்கும் இடையில் படுத்திருந்த அமுதனை காணவில்லை. விளக்குக்கு உயிர் கொடுத்து மனைவியை எழுப்ப விரும்பாததால் அந்த சிறு வெளிச்சத்திலேயே விழிகளை அகலமாக்கி உற்று நோக்கினார். அவர் கேட்ட அந்த ஒலியின் மூலம் சமையல் அறை கதவின் அருகே அமர்ந்திருந்த அந்த சிறு உருவம், அமுதன். அழுகையா அல்லது சிரிப்பா என்று சொல்ல முடியாத சிறு சப்தம். பரண் மேல் எதையோ பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.

அருகில் செல்லச் செல்ல அமுதனின் முகம் கொஞ்சம் தெளிவாக தெரிந்தது. அதுவரை சிரிப்பதுபோல சப்தம் செய்தவன் கிருஷ்ணனை கண்டவுடன் சட்டென்று மௌனமானான். பின்பு மௌனம் அழுகையானது. அறையின் விளக்கு உயிர் கொண்டு எழுந்தது ராணியால்.

ஏங்க அழறான்?
 
          தெரியல ராணி, திடீர்னு முழிச்சி பார்த்த இங்க வந்து உட்கார்ந்திருக்கான். சிரிச்சிகிட்டுதான் இருந்தான்.

எங்க பாட்டி சொல்லிருக்காங்க, குழந்தைங்க கண்ணுக்கு கடவுள் தெரிவாராம், கடவுள பார்த்து குழந்தைங்க சிரிக்குமாம்!
   
          ........

கிருஷ்ணன், ராணியின் நம்பிக்கையை கலைக்காமல் தனக்குத் தானே மனதுக்குள் மட்டும் கூறிக்கொண்டார் "கடவுளா இருந்தா சரி".

அமுதனை வாரி அனைத்து தோளில் சாய்த்து தூங்கச் சொல்லி  கட்டாயப்படுத்தினார் ராணி.  அன்று மூவருக்கும் சிவராத்திரி.


இரண்டு வாரங்கள் இனிமையாக சென்ற பிறகு. ஒரு ஞாயிறு நண்பகல் மதிய உணவுக்காக கிருஷ்ணனும் ராணியும் அமர்ந்தனர். எது முதலில் வந்தது என்று தெரியாவிட்டாலும் எதை முதலில் சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்த ராணி, முட்டையில் கருவாகி குழம்பில் கறியாகிக் காத்திருந்த அனைத்தையும் கிருஷ்ணனுக்கு இறைத்து, தன் சமையலின் சுவையை கணவர் எவ்வாறு ருசிக்கிறார் என்று அறிய காத்திருந்தார். 

இந்தக் கோழி திரி சங்கின் மறுபிறவியா?  தெரிய வில்லை, கிருஷ்ணனின் தொண்டையை தாண்ட மறுத்தது, அங்கேயே சிக்கிக் கொண்டது. இவ்வளவு பார்த்து பரிமாறிய ராணி தண்ணீரை மறந்தார். தண்ணீரை மறப்பது அவருக்கு புதிதல்ல. கிருஷ்ணனிடம்   வரம் வாங்கும் முன்பு சமையல் அறை நோக்கி ஓடினார் தண்ணீரைத் தேடி. கிருஷ்ணனின் விக்கல் எச்சரிக்கை மணியாக ஒலித்தது.  அதுவரை அமைதியாக தொட்டிலில்  தூங்கிக் கொண்டிருந்த அமுதன் தொட்டிலை விட்டு இறங்கும் முயற்சியில் வெற்றி வாய்ப்பை இழந்து கீழே விழுந்து மூச்சு நின்று போகும் அளவுக்கு கதறினான். 

அமுதனின் அழுகுரல் கேட்டு, டம்ளரின் கால் பகுதி  நிரம்பிய  நீரைத் தூக்கிக் கொண்டு அமுதனிடம் ஓடினார் ராணி அவனை தூக்க. அவர் சமையலறையை விட்டு வெளியேறவும், பரண் மேலிருந்த அண்டா கீழே விழவும் சரியாக இருந்தது. சப்தம் கேட்டு விக்கலுடன் வந்த கிருஷ்ணன் கையில் தஞ்சம் அடைந்தது டம்ளர். சில நொடிகளாக வெளியேற துடித்துக் கொண்டிருந்த உயிருக்கு நீரால் அணைபோட்டார் கிருஷ்ணன். அருந்திய கால் டம்ளர் நீர் வற்றும் அளவுக்கு வரங்களை வாரி வழங்கினார் ராணிக்கு.

சோறு வைக்கிறதுக்கு முன்னால தண்ணிய வைன்னு உனக்கு எத்தன தடவ சொல்லணும் அறிவே வராதா? 

துக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டதால் தற்காலிக ஊமையானார் ராணி. விழிகள் மட்டும் கங்கையை உற்பத்தி செய்து கொண்டிருந்தன. சமயலறையின் உள்ளே சென்று பார்த்த கிருஷ்ணன், மேலே உள்ள பலகையில் இருந்த "அண்டா" எவ்வாறு இறக்குமதியானது என்று புரியாமல் விழித்தார். சரியான சமையத்தில் ராணி வெளியே போயிருக்கா விட்டால்?  ஒருவேளை ஒத்த நிகழ்வாக இருக்கலாம் என்று தேத்திக்கொண்டு வெளியே வந்த கிருஷ்ணன் இரண்டு குழந்தைகள் அழுது கொண்டிருக்க முதல் குழந்தையை சமாதானம் செய்தார்.

இன்றைய நிகழ்வு கிருஷ்ணனுக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கியது. எந்த சலனமும் இல்லாமல் ராணி உறங்கி விட்டார், அமுதனும். சிறுது நேரம் சென்ற பிறகு ஏதோ முனுமுனுப்பு சப்தம் கிருஷ்ணனின் தூக்கத்தை  விரட்டியது. மூச்சுவிட முடியாமல் யாரோ சங்கடப்படுவது போன்ற சப்தம். ராணிக்கு சுவாசக் கோளாறு உள்ளது. ஒருவேளை ராணியாக இருக்கலாமோ என்று ராணியை எழுப்பினார்.

திடுக்கிட்டு எழுந்த ராணி, பயத்தையும், பரபரப்பையும் கண்ணில் காட்டினார்.

  
 என்னாச்சு ராணி? எதுவும் பிரச்சனையா?

        என் கழுத்த, என் கழுத்த 

உன் கழுத்த, என்னாச்சி சொல்லு?

        என் கழுத்த யாரோ பிடிச்சி நெரிக்கிற மாதிரி இருந்ததுங்க.

கனவுலையா?
         
         இல்லங்க, நிஜமாத்தான், என்னால மூச்சு விட முடியல, கத்தலாம்னா அதுக்கும் முடியல. நீங்க என்ன எழுப்பின உடனே போயிரிச்சி. 

நீ எதையோ நினைச்சி பயந்திருக்க, அதனால தான் இந்தமாதிரி கனவெல்லாம் வருது, தண்ணிய குடிச்சிட்டு தூங்கு. எல்லாம் சரியாப் போகும் என்று கூறிவிட்டு விளக்கை அணைக்கச் சென்ற கிருஷ்ணனிடம்.

          light ட off பண்ணாதீங்க, எனக்கு பயமா இருக்கு.

என்ன பயம், நான் தான் இருக்கேன்ல, சும்மா எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு இருக்காத. கண்ண மூடி தூங்கு.

         தயவு செஞ்சி  light ட off பண்ணாதீங்க...

ராணியை பார்க்கவே கிருஷ்ணனுக்கு பாவமாக இருந்தது. 

காலையில் மூவரும் வெகுநேரம் கழித்தே விழித்தனர். இன்று அலுவலகம் செல்ல வேண்டாம் எனும் ராணியின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அலுவலகத்திற்கு விடுப்பு விண்ணப்பத்தை அனுப்பினார் கிருஷ்ணன்.

       வேற வீட்டுக்கு மாறி போயிடலாங்க, நேத்துல இருந்து எனக்கு ஒவ்வொரு நிமிசமும் பயம்ம்ம்மா இருக்கு.

  வீடு மாத்துறது என்ன அவ்வளவு சாதரணமா?

        இடம் மாறினா, மனம் மாறும்னு எங்க பாட்டி சொல்லிருக்காங்க..

  ........
       

சிறிது நேர வாக்கு வாதத்திற்குப் பிறகு வேறு வழியில்லாமல் சம்மதித்தார் கிருஷ்ணன். அதிர்ஷ்ட வசமாக அடுத்த தெருவிலேயே ஒரு வீடு காலியாக இருந்தது. இப்போது இருக்கும் வீட்டின் உரிமையாளர் முன்பணத்தில் இருந்து இரண்டு மாத வாடகையை கழித்துக் கொண்டுதான் மீதியை கொடுத்தார். நண்பரிடம் கடன் வாங்கி புது வீட்டிற்கு முன்பணம் கொடுத்து குடிபெயர்ந்தனர்.

புது வீட்டிற்கு மாறியது  ராணிக்கு மன தைரியத்தை தந்தது.  சில நாட்களிலேயே இயல்பு வாழ்க்கைக்கு இருவரும் திரும்பினர். இந்த வீடு குளத்துக்கு அருகில் இருந்தது. கொசுத் தொல்லையும் அவ்வளவாக இல்லாதது ஆச்சர்யமாக இருந்தது.


ஒரு மாதத்திற்குப் பின்... 

அன்று இரவு இருவரும் விரைவாகவே நித்திரையில் ஆழ்ந்தனர். சிறிது நேரம் அமுதன் மட்டும் அவனுக்கு மட்டும் புரியும் மொழியில் ஏதோ பேசிவிட்டு உறங்கி விட்டான். மணி சரியாக தெரியவில்லை, ஆனால் நள்ளிரவு. கதவு திறக்கும் சப்தம் கேட்டு முழித்தார் கிருஷ்ணன். யாரோ செல்வது தெரிந்தது. அருகில் ராணி, குழந்தை இருவரும் இல்லை. உடனே எழுந்து அவர்களை பின் தொடர்ந்தார். நடந்து சென்றவர்கள் ஓடத் தொடங்கினர். கிருஷ்ணனும் ஓடினார். அந்த உருவம் குளம் இருந்த திசை நோக்கி வேகமாக ஓடியது. தன்னால் முடிந்த அளவு வேகமாக ஓடி அந்த உருவத்தை பிடித்தார். அந்த உருவங்கள் ராணியும் குழந்தையும்.  வழுக்கட்டாயமாக இழுத்து வந்தார் ராணியை.

ராணியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு, குழந்தையோடு வீட்டுக்கு வெளியில் காவல் நின்றார். காலை 06:00 மணிக்கு அழகாபுரிக்கு தந்தி பறந்தது.

"உடனே புறப்பட்டு வரவும். நலம்,  பயப்படவேண்டாம்".

ராஜரத்தினமும் அவர் மனைவியும்  08:45 க்கு கிருஷ்ணன் வீட்டில், நடந்தவைகளை கூறினார் கிருஷ்ணன். 

மாப்ள இது ஏதோ பயந்த கோளறு மாதிரி தெரியுது, கருப்பசாமி கோவில்ல பூச பண்ணா எல்லாம் சரியாயிடும். இதுக்காக நீங்க வேற மாதிரி முடிவு...

இடைமறித்த கிருஷ்ணன், மாமா நீங்க கண்டதையும் நினைக்காதீங்க. பயந்த கோளாறா, அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது. ஒரு நல்ல டாக்டர் கிட்ட போனா சரியாயிடும். இந்த நிலைமைல ராணிய வீட்ல தனியா விட்டிட்டு நான் வேலைக்கு போக முடியாது. கொஞ்ச நாள் வேனா ராணி உங்க கூட ஊர்ல இருக்கட்டும். நான் டாக்டர் கிட்ட பேசிட்டு வந்து கூட்டிட்டுப் போறேன்.

அரை மனதுடன் மகளை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்றார் ராஜரத்தினம்.

பேய் என்பதை மட்டும் நம்ப முடியாமல்,  மன நோய் மருத்துவரைத் தேடிக்கொண்டிருந்தார் கிருஷ்ணன். இதற்கிடையில்  அழகாபுரியில் ராணியின்  நிலையில் எந்த மாற்றமும் இல்லை. எம்மதமும் சம்மதம் என தேவாலயம், பள்ளிவாசல் என அனைத்தையும் முயன்றுவிட்டார் ராஜரத்தினம். 

அன்று வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில், தேநீர் கடையின் முன்புறம் அந்த வித்தியாசமான புத்தகத்தைப் பார்த்தார் கிருஷ்ணன்.

"ஆவிகள் உலகம் "

விருப்பம் இல்லா விட்டாலும் அதை வாங்க ஏதோ ஒரு விசை அவரை செலுத்தியது. வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார் சில பக்கங்களை புரட்டினார். பல அமானுட செய்திகள், எதுவும் நம்பும் படியாக இல்லை. நடுப்பக்கத்தில் இருந்த செய்தி, இதுவரை இந்த புத்தகத்தில் பார்த்ததிலேயே உச்சகட்ட கோமாளித்தனம். "ஆவிகளுடன் பேசலாம் -  மீடியம் ஆவி அனிதா".

மீடியம் என்ற வார்த்தையை அன்று தான் கேள்விப்படுகிறார் கிருஷ்ணன். அதற்க்கான விளக்கமும் அங்கே கொடுக்கப் பட்டிருந்தது. திருநேல்வேலியில் உள்ள ஒரு விலாசமும், தொலைபேசி எண்ணும்  கொடுக்கப் பட்டிருந்தது. தன் நம்பிக்கையை ஒருபுறம் வைத்து விட்டு, முயன்று பார்க்கலாம் என்று தோன்றியது கிருஷ்ணனுக்கு. அந்த எண்ணுக்குப் பேசி, நேரில் ஞாயிறு அன்று  சந்திக்க நாள் குறித்து விட்டார்.

"ஆவி" அனிதாவை சந்திக்க தன்னுடன் வருமாறு ராஜரத்தினத்தை அழைத்தார். அவர் தன் மகளுக்கு "ஆவி" பிடிக்க வில்லை என்று விவாதிக்க ஆரம்பித்து விட்டார். 

மாமா, நானும் இதெல்லாம் நம்ப மாட்டேன், அது உங்களுக்கே தெரியும் இருந்தாலும் ஒரு முயற்சி பண்ணிப் பாப்போமேன்னு தான். 


வேறு வழியில்லாமல் உடன் வர சம்மதித்தார் ராஜரத்தினம்.

ஞாயிறு காலை 10:00 மணிக்கு அந்த விலாசத்தை அடைந்தனர் இருவரும். குறைந்தது 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியை எதிர் பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். 23 வயதுக்கும்  குறைவான ஒரு பெண் (சிறுமி போல் தோற்றம்). 

சொல்லுங்க, உங்க பிரச்சனை என்ன?

      கிருஷ்ணன் விவரித்தார்.

இதுவரைக்கும் இங்க வந்தவங்க ரொம்ப பேர் சொத்து விவகாரமாத்தான் வந்திருக்காங்க. உங்க பிரச்சனை வேற மாதிரி இருக்கு. முயற்சி பண்ணி பாக்குறேன் ஆனா இப்போ எதுவும் உறுதியா சொல்ல முடியாது.

      எனக்கு உங்க கிட்ட சில கேள்விகள் கேட்கனும் மேடம். கேட்கட்டுமா?

தாராலமா கேளுங்க   
    
    இத நான் முதல் தடவையா அனுபவ படும் போது, physics department professor கிட்ட இத பத்தி கேட்டேன். அவர் உயிர் மின்சாரம் பத்தி சொன்னார். அப்புறம் இங்கிலாந்து ல யாரோ இது சுத்த பொய்ன்னு நிரூபிச்சதா சொன்னாரு.


உயிர் மின்சாரம் உண்மைதான், அந்த England news பத்தி நானும் படிச்சிருக்கேன். science ல பல நிரூபணங்கள் அனுமானத்தின் அடிப்படையில் தான் ஆரம்பிக்கும். அனுமானம் சரீன்னா  நிரூபணம் சரி. அனுமானம் தவறுன்னா நிரூபணமும் தவறு. நியூட்டன் புவிஈர்ப்பு விசை பத்தி சொல்றதுக்கு முன்னாலையே அது இருந்தது. கொலம்பஸ் கண்டு பிடிக்கிறதுக்கு முன்னாலையே அமெரிக்கா (பேரு வேறையா இருக்கலாம்)  இருந்தது. அந்த மாதிரி நம்மால உணரமுடியாத பல விசயங்கள இல்லேன்னு சொன்னா அது உண்மை ஆகாது. நம்ம கிட்ட அத கண்டு பிடிக்கிறதுக்கான கருவி இல்லேன்னு சொல்லுங்க ஆனா அப்படி ஒன்னே இல்லேன்னு சொல்லாதீங்க. இது என்னோட தாழ்மையான கருத்து.

      அனிதா சொல்வது புரிவது போல் இருந்தாலும் இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் எதோ நம்பிக்கையில் அவர் சொல்வதற்கு சம்மதிக்க தொடங்கினர்.

கிருஷ்ணன் சார்,  நாளைக்கு உங்க wife இங்க கூட்டிட்டு வாங்க, நான் பேசுறேன். 

    சரி மேடம்.

கிருஷ்ணன், ராணி, அமுதன், ராஜரத்தினம் நால்வரும் அனிதாவை பார்க்க காத்துக் கொண்டிருந்தனர். இப்போது ராணியிடம் எந்த மாற்றமும் இல்லாதது கிருஷ்ணனுக்கு சற்று வியப்பாகவே இருந்தது. அழைப்புக்கு பின்பு இருவரும் உள்ளே சென்றனர். ராணியை மட்டும் அழைத்தார் அனிதா, குழந்தையும் கிருஷ்ணனும் வெளியே காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து ராணியை  வெளியே இருக்கச் சொல்லிவிட்டு கிருஷ்ணனை அழைத்தார். கிருஷ்ணன் குழந்தையை ராணியிடம் கொடுத்து விட்டு உள்ளே வந்தார். 

கிருஷ்ணன் சார், உங்க wife கிட்ட எந்த மாற்றமும் இல்ல. அவங்கள எந்த விதமான சக்தியும் அலைகழிக்கல.

என்று கூறும்போதே வெளியில் நின்று கொண்டிருத்த watchman உள்ளே வந்தார் ராணியை இழுத்துக்கொண்டு, உடன் ராஜரத்தினம்,

மேடம், இந்தம்மா குழந்தையோட ரோட்டப்பாத்து ஓடினாங்க, நான் தான் புடிச்சி இழுத்துக் கிட்டு வந்தேன். என்று கூறி watchman ராணியை உள்ளே விட்டுச் சென்றார்.

இப்போது ராணி உள்ளே வரும் போதே அனிதா புரிந்து கொண்டார். குழந்தையை ராணியிடம் இருந்து பறித்துக் கொண்டு, குழந்தையை மட்டும் அருகில் இருந்த அறையில் போட்டு அடைத்தார். இதைக் கண்டு பதறிய கிருஷ்ணன்.

என்ன madam பண்றீங்க? சின்னக் குழந்தையை போயி..

    உங்க மனைவிய கவனிங்க (முறைத்துக் கொண்டிருந்த ராணியின் கண்கள் சாதாரண நிலைக்கு திரும்பின, இதை கண்டு ஏதும் புரியாமல் நின்றார் கிருஷ்ணன், அப்போது உள்ளே குழந்தையின் அழுகை கேட்டது.)

     கிருஷ்ணன் சார்,  அலைக்கழிக்கப்படுவது உங்க மனைவி இல்ல, உங்க குழந்தை. உங்க குழந்தை மூலமா மனைவி. இரண்டு பேரையும் பிரிச்சி வைங்க உங்க மனைவி normal லா இருப்பாங்க.

அதிர்ச்சியில் உறைந்தார் கிருஷ்ணன்.

குழந்தையை நீங்க எடுத்துக் கோங்க sir, நான் சொல்ற வரைக்கும் உங்க மனைவி கிட்ட கொடுக்காதீங்க.

சரி

அமுதனை தாத்தாவுடன் ஊருக்கு அனுப்பி விட்டு, கிருஷ்ணனும் ராணியும் அனிதாவுடன் 553 வளமனை முதல் தெருவுக்கு சென்றனர். எதிர்பார்த்த படி வீடு இன்னும் காலியாகவே இருந்தது. உரிமையாளரிடம் இருந்து சாவியை வாங்க சென்றனர் கிருஷ்ணனும், ராணியும். அனிதா அந்த வீட்டைப் பற்றி அருகில் விசாரிக்கச் சென்றார். யாரும் அந்த வீட்டைப் பற்றி பேச தயாராக இல்லை. கடைசியாக ஒரு மூதாட்டி அந்த வீட்டின் முன்கதையை கூறினார். 

சில வருடங்கள் முன்பாக அந்த வீட்டில் வாழ்ந்த குடும்பத்தில் இருந்த ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலையின் காரணம் பலவாறு கூறப்படுகிறது. அதன் பின் வெகு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டிற்க்கு குடிவந்த வயோதிக தம்பதிகளில் மனைவி மட்டும் இறந்தார். பின்பு பல  நாட்கள் கழித்து கிருஷ்ணன் குடும்பம் வந்தது. ஆனால் நல்ல வேலையாக அசம்பாவிதம் நடக்கும் முன்பாகவே சென்று விட்டனர். இந்த வீடு பற்றி யாரும் வெளியில் பேசுவது கிடையாது ஏனெனில் பேசினாலே ஆபத்து என்கிற பயம் தான். நான் சாகப் போற கிழவி தான, என்று கூறி விட்டுச் சென்றார்.

சாவியை வாங்கிக் கொண்டு வந்த கிருஷ்ணன், அனிதாவிடம் கொடுத்தார். 

இப்போ என்ன பண்ணப் போறீங்க madam ?

   அந்த "ஆத்மா" கிட்ட பேசிப் பார்க்கலாம். கண்டிப்பா இந்த "ஆத்மா" பேச வரும். 

கிருஷ்ணன் கூறியது அனிதாவுக்கு நினைவுக்கு வந்தது. சமையல் அறை கதவுக்கு மேலிருக்கும் பரண். கிருஷ்ணனிடம் சொல்லி மச்சி வீடு போலிருக்கும் அந்த சிறிய அறையில் என்ன இருக்கிறது என்று பார்க்கச் சொன்னார். 

இங்க ஒரு கருப்பு பெட்டி இருக்கு

அத கீழே கொண்டு வாங்க sir. 

கிருஷ்ணன் பெட்டியை கீழே இறக்க முயல, ராணி வெறியுடன் கிருஷ்ணனின் காலை பிடித்து இழுத்து வீசினார். ராணியின் பற்கள் நறநறக்கும் ஓசை காதுகளை கூசச் செய்தது. 

அனிதா seance  முறை மூலம் அந்த ஆத்மாவை தொடர்பு கொள்ள முயன்றார். அனிதாவும், ராணியின் உடலில் இருக்கும் ஆத்மாவும் ஏதோ தங்களுக்குள்  மொழி இல்லாமல் பேசிக் கொண்டனர். 

சிறிது நேரம் சென்று கிருஷ்ணனிடம் சென்ற அனிதா 

உங்க மனைவிகிட்ட இங்க இருக்குற ஒரு வயசானவங்க இறந்து போன அந்த பொண்ணப் பத்தி சொல்லி இருக்காங்க. வீடு சுத்தம் பண்ணும் போது ராணி அந்த கருப்பு பெட்டிய பாத்திருக்காங்க.

கவலைப்படாதீங்க, இனி உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. நான் house owner கிட்ட பேசுறேன். இந்த வீட்டை இன்னும் 5 வருசத்துக்கு வாடகைக்கு விட வேண்டாம். அதுக்கப்புறம் என்ன வேனா பண்ணிக்கலாம், no problem 

5 வருஷம் என்ன கணக்கு?

    இந்த ஆத்மாவோட மீதி இருக்குற life time

எங்களுக்கு இனி தொல்லை இருக்காதுள்ள?

    தொல்லை இருக்காது, இருந்தாலும் வேற எங்காவது தூரமா போயிடுங்க.

அந்த கருப்பு பெட்டி ல என்ன இருக்கு madam?

     உயிர் மின்சாரம் !!!

அப்ப பேய் உண்மையா?

   ..........................

முற்றும்... 

Thursday, August 16, 2012

கருப்பு பெட்டி

உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டது...  

இடம்: கோவில்பட்டி 
நாள்:  மார்கழி 2 1978
நேரம்: காலை 04:45


"கட்டளை நாள் இரண்டு, கட்டளைக் குரியவர் சுப்பையா. பக்தகோடிகள் அனைவரும் வந்து அம்மனை தரிசித்து, அம்மனின் அருள் பிரசாதம் பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இவன் கோவில் விழா கமிட்டியார்", என்று அதிகாலையில் சேவலுக்கு முன்பாகவே கூவி அழைத்து கோவிலுக்கு கூட்டம் சேர்க்கும் வேலை தொடங்கியது.

சுப்பையா காசு கொடுத்து வாங்கிய அன்றைய கோவில் மரியாதையை பெருமையுடன் ஏற்றுக்கொண்டார். பொங்கல் பிரசாதம் பெற்றுக்கொண்டு கோவிலின் முன்புறம் நடை பெற்றுக் கொண்டிருந்த  சமய உரையில்  தன்னையும் இணைத்துக்கொண்டார். அப்போது இறைவன் எங்கிருக்கிறான், எப்படிப்பட்டவன் என்று யாரோ கேட்ட கேள்விக்கு, வெள்ளிக் கம்பிகளின் காட்டுக்குள் புதைந்த இரு கண்களை மட்டும் கொண்ட ஒரு ஆத்மா நம்மாழ்வாரின் பாடல் ஒன்றை "திருவாய்மொழி" ந்தது      


உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.
உளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்
உளனென இலனென அவைகுணமுடைமையில்
உளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே

அப்போது துர்சக்திகள்? என்ற கேள்விக்கு சிறிய அமைதிக்குப்பின் " இறைவன் அனைவரையும் காப்பார்" என்று மட்டும் கூறி உரைக்கு உறை போட்டுவிட்டு புறப்பட்டுவிட்டார்.  சுப்பையாவும் வீட்டை நோக்கி...

வளமனை தெரு   

         வளமனை முதல்  தெரு, வீட்டு எண் 553 னை அடைந்தார். வெளியில் போடப்பட்ட பூட்டை திறந்து உள்ளே நுழைந்தவருக்காக காத்திருந்த "அதிர்ச்சி" அவரை சந்தித்தது. பரண் மேல் இருந்த பொருட்கள் தரையில், இரும்புக் கட்டிலில் படுத்திருந்த அவர் மனைவி காசியம்மாவின்   தலையில் அவர்கள் திருமணம் முடிந்து வந்த போது உடன் வந்த வெண்கலப் பானை சத்தமில்லாமல் அமர்ந்திருந்தது.  

          பலமுறை மனைவியிடம் கேட்ட "உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா?" என்ற கேள்விக்கு விடை பானையில் ஒட்டிக் கொண்டிருந்தது.  அழவும் தெம்பில்லாமல் சாய்ந்தார். சிறுது நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் சூழ்ந்து கொண்டார்கள். தாமதமாக வந்தவர்களின் கேள்விக்கு முதலில் வந்தவர்கள்  பதில் அளித்துக் கொண்டிருந்தார்கள்.

         உடம்பு சரியில்லாம தூங்கிகிட்டு இருந்த அம்மாவை எழுப்ப வேண்டாம்னு கதவ வெளியில பூட்டு போட்டுட்டு அவரு மட்டும் கோவிலுக்கு போயிருக்காரு. திரும்ப வந்து பார்க்கும் போது  இப்படி ஆயிரிச்சி. பரண் மேல இருந்த "பான" உருண்டு அந்தம்மா மேல விழுந்து இறந்துட்டாங்க.    ஆனா அவ்வளவு கனமான பான எப்படித்தான் கீழ விழுந்ததோ தெரியல. பாவம் அவரு வயசான காலத்துல வேற யாரும் இல்ல. என்று பலரும் தங்களுக்கு தெரிந்த செய்திகளுக்கு கண் காது மூக்கு இணைத்து உருவம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

1979 - அழகாபுரி 

காமராசர் மாவட்டம், விருதுநகர் அருகில் உள்ள குக்கிராமம்

             "ராணி" அந்த வீட்டில் முதல் பெண். ராணி என்பதோடு அல்லாமல் அவருக்கு இன்னும் சில பல பேர்கள் இருந்தன. அன்பு, அமைதி, அறியாமை, வெகுளி.ராணி மட்டுமல்லாமல் அவரை தொடர்ந்து ஆண், பெண் , ஆண் , ஆண் என மேலும் நான்கு குழந்தைகள். அன்றைய தினம் ராணியைப்  பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதால் தன்னிடம் இருப்பதிலேயே சிறந்த தாவணியை கட்டிக்கொண்டு பயத்துடன் காத்திருந்தார். ராணிக்கு வயது 18.

       ஆலமர பிள்ளையாரை சுற்றி தன் அன்றைய தின நேத்திக் கடனை செலுத்தி விட்டு நின்றது அந்த பேருந்து. படிகளில் இறங்கும் ஒவ்வொருவரையும் ஆவலோடு அலசினார் இராஜரத்தினம். கடைசியில் இறங்கிய கிருஷ்ணனை பார்த்ததும் இவர் தான் என்பதை உறுதி செய்து விட்டு உடன் அழைத்துச் சென்றார் தன் மகளை பார்க்க. 

              காபி கொண்டு வந்த ராணியை பார்த்த மறு நொடி சம்மதத்தை சிரிப்பில் தெரிவித்து விட்டார் கிருஷ்ணன். ராணியின் விருப்பத்தை பற்றி யாருக்கு கவலை?.  பையன் அரசாங்க உத்தியோகம், காலேஜ் மெக்கானிக், அது மட்டும் இல்லாம வெளிய வேலைக்கும் போவார்,  நல்ல வருமானம், கூட பொறந்தது அவரையும் சேர்த்து 5, செந்த வீடு விவசாய நிலம்னு வசதி இருக்கு. பெருசா ஒன்னும் எதிர்பாக்கல, 15 பவுன் நகையும் கொஞ்சம் பணமும் கொடுத்துருங்க என்று பிற விவரங்களை பட்டியலிட்டார் இரு வீட்டாருக்கும் பொதுவான ந(ண்)பர்.

            கிருஷ்ணனின் விருப்பப்படி ஓதுதலும், ஊதுதலும் இல்லாமல் "குறள்"    முழங்க சான்றோர் முன்னிலையில் "தமிழ்" முறைப்படி திருமணம் இனிதே நடந்தது. திருமணம் குறித்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ராணி ஒன்றை மட்டும் நினைத்து மகிழ்ந்தார். இனி தினமும் அரிசி சோறு சாப்பிடலாம், நல்ல துணிமணி  உடுத்தலாம். பணக் கஷ்டம் இல்லை.
                
        உண்மை தான் இனி பணக் கஷ்டம் இல்லை, பணம் மட்டும் தான் கஷ்டமா?

புகுந்த வீடு 

    மறு வீடு முடிந்து மாமியார் வீட்டிற்கு திரும்ப வந்தார் ராணி.  கோவில்பட்டியில் இருந்து சுமார் 7 K.M தொலைவில் இருந்த மற்றொரு கிராமம் "அப்பனேரி", அங்குதான் கிருஷ்ணனுக்கு தவறு கிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான வீடு, நிலம், மாடு இருந்தது இப்போது ராணி.  
             
             கணவர் நல்லவர் தான் ஆனால் இந்த கோபம். அதை வர்ணிக்க 10 வகுப்பு   வரை படித்தும் ராணிக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.   கிருஷ்ணனுக்கு  ஜாதகம் , சம்பிரதாயம், நல்ல நேரம் இவைகளில் நம்பிக்கை இல்லை. அப்பகுதியில் உள்ள கல்லூரியில் mechanic வேலை செய்கிறார்.  தினமும் அலுவலகம்  முடிந்த வீடு திரும்பியவுடன் தன் காதல் மனைவியை அழைத்துக் கொண்டு வலம் சென்று விடுவார். எப்போதாவது ராணியின் வற்புறுத்துதலின் பேரில் கோவிலுக்கு அழைத்துச் செல்வார். திருமணம் ஆகி 1 மாதம் ஆகியும் இந்த உலா நின்ற பாடில்லை, இது கிருஷ்ணனின்  அன்னை, அக்கா, அண்ணி எவருக்கும் பிடிக்க வில்லை.  ஏனெனில் அவர்களுக்கு இது  எட்டாக் கனியாக இருந்தது தான்.  

         விவசயக் குடும்பம் என்பதால் வீட்டில் பசுமாடு உண்டு. பிரசவத்திற்கு காத்திருந்த பசு, மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லாமல், கிருஷ்ணனின் மாமா (அக்காவின் கணவர்) தானே மருத்துவரானார் அதன் விளைவு, தன்னுயிரை ஈன்ற குட்டிக்கு ஈந்தது. 

       "எத்தன வருஷமா நம்ம வீட்ல மாடு வளக்குறோம், ஒரு தடவையாது இப்படி ஆயிருக்கா? இந்த "ச..." பிடிச்சவ வந்தவுடனே இப்படி ஆயிருச்சி" என்று கிருஷ்ணனின் அக்கா தன் கணவரின் மருத்துவம் மீது பிறர் பழி போடாமல் முந்திக்கொண்டு தன் பங்கை துவங்கினார். மாலை கிருஷ்ணன் வரும் வரை அந்த வசை மாரி நிற்க வில்லை.  
    
           hospital க்கு கொண்டு போயிருக்க வேண்டியது தானே? உங்கள யாரு பாக்க சொன்னது?  என்று ராணிக்கு குடை பிடித்தார் கிருஷ்ணன்.

                 இவ்வாறாக தொடர்ந்த மாமியார் வீட்டு திருவிளையாடல்களை ஒரு  வருடம் சமாளித்து ஒரு குழந்தைக்கும் தாயனார் ராணி. பிரசவம் முடிந்து  5 மாதம் சென்ற பின்  மீண்டும் புகுந்தார் அந்த வீட்டில், கிருஷ்ணன் அலுவலகம் சென்றவுடன், ஏதோ காரணம்   சொல்லி கிருஷ்ணனின் அக்கா தன் அகலமான கையின் பத்து விரல்களை ராணியின் முதுகில் உரக்க பதித்தார். ராணியின் அலறல் கேட்டதோ என்னமோ   ! கிருஷ்ணன் அன்றைய தினம் விரைவாகவே வீட்டுக்கு வந்து விட்டார். 

                 மனைவியின் நிலை கண்டு வருந்தி, தன் குடும்ப அன்பர்களுடன்  ஒரு மணி நேர வாக்கு வாதத்திற்குப் பிறகு  அன்று இரவே தனிக் குடித்தனம்  செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.  மூவரும் கோவில்பட்டிக்கு சென்றனர். தெரிந்தவர் ஒருவர் மூலமாக வீடு பிடித்துத் தரும் இடைத் தரகர் அறிமுகம் மூலம் அன்று இரவே ஒரு வீட்டிற்கு குடி புகுந்தனர்.

                  மறுநாள் அலுவலகத்தில், தன்னுடைய முதல் நாள் அனுபவத்தையும்  புது வீட்டிற்கு சென்றதையும் பற்றி நண்பரிடம் கூறினார். 

                 உடனே எப்படி வீடு கிடைச்சது?
                          புரோக்கர் தான், வாடகையும் ரொம்ப கம்மி தான்.      


                 வீடு எங்க இருக்கு கிருஷ்ணா?
                      First Bungalow street  ராமு, ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வரணும். வீட்டு நம்பர் 553

புது வீடு 
             வீடு முழுவதும் மண்டிக் கிடந்தது தூசு. குழந்தையை வராண்டாவில் தொட்டிலில் தூங்க வைத்து விட்டு, கிருஷ்ணன் வேலைக்கு சென்றதும், வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தார் ராணி. ராணிக்கு கொஞ்சம் சுவாசப் பிரச்சனை உண்டு என்பதால் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு தன் வேலையை முடித்தார். மாலை கிருஷ்ணன் திரும்ப வந்ததும் காலை வெறும்  சுவர்களாக இருந்தது இப்போது வீடாக மாறியது புரிந்தது. திருமணமான போது ராணியின் நினைவில் நின்றது (அமைதியான வாழ்வு) இப்போது தான் மெல்ல நனவாகி வந்தது. 

        இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து, சில நல்ல நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன. கிருஷ்ணனுக்கும் நிறைய வெளி வேலைகள் வரத் தொடங்கின.   இந்த புது வீட்டுக்கு வந்து முழுதாக நான்கு மாதங்கள் முடிந்தன.  

அன்று வெள்ளிக்கிழமை...

          கிருஷ்ணன் காலை வேலைக்கு செல்லும்முன் மாலை வெளியே  கூட்டிச் செல்வதாக கூறியது நினைவுக்கு வந்தது. கடிகாரம் தீவிரமாக ஐந்தை  நெருங்கிக் கொண்டிருதது அவசரம் அவசரமாக அலுவலகத்தில் இருந்து வெளிவந்து  மிதி மிதி என மிதித்தார் மிதி வண்டியை   சரியாய் 30 நிமிடத்தில் வீட்டை அடைந்தார். 

         வீட்டில் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர்...

      ராணி, ராணி என்ன தூங்கிக்கிட்டு இருக்க, வெளிய போகலாம்னு சொல்லி இருந்தேன்ல, கிளம்பலையா?
                      இல்லங்க, ரொம்ப தல வலியா இருக்கு, நாளைக்கு போகலாமா 

       சரி பரவால்ல நீ தூங்கு. 
                     டீ போடட்டுமா?

      இல்ல, இப்ப வேண்டாம், அப்பறம் போடு.

பதில் கூட சொல்ல முடியாமல் தலை சாய்த்தார் ராணி. வழக்கமாக ஒரு மணிக்கு ஒரு முறை உணவுக்காக அழும் குழந்தையும் இரண்டு மணிநேரம் ஆகியும் அமைதியாக இருந்தது. ராணியும்.

மணி 07:30

           ராணி, ராணி......    ராணி, ராணி.........
                    ..............

           ராணியின் தோளைப் பிடித்து உலுக்கினார் கிருஷ்ணன். மெதுவாக கண் திறந்தார்.

      இப்போ எப்படி இருக்கு? hospital போலாமா?
                    ..............

 மீண்டும் கேள்வி எதுவும்  கேட்காமல், ராணியை தூக்கி விட்டு முகம் கழுவச் சொல்லிவிட்டு. குழந்தையை தூக்கிக் கொண்டு தயாரானர்.

       ரிக்க்ஷா கூட்டிட்டு வரவா?
               இல்லங்க, அதெல்லாம் வேண்டாம், நான் மெல்ல நடந்தே வந்துர்றேன். குழந்த முழிச்சிட்டான் அவன கொடுங்க.

     தளர்ந்த நடையுடன் வீட்டை விட்டு வெளியே வந்த ராணி சிறிது தூரம் நடந்தவுடன்  தெளிவானார். 

               இப்போ கொஞ்சம் பரவா இல்லங்க, சைக்கிள்ள கூட ஏறிக்கிறேன்.

சரி என்று ராணியை குழந்தையுடன்  பின்னால் உட்காரச் சொல்லி விட்டு,  கிருஷ்ணன்  மிதி வண்டியை இயக்க முயற்சிக்க, சற்று தூரத்திலேயே தெரு விளக்கின் அடியில் இரண்டு நாய்கள் எதோ ஒன்றுக்காக வெறிப் பிடித்தது போல சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அந்த குறுகிய தெருவில் ஒதுங்கி செல்லவும் வாய்ப்பில்லை. திரும்பி செல்லவும் மனமில்லாமல் அங்கேயே நின்றார் கிருஷ்ணன். சில நொடிகளில் இரண்டு நாய்களும் கிருஷ்ணனை நோக்கி அதே வெறியுடன் ஓடி வந்தன.  மிக அருகில் வந்த நாய்கள், வந்த  அதே வேகத்தில் நிற்க முயற்சி செய்து நிற்க முடியாமல் வழுக்கிக் கொண்டு சாலையின் இருபுறமும் இருந்த சாக்கடையில் விழுந்து எழுந்து வந்த திசையிலேயே ஓடின. படபடப்பில் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்ற கிருஷ்ணன் திரும்பினார், பின்னால் உட்கார்ந்திருந்த ராணி குழந்தையுடன்  இறங்கி நின்று கொண்டிருந்தார்.

            "நல்ல வேளை ஒன்னும் ஆகல"  என்று தேற்றிக்கொண்டு மிதிவண்டியை மருத்துவமனைக்கு செலுத்தியவரை ராணி இடைமறித்தார்.
                  
              நல்லா தூங்கினதால தலைவலி சரியாப் போச்சு, hospital போகவேண்டாம். வேற எங்காவது போகலாம்.  

இரவு உணவு உண்டு விட்டு மூவரும் 09:30 மணிக்கு வீடு திரும்பினர்.

 அடுத்த இரண்டு வாரங்களில் மீண்டும் ஒருமுறை தலை வலி, மருத்துவமனை, வழியில் வேறு ஒரு சம்பவம்.

ஒரு மாதம் சென்ற பின்பு, விடுமுறைக்காக ராணியின் தங்கை வந்திருந்தார். வந்து ஒருவாரம் ஆகியும் வெளியில் எங்கும் கூட்டிச்செல்ல முடியாததால் ராணியையும், தங்கையையும் திரைப்படத்திற்கு முதல் காட்சிக்கு சென்று வரச்சொன்னார் கிருஷ்ணன். 

  ராணி, நீயும் உன் தங்கச்சியும் பக்கத்து theater க்கு சினிமாக்கு போயிட்டுவாங்க, எனக்கு இந்த motor re-winding வேலை இருக்கு.

                     நாங்க மட்டும் எப்படிங்க போறது?

   உங்கள நான் theater ல விட்டுர்றேன், படம் முடியிற நேரத்துல வந்து கூப்ட்டுக்குறேன். பக்கத்துல தான நடந்து போகலாம்.
                             
                    சரிங்க, குழந்தையும் நானே கொண்டு போயிர்றேன். அழுதா நாங்க ரெண்டு பேறும்  சமாளிச்சிக்குவோம்.

கூச்சல் 


இருவரையும் திரையரங்கத்தில் விட்டு விட்டு வந்து தன் வேலையை தொடர்ந்தார் கிருஷ்ணன். வயலுக்கு நீர் பாய்ச்ச, கிணற்றில் இருந்து நீர் இறைக்கும் 4  குதிரை திறன் கொண்ட  மோட்டாரின் உள் பக்கத்தில் குனிந்து  தாமிர கம்பிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். வேலை மும்மரத்தில் எதையும் அறியாதவர், சட்டென்று தன்னருகில் யாரோ இருப்பதைப் போன்று உணர்ந்தார்.  யாரும் இல்லை என்று தெரிந்தாலும் திரும்பி பார்த்து அதை உறுதி செய்து கொண்டு மீண்டும் பணியை தொடர்ந்தார்.     

வீட்டின் முன்புறம் போடப்பட்ட மரச் சட்டங்களினால் ஆன கதவு திடீரென சத்தமில்லாமல் தானாக மெல்ல ஆட ஆரம்பித்தது. 

குனிந்திருந்த கிருஷ்ணன், தலையை உயர்த்தாமல் கண்களை மட்டும் மேலே உயர்த்திப் பார்த்தார். ஆட்டம் மெல்ல குறைந்து அமைதியானது. மனதுக்குள் எந்த கேள்விக்கும் இடம் கொடாமல், தரைக்கும் கதவுக்கும் இருந்த இடைவெளியை திருப்புளி (screwdriver)  கொண்டு மீண்டும் ஆடாதபடி நிரப்பினார்.

கவனத்தை தாமிர கம்பியின் மீது திருப்பி வேலையை தொடங்க முயற்ச்சித்தார், இனம் புரியாத கலவரம் அவரை ஆட்கொண்டது. 

"சீ சீ  அதெல்லாம் ஒன்னும் இல்ல, சுத்த மூட நம்பிக்கை" என்று சமாதானம் செய்துகொண்டு வேலையை தொடர்ந்தவர், சிறிது நேரத்திலேயே தன்னை அறியாமல் நிமிர்ந்து பார்த்தார். பார்த்தவுடன் உடலின் அனைத்து மயிர்க் கால்களும் சிலிர்த்து நின்றன...

என்ன  அது ?

Thursday, August 9, 2012

அன்று பூத்த மலர்கள்


காதல் பரிசு  

அகத்தில் அவள் நீக்கமற நிறைந்திருந்தாலும் 
என்னோடு புறத்திலும்  இருக்க வேண்டி, விரும்பி  
இரு திங்கள் உதிர்ந்த என்னவளின் - உவர் துளிகள் 
இன்று மணித்துளிகளாக என் இடக்கையை அலங்கரிக்கின்றன...



என் கல்லூரி வாழ்வில் "கவிதை" என்று நானே கூறிக்கொண்ட என்னுடைய  கிறுக்கல்கள்


மனம் 

என் உடலில் இல்லாத பகுதி மனம் - அது 
உன்னை நினைக்குதே தினம் 

சம்சாரம் அது மின்சாரம் 

சம்சாரத்துடன் நொடிக்கு மூன்று முறை வந்த 
சண்டையால், தற்கொலை செய்து கொண்டது 
சமையலறையின் பல்பு. 

நெக்டர் 


உன் இதழ்கள் என்ன நெக்டர் சுரக்கும் ஊற்றா,

      ஒரே முத்தத்தில் ரத்தத்தின் சர்க்கரை அளவு 
                  முன்னூறு ஆனதேன்? 

கடத்தி


செப்புக் கம்பிகள் நற்கடத்திகள் 
         கற்றுக்கொண்டது  இயற்பியலில் - என்னை 
செப்படி வித்தை செய்த உன் கண்கள்  மீக்கடத்திகள் என்று 
        கற்றுக்கொண்டது காதல் உளவியலில்.

காதல் வைரஸ்


என் மனம் எனும் கணினியை தாக்கும் 
    லவ் பக் வைரஸ் நீ என்றால்
என் anti வைரஸ் software அனைத்தையும் 
   நானே uninstall செய்து விடுவேன்.

வருகை பதிவு


கல்லூரிக்கு வருகிறேன் என்தைவிட - உன்னை 
     காண  வருகிறேன் என்ற களிப்பு மிகுதியால் 
விடுப்புக்கு விண்ணப்பிக்கவே விருப்பமில்லை 
    கண்ணே...


நினைவு வரும் போதெல்லாம் மலரும்...

Saturday, August 4, 2012

அ(கொ)லை பேசி - பாகம் 3

திங்கள் இரவு 9 மணி சரவணனின் வீடு...

சந்தியா வழக்கு குறித்த குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார், அப்போது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது, வாசலில் திருப்பதி. கதவை திறந்து அவரை உள்ளே அழைத்து விட்டு வந்தார். 

என்ன விசயமா வந்தீங்க திருப்பதி?
         உங்கள பார்த்துட்டு போலாம்னு, உங்ககிட்ட ஒரு பர்சனல் விஷயம் கேட்கலாமா? 
                    தயங்காம சொல்லுங்க
         Hospital அந்தம்மா கிட்ட பேசும் போது பார்த்தேன், நீங்க இந்த கேஸ்ச ரொம்ப பர்சனல்லா எடுத்துக்கிட்டீங்க போல தெரியுது.              
                    மௌனம்
         தப்பா கேட்டிருந்தா மன்னிச்சிருங்கய்யா, எனக்கு கேட்கனும்னு தோணிச்சி அதான் கேட்டேன். இதுக்கு முன்னால இருந்த இன்ஸ்பெக்டர் யாரும்  எங்ககிட்ட இவ்வளவு நல்லவிதமா நந்துக்கிட்டது இல்ல. அது உங்க மேல ஒரு பெரிய மரியாதைய கொடுத்திருக்கு.

கொஞ்சம் disturb ஆயிட்டேன் மத்தபடி வேற ஒன்னும் இல்ல திருப்பதி, அப்புறம் என்மேல நீங்க எல்லாரும் வச்சிருக்கிற அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி.  உங்களுக்கு டைம் இருந்தா வாங்க சந்தியா கேஸ் பத்திதான் நோட்ஸ் எடுத்துக்கிட்டு இருக்கேன். 

இருவரும் குறிப்புகளில் உறைந்தனர்.

  பொண்ணு இறந்து கிடந்தது, sunday       
   hostel ல விட்டு போனது saturday evening 
   college பேரென்ன?  கலைமகள் இல்லையா? 
             ஆமாங்கய்யா

இந்த college பத்தி தெரியுமா?
      தெரியும் அய்யா.
      கூடுவாஞ்சேரிக்கும், ஊரப்பக்கத்துக்கும் இடைல இருக்கு. ரோட்ல இருந்து 5 km உள்ள போகணும். பொண்ணுங்க மட்டும் படிக்கிற நர்சிங் காலேஜ். காலேஜ் correspondent lady பெரிய அரசியல் புள்ளி. ரொம்ப strict டான காலேஜ், என் friend பொண்ணுக்கு அங்கதான் admission வாங்க try பண்ணங்க ஆனா கண்டிப்பா hostel ல சேர்ந்துதான் படிக்கணும்னு சொல்லிட்டதுனால வேற college ல சேர்த்துட்டாங்க. 

Ladies college
hostel ல தான் இருக்கணும். 
வெளி உலக தொடர்பே கிடையாது. 

அப்போ வெளிய யார்கூட பேசணும், பழகனும்னா ஒரே option phone தான். அந்த college ல cell phone allow பண்றாங்களா திருப்பதி?    
        தெரியாதுங்கய்யா...

  அந்தம்மா கொடுத்த complaint ட பாருங்க, அந்த பொண்ணு கிட்ட cell போன் இருந்ததா?
             .....   இலங்கையா

  அந்தம்மாவோட பேச எதாவது நம்பர் இருக்கா?
             பக்கத்து கடை நம்பர் இருக்கு.

   நாளைக்கு காலைல அந்த காலேஜ்க்கும், hostel க்கும் போய் விசாரிக்கணும்.    

சரி நேரம் ஆகுது நீங்க வீட்டுக்கு போங்க காலைல சீக்கிரமா வேலைய ஆரம்பிக்கணும். வணக்கம் வைத்து விட்டு வீடு திரும்பினர் திருப்பதி. 

செவ்வாய் காலை 08:00  மணி 

கலைமகள் கல்லூரி மாணவிகள் விடுதி... 

தொலைபேசி சினுங்கியது எடுத்து அரவணைத்தார் ஆறுதலாக hello சொன்னார் துணை காப்பாளர்.  மறுமுனையில் சரவணன். சுருக்கமாக சந்தியா குறித்து விசாரிக்க வேண்டும் என்றார். காப்பாளர் மற்றும் முதல்வர் அனுமதி பெற்றுவிட்டு  மீண்டும் அழைப்பதாக தெவித்தார். பின்னர் சரவணன் கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டார்.  

கருப்பு கண்ணாடி, பெண்கள் அணியும் மேலுடை போல உடலை இருக்கிய பனியன் இப்படி இல்லாமல், நாகரீகமான  மாற்று  உடையில்  சரவணன் மற்றும் திருப்பதியும் துணை காப்பாளர் அறையில்.

வணக்கம் madam, இவரு constable திருப்பதி , நான் inspector சரவணன்       
       வணக்கம் inspector, உங்களுக்கு என்ன information வேணும்னு சொல்லுங்க, எனக்கு தெரிஞ்சது எல்லாம் சொல்றேன்.

Thanks madam, சந்தியா பத்தி சொலுங்க.
        நல்ல பொண்ணு, நல்லா படிக்கிற பொண்ணும் கூட, கொஞ்சம் moody type. மத்தபடி special லா சொல்றமாதிரி எதுவும் இல்ல.

Close friends யாரு
        close friends னு யாரும் இல்ல, recently அஞ்சலி அவளோட room ல join பண்ணதுல இருந்து. கொஞ்ச நாளா "அஞ்சலி" கூட இருக்குறத பாத்திருக்கேன். 

இந்த அஞ்சலி கூட பேசலாமா?
       தாராலமா, evening class முடிஞ்சதும் பேசலாம்.

சந்தியா Saturday evening கிளம்பி போயிட்டதா?
      yes sir, அவங்க வீட்ல இருந்து phone வந்தது. ஏதோ family function னு சொன்னங்க.

யார் call பண்ணாங்க?
     அவங்க அம்மா தான், usually இந்த மாதிரி call வந்தா, application form ல அவங்க கொடுத்த number க்கு நாங்க மறுபடியும் call பண்ணி confirm பண்ணுவோம். அவங்க அம்மா கிட்ட பேசினதே நான் தான்.

நீங்க பேசினது அவங்க அம்மா கிட்ட தான்னு எப்படி சொல்றீங்க?
      அவங்க application ல கொடுத்த number க்கு call பண்ணேன், ஒரு வயசான lady பேசுனாங்க.   

உங்க college ல students க்கு mobile phone allowed டா?
     allowed

சந்தியா கிட்ட போன் இருந்ததா?
    இல்ல, அவங்க அம்மா office க்கு தான் phone பண்ணுவாங்க.

thanks madam, அஞ்சலி கிட்ட வேற எதுவும் சொல்ல வேண்டாம் evening நாங்க வந்து பேசிக்கிறோம். evening எத்தன மணிக்கு பேசலாம்.
    between 5 and 7 

சந்தியா போட்டோ இருக்கா?
      permission வாங்கிட்டு, evening நீங்க வரும்போது தர்றேன்.

திருப்பதி, சந்தியா அம்மா சொன்னதுக்கும், இவங்க சொல்றதுக்கும் connection சரியா இல்லையே. சந்தியா அம்மாகிட்ட உடனே பேசனும், அந்த கடை phone number அவங்க கொடுத்த complaint ல இருக்குள்ள?
      இருக்குது அய்யா.

கடையில் பணிபுரியும் நபர், மீண்டும் 5 நிமிடம் கழித்து phone செய்யும் படி கூறினார்.அடுத்த அழைப்பிற்கு ஆஜரானார் சந்தியாவின் தாய்.

இப்போ பேசலாமா என்ற சரவணனின் கேள்விக்கு சம்மதித்தார்.

இப்போதான் சந்தியா college க்கு போய் பேசிட்டு வந்தேன். அவங்க sub warden சொன்னாங்க, சனிக்கிழம உங்க கிட்ட பேசிட்டு தான் பொண்ண அனுப்பிச்சதா.           
           இல்ல sir, நான் பேசல. college ல என் cell போன்னு நம்பர் தான் குடுத்துருந்தேன். அத 4 நாளா காணோம்.

என்ன சொல்றீங்க? cell phone 4 நாளா காணோமா? 
           ஆமா sir, காணாம போனதுக்கு அப்பறம், அந்த போனுக்கு பேசுனேன், யாரோ ஒருத்தன் எடுத்து பேசுனான். பஸ்ல கிடந்துச்சுன்னு சொன்னான்.  ஊருக்கு போய்கிட்டு இருந்தானாம், அதனால ரெண்டு நாள்ள திரும்ப வரும்போது குடுக்கிறதா சொன்னான் sir.

அவன் பேர் சொன்னனா?
          எதோ சொன்னான் sir, ஞாபகம் இல்ல. கண்டிப்பா குடுத்துர்றேன் ரொம்ப நம்பிக்கையா சொன்னான்.

உங்க cell numbar சொல்லுங்க 
ஒன்பது, எட்டு  என்று பத்திலக்க என்னை கூறினார். அதை குறித்துக் கொண்டார் சரவனணன்.

திருப்பதி, cell phone சாதாரணமா காணாம போகல, அதுக்கு பின்னால ஏதோ master plan இருக்குற மாதிரி தோணுது. நீங்க முருகானந்தம் கிட்ட சொல்லி இந்த அம்மா வோட phone current location கண்டு பிடிக்க சொல்லுங்க. கண்டிப்பா switch off பண்ணியிருப்பான் இருந்தாலும் try பண்ணுங்க.
     சரிங்கய்யா      

சிறிது நேரம் கழித்து, முருகானந்தம், சரவணனின் யூகத்தை உறுதி செய்தார்.     

மாலை 5 மணி

     சரவணனும், துணை காப்பாளரும் உள்ளே நுழைய, அஞ்சலி துணை காப்பாளர் அறையில் தன்னை காண யார் வருகிறார்கள் என்று தெரியாமல் காத்திருந்தார்.அஞ்சலி, இவர் Mr. சரவணன். இவர்தான் உன்ன பார்க்கனும்னு சொன்னாரு. என்று இருவரும் அங்கு அமர்ந்தனர்.

மேடம், if you dont mind, நாங்க அஞ்சலியை  தனியா விசாரிக்கணும்.
      no problem sir  
 துணை காப்பாளர், தன் அறையை விட்டு நீங்கினார்.

Ms Anjali நாங்க போலீஸ், சந்தியா காணாம போனது பத்தி விசாரிக்க வந்திருக்கோம், உங்களுக்கு தெரிஞ்சத மறைக்காம சொல்லுங்க. நீங்க சொல்ற எந்த தகவலும் எங்களுக்கு உபயோகமா இருக்கும்.
    Sure sir கண்டிப்பா எனக்கு தெர்ஞ்ச எல்லாம் சொல்றேன்,   

நீங்களும் சந்தியாவும் close friends சா?
      ரொம்ப close இல்ல sir, நான் recent டா தான் அவ room க்கு shift ஆனேன். அவ கொஞ்சம் moody type.    
உங்களுக்கு தெரிஞ்சி சந்தியாவுக்கு யாராவது boy friend?
     இல்ல sir, எனக்கு தெரிஞ்சி யாரும் இல்ல.

Saturday அவங்க போகும் போது உங்க கிட்ட எதாவது சொன்னாங்களா?       
    no sir, நான் வேற friend room ல இருந்தேன். night தான் எனக்கு தெரியும்.

நீங்க வேற எதாவது சொல்லனுமா?
     இதுக்கு மேல எனக்கு வேற எதுவும் தெரியாது.

Thanks Ms அஞ்சலி, உங்கள disturb பண்ணதுக்கு sorry     
    Its O.K sir என்று கூறிவிட்டு, தன்னுடைய அறையை நோக்கி நடந்தார் அஞ்சலி.

உங்களுக்கு என்ன தோணுது திருப்பதி.
    அந்த பொண்ண வேற மாதிரி விசாரிக்கணும்னு தோணுது அய்யா.

சரவணன், எதையோ யோசித்தவாறு தலையை மட்டும் மேலும் கீழும் அசைத்தார். அஞ்சலி சென்றவுடன் துணை காப்பாளர் உள்ளே நுழைந்தார்.

என்ன sir சீக்கிரமா முடிச்சிட்டீங்க போல?
     ஆமா மேடம், இந்த அஞ்சலிக்கு சந்தியா பத்தி ரொம்ப தெரியல.

எனக்கு அஞ்சலியோட mobile நம்பர் வேணும். இது off the record தான், அந்த பொண்ணுக்கு வேற எந்த problem வராம நான் பாத்துக்கிறேன்.
     Sure sir   

நீங்க எங்க கிட்ட நம்பர் கொடுத்தத அஞ்சலி கிட்ட சொல்ல வேணாம்.
      O.K Sir 
      one minute சந்தியா photo, அஞ்சலி mobile number ரெண்டும் தர்றேன்.  

திருப்பதி, அஞ்சலிக்கு last 3 months call details வேணும், both incoming and outgoing. 
     உடனே ஏற்பாடு பண்றேன் அய்யா.     


புதன் காலை 10 :00 மணி  

கந்தன்சாவடி காவல் நிலையம் 

முருகானந்தம், அஞ்சலியோட call details வந்துருச்சா?
        வந்தாச்சி அய்யா, நீங்க கேட்ட மாதிரியே CD ல குடுத்துருக்காங்க.

மடிக்கணினியில் அனைத்தையும் நகலெடுத்துக் கொண்டார். அடிக்கடி வந்த அழைப்புகளை தேடினார். இரண்டு எண்கள் தவிர எதுவும் கடந்த மூன்று மாதங்களில் மீண்டும் மீண்டும் வரவில்லை.  அந்த இரண்டு எண்களும் அஞ்சலியின் பெற்றோர் எண்கள். அதிலும்  பெரும்பான்மையான அழைப்புகள் தொலைபேசியில் இருந்து (mobile phone அல்ல) வந்துள்ளன.

       அய்யா, எனக்கு ஒரு doubt என்று ஆரம்பித்தார் முருகானந்தம்.   

கேளுங்க,

      அஞ்சலியோட call details ல நமக்கு என்ன கிடைக்கும் அய்யா.

உறுதியா எதுவும் சொல்ல முடியாது, ஆனா எனக்கு ஒரு hunch, எல்லாத்துக்கும் ஒரு connection கண்டிப்பா இருக்கும். அது மட்டும் இல்லாம, சந்தியா கிட்ட mobile இல்ல, அஞ்சலி தவிர friends யாரும் இல்ல, எந்த ஒரு personal communication க்கும் அஞ்சலி தான் ஒரே option   

     அய்யா, சந்தியாவ யாரோ கடத்திட்டு போயி இப்படி பண்ணியிருந்தா?

அதுக்கு வாய்ப்பு ரொம்ப குறைவு தான், ஏன்னா
  • Phone ல சந்தியா அவங்க அம்மா கிட்ட பேசினதா sub warden சொன்னங்க, அப்படி சந்தியா அவங்க அம்மா கிட்ட பேசியிருந்தா கண்டிப்பா அந்த பொண்ணு ஊருக்கு போய் இருக்காது. பொண்ணு பாக்குறதுல சந்தியாவுக்கு உடன்பாடு இல்லனு அவங்க அம்மாவே சொன்னங்க .
  •  ரொம்ப முக்கியம், அவங்க அம்மாவோட mobile இந்த
    incident க்கு முன்னாலையே தொலைஞ்சி போச்சி அல்லது திருடு போச்சி.

அதனால சந்தியா சம்மதிச்சிதான் Saturday evening போயிருக்குது. hostel verification protocol ல break பண்றதுக்கு, சந்தியா அம்மாவோட phone னை, plan பண்ணிதான் யாரோ எடுத்திருக்காங்க.  எனக்கு இப்ப open question னா இருக்குறது "எதுக்காக திடீர்னு அஞ்சலி சந்தியாவோட room ல join பண்ணனும்"? இது சாதாரணமாவும் நடந்திருக்கலாம் அல்லது அவங்களோட plan ஆகவும் இருக்கலாம். அப்படி சந்தியா சம்மதிச்சி போய் இருந்தா கண்டிப்பா அதுபத்தி அஞ்சலிக்கு தெரிச்சிருக்கும். 

என்று முருகானந்தத்தின் சந்தேகத்தை தெளிவு செய்து விட்டு அஞ்சலியின் அலைபேசிக்கு வந்த அழைப்பு எண்களுடன் விளையாட  ஆரம்பித்தார்.

இடது மூளை பேச்சை நிறுத்தியதால், சரவணனின் வலது மூளை தன் செயல்பாட்டை துரிதமாக தொடங்கியது. 

கிட்டத்தட்ட எல்லார் கிட்டயும் mobile phone இருக்கும் போது ஏன் அஞ்சலிக்கு landline ல இருந்து இவ்வளவு calls வந்திருக்கு? என்று தன்னுக்குள் கேட்டுக்கொண்டு அழைப்பு எண்களில் இருந்த வெளியூர் குறியீடு எண்களை மட்டும் பிரித்து எடுத்தார். அந்த குறியீடு எண்களுக்கு செந்தமான ஊர்களை  தனியே எடுத்து அழைப்பு வந்த தேதி வரியாக வரிசை படுத்தினார்.


Thoothukudi
461
 TIRUNELVELLI 
462
 VIRUDHUNAGAR 
4562
 DINDIGUL 
451
 TRICHY 
431
 VILLUPURAM 
4146
 Chennai    
44


























இந்த அழைப்புகளின் பயணம், குறப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்ந்து கொண்டே இருந்திருக்கிறது. பின்பு இதே பயணம் மற்ற மாநிலங்களில் தொடர்கிறது.  

உடனே இந்த தொலைபேசி எங்களுக்கு  செந்தக்காரர்களின் பட்டியலை கேட்டார் சரவணன். சந்தேகமே இல்லாமல் அனைத்து அழைப்புகளும்  அனாதைகளாகவே இருந்தன, அனைத்தும் பொது தொழைபேசி சாவடி எண்கள்.

திருப்பதி, இந்த போன் numbers இருக்குற இடங்கள்ள உள்ள police station க்கு information பண்ணி பக்கத்துல உள்ள lodge விசாரிக்க சொல்லுங்க. இந்த தேதிகள்ல அங்க தங்கினவங்க details collect பண்ண சொல்லுங்க. 
       சரிங்கய்யா.

அடுத்த மூன்றாம் மணி,  கீழ்கண்ட  விவரங்கள் சரவணனின் கணினிக்குள்...

        பெயர்: சந்தோஷ் 
        வயது: 33  
        முகவரி:  .....
        எதற்காக இங்கே தங்கினார்:  மருத்துவ பிரதிநிதியாக இருக்கலாம்

        அருகில் இருந்த Doctor களிடம் விசாரித்ததில், அவர் வேலை செய்யும்  கிண்டியில் உள்ள  RGC  மருந்து  நிறுவனத்தின் முகவரி கிடைத்தது.

        RGC: தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான மருந்து நிறுவனம்.

Dr கேசவனின் அலைபேசி, RGC தொலைபேசியை நாடிக்கொண்டிருந்தது, இணைப்பு கிடைத்தவுடன். 

நான் Dr கேசவன்,  Mr .சந்தோஷ்கிட்ட last week வந்து கொஞ்சம் samples கொடுத்தார் அதபத்தி பேசணும் என்றார் மறுமுனையில் அந்த பெண் Dr கூறிய விவரங்களை உறுதி படுத்தி விட்டு,  
        சந்தோஷ் இல்ல, வெளிய போயிருக்கார். 2 hrs அப்புறம் call பண்ணுங்க என்றார்.

கொஞ்சம் urgent, உடனே பேசணும்.அவரோட business card என்கிட்டே இல்ல அவரோட mobile நம்பர் செல்றீங்களா?
        Sure Dr ,     

number வாங்கிக்கொண்ட Dr, சந்தோஷ்க்கு phone செய்தார்.

சந்தோஷ்,  நான் Dr கேசவன் பேசுறேன், உங்கள இப்ப உடனே பார்க்க முடியுமா?
        Sorry, Dr நான் இப்போ meeting ல இருக்கேன். 1 hr ல நானே கால் பண்றேன்.

சந்தோஷ் நீங்க எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க நானே வர்றேன்.
        Guindy, hotel Royal ல இருக்கேன். 

 O.K சந்தோஷ்   
சந்தோஷின் அலைபேசி என்னை வாங்கிக் கொண்டு, Doctor க்கு நன்றி கூறிவிட்டு வெளியேறினர் சரவணன்.

முருகானதம், இந்த number ரோட last 2 months call details உடனே வேணும். அப்புறம் future call details கூட தேவைப்படும். 
        உடனே ஏற்பாடு பண்றேன் அய்யா.

சரவணனும், திருப்பதியும் royal லில், 

திருப்பதி தூரத்துல இருந்து monitor பண்ணுங்க, நான் உங்களுக்கு signal தந்த பிறகு follow பண்ணுங்க.
       சரிங்க அய்யா. 

சந்தோஷ் meeting முடிந்து வெளியே வர நான்கு கண்களும் சந்தித்தன...

Mr சந்தோஷ், நான் சரவணன்
       yes, உங்களுக்கு என்ன வேணும்.

சும்மா சில கேள்விகள்
        நீங்க?
             Inspector
                   சொல்லுங்க sir   

உங்களுக்கு Ms அஞ்சலி தெரியுமா?
       எந்த அஞ்சலி sir ?  அவங்க Doctror ரா? . நான் Medical rep sir, ஒரு நாளைக்கு minimum 50 பேரையாவது meet பண்றேன். எல்லாரையும் ஞாபகம் வச்சிக்க முடியாது. 
  
Doctor இல்ல Nurse, என்ன Mr சந்தோஷ் இவ்வளவு தூரம் தேடி வந்திருக்கோம், சாதரணமா தெரியாதுன்னா எப்படி? சரிதான் நீங்க அஞ்சலி கிட்ட பேசி  கொஞ்ச நாள் ஆகுதுள்ள அதனால மறந்திருப்பீங்க. கலைமகள் college student அஞ்சலி, தெரியாது.
      மௌனம்.

எவ்வளவு முயற்சி செய்தும் பயம் அடங்க மறுத்து சந்தோஷின் முகத்தில் தஞ்ச மடைந்தது.

வாங்க சந்தோஷ் வெளிய போய் coffee சாப்பிடலாம்.  ஒன்றும் பேசாமல் பின் தொடர்ந்தார் சந்தோஷ். இரண்டு  coffee order செய்து ஒன்றை சந்தோஷ் இடம் கொடுத்தார் சரவணன். சந்தோஷின் கைகள் அவரை அறியாமல் E A D G B E என அனைத்து  நாண்களையும் அந்த குவளையில் மீட்டின.

சொல்லுங்க சந்தோஷ், உங்களுக்கு அஞ்சலி
       தெரியும் sir 

அப்பறம் ஏன் தெரியாதுன்னு சொன்னீங்க?
       மௌனம்

சந்தியா தெரியுமா?
       தெரியாது sir 

சரவணனின் கண்கள் சுருங்கின.
       சத்தியமா தெரியாது sir, please sir என்ன நம்புங்க (சந்தோஷ் க்கு அழுகையே வந்தது)

உங்களுக்கும் அஞ்சலிக்கும் எப்படி பழக்கம்.
      Facebook friend sir

இதுவரைக்கும் நேர்ல மீட் பண்ணி இருக்கீங்களா?
     இல்ல sir, நீங்க நினைக்கிற மாதிரி தப்பா எதுவும் இல்ல sir , நிஜமாவே friend தான் sir 

நான் தப்பா எதுவும் சொல்லலியே சந்தோஷ், இல்ல daily night 8 மணிக்கு மேல கால் பண்ணி 1 hr அப்படி என்ன தான் பேசுவீங்க? 
     சும்மா தான் sir.

மறுபடியும் பொய் சொல்லி மாட்டிக்காதீங்க? 
    phone ல அந்த மாதிரி பேசிப்போம்.

எத்தன நாளா நீங்க இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க?
     Two months சா 

இதுவரைக்கும் அஞ்சலிக்கு  நீங்க எதாவது வாங்கி குடுத்து இருக்கீங்களா?
    Mobile top up பண்ணி குடுப்பேன் அப்புறம், கொஞ்சம் things வாங்கி குடுத்துருக்கேன். 

அஞ்சலியோட வேற friends யாராவது தெரியுமா? அவங்க கூட பேசி இருக்கீங்களா?
     இல்ல sir, அஞ்சலி கூட மட்டும் தான் பேசுவேன்.

உங்க family ?
 ஒரு பையன், ஒரு பொண்ணு, ரெண்டு குழந்தைங்க sir

சரவணனின் கண்களின் remote field communication சரியாய் புரிந்து கொண்ட திருப்பதி அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றார்.

Thanks Mr சந்தோஷ், மறுபடியும் meet பண்ணலாம். நீங்க இன்னும்  நிறைய பேசணும். next time meet பண்ணும் போது சந்தியா பத்தி சொல்லுங்க.

விசாரணையை முடித்திக்கொண்டு சரவணன் காவல் நிலையம் வந்து விட்டார். சிறு நேரம் கழித்து திருப்பதியும் வந்தார்.

          அய்யா, சந்தோஷ் அங்கிருந்து நேரா அவரு வேல பாக்குற Guindy office க்கு போனாரு. அவருடைய Mobile ல இருந்து எந்த call லும் போகல.            ஆனா அவரோட office desk phone (direct line) ல இருந்து call போச்சு. office number Dr கேசவன வச்சி வாங்கிட்டேன். சந்தோஷ் call பண்ணது "ராஜசேகர்" க்கு, "ராஜசேகர்" industrialist Mr.ராஜேந்திரன் பையன். US ல படிச்சிட்டு 8 months முன்னால தான் இங்க வந்திருக்கான். வழக்கமான பணக்கார பசங்க கிட்ட இருக்குற எல்லா நல்ல பழக்கங்களும் இவன் கிட்டயும் இருக்கு. வேல எதுவும் இல்ல சும்மா ஊர் சுத்திக்கிட்டு இருக்கான்.

Impressive திருப்பதி, ராஜேந்திரன் எப்படி?  அப்பா புள்ள உறவு எப்படி?
       அவர பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்ல அய்யா. நல்லவருன்னு கேள்விபட்டிருக்கேன். பையனுக்கும், அப்பாவுக்கும் நல்ல உறவு இல்ல.
        

இரவு சரவணனின் வீடு 


சரவணனின் எண்ணங்களில் சில கேள்விகள் ஓடின...
            சந்தோஷ் எதுக்கு ராஜசேகருக்கு கால் பண்ணனும்?   
                       ரெண்டு பேருக்கும் business link இருக்க முடியாது.
            ராஜசேகர எப்படி விசாரிக்க?
            direct டா போய் சந்தேகம்னு சொல்லி விசாரிக்கலாமா?
            என்ன பண்ணலாம்?
                       .................

வியாழன் காலை 09 : 00 மணி              

அடையாறு, ராஜேந்திரனின் வீடு.  

வாசலில் காவலாளி.

Mr ராஜேந்திரன் இருக்காரா?  அவர பார்க்கணும்  
       முதலாளி வெளியூர் போய் இருக்காங்க.  உங்களுக்கு எதாவது வேணும்னா office ல போய் கேட்டுக்கோங்க.

காவலாளி பேசிக்கொண்டிருக்கும் போதே உள்ளிருந்து வாகனம்  கதவை திறக்க உத்தரவு போட்டது. சரவணன் அவ்விடம் விட்டு நகர்ந்தார். 

கதவு திறந்ததும், இரண்டரை கோடி பெறுமானம் உள்ள germany ல்  தயாரான ஆடம்பர  SLS  மகிழ்வுந்து பறந்தது. அந்த வாகனத்தை பின் தொடரும் முயற்சியை சில நொடிகளிலே கை விட்டார் சரவணன். 

கார் சென்ற திசையை தெரிவித்து திருப்பதியிடம் இருந்து விலாசம் வாங்கிக் கொண்டு பின் தொடர்ந்தார். அந்த விலாசம் அவரை அழைத்துச் சென்றது கடற்கரையை ஒட்டிய ராஜேந்திரனின் உல்லாச மாளிகைகளில் ஒன்று.  

மீண்டும் வாசலில் காவலாளி...

நான் inspector , Mr ராஜேந்திரனை  பார்க்கணும்.
       முதலாளி இல்ல sir.

இப்போ உள்ள போனது யாரு ?
      சின்னையா.

சரி, அவர பாத்துட்டு போறேன்.
       சின்னையா, இப்போ யாரையும் பாக்க மாட்டங்க..
...................

சில நொடிகளில் மாளிகைக்குள் சரவணன்.... 

நீச்சல் குளத்தில் ராஜசேகர், மற்றும் மூன்று  "ராஜா" சேகர்கள், இவர்களுடன்  கடல் கன்னிகள் (இன்னும் கன்னிகளா தெரிய வில்லை) 

        யாருடா நீ?  இங்க எப்படி வந்த?  security .....
நான் inspector, வாசல் வழியாத்தான் வந்தேன், உங்க security tired ஆகி rest எடுத்துகிட்டு இருக்காரு.

        எதுவா இருந்தாலும் அப்பா office ல போய் பேசிக்கோங்க, நாங்க busy ya இருக்கோம்.  
நீங்க busy யா இருக்கீங்கனு தெரியுது, ஆனா நான் உங்களத்தான் பார்க்கணும்.

        இப்ப நீங்க போகலேன்னா உங்க உயிருக்கு உத்தரவாதம் இல்ல inspector 
அதையும் பார்க்கலாம்.

1. Jab
2. Cross
3. Hook
4. Uppercut
5. Front Kick
6. Roundhouse Kick

7. Side Kick
  
என்று 600 கலோரிகளை எரித்தார் சரவணன்.  

இன்னைக்கு காலைல workout பண்ண time கிடைக்கல, Thanks ராஜசேகர், நீங்களும் join பண்றீங்கள இல்ல co-operate பண்றீங்களா. 

தன்னுடைய படைகள் அனைத்தும் துவம்சம் செய்து மீண்டும் தயாராக இருக்கும் சரவணன். Mobile போன் நீச்சல் குளத்திற்கு  வெளியே, கூலிப்படைகளை கூப்பிடவும் வழியில்லை. வெள்ளை துண்டை கட்டிக்கொண்டு வந்தார் ராஜசேகர். குளத்திலேயே தஞ்சம் அடைந்தார்கள் கன்னிகள்(?). இருவரும் அங்கிருந்த சாய்வான நாற்காலியில் அமர்ந்தனர். ராஜசேகரின் கண்கள் சரவணனின் அருகில் இருந்த அவனுடைய அலைபேசியிலேயே மையம் கொண்டிருந்தது. 

ரொம்ப நேரம் காக்க வைக்க மாட்டேன் Mr ராஜசேகர்? கேக்குற கேள்விக்கு சரியா பதில் சொன்னீங்கன்னா போதும்.

உங்களுக்கும் சந்தோஷ்க்கும்  எப்படி பழக்கம்?
         என் friend டோட friend 

சந்தோஷ் மேல எங்களுக்கு சந்தேகம் இருக்கு, அவர உங்களுக்கு எத்தன நாளா தெரியும் 
       கொஞ்ச நாளாத்தான் தெரியும். 6 months 

சந்தோஷ் friend அஞ்சலி தெரியுமா?
     தெரியாது.

சந்தியா 
    தெரியாது.

உங்க phone குடுங்க station க்கு call பண்ணிட்டு தர்றேன் என்று பதிலுக்கு காத்திராமல் அருகில் இருந்த அலைபேசியை எடுத்தார் சரவணன்.

அலைபேசி கடவுச்சொல் கேட்டது...

Password சொல்லுங்க  ராஜசேகர்.
       வெறுப்புடன் பார்த்துவிட்டு நான்கு எங்களை கூறினான்...

அலைபேசி தவறு என்றது 

மீண்டும் நான்கு எண்கள்..... தவறு 

மீண்டும் நான்கு எங்கள்....   இம்முறை தவரோடு நில்லாமல். இந்த அலைபேசியில் உள்ள தகவல்கள் அழிக்கப்பட்டதாக செய்தி கட்டியது.

ராஜசேகரின் சிரிப்பு....

சரவணனின் புன்னகை...

Mr . ராஜசேகர் நீங்க நாளைக்கு கந்தன்சாவடி station ல வந்து உங்க mobile ல வாங்கிக்கோங்க. என்று கூறி விட்டு காவல் நிலையம் வந்தார் சரவணன்.

சரவணன் சென்ற பிறகு, ராஜசேகர் தன் தந்தை அலுவகத்தில் பணிபுரியும் நம்பிக்கையான மேலாளரை தொலைபேசியில் அழைத்தார். இங்கு நடந்தவற்றை கூறினார்.

manager அந்த inspector க்கு காசு கொடுத்து வாங்க முடியுமானு பாருங்க.
       சின்னையா, இந்த விசயம் முதலாளிக்கு தெரிஞ்சா?

சொல்லாதீங்க, நமக்குள்ள முடிச்சிரலாம், காசு எவ்வளவு ஆனாலும் பரவா இல்ல.
      நான் அத உடனே என்னனு பாக்குறேன், நீங்க கவலைப்படாதீங்க.

சிறுது நேரம் கழித்து ராஜசேகரை தொடர்பு கொண்டார் மேலாளர்.

சின்னையா, அது கொஞ்சம் சிரமம் போல இருக்கு.
     ஏன் அப்படி சொல்றீங்க manager
அந்த inspector சம்பளத்துக்காக இந்த வேலைக்கு வரல, ஊர்ல நெறைய சொத்து இருக்குதாமாம், police வேலை அவருடைய இலட்சிய வேலையாம். அவங்க அப்பாவோட condition காரணமா கொஞ்ச நாள் வெளிநாடெல்லாம் போய்டு வந்திருக்காரு. நாம வேற வழி தான் பார்க்கணும்.
   சரி நான் பாத்துக்குறேன்.

சின்னையா, அவசரப்பட்டு எதுவும் செய்யாதீங்க, பொறுமையா இருங்க, முதலாளி வரட்டும் பேசிக்கலாம்.
    சரி, நான் பாத்துக்கிறேன் manager

இரவு 08 : 00 மணி 

சரவணன் வீடு...

      நுண்ணலை அடுப்பில் ஏற்க்கனவே இறந்து, வெந்து கொண்டு இருந்தது,  தொலைக்காட்சி பெட்டியில் ஏதோ திகில் படம் ஓடிக்கொண்டிருந்தது...
    ராஜசேகரின் அலைபேசியை தன் கணினியில் இணைத்தார். rescue எனும் மென்பொருள் உதவியுடன் இறந்த கோப்புகளுக்கு உயிர் கொடுத்து மீட்டெடுத்தார். அடுக்கடுக்காக பல folder கள். ஒவ்வொன்றின் உள்ளேயும் சில image files மற்றும் text file கள். அதில் ஒரு folder மட்டும் கடவுச் சொல் கொடுத்து பூட்டப்பட்டு இருந்தன.    

சரவணன் தன்னுடைய கல்லூரி அனுபவத்தை தனக்கு தானே கூறிக்கொண்டார்..      
      கடவுச்சொல்லை உடைக்கும் பத்து சிறந்த வழிகளில் 

1. Dictionary attack
2. Brute force attack
3. Rainbow table attack
4. Phishing
5. Social engineering
6. Malware
7. Offline cracking
8. Shoulder surfing
9. Spidering
10. Guess

இந்த வேளையில் திடீரென, ஆங்கிலப்படங்களில் தவறாமல் இடம் பெரும் அந்த புனித "7" எழுத்துகள் காதில் விழுந்தது.  

சரவணன் 10 வது வழியை  முயற்சி செய்தார் அந்த 7 எழுத்து கொண்டு, திறக்க வில்லை, அதையே 5 எழுத்தாக சுருக்கி முயன்றார். மாயக் கதவு  திறந்தது. ஆனால் எந்த file லையும் open செய்ய முடியவில்லை. அனைத்தும் encrypt செய்யப்பட்டுள்ளன. 

அமெரிக்காவில் இருக்கும் நண்பருக்கு தொலைபேசியில் அழைத்தார் சரவணன்.

ராஜ், இப்போ பேசலாமா?
     சொல்லுடா police, எப்படி போகுது அந்த murder investigation

அத பத்திதான் பேசணும், encrypt பண்ண files இருக்கு அத decrypt பண்ணி தரியா? என்கிட்டே அந்த utility இல்ல  
      Sure , send me  

சில நிமிடங்களில்....
   சரவணன், check பண்ணிட்டு சொல்லு. blowfish use பண்ணி இருந்தது  

ok டா தேவப்படா மறுபடியும் call பண்றேன். அப்புறம் அங்க இருக்குற நம்ப பசங்க கிட்ட சொல்லு, இந்த year donation ன இங்கவுள்ள hospital க்கு கொடுப்போம்னு.

    நிச்சயமா சொல்றேன், ஒன்னு மட்டும் மறக்காத சரவணா we are waiting for you  

சரி, அப்புறம் பேசுறேன்...

வெள்ளி காலை 10 மணி  

     inspector சரவணன் என்ற ராஜசேகரின் கேள்விக்கு அய்யா உள்ளே இருக்காரு என்றது அனுப்பி வைத்தார் காவலர்.

வாங்க Mr . ராஜசேகர் நல்லது நீங்களே வந்துட்டீங்க அல்லது நாங்க வந்திருப்போம்.
    எனக்கு time இல்ல inspector , என்னோட mobile குடுங்க நான் போகணும்.

நிறைய டைம் இருக்கு, உட்காருங்க பேசலாம். சொல்லுங்க ராஜசேகர் எதுக்காக சந்தியாவ கொலை செஞ்சீங்க? எங்க கிட்ட வலுவான  ஆதாரம்  இருக்கு.
     அப்படியா, அப்ப நீங்களே கண்டு பிடிங்க, உங்களுக்கு தான் ஏற்கனவே தெரியுமே.

சரவணன், புன்னகையுடன், வழக்கமான police சம்பிரதாயப்படி finger prints DNA test க்கு உங்க sample already அனுப்பியாச்சு. result வந்த வுடனே நீங்க permanent டா உள்ள உட்கார வேண்டியதுதான்.   
     அது அவ்வளவு easy இல்ல inspector , உங்களுக்கு negative result தான் கிடைக்கும். நானா சொல்றவரைக்கும் உங்களால எதையும் prove பண்ண முடியாது. நான் சொன்னாலும் prove பண்ண முடியாது.

அப்படியா? உங்க mobile இருந்த photos எல்லாம் உங்களுக்கு எதிரா சாட்சி சொல்ல தயாரா இருக்கு தெரியுமா?  
      ...............
      அந்த photos delete ஆயிருச்சே.

application use பண்ற நீங்களே இவ்வளவு smart டா இருக்கும் போது, நா அந்த மாதிரி நெறைய எழுதி இருக்கேன் Mr
    .................

உனக்கும் அஞ்சலிக்கும் more than 6 months பழக்கம், ரெண்டு பேரும் ரெகுலர் connection ல இருந்து இருக்கீங்க for the purpose of virtual phone sex
அந்த சமயத்துல தான் உனக்கு சந்தியாவ பத்தி தெரிய வந்தது. அஞ்சலி மூலமா சந்தியா கூட பேசி இறுக்க. college hostel ல every saturday நடக்குற students party ல பொண்ணுங்க nude டா டான்ஸ் ஆடி இருக்காங்க.  நீ அனுப்பி வச்ச micro spy camera மூலமா அஞ்சலி சந்தியா வோட nude photo வ எடுத்து அனுப்பி இருக்கா. அதுக்காக நீ அவளுக்கு பணம் கொடுத்திருக்க. 

hostel verification protocol ல break பண்ண ஆள வச்சி சந்தியா அம்மா phone  தூக்கிட்ட, nude photo வச்சி மிரட்டி சந்தியாவ வரவச்சிருக்க அங்க வச்சி rape பண்ணி கொலையும் பண்ணிட்ட.

       very good inspector..

நீ என்ன Psycho வாடா? படிக்கிற பொண்ண ஏன்டா இப்படி பண்ண?
       அது உங்களுக்கு சொன்ன புரியாது inspector, எத்தன நாள் தான் ஒரே மாதிரியே இருக்குறது, ஒரு change க்கு தான்.

எதுக்கு அந்த பொண்ணோட பாடி யா குழாய்ல போட்ட?
       அது பசங்க பண்ண வேலை, actual plan வேற, unexpected check post வந்துட்டதால பயத்துல பாதி வழியில போட்டுட்டு போயிட்டாங்க.
   
அப்போது finger print, DNA report வந்தது. சந்தியாவின் உடலில் இருந்த கைரேகையும் மரபணுவும் ராஜசேகரனுடன் ஒத்துப்போக வில்லை.   
       mobile குடுங்க inspector time ஆகுது நான் போகணும்.

திருப்பதி இவன உள்ள வைங்க, இப்போ வர்றேன் என்று DNA result lab க்கு phone செய்தார். 

Doctor DNA report negative னு வந்திருக்கே, கண்டிப்பா இவன்தான் Doctor   
     இல்ல inspector, ஆனா Y-chromosome match இருக்கு. 


இவனோட வீட்ல இவனும் இவன் அப்பாவும் தான்,      "அப்பாவும்"....  



முற்றும் ...

சரவணனின் விசாரணையில் இருந்து சில குறிப்புகள் 

  • ராஜேந்திரன் facebook மூலமாக முதலில் அஞ்சலியை பிடித்தார்.    
  • சந்தோஷ், ராஜேந்திரனுக்கு சிட்டுக்குருவி மாத்திரைகள் விற்பவர், பின்பு ராஜசேகரனுக்கும்  பழக்கமானார்.
  • சந்தோஷின் சேவையை மெச்சி, ராஜசேகர் அஞ்சலியை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். 
  • ராஜசேகரின் ஆணைப்படி, அஞ்சலி சந்தியாவோடு நெருங்கி பழகவே அவருடைய அறையில் இணைந்தார்.
  • கலைமகள் கல்லூரியில் சனிக்கிழமை கொண்டாட்டத்தில் ஆசிரியர்கள் யாருக்கும் அனுமதி இல்லை, மாணவிகள் தங்கள் விருப்பம் போல் இருக்கலாம், கேமரா, செல் போன்றவைகளுக்கு அனுமதி இல்லை. அதனால் தான் அஞ்சலிக்கு micro spy கேமரா வாங்கிக் கொடுத்தார் ராஜசேகர்.  

சரவணனின் வேட்டை தொடரும்...