cookie

Saturday, October 6, 2012

ட்ரோஜன் ஹார்ஸ் (Trojan Horse)


வேளச்சேரி... 


தனக்கு  விருப்பம் இல்லா விட்டாலும் தன்  மனைவி அனுவின் வின் கட்டாயத்திற்காக அந்த நடிகரின் திரைப்படத்திற்கு செல்ல முன்பதிவு செய்த நுழைவுச் சீட்டை அச்சடிக்க அலுவலகத்தின் அச்சுப்பொறிக்கு கட்டளையிட்டான் நந்தா. வெள்ளிக் கிழமை மாலை தன்னை வேலை செய்யச் சொன்ன கோபத்தை வேறு யாரிடமும் காட்ட முடியாமல், காகிதமாக உருமாறிய அந்த மரத்தின் மேல் மையை உமிழ்ந்து, காட்டிக் கொண்டிருந்தது அச்சுப்பொறி. 

மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது, காத்திருந்த நுழைவுச்சீட்டை கையகப் படுத்த ஆயத்தமானான் நந்தா. தன் உயரத்தை குறைத்துக் கொண்டு மெதுவாக சென்று அச்சடித்த காகிதத்தை கைப்பற்றி, தன் இடம் திரும்பினான். 2000 ஒலிம்பிக் போட்டியில் 5 பதக்கம் பெற்ற மரியன் ஜோன்ஸ் போல் தன்னை உணர்ந்தான். மூட்டை, முடிச்சை கட்டிக்கொண்டு வீட்டுக்கு போக தயாரானான்.   

"டக் டக்..." நந்தாவின் மேசை எழுப்பப்பட்டது 

 "நந்தா, நீங்க வீட்டுக் போறதுக்கு முன்னால என்ன மீட் பண்ணிட்டுப் போங்க,  15 Minutes, ஒரு Project Discussion  இருக்கு"  என்றார் Project Manager ஆல்பர்ட். 

ஆல்பர்ட் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்று தான் தன் அனைத்து யுத்திகளையும் பயன்படுத்தி தப்பிக்க முயன்றான் நந்தா. 

நான் இப்போ கிளம்பிட்டேன் ஆல்பர்ட், Monday discuss பண்ணலாமா?

இது ரொம்ப  important நந்தா, இன்னைக்கே report அனுப்பனும். quick கா முடிச்சிரலாம். ஒரு 15 minutes?

ஆல்பர்ட் கடிகாரத்தில் ஒரு நிமிடத்திற்கு 600 நொடிகள் என்பது நந்தாவுக்கு நன்றாகத் தெரியும். "2007 டிசம்பர் 12 இல் ஐந்து பதக்கங்களும் திரும்பப் பெறப்பட்ட ஜோன்சின் முகம் நினைவுக்கு வந்தது".

அரை கோடிக்கு அவசரப்பட்டு வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் மாத வட்டி விகிதம் பயமுறுத்தியதால், வேறு வழியில்லாமல் அலுவலகத்தின் அனைத்து கட்டளைகளுக்கும் "ஆம்"என்ற பதிலை மட்டும் கூறும் கட்டாயத்தில்  நந்தா.

மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து சொல்ல தைரியம் இல்லாததால், ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பி விட்டு அலைபேசியோடு சேர்ந்து  அவனும் ஊமையானான். 

தேவையான தகவல் முழுவதும் கிடைக்காததால், மீண்டும் திங்கள் காலை தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டு இரவு 08:00 மணிக்கு கலந்துரையாடல் வழக்கம் போல முடிவை எட்டாமல் முடிக்கப்பட்டது. 

மனைவியை சமாதனம் செய்ய வழிமுறைகளை தேடினான்.அதே திரைப்படத்தின் இரவுக் கட்சிக்கான நுழைவுச்சீட்டு வாங்க முயற்சி செய்தான், கிடைக்கவில்லை. எப்படியும் இரவு உணவு கிடைக்காது என்பது தெரிந்ததால்,ரொட்டித் துகள்களை உடல் முழுவதும் பூசிக்கொண்டு  கொதிக்கும் எண்ணையில் குழித்த கோழியை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்.

வழக்கத்திற்கு மாறாக அன்று கொஞ்சம் அதிகமாகவே இருட்டி இருந்தது.  மகிழ்வுந்தை நிறுத்தி விட்டு வெளியே இறங்கினான். அதுவரை இரண்டாம் மாடியின் கன்னி மாடத்தில் காத்திருந்த அனு ,கணவன் தன்னை பார்த்து விட்டதை உறுதி செய்து கொண்டு, தன் கோபத்தை காட்டும் விதமாக வேகமாக உள்ளே சென்றார்.     

இது எதிர் பார்த்ததுதான் என்றாலும் சற்று ஏமாற்றத்துடன் படிகளில் ஏறினான்  நந்தா. மேலிருந்து ஒரு பெண் இறங்கிவர, வழிவிட்டு ஒதுங்கினான். முன்பின் பார்த்திராத அந்தப் பெண் நந்தாவின் அருகில் வந்து எதோ கேட்க முயன்றார்.  

"excuse me sir, என்னோட aunt வீட்டுக்கு வந்தேன், She is not here, I forgot my mobile. please உங்க phone தர்ரீங்களா, ஒரு call பண்ணிக்கிறேன்? " என்று அந்த பெண் கேட்க 

"Sure" என்று கால் சட்டையில் அலைபேசியை தேடிகொண்டிருக்கும் போது, ஒரு இளம் வயது வாலிபன் அந்த பெண்ணின் பின்னால் வந்து நின்றான். பரிச்சயம் இல்லாத மேலும் ஒரு வாலிபன் நந்தாவின் பின்புறம் நின்றான்.

விபரீதத்தின் விளிம்பில் நிற்கிறோம் என்பதை உணரும் மும்பு, முன்னால் நின்ற வாலிபனின் முஷ்டி நந்தாவின் கண்களை காயமாக்கியது. நிலை குலைந்து விழுந்தவன் உடனே சுதாரித்துக்கொண்டு எழுந்தான். தோளில் மாட்டியிருந்த மடிக்கணினியை பாதுகாப்புக்காக  வேகமாக சுழற்றினான், தன்னால் முடிந்த அளவு பலமாக "உதவி" என அலறினான்.

நெடுந்தொடரிடம் தஞ்சமடைத்த அடுக்குமாடி வாசிகளின் காதுக்கு எதுவும் எட்டவில்லை. விளம்பர இடைவேளையில் அலைவரிசை மாறும் அந்தக் கணத்தில் ஏதோ குரல்  கேட்டு முதல் மாடியில் இருந்த ஒரு வீட்டின் கதவு திறக்கப் பட்டு பின்பு உடனே மூடப்பட்டது.        

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அந்த கும்பல் நந்தாவை அப்படியே விட்டு விட்டு ஓடியது.     

தடுமாறி எழுந்து, மெல்ல நடந்து, நந்தா வீட்டு வாசலை அடையவும் அனு கதவை திறக்கவும் சரியாக இருந்தது. உதிரம் பூசிய முகத்துடன் நின்ற கணவனை கண்டதும் செய்வதறியாமல் திகைத்து நின்றார் அனு.

மனைவியை சமாதானம் செய்துவிட்டு, அவசரம் இல்லாமல் அழைத்தார் அவசர போலீசை. மறுமுனையில் காவல்துறை குசலம் விசாரித்து விட்டு உடனே வருவதாக கூறிய  20 நிமிடத்தில் அங்கு வந்தார் ஒரு காவலாளி.

எத்தன பேரு இருந்தாங்க?

      மூனு பேரு இருந்தாங்க சார், அதுல ஒரு பொண்ணு.

அடையாளம் சொல்லமுடியுமா?

       "இருட்டு சரியா பாக்க முடியல. ஒருத்தன் 6 அடி உயரம் இருந்தான். மாநிறம் . அந்த பொண்ணு பேசுனத வச்சி பார்த்தா படிச்ச பொண்ணு மாதிரி இருந்தது. மொபைல் போன் கேட்டது"

என்று நந்தா நடந்ததை விவரித்தார். கண்ணில் தாக்கியது அடையாளம் கண்டுகொள்ள கூடாது என்பதற்குதான் என்று காவல்துறை விளக்கினார்.

Mr. நந்தா, நீங்க உதவிக்காக யாரையாவது கூப்பிடும் போது கொஞ்சம் கவனமா இருக்கணும். ஏன்னா அவங்க பதட்ட மாயிட்டங்கன்னா உங்கள அமையாக்க என்ன வேனா பண்ணலாம். அவன் கைல கத்தி இருந்ததுன்னு வைங்க ரொம்ப சங்கடமா போயிருக்கும். ஒரு போலீஸ் இப்படி சொல்லக்கூடாது இருந்தாலும், உங்கள காப்பாதிக்க வேற வழி இல்ல. நிலமைய சமாளிக்க கைல இருக்குறத கொடுத்துருங்க. குறைந்த பட்சம் சின்ன காயத்தோட போகும்

நாளைக்கு காலைல police station வந்து ஒரு complaint கொடுத்துருங்க

இப்போ சொன்னது போதாதா sir ?

Formal லா complaint வேணும் Mr. நந்தா, மறக்காம documents கொண்டு வந்துருங்க.

"Formal" லுக்கு அர்த்தம் "காசு" என்பதை புரிந்து கொண்டார் நந்தா.


சில மாதங்களுக்குப் பிறகு...

பெருங்குடி...


பிள்ளையார் கோவில் தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு...

ஞாயிறு மாலை 07:45 மணி, வரும் வாரத்திற்கு தேவையான சாமான்களை வங்கிக் கொண்டு கோபாலும், விஜியும் வீட்டுக்கு திரும்பினர்.

விஜி வாங்கிவந்த காய்கறிகளை குளிர்சாதன பெட்டிக்குள் திணித்துக் கொண்டிருந்தார். கோபால் தளர்வாக மஞ்சத்தில் அமர்ந்தார்.

விஜி, நான் நாளைக்கு office போகும் போது மறக்காம pack பண்ணி குடுத்துரு

எதுங்க?

கல்யாணத்துக்கு போகணும்னு locker ல இருந்து எடுத்துட்டு வந்தோமே...

ஓ "Jewels" சா கண்டிப்பா, மறக்க மாட்டேன்.

மறுநாள் காலை 06:00 மணி

"என்னங்க, என்னங்க, எழுந்திரிங்க, எழுந்திரிங்க" தந்தி அடித்துக் கொண்டு விஜியின் குரல் அயர்ந்து நித்திரையில் இருந்த கோபாலை எழுப்பின...

என்ன விஜி, என்னாச்சு?

நகைய, நகைய...

நகைக்கு என்னாச்சு?

காணோங்க....

என்ன உளர்ற, நேத்து நாந்தானே வச்சேன்

இருவரும் எல்ல இடங்களில் தேடியும் நகை கிடைக்க வில்லை.

வேறு வழி இல்லாமல் கோபால் மூன்று இலக்கங்களை அழுத்தினார் தொலைபேசியில்.

சிறிது நேரம் கழித்து...

கதவு தட்டப்பட்டது, வாசலில் சரவணன்.             

Mr. கோபால், நான் Inspector சரவணன் (மாற்று உடையில் இருந்தார்).

வாங்க Inspector.

கடைசியா எப்போ நகைய பார்த்தீங்க?
  
நேத்து afternoon ஒரு marriage function னுக்கு போயிட்டு வந்து எடுத்து வச்சோம் சார். அதுக்கப்புறம் பார்க்கல.

எவ்வளவு நகை?

ஒரு 30 பவுன் இருக்கும் சார்.

வீட்ல நகைய எங்க வச்சிருந்தீங்க, பீரோலையா ?

இல்ல சார், வளையல் எல்லாம் groceries items கூட சேர்த்து பிளாஸ்டிக் டப்பால போட்டிருந்தோம். செயின் எல்லாம் கட்டிலுக்கு கீழ வச்சிருந்தோம்.

வேற எதுவும் திருடு  போகலையா கோபால் ?

இல்ல சார், நகை மட்டும் தான் காணோம், பீரோ ல கொஞ்சம் பணம் இருந்தது, அது அப்படியே தான் இருக்கு.     

கதவு, ஜன்னல் வேற எதுவும் உடஞ்சி இருக்கா?

இல்ல சார், அந்த மாதிரி எதுவும் ஆயிருந்தா நேத்தே கண்டு புடிசிருப்போம்.

"திருப்பதி, finger print மத்த evidence collect பண்ணனும். அதுக்கு arrange பண்ணுங்க. காணமல் போன jewels details ச correct டா வாங்கிடுங்க" என்றார் சரவணன்.

Mr.கோபால், நல்லா தேடிட்டு சொல்லுங்க வேற எதுவும் காணாம போகலையா?

கோபால் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, விஜி அறையில் இருந்து வெளியே வந்து calculator ஒன்றை காணோம் என்றார். கோபால், விஜியை எரிச்சலுடன் பார்த்தார்.

"நகை காணாமப் போனதால எவ்வளவு ரூபா போச்சுன்னு calculate பண்றதுக்காக தேடினேன், வெளிய table ல தான் இருந்தது, இப்போ காணோம்" என்றார் விஜி.

தேங்க்ஸ் மேடம், நல்ல information குடுத்தீங்க.

என்ன சொல்றீங்க inspector?

Mr. கோபால், calculator கூட சேர்ந்து வேற transistor radio எதுவும் காணமான்னு சொல்லுங்க?

மீண்டும் உள்ளே சென்ற விஜி பழைய transistor ஒன்றை காணோம் என்றார்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்தார் கோபால்.

ஒரு simple metal detector பண்றதுக்கு தேவையான உபகரணங்கள் தான் calculator மற்றும் transistor என்று விளக்கினார் சரவணன்.

பூட்ட உடைக்காம எப்படி sir திருடன் வீட்டுக்கு உள்ள வந்தான்?

அந்த வீட்டு கதவின் பூட்டை ஆராய்ச்சி செய்த சரவணன், உங்க கதவுல இருக்குறது "Warded lock". இதுக்கு "skeleton key" அல்லது "passing key" ஒன்னு இருக்கு. அத வச்சி சுலபமா திறக்கலாம்.

இப்படித்தான் பண்ணி இருக்காங்கன்னு நிச்சயமா சொல்ல முடியாது. ஆனா இப்படியும் பண்ணியிருக்கலாம்.

இதை எல்லாம் கேட்டு விரக்தியின் உச்சத்துக்கே சென்ற கோபால், அப்ப எப்படி தான் sir பாதுகாப்பா இருக்குறது ? என்று சரவணனிடம் கேட்டார்.

"இந்த கேள்விக்கு என்கிட்டே பதில் இல்ல Mr. கோபால், ஆனா கவலைப் படாதீங்க, உங்க நகை கண்டிப்பா கிடைக்கும். நகை கிடச்ச உடனே உங்களுக்கு call பண்றோம்" என்று கூறி விட்டு. மற்ற வேலைகளை முடித்து விட்டு வருமாறு திருப்பதியை பணித்து விட்டு சென்றார் சரவணன்.       

காவல் நிலையம் 

அய்யா, நம்மகிட்ட இருக்குற criminals list எடுத்து இந்த திருட்டு case ச விசாரிக்கலாமா?

அது ஒரு option னா வச்சிக்கலாம் திருப்பதி, ஆனா இந்த திருட்ட பார்க்கும் போது எனக்கு வேற மாதிரி தோனுது. நகைய திருடுனவன் நல்லா plan பண்ணிதான் செஞ்சிருக்கான். அதனால இதுக்குள்ள நகைய உருக்கிருப்பான். அல்லது வேற எங்கயாவது வித்துருப்பான். இருந்தாலும் நீங்க இந்த திருட்டு நகைய deal பண்றவங்கள பத்தி விசாரிங்க.

சரிங்கய்யா.


நாட்கள் நகர்ந்தன, தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் செய்தார் சரவணன்.ஆனால் ஒரு வாரம் ஆகியும் காணாமல் போன நகை குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.

அன்று...

காவல் நிலையத்தின் தொலைபேசி மணி ஒலித்தது, எடுத்து பேசிய  முருகானந்தத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மீண்டும் திருட்டு...

குதிரை ஓடும்... 

2 comments:

  1. Thallaippu aarvathai thoondugirathu. Tamil subtitle potirukalam :-)

    ReplyDelete
  2. mmhhh..Interesting! Why the title "Trojan Horse". What's so special about it?

    ReplyDelete